சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய Khan11

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய

Go down

போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய Empty போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 6:10

கொழும்பு: ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி மட்டுமே பேச வேண்டும். அதை விட்டுவிட்டு போர்க் குற்றம், விசாரணை என்றெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய கூறியுள்ளார்.

ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கை போர் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சியே தவிர வேறல்ல.

தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி தான். அவை இலங்கையின் உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். இலங்கை மக்கள் மீது எங்களுக்கு யாரை விடவும் அக்கறை அதிகம் உண்டு.

ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்கும் கடற் பரப்பிற்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை முதலில் தடுத்து நிறுத்தட்டும். இது தான் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்ய வேண்டிய முதல் வேலை.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. இதற்குத் தான் ஜெயலலிதாவும் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்.

அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. எப்படி இங்கே சர்வதேச விசாரணை நடத்த முடியும்?. நாங்கள் அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்?. பன்னாட்டு விசாரணை என்று சொல்வதே தப்பு. சில நாடுகள் மட்டுமே அதை ஆதரிக்கின்றன.

எங்களுக்கு ரஷ்யா, சீனா, இந்தியாவும் என்று நிச்சயமாக நம்புகிறேன், பாகிஸ்தான், ஏராளமான ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவாக உள்ளன. இவர்கள் தான் உண்மையான சர்வதேச நாடுகள். ஒரு சில நாடுகள் சொல்லும் கருத்து சர்வதேச கருத்து ஆகிவிடாது.

தமிழர்களுக்கு இதற்கு மேலும் அதிகாரப் பகிர்வு எல்லாம் தர முடியாது. இப்போது உள்ள அரசியல் சட்டத்தின் கீழ் சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழ முடியும். விடுதலைப் புலிகள் போய்வி்ட்ட நிலையில், அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் இனி எடுபடாது.

இதற்கு மேல் எதைத் தந்துவிட முடியும்?. என்ன தர வேண்டுமோ அதைத் தந்தாகிவிட்டது.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறியுள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் உள்ள மனநோயாளிகள், போர் பற்றி நூல்களை வெளியிடுகின்றனர் – சரத் பொன்சேகா.
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» எப்படியெல்லாம் பேசக்கூடாது?
» வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum