Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு
Page 1 of 1
ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு
ஐ.நா., பொதுச் சபையின் இந்தாண்டுக்கான கூட்டம் இன்று துவங்குகிறது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 130 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால், அந்நகரில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐ.நா., பொதுச் சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இந்தாண்டுக்கான கூட்டம் 13ம் தேதியே துவங்கிவிட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் துவங்கி 27ம் தேதி வரை நடக்க உள்ளன.
தொடரும் பாதுகாப்பு:நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து, அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.மேலும், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு, 130 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கிற்கு வருவதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நியூயார்க் போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணிவகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:முக்கிய தலைவர்கள் தங்கும் ஓட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஓட்டல்களின் அருகில், நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.வாகனப் பரிசோதனை, பாதாள ரயில் நிலையத்துக்குச் செல்வோரின் உடைமைகள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இம்மாதம் 11ம் தேதியே துவக்கப்பட்டுவிட்டன. தெருக்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தலைவர்கள் செல்வதற்கான தனிப் போக்குவரத்துப் பாதைகள், வெடிபொருட்கள் பரிசோதனைகள் போன்ற ஆண்டுதோறும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
இந்தியாவுக்கு நிரந்தர இடம்:"ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம், அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், லிபியாவின் இடைக்கால கவுன்சிலுக்கு ஆதரவு ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங் தனது 24ம் தேதி உரையில் வலியுறுத்துவார்' என, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று தெரிவித்தார்.
எரிச்சலில் இலங்கை:இலங்கையில், 2009 மே மாதம் நடந்த இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் சமீபத்தில் சமர்ப்பித்தார். இலங்கை வெளியுறவு விவகார நடைமுறைகளில் மூன் தலையிட்டதாக இலங்கை இதுகுறித்து குற்றம் சாட்டியது.பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து அதிபர் ராஜபக்ஷே புறப்பட்டுச் சென்றார். 23ம் தேதி பொதுச் சபையில் பேச உள்ள அவர் தனது உரையில், மூன், போர்க் குற்ற அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் இலங்கையின் ஏமாற்றத்தை அவர் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்கள்:இதற்கிடையில், இந்தக் கூட்டத்தை முன்னிட்டு, ஐ.நா., தலைமை அலுவலகத்தின் வெளியில், திபெத், பாலஸ்தீனம், தைவான் போன்ற நாடுகளை ஐ.நா.,வில் உறுப்பினராக சேர்க்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன.
ஐந்து முக்கிய விவகாரங்கள் : இந்தாண்டு ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், மிக முக்கியமான ஐந்து விவகாரங்கள், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய விதத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
* பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் ஒரு படியாக, பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் அதிபர் மகமது அப்பாஸ் கோரியுள்ளார். தனது கோரிக்கையை பொதுச் சபை விவாதத்தில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை தனது "வீட்டோ' எனப்படும் மறுப்பாணை மூலம் நிராகரிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
* மையப்புள்ளியாகும் துருக்கி: அரபுலக நாடுகளின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி, ஈராக்கில் நிலையான அரசியல் வேண்டும் எனக் கோரி வருகிறது. அதோடு, லிபியாவுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தற்போது தான் துருக்கி ஒரு முக்கிய மையப்புள்ளியாக உருவாகி வருகிறது. அதன் அதிபர் டாயிப் எர்டோயனை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எர்டோயன், பாலஸ்தீனத்தின் உறுப்பினர் அந்தஸ்துக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
* லிபியா விவகாரம்: லிபியா அரசு சார்பில் பங்கேற்பதற்கு, எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா., ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் ஆகிய விவாதங்கள் இம்முறை இடம் பெறுகின்றன.
* சிரியா மீது மேலும் தடைகள்: ஏற்கனவே ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என மூன்று தரப்பும் இணைந்து சில தடைகளை விதித்திருந்த போதும், தனது மக்கள் மீதான அடக்குமுறையை சிரியா அதிபர் பஷர் அல் அசாத் கைவிடவில்லை. கடந்த வாரம் ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த அறிக்கை ஒன்றில், சிரியாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்று திரளும்படி கோரியிருந்தார். சிரியா மீதான கடுமையான பொருளாதார தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த விவாதம் இந்த முறை இடம் பெறுகிறது.
* தெற்கு சூடான் வன்முறை: புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடான், இம்முறை முதன் முறையாக ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நடந்து வரும் சில வன்முறை தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை. இதுகுறித்த விவாதமும் இம்முறை நடக்க உள்ளது.
ஐ.நா., பொதுச் சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இந்தாண்டுக்கான கூட்டம் 13ம் தேதியே துவங்கிவிட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் துவங்கி 27ம் தேதி வரை நடக்க உள்ளன.
தொடரும் பாதுகாப்பு:நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து, அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.மேலும், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு, 130 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கிற்கு வருவதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நியூயார்க் போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணிவகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:முக்கிய தலைவர்கள் தங்கும் ஓட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஓட்டல்களின் அருகில், நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.வாகனப் பரிசோதனை, பாதாள ரயில் நிலையத்துக்குச் செல்வோரின் உடைமைகள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இம்மாதம் 11ம் தேதியே துவக்கப்பட்டுவிட்டன. தெருக்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தலைவர்கள் செல்வதற்கான தனிப் போக்குவரத்துப் பாதைகள், வெடிபொருட்கள் பரிசோதனைகள் போன்ற ஆண்டுதோறும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
இந்தியாவுக்கு நிரந்தர இடம்:"ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம், அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், லிபியாவின் இடைக்கால கவுன்சிலுக்கு ஆதரவு ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங் தனது 24ம் தேதி உரையில் வலியுறுத்துவார்' என, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று தெரிவித்தார்.
எரிச்சலில் இலங்கை:இலங்கையில், 2009 மே மாதம் நடந்த இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் சமீபத்தில் சமர்ப்பித்தார். இலங்கை வெளியுறவு விவகார நடைமுறைகளில் மூன் தலையிட்டதாக இலங்கை இதுகுறித்து குற்றம் சாட்டியது.பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து அதிபர் ராஜபக்ஷே புறப்பட்டுச் சென்றார். 23ம் தேதி பொதுச் சபையில் பேச உள்ள அவர் தனது உரையில், மூன், போர்க் குற்ற அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் இலங்கையின் ஏமாற்றத்தை அவர் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்கள்:இதற்கிடையில், இந்தக் கூட்டத்தை முன்னிட்டு, ஐ.நா., தலைமை அலுவலகத்தின் வெளியில், திபெத், பாலஸ்தீனம், தைவான் போன்ற நாடுகளை ஐ.நா.,வில் உறுப்பினராக சேர்க்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன.
ஐந்து முக்கிய விவகாரங்கள் : இந்தாண்டு ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், மிக முக்கியமான ஐந்து விவகாரங்கள், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய விதத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
* பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் ஒரு படியாக, பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் அதிபர் மகமது அப்பாஸ் கோரியுள்ளார். தனது கோரிக்கையை பொதுச் சபை விவாதத்தில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை தனது "வீட்டோ' எனப்படும் மறுப்பாணை மூலம் நிராகரிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
* மையப்புள்ளியாகும் துருக்கி: அரபுலக நாடுகளின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி, ஈராக்கில் நிலையான அரசியல் வேண்டும் எனக் கோரி வருகிறது. அதோடு, லிபியாவுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தற்போது தான் துருக்கி ஒரு முக்கிய மையப்புள்ளியாக உருவாகி வருகிறது. அதன் அதிபர் டாயிப் எர்டோயனை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எர்டோயன், பாலஸ்தீனத்தின் உறுப்பினர் அந்தஸ்துக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
* லிபியா விவகாரம்: லிபியா அரசு சார்பில் பங்கேற்பதற்கு, எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா., ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் ஆகிய விவாதங்கள் இம்முறை இடம் பெறுகின்றன.
* சிரியா மீது மேலும் தடைகள்: ஏற்கனவே ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என மூன்று தரப்பும் இணைந்து சில தடைகளை விதித்திருந்த போதும், தனது மக்கள் மீதான அடக்குமுறையை சிரியா அதிபர் பஷர் அல் அசாத் கைவிடவில்லை. கடந்த வாரம் ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த அறிக்கை ஒன்றில், சிரியாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்று திரளும்படி கோரியிருந்தார். சிரியா மீதான கடுமையான பொருளாதார தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த விவாதம் இந்த முறை இடம் பெறுகிறது.
* தெற்கு சூடான் வன்முறை: புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடான், இம்முறை முதன் முறையாக ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நடந்து வரும் சில வன்முறை தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை. இதுகுறித்த விவாதமும் இம்முறை நடக்க உள்ளது.
Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு
» இளைஞர் காங்கிரஸ் மாநாடு: பிரதமர், சோனியா பங்கேற்பு
» பிரதமர் மன்மோகன் சிங்க்கு வயது 79
» பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் திடீர் ராஜினாமா
» பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு
» இளைஞர் காங்கிரஸ் மாநாடு: பிரதமர், சோனியா பங்கேற்பு
» பிரதமர் மன்மோகன் சிங்க்கு வயது 79
» பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் திடீர் ராஜினாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|