Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தி.மு.க சார்பில் தேனியில் பிரமாண்ட மனித சங்கிலி: கேரளாவில் இடைத் தேர்தலுக்காக பொய்ப் பிரசாரம்
2 posters
Page 1 of 1
தி.மு.க சார்பில் தேனியில் பிரமாண்ட மனித சங்கிலி: கேரளாவில் இடைத் தேர்தலுக்காக பொய்ப் பிரசாரம்
தேனி:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும். அணை பகுதியில் மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை தேனியில் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி நடத்தப்பட்டது.
மனித சங்கிலியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். மனித சிங்கிலியை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது; முல்லை பெரியாறு அணை பிரச்சினை ஆரம்பித்தது முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனைத்து கட்சியை கூட்டி சிறப்பு தீர்மானத்தை போட வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தட்டிக்கழித்து வந்தார்.
தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 12ம் திகதி உண்ணா நோன்பு போராட்டமும், 15ம் திகதி மனித சங்கிலி போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மனித சங்கிலி போராட்டம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா திடீரென 15ம் திகதி தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடி முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
15ம் திகதி தேர்வு செய்ய என்ன காரணம்? தேனி மாவட்டத்தில் கம்பன் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியசாமி, சக்கரபாணி, சிவகங்கை மாவட்டத்தில் பெரியகருப்பன், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுப. தங்கவேலன், விருது நகர் மாவட்டத்தில் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா மக்களின் உயிர் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அரசியல் செய்ய பார்த்தார். ஆனால் கருணாநிதி இந்த பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மனித சங்கிலி போராட்டம் ஒரு நாள் முன்னதாக 14ம் திகதியே நடக்கும் என அறிவித்து விட்டார்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் பலமிக்கதாக உள்ளது. பென்னிகுக் அணை பலமாக இருந்தாலும், அங்குள்ள கேரள மக்களிடத்தில் அங்குள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியும் அணை பலவீனமடைந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு என்ன காரணம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பிரவம் எனும் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீப த்தில் இறந்தார். இதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 70 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கு 68 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பிரவம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இறந்து அந்த இடத்திற்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்று விட்டால் கம்யூனிஸ்ட் 69 எம்.எல்.ஏக்களையும், காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களையும் பெற்று சமநிலையை அடைந்து விடும். இதனால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும். எனவே இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத ற்காக பெரியாறு பிரச்சினையை திசை திருப்பி பொய்ப் பிரசாரம் செய்கின்றனர் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தி.மு.க சார்பில் தேனியில் பிரமாண்ட மனித சங்கிலி: கேரளாவில் இடைத் தேர்தலுக்காக பொய்ப் பிரசாரம்
:”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
» உள்ளூராட்சி தேர்தலுக்காக இம்மாதம் 20முதல் 27 வரை வேட்புமனு தாக்கல் _
» தேனியில் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
» தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது
» தேனியில் வாலிபர் தீக்குளிப்பு
» உள்ளூராட்சி தேர்தலுக்காக இம்மாதம் 20முதல் 27 வரை வேட்புமனு தாக்கல் _
» தேனியில் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
» தங்கச் சங்கிலி மீதான ஆசை இருவரை கொலைகாரர்களாக்கியது
» தேனியில் வாலிபர் தீக்குளிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|