சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது Khan11

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது

2 posters

Go down

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது Empty மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 10:36

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது


தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மன்மோகன்சிங்

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது Manmohan_singh15வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மதக்கலவர தடுப்பு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், இந்த மசோதா மாநிலங்களின்
உரிமையைப்பாதிக்கும் என்றும் கூட்டாட்சி அமைப்பு தத்துவத்தை மீறுவதாக இருப்பதாகவும்
கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்,
மாநிலங்களின் அதிகாரத்தை பாதிக்காத வகையில், இந்த மசோதாவில் உரிய திருத்தங்கள்
செய்யப்படும் என்றும், மாநில முதல்- மந்திரிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு
பேட்டி அளித்த உள்துறை செயலாளர் ஆர். கே. சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங் இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர்,
சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பை குறிப்பிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரான
கண்காணிப்பில் எந்தவித குறைபாட்டுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை
விடுத்தார் அவர் மேலும் கூறியதாவது: “பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி நக்சலைட்
தீவிரவாதமும்தான் நாட்டுக்கு இன்று முக்கிய சவால்களாக உள்ளன. மீண்டும் மீண்டும் நமது
நாடு தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. தவறான கொள்கையின் அடிப்படையில் இந்த
தாக்குதலை தீவிரவாதிகள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை அன்று
டில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல், தீவிரவாதத்துக்கு எதிரான நமது
கண்காணிப்புப்பணியில் குறைபாட்டுக்கு இடம் அளித்துவிடக்கூடாது என்பதை உறுதியாக
நினைவூட்டும் வகையில் உள்ளது. இளைஞர்கள் தீவிரவாதத்தை நாடுவதற்கான காரணங்களை அறிந்து,
அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் தீவிரவாதத்தில் தள்ளபடுவதற்கு
உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு இல்லாதது முக்கியமான காரணமாகும். இளைஞர்க ளுக்கு
கல்வி மற்றும் தொழில் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும். சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக சச்சார் கமிட்டி
அளித்துள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 15 அம்ச திட்டம் போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாநிலங்களில் ஏற்படும் மோதல்கள், கலவரங்களை பொலிஸார்
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது Empty Re: மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது

Post by kalainilaa Mon 12 Sep 2011 - 14:14

மாநிலங்களில் ஏற்படும் மோதல்கள், கலவரங்களை பொலிஸார்
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.

நல்ல விடையம் இது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
» அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
» அரசியல் உள்நோக்கங்களுடன் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum