சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தாய் பசித்திருக்கிறாள் Khan11

தாய் பசித்திருக்கிறாள்

+2
நண்பன்
செய்தாலி
6 posters

Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty தாய் பசித்திருக்கிறாள்

Post by செய்தாலி Tue 11 Oct 2011 - 12:42

தாய் பசித்திருக்கிறாள் Nsmail-796070

அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்

தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு

கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை

தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்

கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி

தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 13:58

தாய்மையின் பெருமையை மிகவும் அழகாக விளக்கி விட்டு
இறுதியில் தாய்க்கு நடக்கும் கொடுமை பற்றியும்
அப்படிச்செய்யும் பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்பதையும்
மிகவும் அழகாக கூறி விட்டீர்கள் செய்தாலி வாழ்த்துக்கள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by பர்ஹாத் பாறூக் Tue 11 Oct 2011 - 14:01

நண்பன் wrote:தாய்மையின் பெருமையை மிகவும் அழகாக விளக்கி விட்டு
இறுதியில் தாய்க்கு நடக்கும் கொடுமை பற்றியும்
அப்படிச்செய்யும் பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்பதையும்
மிகவும் அழகாக கூறி விட்டீர்கள் செய்தாலி வாழ்த்துக்கள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
தாய் பசித்திருக்கிறாள் 111433
தாய் பசித்திருக்கிறாள் 111433 தாய் பசித்திருக்கிறாள் 111433 தாய் பசித்திருக்கிறாள் 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 11 Oct 2011 - 14:31

உலகத்து ஜனனத்தில் அத்தனை தாய்மைகளும் அபாரமே எந்த விலங்கிலும் இல்லாத அற்புதம் மனிதத்துக்குண்டு அதிலும் விசேசம் மனிதர்கள் மாத்திரம்தான் தாய்மைகளை மதிப்பதுமில்லை அதை உணர்வதுமில்லை அதனால்தான் முதியோர் இல்லங்கள் அதிகரித்திருக்கிறது

அருமையான கவிதை நன்றி


தாய் பசித்திருக்கிறாள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 15:31

நேசமுடன் ஹாசிம் wrote:உலகத்து ஜனனத்தில் அத்தனை தாய்மைகளும் அபாரமே எந்த விலங்கிலும் இல்லாத அற்புதம் மனிதத்துக்குண்டு அதிலும் விசேசம் மனிதர்கள் மாத்திரம்தான் தாய்மைகளை மதிப்பதுமில்லை அதை உணர்வதுமில்லை அதனால்தான் முதியோர் இல்லங்கள் அதிகரித்திருக்கிறது

அருமையான கவிதை நன்றி
தாய் பசித்திருக்கிறாள் 111433 தாய் பசித்திருக்கிறாள் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 17:13


தாய்" என்ற உணர்வு மனித இனத்தில் மட்டுமல்ல ..... பறவையினங்கள் விலங்கினங்கள் அனைத்திலும் உன்னதமானதொன்றேன்பதை, தன குழந்தையின் பசியோடிருந்தால் எந்நிலையிலும் அதன் பசி தீர்ப்பதே தன முதல் கடமையென்று மிக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்...

மனிதத் தாய்... அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்
வெட்டவெளியாயிருந்தாலும்.... முந்தானையால் தன் மானம் மறைத்துத் தன குழந்தையின் பசி போக்குகிறாள்.௪
தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு
கன்றின் பசியாற்ற முடியாதோ என நினைக்கும் தாய்ப்பசு...தன் பலம் கொண்டு கரப்பவனை விலக்கிவிட்டு கன்றின் போக்குகிறது

கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை
கையாலும் எடுக்க முடியாது குட்டியாலும் அருகில் எட்ட முடியாது எனும் நிலையிலும் கண்திறக்காத் தன் குட்டியை வாயாலே கவ்வி வந்து பாலூட்டும் தாய்.

தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்
மடி சுரக்கவில்லைஎன்றாலும் ஓடிச் சென்று உணவு கொண்டுவந்து ஊட்டிவிடும் காகம்

கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி
தனக்குப் பசியிருந்தும் உணவைக் கண்டவுடன் குஞ்சுகளை கொத்தித் தின்னவைத்து திருப்தியாகும் தாய்க்கோழி....

அடடா....தங்களின் சிந்தனைகள் சிலிர்க்க வைக்கிறது செய்தாலி...!

ஆனால் மக்கள் வளர்ந்தபின் தாயை அநாதை இல்லத்தில் விட்டுவிடுவது வேதனைஎன்று குஉரி வேதனைப் படுத்திவிட்டீர்.....

ஆனால் இக்கவிதையில் ஒரே ஒரு குறையிருக்கிறது... ஆம் இருக்கிறது....!

[quote="செய்தாலி"]
ீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
[quote]நவநாகரீக பெண்மைகள்
- இங்கு பெண்களை மட்டுமே குறை சொல்கிறீர்கள். எத்தனையோ ஆண்மக்களும் இப்படி செய்து கொண்டுதானிருக்கிறார்கள்"


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
நிச்சயமான வரி இது... பிறர் பசிக்க நாம் உண்ணுவது கூடாதென்பது மனிதநேயம். தாய் பசிக்கத் தான் உன்னுவதேன்பது.... மிருகத்தினம் கூட ஏற்குமா என்பது தெரியாது...

மொத்தத்தில் அருமையான கவிதையைக் கொடுத்து விட்டீர்...வாழ்த்துக்களும் நன்றிகளும்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by செய்தாலி Thu 13 Oct 2011 - 7:39

நண்பன் wrote:தாய்மையின் பெருமையை மிகவும் அழகாக விளக்கி விட்டு
இறுதியில் தாய்க்கு நடக்கும் கொடுமை பற்றியும்
அப்படிச்செய்யும் பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்பதையும்
மிகவும் அழகாக கூறி விட்டீர்கள் செய்தாலி வாழ்த்துக்கள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
@.

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by செய்தாலி Thu 13 Oct 2011 - 7:41

நேசமுடன் ஹாசிம் wrote:உலகத்து ஜனனத்தில் அத்தனை தாய்மைகளும் அபாரமே எந்த விலங்கிலும் இல்லாத அற்புதம் மனிதத்துக்குண்டு அதிலும் விசேசம் மனிதர்கள் மாத்திரம்தான் தாய்மைகளை மதிப்பதுமில்லை அதை உணர்வதுமில்லை அதனால்தான் முதியோர் இல்லங்கள் அதிகரித்திருக்கிறது

அருமையான கவிதை நன்றி

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 7:57

தாய்" என்ற உணர்வு மனித இனத்தில் மட்டுமல்ல ..... பறவையினங்கள் விலங்கினங்கள் அனைத்திலும் உன்னதமானதொன்றேன்பதை, தன குழந்தையின் பசியோடிருந்தால் எந்நிலையிலும் அதன் பசி தீர்ப்பதே தன முதல் கடமையென்று மிக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்...

தாய்மைக்கு நிகர் தாய்மையே என்னும் சிறந்த ஒரு உறவுக்கான கவிதை தந்திருக்கும் உறவுக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Last edited by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 8:05; edited 1 time in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by செய்தாலி Thu 13 Oct 2011 - 8:03

[quote="யாதுமானவள்"]
தாய்" என்ற உணர்வு மனித இனத்தில் மட்டுமல்ல ..... பறவையினங்கள் விலங்கினங்கள் அனைத்திலும் உன்னதமானதொன்றேன்பதை, தன குழந்தையின் பசியோடிருந்தால் எந்நிலையிலும் அதன் பசி தீர்ப்பதே தன முதல் கடமையென்று மிக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்...

மனிதத் தாய்... அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்
வெட்டவெளியாயிருந்தாலும்.... முந்தானையால் தன் மானம் மறைத்துத் தன குழந்தையின் பசி போக்குகிறாள்.௪
தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு
கன்றின் பசியாற்ற முடியாதோ என நினைக்கும் தாய்ப்பசு...தன் பலம் கொண்டு கரப்பவனை விலக்கிவிட்டு கன்றின் போக்குகிறது

கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை
கையாலும் எடுக்க முடியாது குட்டியாலும் அருகில் எட்ட முடியாது எனும் நிலையிலும் கண்திறக்காத் தன் குட்டியை வாயாலே கவ்வி வந்து பாலூட்டும் தாய்.

தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்
மடி சுரக்கவில்லைஎன்றாலும் ஓடிச் சென்று உணவு கொண்டுவந்து ஊட்டிவிடும் காகம்

கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி
தனக்குப் பசியிருந்தும் உணவைக் கண்டவுடன் குஞ்சுகளை கொத்தித் தின்னவைத்து திருப்தியாகும் தாய்க்கோழி....

அடடா....தங்களின் சிந்தனைகள் சிலிர்க்க வைக்கிறது செய்தாலி...!

ஆனால் மக்கள் வளர்ந்தபின் தாயை அநாதை இல்லத்தில் விட்டுவிடுவது வேதனைஎன்று குஉரி வேதனைப் படுத்திவிட்டீர்.....

ஆனால் இக்கவிதையில் ஒரே ஒரு குறையிருக்கிறது... ஆம் இருக்கிறது....!

[quote="செய்தாலி"]
ீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்
- இங்கு பெண்களை மட்டுமே குறை சொல்கிறீர்கள். எத்தனையோ ஆண்மக்களும் இப்படி செய்து கொண்டுதானிருக்கிறார்கள்"


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
நிச்சயமான வரி இது... பிறர் பசிக்க நாம் உண்ணுவது கூடாதென்பது மனிதநேயம். தாய் பசிக்கத் தான் உன்னுவதேன்பது.... மிருகத்தினம் கூட ஏற்குமா என்பது தெரியாது...

மொத்தத்தில் அருமையான கவிதையைக் கொடுத்து விட்டீர்...வாழ்த்துக்களும் நன்றிகளும்!


வரி நிழல்களில்
மௌனமாய் இருக்கும்
என் கிறுக்கல்கள்
உயிர்பெற்று பேசவைக்கிறது
தோழி உங்கள் கருத்து

பிழை ஒன்றை சுட்டிக்காட்டி இருந்தீர்கள்
பிழைதான் தோழி நான் மதிக்கும் பெண்மைகள் என்னை மன்னிக்கட்டும்

அதேசமயம்

தன் தாய்க்கு மதிப்பளிப்பவன்
கட்டும் தாரத்திற்கும் மதிப்பளிப்பான்
தாயையும் தாரத்தையும் மதிக்கும்
ஒரு சிறந்த தலைவனின் தாயை
எந்தப் பெண்மையும் வெறுப்பதில்லை
அப்படி வெறுப்பதற்கு
பெண்மை உள்ளம் அவ்வளவு
கோரமில்லை

தாயிக்கும் தாரத்திற்கும்
அன்பில் பேதம் காட்டாதவன்
சிறந்த மகன்
சிறந்த தலைவன்
மேல் சொல்லப்பட்ட பிரச்சனைக்கும் இடமில்லை

மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்
நான் மதிக்கும் பெண்மைகள் அந்த பிழைக்கு என்னை மன்னிக்கட்டும்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by செய்தாலி Thu 13 Oct 2011 - 8:11

முனாஸ் சுலைமான் wrote:
தாய்" என்ற உணர்வு மனித இனத்தில் மட்டுமல்ல ..... பறவையினங்கள் விலங்கினங்கள் அனைத்திலும் உன்னதமானதொன்றேன்பதை, தன குழந்தையின் பசியோடிருந்தால் எந்நிலையிலும் அதன் பசி தீர்ப்பதே தன முதல் கடமையென்று மிக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்...

தாய்மைக்கு நிகர் தாய்மையே என்னும் சிறந்த ஒரு உறவுக்கான கவிதை தந்திருக்கும் உறவுக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய் பசித்திருக்கிறாள் Empty Re: தாய் பசித்திருக்கிறாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum