Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
2 posters
Page 1 of 1
பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
ஜனாதிபதியின் 2வது பதவிக் காலத்தின் ஈராண்டு பூர்த்தி:
பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு முதல் தடவையாக பில். டொலர்களால் அதிகரிப்பு
ரசிக்க சோமரட்ண
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் இலங்கையின் தலா வருமானம் 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதுடன், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த நாட்டை விடுவித்து, சமாதானத்தை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியில் நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர் என்பதை வாக்காளர்கள் உணர்ந்துகொண்டு இரண்டாவது தடவையும் ஜனாதிபதிக்கும் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி அவர்களின் முதலாவது பதவிக்காலமான ஆறு வருடங்கள் முடிவடைவதற்கு முன்னதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதிவாகிய 14,088,500 வாக்காளர்களில் 57.8 வீதமான வாக்குகளைப் பெற்றார்.
ஜனாதிபதி பதவியேற்ற பின்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவு மைல்கல்கள் எட்டப்பட்டன.
“ஆசியா பிராந்தியத்தில் இந்தியாவும், இலங்கையும் அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்கின்றன. 2013ஆம் ஆண்டு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.9 வீதமாகக் காணப்படும்” என 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் உலக பொருளாதார அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. “இலங்கையின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 2010ஆம் ஆண்டில் 8 வீதத்தை அடைந்துள்ளது. பொருளாதார நிலை தொடர்ந்தும் உறுதியாகக் காணப்படும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரம், இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு வரலாற்றில் முதல்தடவையாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் நாட்டுக்குக் கிடைக்கும் வருவாய் 2011ஆம் ஆண்டு முதல் தடவையாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44.2 வீதமாக அதிகரித்திருப்பதுடன், இதன்மூலம் 830 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை 38.9 வீதத்தால் அதிகரித்தது. இதற்கமைய 8 இலட்சத்து 55 ஆயிரத்து 975 பேர் இலங்கை வந்துள்ளனர். உல்லாசப் பயணிகள் மற்றும் ஏனைய நாணய மாற்றின் மூலம் கிடைத்த வருமானம் 497.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டில் 326.3 மில்லியனாகவிருந்த நாணயமாற்றின் மூலமான வருமானம் கடந்த ஆண்டு கணிசமானளவு அதிகரித்துள்ளது. அதேபோல ஏற்றுமதிகள் மூலமான வருமானம் 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த பொருளாதார அபிவிருத்தி 8 வீதமாக அதிகரித்தது. 8 வீதமாகவிருந்த வேலையற்றோர் வீதம் 5 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மிலேனியம் அபிவிருத்தி இலக்கின் மூலம் இலங்கை பாரிய நன்மையைப் பெற்றதுடன், பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு இது பாரிய உதவியாக அமைந்தது. இலங்கையின் உட்கட்டுமானங் களின் அபிவிருத்தி தொடர்ந்தும் அதிகரித்த வேகத்திலேயே காணப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக வரலாற்று முக்கியத்துவம்மிக்க நிகழ்வாக தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு வீதி அபிவிருத்தியில் ஜனாதிபதி புதிய அத்தியாயமொன்றைத் தொடங்கிவைத்தார்.
கடந்த வருடத்தில் கலைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள், தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கத்தைத் திறந்துவைத்தார்.
அதுமாத்திரமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்விநியோகச் செயற்திட்டங்கள் என்பன தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன.
பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு முதல் தடவையாக பில். டொலர்களால் அதிகரிப்பு
ரசிக்க சோமரட்ண
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் இலங்கையின் தலா வருமானம் 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதுடன், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த நாட்டை விடுவித்து, சமாதானத்தை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியில் நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர் என்பதை வாக்காளர்கள் உணர்ந்துகொண்டு இரண்டாவது தடவையும் ஜனாதிபதிக்கும் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி அவர்களின் முதலாவது பதவிக்காலமான ஆறு வருடங்கள் முடிவடைவதற்கு முன்னதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதிவாகிய 14,088,500 வாக்காளர்களில் 57.8 வீதமான வாக்குகளைப் பெற்றார்.
ஜனாதிபதி பதவியேற்ற பின்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவு மைல்கல்கள் எட்டப்பட்டன.
“ஆசியா பிராந்தியத்தில் இந்தியாவும், இலங்கையும் அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்கின்றன. 2013ஆம் ஆண்டு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.9 வீதமாகக் காணப்படும்” என 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் உலக பொருளாதார அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. “இலங்கையின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 2010ஆம் ஆண்டில் 8 வீதத்தை அடைந்துள்ளது. பொருளாதார நிலை தொடர்ந்தும் உறுதியாகக் காணப்படும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரம், இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு வரலாற்றில் முதல்தடவையாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் நாட்டுக்குக் கிடைக்கும் வருவாய் 2011ஆம் ஆண்டு முதல் தடவையாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44.2 வீதமாக அதிகரித்திருப்பதுடன், இதன்மூலம் 830 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை 38.9 வீதத்தால் அதிகரித்தது. இதற்கமைய 8 இலட்சத்து 55 ஆயிரத்து 975 பேர் இலங்கை வந்துள்ளனர். உல்லாசப் பயணிகள் மற்றும் ஏனைய நாணய மாற்றின் மூலம் கிடைத்த வருமானம் 497.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டில் 326.3 மில்லியனாகவிருந்த நாணயமாற்றின் மூலமான வருமானம் கடந்த ஆண்டு கணிசமானளவு அதிகரித்துள்ளது. அதேபோல ஏற்றுமதிகள் மூலமான வருமானம் 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த பொருளாதார அபிவிருத்தி 8 வீதமாக அதிகரித்தது. 8 வீதமாகவிருந்த வேலையற்றோர் வீதம் 5 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மிலேனியம் அபிவிருத்தி இலக்கின் மூலம் இலங்கை பாரிய நன்மையைப் பெற்றதுடன், பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு இது பாரிய உதவியாக அமைந்தது. இலங்கையின் உட்கட்டுமானங் களின் அபிவிருத்தி தொடர்ந்தும் அதிகரித்த வேகத்திலேயே காணப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக வரலாற்று முக்கியத்துவம்மிக்க நிகழ்வாக தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு வீதி அபிவிருத்தியில் ஜனாதிபதி புதிய அத்தியாயமொன்றைத் தொடங்கிவைத்தார்.
கடந்த வருடத்தில் கலைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள், தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கத்தைத் திறந்துவைத்தார்.
அதுமாத்திரமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்விநியோகச் செயற்திட்டங்கள் என்பன தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
மகிழ்ச்சியாக உள்ளது தகவலுக்கு நன்றி :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக குறையும்!
» சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை
» பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி
» இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை
» வருமானம் தரும் நித்யகல்யாணி
» சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை
» பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி
» இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை
» வருமானம் தரும் நித்யகல்யாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|