Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
மனித சமூகம் ஒரு குடும்பமாகும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனித சமூகம் ஒரு குடும்பமாகும்
மனித சமூகம் ஒரு குடும்பமாகும்
உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பமாவர். அவர்கள் ஆதி பிதா ஆதம் (அலை) அன்னை ஹவ்வா (அலை) இருவரினதும் பிள்ளைகளாவர். அவர்களின் சந்ததிகளே பல்கிப் பெருகிக் கிளைகளாகவும், கோத்திரங்களாவும் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இதை பின்வரும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வசனங்கள் வலியுறுத்துகின்றன.
மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒருபெண்ணிலிருந்தும் தான் படைத்தோம். பின்னர் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க இறைபக்தியுடையவனே அல்லாஹ்விடத்தில் மிகவும் மேலானவனாக இருக்கின்றான். (49 : 13)
‘படைப்பனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்; அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே, அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் அன்பானவன் (புஹாரி)
இஸ்லாமியக் குடும்பம் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும், சிறந்தும் விளங்குகின்றது. அதற்கென அல்லாஹ் பல வரையறைகளையும் சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளான்.
குடும்ப வாழ்க்கை எதற்காக?
மனிதன் குடும்பமாகச் சேர்ந்து வாழும் இயல்பினன். எப்போதும் பிறர் துணையை வேண்டி நிற்பவன். ஒரு குழந்தை பிறந்தது முதல் வாழ்வின் பல்வேறு படிகளில் பிறர் துணையை நாடி நிற்கின்றது.
அன்னை, தந்தையரின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு, உதவி, உபகாரம், பாதுகாப்பு என்பன அதற்குத் தேவைப்படுகின்றன. சிறுவனாக வளரும் போது உடன் பிறந்தவர்களின் துணையும் வாலிபனான பின் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பும், வயோதிபப் பருவத்தில் பிள்ளைகளின் பராமரிப்பும், நிழலும், துணையும் அவனுக்கு அவசியமாகின்றன. இத்தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் குடும்ப வாழ்க்கை முறை உதவுகிறது.
குடும்பம் இரத்த பந்தத்தாலும் திருமண உறவாலும் உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் ஓர் இஸ்லாமிய குடும்பத்தின் அங்கத்தவர்களுக்குரிய வரையறைகளும் சட்ட திட்டங்களும் அல்லாஹ்வால் வகுக்கப்பட்டவை.
இறையச்சமே அடித்தளம்
தக்வாவே இஸ்லாமிய குடும்பத்தின் அடித்தளம். குடும்பத்தை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள் (4 : 1) என்ற அல்குர்ஆன் வசனத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் இறையச்சம் நினைவு படுத்தப்படுகிறது.
குடும்ப வாழ்வின் நோக்கம்
இறையச்சத்தின் அடிப்படையில் முறையான விவாகத்தின் மூலம் இணையும் கணவன் மனைவி உறவால் ஒரு சீரான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பத்தின் மூலம் மனிதன் பல நோக்கங்களை அடைகின்றான். அவற்றுள் மன அமைதியும், சந்ததி விருத்தியும் மிகப் பிரதானமானவை. இதற்குக் கணவன் மனைவிக்கிடையில் அன்பும் பாசமும் நேசமும் நிலவ வேண்டும்.
‘(நீங்கள் சேர்ந்து வாழக் கூடிய) உங்கள் மனைவியரை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் (30 : 12)
விவாகத்தின் மூலம் மனக் கட்டுப்பாடு, சந்ததி விருத்தி ஆகியவற்றுடன் பரிசுத்தம், பாதுகாப்பு, கெளரவம், சமாதானம், ஆரோக்கியம் என்பனவும் சாத்தியமாகின்றன.
இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையின் இவ்விலட்சியங்களை உதாசீனம் செய்து வாழ முற்படுவது விபச்சாரம் போன்ற தீமைகள் தோன்றக் காரணமாகின்றது. இதைத் தடுக்கவே இஸ்லாம் விவாகஞ் செய்து குடும்பமாக வாழ்வதை ஊக்குவிக்கின்றது.
எம். எம். ஆதம்பாவா
தொலைக் கல்வி சிரேஷ்ட போதனாசிரியர்
உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பமாவர். அவர்கள் ஆதி பிதா ஆதம் (அலை) அன்னை ஹவ்வா (அலை) இருவரினதும் பிள்ளைகளாவர். அவர்களின் சந்ததிகளே பல்கிப் பெருகிக் கிளைகளாகவும், கோத்திரங்களாவும் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இதை பின்வரும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வசனங்கள் வலியுறுத்துகின்றன.
மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒருபெண்ணிலிருந்தும் தான் படைத்தோம். பின்னர் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க இறைபக்தியுடையவனே அல்லாஹ்விடத்தில் மிகவும் மேலானவனாக இருக்கின்றான். (49 : 13)
‘படைப்பனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்; அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே, அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் அன்பானவன் (புஹாரி)
இஸ்லாமியக் குடும்பம் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும், சிறந்தும் விளங்குகின்றது. அதற்கென அல்லாஹ் பல வரையறைகளையும் சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளான்.
குடும்ப வாழ்க்கை எதற்காக?
மனிதன் குடும்பமாகச் சேர்ந்து வாழும் இயல்பினன். எப்போதும் பிறர் துணையை வேண்டி நிற்பவன். ஒரு குழந்தை பிறந்தது முதல் வாழ்வின் பல்வேறு படிகளில் பிறர் துணையை நாடி நிற்கின்றது.
அன்னை, தந்தையரின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு, உதவி, உபகாரம், பாதுகாப்பு என்பன அதற்குத் தேவைப்படுகின்றன. சிறுவனாக வளரும் போது உடன் பிறந்தவர்களின் துணையும் வாலிபனான பின் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பும், வயோதிபப் பருவத்தில் பிள்ளைகளின் பராமரிப்பும், நிழலும், துணையும் அவனுக்கு அவசியமாகின்றன. இத்தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் குடும்ப வாழ்க்கை முறை உதவுகிறது.
குடும்பம் இரத்த பந்தத்தாலும் திருமண உறவாலும் உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் ஓர் இஸ்லாமிய குடும்பத்தின் அங்கத்தவர்களுக்குரிய வரையறைகளும் சட்ட திட்டங்களும் அல்லாஹ்வால் வகுக்கப்பட்டவை.
இறையச்சமே அடித்தளம்
தக்வாவே இஸ்லாமிய குடும்பத்தின் அடித்தளம். குடும்பத்தை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள் (4 : 1) என்ற அல்குர்ஆன் வசனத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் இறையச்சம் நினைவு படுத்தப்படுகிறது.
குடும்ப வாழ்வின் நோக்கம்
இறையச்சத்தின் அடிப்படையில் முறையான விவாகத்தின் மூலம் இணையும் கணவன் மனைவி உறவால் ஒரு சீரான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பத்தின் மூலம் மனிதன் பல நோக்கங்களை அடைகின்றான். அவற்றுள் மன அமைதியும், சந்ததி விருத்தியும் மிகப் பிரதானமானவை. இதற்குக் கணவன் மனைவிக்கிடையில் அன்பும் பாசமும் நேசமும் நிலவ வேண்டும்.
‘(நீங்கள் சேர்ந்து வாழக் கூடிய) உங்கள் மனைவியரை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் (30 : 12)
விவாகத்தின் மூலம் மனக் கட்டுப்பாடு, சந்ததி விருத்தி ஆகியவற்றுடன் பரிசுத்தம், பாதுகாப்பு, கெளரவம், சமாதானம், ஆரோக்கியம் என்பனவும் சாத்தியமாகின்றன.
இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையின் இவ்விலட்சியங்களை உதாசீனம் செய்து வாழ முற்படுவது விபச்சாரம் போன்ற தீமைகள் தோன்றக் காரணமாகின்றது. இதைத் தடுக்கவே இஸ்லாம் விவாகஞ் செய்து குடும்பமாக வாழ்வதை ஊக்குவிக்கின்றது.
எம். எம். ஆதம்பாவா
தொலைக் கல்வி சிரேஷ்ட போதனாசிரியர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்
» இழிவை நோக்கி இந்தியச் சமூகம்!
» பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்பட...
» இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
» இழிவை நோக்கி இந்தியச் சமூகம்!
» பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்பட...
» இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!
» பெண் குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|