Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்
லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்
சந்தேகத்தில் 1,069 பேர் கைது
16000 பொலிஸார் பணியில்
லண்டனில் ஏற்பட்ட கலவரம் நான்காவது நாளாக இதர நகரங்களுக்கு பரவியுள்ளது. எனினும்
லண்டன் நகரில் நேற்று சற்றே அமைதி நிலவியது.
இதன்படி லண்டனை சுற்றி 16 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று அமைதி நிலவியது. ஆங்காங்கே ஒரு சிலர்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் லண்டனில் ஆரம்பமான கலவரம் தற்போது பிரிட்டனின் முக்கிய நகரங்களான
மான்செஸ்டர், பிரிஸ்டல், லிவர்பூல், பெர்மிங்ஹாம் பகுதிகளுக்கு பரவியுள்ளது. இங்கு
நேற்று அதிகாலை ஏற்பட்ட கலவரத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காரில் பயணித்தோர்
மீது கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டன் பொலிஸார்
தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
நகரங்களிலுள்ள வர்த்தக நிறுவனங்களும் குடியிருப்புகளும் மற்றும் வாகனங்களும் இந்த
தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு
பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன. க்ளூசெஸ்டர் நகரின் கல்லூரி ஒன்று
தீவைத்து கொளுத்தப்பட்டது. நாட்டிங்ஹோம் நகர பொலிஸ் நிலையம் ஒன்று குண்டு வீசி
தாக்கப்பட்டது.
வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும்
ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மான்செஸ்டர் நகரின் மையப்பகுதியில்
உள்ள மகளிர் ஆடையகம் ஒன்று முழுவதும் தீவைத்து கொளுத்தப்பட்டது.
இதில் பெர்மிங்ஹாம் பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆசிய நாட்டவர் கலவரத்தால்
காயமுற்றோரை பார்ப்பதற்காக மருத்துவமனையை சூழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது.
இதுவரை கலவரத்துடன் தொடர்புடைய 1,069 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன்
பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் லண்டன் நகரில் 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வெஸ்ட் மிடில்லாட்ஸில் 109
பேரும் நொட்டிங்ஹாமில் 90 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 167 பேர் மீது
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன்
வன்மையாகக் கண்டித்துள்ளார்.
லண்டன் உட்பட மெட்ரோ பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
என்றும், அவர்கள் அனைவரும் உடனே பணிக்குத் திரும்பி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட
வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வன்முறைச் சம்பவங்கள்
தொடர்பாக கலவரக்காரர்கள் மேலும் கைது செய்யப்படுவர். நிச்சயமாக நீதி
நிலைநாட்டப்படும் என்றார் பிரதமர்.
கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் தோட்டாக் களை பயன்படுத்தி
துப்பாக்கி சூடும் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்
‘பிளக்பெர்ரி’ தொலைபேசியிலுள்ள தகவல் அனுப்பும் வசதியை இடைநிறுத்த வேண்டும் என
பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் பம்மி தெரிவித்துள்ளார். இந்த தகவல்
அனுப்பும் முறையின் மூலமே கலவரம் தீவிரம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகத்துடன் தொடர்புடைய மார்க் டக்கன் என்ற வாலிபன் கடந்த வாரம் லண்டன்
பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கலவரம் ஆரம்பித்தமை குறிப்பிடத்
தக்கது.
சந்தேகத்தில் 1,069 பேர் கைது
16000 பொலிஸார் பணியில்
லண்டனில் ஏற்பட்ட கலவரம் நான்காவது நாளாக இதர நகரங்களுக்கு பரவியுள்ளது. எனினும்
லண்டன் நகரில் நேற்று சற்றே அமைதி நிலவியது.
இதன்படி லண்டனை சுற்றி 16 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று அமைதி நிலவியது. ஆங்காங்கே ஒரு சிலர்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் லண்டனில் ஆரம்பமான கலவரம் தற்போது பிரிட்டனின் முக்கிய நகரங்களான
மான்செஸ்டர், பிரிஸ்டல், லிவர்பூல், பெர்மிங்ஹாம் பகுதிகளுக்கு பரவியுள்ளது. இங்கு
நேற்று அதிகாலை ஏற்பட்ட கலவரத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காரில் பயணித்தோர்
மீது கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டன் பொலிஸார்
தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
நகரங்களிலுள்ள வர்த்தக நிறுவனங்களும் குடியிருப்புகளும் மற்றும் வாகனங்களும் இந்த
தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு
பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன. க்ளூசெஸ்டர் நகரின் கல்லூரி ஒன்று
தீவைத்து கொளுத்தப்பட்டது. நாட்டிங்ஹோம் நகர பொலிஸ் நிலையம் ஒன்று குண்டு வீசி
தாக்கப்பட்டது.
வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும்
ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மான்செஸ்டர் நகரின் மையப்பகுதியில்
உள்ள மகளிர் ஆடையகம் ஒன்று முழுவதும் தீவைத்து கொளுத்தப்பட்டது.
இதில் பெர்மிங்ஹாம் பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆசிய நாட்டவர் கலவரத்தால்
காயமுற்றோரை பார்ப்பதற்காக மருத்துவமனையை சூழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது.
இதுவரை கலவரத்துடன் தொடர்புடைய 1,069 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன்
பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் லண்டன் நகரில் 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வெஸ்ட் மிடில்லாட்ஸில் 109
பேரும் நொட்டிங்ஹாமில் 90 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 167 பேர் மீது
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன்
வன்மையாகக் கண்டித்துள்ளார்.
லண்டன் உட்பட மெட்ரோ பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
என்றும், அவர்கள் அனைவரும் உடனே பணிக்குத் திரும்பி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட
வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வன்முறைச் சம்பவங்கள்
தொடர்பாக கலவரக்காரர்கள் மேலும் கைது செய்யப்படுவர். நிச்சயமாக நீதி
நிலைநாட்டப்படும் என்றார் பிரதமர்.
கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் தோட்டாக் களை பயன்படுத்தி
துப்பாக்கி சூடும் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்
‘பிளக்பெர்ரி’ தொலைபேசியிலுள்ள தகவல் அனுப்பும் வசதியை இடைநிறுத்த வேண்டும் என
பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் பம்மி தெரிவித்துள்ளார். இந்த தகவல்
அனுப்பும் முறையின் மூலமே கலவரம் தீவிரம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகத்துடன் தொடர்புடைய மார்க் டக்கன் என்ற வாலிபன் கடந்த வாரம் லண்டன்
பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கலவரம் ஆரம்பித்தமை குறிப்பிடத்
தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|