Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
Page 1 of 1
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
நாட்டின் தலைவனாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டி யாகவிருந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தமது பொறு ப்பும் கடமையும் ஆகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரி வித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்த ஜனாதிபதி; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதும் தமது பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.
அம்பாறை தெஹியத்த கண்டியில் நேற்று மகாவலி விவசாயிகளுக்குக் காணி உறுதி பத்திரங்களை வழங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பீ. தயாரத்ன, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுனர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரைநிகழ்த்திய ஜனாதிபதி :- கடந்த 30 வருட காலம் கொடூரமான பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய யுகமொன்றை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.
இந்த சுதந்திரத்தின் முழுமையான பலனை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இன்றைய சமாதான சுழலில் விவசாயத்தில் முன்னேற்றமடையவும் பிள்ளைகளின் கல்வியில் அவதானம் செலுத்தவும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.
நாம் எந்தளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தாலும் மது பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியாதுள்ளது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். தமது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை மதுவுக்கு செலவிடாமல் அல்லது முறையற்ற செலவுகளில் விரயமாக்காமல் வருமனத்தை முகாமைத்துவப்படுத்துவது மிக முக்கியமாகும். இது விடயத்தில் எமக்கு விசேட பொறுப்பு உள்ளது.
இந்த நாட்டின் 100 ற்கு 23 வீத விவசாயிகள் மகாவலி வலயங்களிலேயே உள்ளனர். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.
நாம் உரமானியம் உட்பட சகல சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அதனால்தான் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும், எரிபொருள் விலையதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்த பாதிப்புகளுக்கு நாம் அகப்படவில்லை.
அதில் மகாவலி விவசாயிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் மீது கூடிய அவதானத்தைச் செலுத்துவது எமது கடமையாகும். கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் உங்களால் நான் தெரிவு செய்யப்பட்டவன். இதனால் உங்கள் மீது எனக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இன்று வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரம் மிகவும் பெறுமதியானவை. இதனை எவருக்காவது விற்றுவிட முனைய வேண்டாம். நாம் எமது காணியை யாருக்காவது அடகு வைத்து தூரப் பிரதேச நகரில் வாழ்வதல்ல வாழ்க்கை. இதனால் நீங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு தடைப்பட்டு விடும் என்பதைச் சிந்தியுங்கள்.
நீண்ட வருடங்களுக்குப் பின் கையில் கிடைத்துள்ள இந்த சொத்தை உங்கள் குடும்ப நலனுக்காக நாட்டின் நலனுக்காக உபயோகியுங்கள்.
காணி உறுதி இதுவரை கிடைக்காத சகலருக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்த ஜனாதிபதி; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதும் தமது பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.
அம்பாறை தெஹியத்த கண்டியில் நேற்று மகாவலி விவசாயிகளுக்குக் காணி உறுதி பத்திரங்களை வழங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பீ. தயாரத்ன, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுனர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரைநிகழ்த்திய ஜனாதிபதி :- கடந்த 30 வருட காலம் கொடூரமான பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய யுகமொன்றை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.
இந்த சுதந்திரத்தின் முழுமையான பலனை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இன்றைய சமாதான சுழலில் விவசாயத்தில் முன்னேற்றமடையவும் பிள்ளைகளின் கல்வியில் அவதானம் செலுத்தவும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.
நாம் எந்தளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தாலும் மது பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியாதுள்ளது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். தமது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை மதுவுக்கு செலவிடாமல் அல்லது முறையற்ற செலவுகளில் விரயமாக்காமல் வருமனத்தை முகாமைத்துவப்படுத்துவது மிக முக்கியமாகும். இது விடயத்தில் எமக்கு விசேட பொறுப்பு உள்ளது.
இந்த நாட்டின் 100 ற்கு 23 வீத விவசாயிகள் மகாவலி வலயங்களிலேயே உள்ளனர். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.
நாம் உரமானியம் உட்பட சகல சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அதனால்தான் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும், எரிபொருள் விலையதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்த பாதிப்புகளுக்கு நாம் அகப்படவில்லை.
அதில் மகாவலி விவசாயிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் மீது கூடிய அவதானத்தைச் செலுத்துவது எமது கடமையாகும். கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் உங்களால் நான் தெரிவு செய்யப்பட்டவன். இதனால் உங்கள் மீது எனக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இன்று வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரம் மிகவும் பெறுமதியானவை. இதனை எவருக்காவது விற்றுவிட முனைய வேண்டாம். நாம் எமது காணியை யாருக்காவது அடகு வைத்து தூரப் பிரதேச நகரில் வாழ்வதல்ல வாழ்க்கை. இதனால் நீங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு தடைப்பட்டு விடும் என்பதைச் சிந்தியுங்கள்.
நீண்ட வருடங்களுக்குப் பின் கையில் கிடைத்துள்ள இந்த சொத்தை உங்கள் குடும்ப நலனுக்காக நாட்டின் நலனுக்காக உபயோகியுங்கள்.
காணி உறுதி இதுவரை கிடைக்காத சகலருக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கொழும்பு மாநகர வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|