சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 8:12 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..? Khan11

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?

2 posters

Go down

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..? Empty சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?

Post by நண்பன் Tue Oct 04, 2011 12:56 pm

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
- ஒன்றுபோல தோன்றினாலும், இரண்டும் வேறுவேறு.

சமர்ப்பணம் என்பது நம் கடமையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வது.
சமூகத்திற்காகவும் அதைச் செய்யலாம். வீட்டிற்காகவும் அதைச் செய்யலாம்.
பண்டிதர் அன்னமாசார்யார் தன் பாடல்களை இறைவனுக்கு சமர்ப்பித்தார். அது
அவருக்கு நிரந்தர புகழைத் தந்தது. அது சமர்ப்பணம்தான். தியாகம் அல்ல. ஆனால்
அவரே தான் இறைவனைத் தவிர வேறு யாரையும் பாட முன்வராத காரணத்தால்
வாழ்வாதாரங்களையும், வருமானத்தையும் இழந்தார். அதனால் அது தியாகம் என்ற
நிலையை அடைந்துவிடுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். ஆனால் ராணுவ வீரர்களை
தியாகிகள் என்று கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டிற்காக தன்னை
சமர்ப்பணம் செய்கிறார்கள். அதற்கு கவுரவமிக்க ஊதியம் பெறுகிறார்கள்.
அவர்களின் சமர்ப்பணத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் விடுதலைப்
போராட்ட வீரர்கள், தங்கள் சொத்து, சுகம், இன்பதுன்பங்களை இழந்து
விடுதலைக்காக உழைத்தார்கள். அதனால் அது தியாகமாக போற்றப்படுகிறது.

சமர்ப்பணத்திற்கும், லட்சியத்திற்கும் தொடர்பு உள்ளது. நம் குறிக்கோளை அடைய நம் உழைப்பை சமர்பிக்க வேண்டியுள்ளது.

திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை உருவாக்கும் கடமை கணவன், மனைவி
இருவருக்கும் பொதுவாகிறது. அதனால் குடும்பத்தில் சமர்ப்பணம் என்பது
இருவரிடத்திலும் இருக்க வேண்டியதாகிறது.

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..? U1_IndiaVision-mother-and-childகுடும்பத்திற்கான
முதல் சமர்ப்பணம் கணவரின் முதல்மாத சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
குடும்பத்தின் நிர்வாக பொறுப்பை மனைவி ஏற்றுக்கொள்ளும்போது கணவரின்
பொருளாதார ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமாவதால், கணவரின் சமர்ப்பணம்
கட்டாயமாகிறது. அந்த குடும்பத்திற்காக மனைவியும் தன் உழைப்பையும்,
உணர்வுப்பூர்வமான வழி நடத்தலையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை அவர்கள்
மற்றவர்களுக் காகச் செய்யாமல் மனப்பூர்வமாக செய்யும்போது அது
சிறப்பிற்குரியதாகிறது. தன் குடும்ப வளர்ச்சிக்காக ஒரு பெண், சமர்ப்பிக்க
வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதேபோலத்தான் ஒரு ஆண் சமூக வளர்சிக்காக
சமர்ப்பிக்க வேண்டியதும் ஏராளம்.

தந்தை தன் மகனின் கல்விச் செலவிற்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிக்க
வேண்டியுள்ளது. அப்படி அவர் உழைப்பதை, தியாகம் என்று சொல்லிவிட முடியாது.
அதேபோல் மகனின் பரீட்சை நேரத்தில் தன் தூக்கத்தையும், ஓய்வையும்
தவிர்த்துவிட்டு தாய், அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அதுவும்
தியாகம் அல்ல. ஏனெனில் இருவருக்கும் குழந்தையிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
அதை அவர்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது.

தனி மனித வாழ்விலும் சரி, பொதுநல வாழ்விலும் சரி இந்த சமர்ப்பணமும்,
தியாகமும் ஒன்றை ஒன்று நெருங்கி நிற்கும். ஆனால் இந்த இரண்டுக்குமே
வித்தியாசம் உண்டு.

காந்திஜி இந்த நாட்டிற்காக தன் உயிரைக் கொடுத்தார். இது தியாகம். அதே
காந்திஜி, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து பொய் பேசுவதை தவிர்த்தார்.
அது சமர்ப்பணம். தியாகம் என்பது ஒருவரின் இறப்புக்கு பின்பும் சிறப்பு
அளிக்கும்.

சமர்ப்பணம் ஒருவரை மனிதனாக்குகிறது. தியாகம் ஒருவரை தெய்வமாக்குகிறது.
இந்த இரண்டிற்கும் சிறிய இடைவெளிதான். மனிதன் மனிதனாக வாழ சமர்ப்பணம் தேவை.
இது கடமையால் உருவாக்கப்படுவது. தியாகம் பிறர் நலனுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொள்வது. இது உயர்ந்த பண்பு உள்ளத்தால் உருவாக்கப்படுவது.

தாய் கஷ்டப்பட்டு உழைத்து தன் குழந்தைக்கு பிடித்த உணவை சமைத்துக்
கொடுத்தால் அது சமர்ப்பணம். பட்டினியோடு இருக்கும் தனக்காக கிடைத்த உணவை
வாங்கி, பசியோடு இருக்கும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தால் அது
தியாகம். எல்லா தாய்மார்களும் தியாகிகள் அல்ல. ஆனால் எல்லா தாய்மார்களும்
சமர்ப்பணவாதிகள்தான்!

அலுவலகத்தில் தன்னுடைய பதவி உயர்வை மற்றவருக்கு விட்டுக் கொடுத்தால் அது
தியாகம். தன்னுடைய பதவி உயர்வுக்காக நேர்மையாக உழைத்தால் அது சமர்ப்பணம்.

பொதுவாழ்வில் தங்களை தியாகிகள் என்று பலர் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள்
தியாகத்திற்கும், சமர்ப்பணத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தங்களை
குழப்பிக் கொண்டு மக்களையும் குழப்புகிறார்கள். மக்களின் நலனுக்காக பதவியை
துறந்தால் அது தியாகம். பதவிக்காக போராட்டம், உண்ணாவிரதம், ஜெயில் என்று
போனால் அது தியாகம் அல்ல. ஒரு குடிமகன் சரியாக வருமானவரி செலுத்தினால் அது
சமர்ப்பணம். நிவாரணநிதியாக ஒரு மாத ஊதியத்தை கொடுத்தால் அது தியாகம்.

பகவத்கீதையில் கிருஷ்ணர்..

“நீ எனக்கு எதையாவது சமர்பிக்கும்போது நான் உன்னுடன் இருக்கிறேன்.

நீ எதையாவது தியாகம் செய்யும்போது நான் உன்னுடன் இணைகிறேன்”- என்று கூறுகிறார்.

சமர்ப்பணத்திற்கும், தியாகத்திற்கும் உள்ள சிறந்த விளக்கம் இது.

***


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..? Empty Re: சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?

Post by kalainilaa Tue Oct 04, 2011 4:11 pm

உங்கள் கட்டுரை சேனைக்கு அற்ப்பணம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum