Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
பரீட்சையில் ஆள் மாறாட்டம்: புதுவை அமைச்சர் கைது ஆகிறார்; ஆசிரியர்-அதிகாரி மீதும் நடவடிக்கை
3 posters
Page 1 of 1
பரீட்சையில் ஆள் மாறாட்டம்: புதுவை அமைச்சர் கைது ஆகிறார்; ஆசிரியர்-அதிகாரி மீதும் நடவடிக்கை
புதுவை மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் கல்யாணசுந்தரம். இவர் 10-ம்
வகுப்பு தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தோல்வி
அடைந்து இருந்தார். கல்வி அமைச்சர் ஆனதும் இரு பாடங்களையும் எழுதி
தேர்ச்சி பெற முடிவு செய்தார். இதற்காக தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தார்.
பரீட்சை எழுத திண்டிவனம் மையத்தை தேர்வு செய்து இருந்தார். 29-ந் தேதி
அறிவியல் பாடத்தை எழுதினார். 30-ந் தேதி சமூக அறிவியல் பரீட்சைக்கு
செல்லவில்லை.
அந்த தேர்வை அவர் எழுதாமல் வேறு ஆளை
வைத்து எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை கல்யாணசுந்தரம் மறுத்தார்.
நான் தான் நேரடியாக சென்று தேர்வு எழுதினேன் என்று கூறினார். இது
தொடர்பாக விசாரணை நடத்த தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்
உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி
குப்புசாமி தலமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. அப்போது ஆள்
மாறாட்டம் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கல்யாண சுந்தரம்
கையெழுத்தையும், பரீட்சை பேப்பரில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு
பார்த்தனர். அதில் இரு கையெழுத்தும் வேறு வேறு என்பது தெரிந்தது. இதனால்
பரீட்சையில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பரீட்சை
ஹாலில் சூப்பர் வைசராக சிங்கனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் ஆதவன்
இருந்தார். அவருக்கும் ஆள்மாறாட்டத்துக்கும் தொடர்பு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. கல்யாணசுந்தரம், ஆதவனின் திண்டிவனம் வீட்டு முகவரியை
தனது முகவரி என்று கொடுத்து இருந்தார். ஆள் மாறாட்டத்துக்கு உதவுவதற்காகவே
ஆதவன் பரீட்சை ஹாலுக்கு சூப்பர்வைசராக வந்து இருந்தார். இதற்காக போலி
ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக இளநிலை உதவியாளர் ரஜினிகாந்த்
தயாரித்து கொடுத்தார்.
இதையடுத்து ஆசிரியர் ஆதவன்,
ரஜினிகாந்த் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நேற்று மாலை மாவட்ட கல்வி
அதிகாரி குப்புசாமி, அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 3 பேர் மீதும்
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இந்த
புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட குற்றபிரிவு போலீசுக்கு அனுப்பி
வைத்தார். 3 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு
செய்தனர்.
அதில் முதல் குற்றவாளியாக கல்யாணசுந்தரம்
சேர்க்கப்பட்டார். இ.பி.கோ.491 (ஆள் மாராட்டம்), 420 (மோசடி), 465,
466,468 (குற்றத்துக்கு உடந்தை), 471 (தெரிந்தே குற்றம் செய்தல்), 473
(மோசடி ஆவணம் தயாரித்தல்), 120-பி (அரசு அலுவலரை ஏமாற்றுதல்) ஆகிய 8
பிரிவுகளில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை
தொடர்ந்து 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர்
ஆதவன், ஊழியர் ரஜினிகாந்த் இருவரையும் இன்று காலை குற்றப்பிரிவு போலீசார்
விழுப்புரம் அழைத்து வந்தனர். விசாரணை முடிந்ததும் அவர்கள் முறைப்படி கைது
செய்யப்படுவார்கள். அடுத்ததாக அமைச்சர் கல்யாண சுந்தரத்தையும் கைது செய்ய
நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் இன்னொரு மாநிலத்தில் மந்திரி
என்பதால் கைது செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
இதுபற்றி
விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி
வருகின்றனர். புதுவை அரசிடம் முறைப்படி விண்ணப்பித்து அதன்பிறகு அவரை கைது
செய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கைதாகாமல் இருக்க அமைச்சர்
கல்யாணசுந்தரம் முன்ஜாமீன் பெறவும் முயற்சித்து வருகிறார். அவர்
வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே
கல்யாண சுந்தரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் அவரை ராஜினாமா செய்யுமாறு
முதல்- அமைச்சர் ரங்கசாமி கேட்டு கொண்டதாக தகவல் பரவி உள்ளது. எனவே கல்யாண
சுந்தரம் ராஜினமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த
விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு
கல்யாணசுந்தரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை
என்று கூறினார். மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல
மறுத்துவிட்டார்.கல்யாணசுந்தரம் தரப்பிலும் எந்த பதிலும் சொல்ல
மறுத்துவிட்டனர். கல்யாணசுந்தரத்துக்கு உதவிய ஆசிரியரும், அரசு ஊழியரும்
சிக்கி இருந்தாலும், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் யார் என்று
இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை. ஆசிரியர் ஆதவன்தான் இந்த மோசடியில்
முக்கிய பங்கு வசித்தவர். அவரிடம் விசாரித்தால் தேர்வு எழுதியவர் யார்
என்பது தெரிய வரும்.
மாலைமலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரீட்சையில் ஆள் மாறாட்டம்: புதுவை அமைச்சர் கைது ஆகிறார்; ஆசிரியர்-அதிகாரி மீதும் நடவடிக்கை
ஆள் மாறாட்டமா (*(: (*(:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: பரீட்சையில் ஆள் மாறாட்டம்: புதுவை அமைச்சர் கைது ஆகிறார்; ஆசிரியர்-அதிகாரி மீதும் நடவடிக்கை
இப்படி ஒரு பொழப்பு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
» ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் கைது !!!
» ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் கைது !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|