சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்  Khan11

பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

Go down

பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்  Empty பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 8:09

*‘‘பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்...’’ என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.



*‘‘குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில்சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால், வேலை செய்பவர்களுக்கு 2000 கலோரிகள் தேவையாக இருக்கும்.பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். அதற்கு கீரைகள்,

*பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.குழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்கள் சரியாக சாப்பிட்டால்தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக கண்ணில் தென்படுவதை

*எல்லாம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்து புரத, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைக்கு பால் புகட்டுவதால், கால்சியம் மற்றும் புரதச் சத்து அதிகமாக தேவைப்படும். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் போன்றவற்றில் அதிக கால்சிய சத்துள்ளது.

*தினமும் குறைந்த பட்சம் இரண்டு டம்ளர் பால் குடிப்பது அவசியம். பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டையில் புரதச் சத்துக்கள் உள்ளன. இவை பால் சுரக்கவும் உதவக் கூடியவை.தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். பால் புகட்டும் முன் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால்
புகட்டலாம்.

*இதனால் பால் நன்றாக சுரக்கும். கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு,மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்னை ஏற்படும்.

*எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம். வேப்பிலை பொடி,சுண்டைக்காய் பொடி மற்றும் நார்த்த இலையை பொடி செய்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

*இது அஜீரண பிரச்னைக்கு நல்ல மருந்து. சில பெண்கள் பால் சுரக்காமல் அவதிப்படுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.இப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே சின்னச் சின்ன உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் எல்லாகடமைகளும் முடிந்துவிட்டது என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். அது தவறு.

*பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் உடல் பருமனை இரண்டு வருடத்திற்குள் குறைக்க வேண்டும். இல்லை என்றால் அதை குறைப்பது மிகவும் கடினம். சுகப்பிரசவமாக இருந்தால் ஒரு மாதம் கழித்து சின்ன சின்ன உடற்பயிற்சிகள், வீட்டு வேலைகள் செய்யலாம். அறுவை சிகிச்சை என்றால் மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனையுடன் செய்யலாம்.

சில எளிய உடற்பயிற்சிகள்:

*மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு இடது கால். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இது போல் தினமும் பத்து முறை செய்யலாம். வயிறு உப்புசம் குறையும்.நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும் கால் விரல்களை தொடும் அளவு குனிய வேண்டும்.பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்.

*இடுப்பு பகுதிக்கு இது நல்ல பயிற்சி.மேசை மேல் அமர்ந்து வேலை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்யும் போது அது பெல்விக் மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அதாவது கீழே அமர்ந்து சாப்பிடலாம். காய்கறி நறுக்கலாம்.நேரம் இருந்தால், குழந்தை பிறந்து ஐந்து மாதம் கழித்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.


பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைமட்டுமல்ல, தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum