Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
ஆவடி: காவலாளியை கட்டிப் போட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆவடி: காவலாளியை கட்டிப் போட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி
ஆவடி, மார்ச். 29-
ஆவடி கேம்ப் ரோட்டில் செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் எச்.டி.எப்.சி. வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு அயப்பாக்கத்தை சேர்ந்த கோபால் என்பவர் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்தினுள் அவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் ஏ.டி.எம். மையத்தில் புகுந்தனர்.
தாங்கள் வைத்திருந்த இரும்புக் கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்தனர். சத்தம் கேட்டு கோபால் திடுக்கிட்டு எழுந்து கூச்சல் போட்டார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் அவரது மேல் ஏறி அமர்ந்து கொண்டு வாயில் துணியை திணித்தான். பின்னர், தயாராக வைத்திருந்த வயரால் கோபாலை கட்டிப்போட்டான்.
இதன் பிறகு 2 கொள்ளையர்களும் ஏ.டி.எம். எந்திரத்தை மேலும் உடைத்து பணத்தை கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டினர். எந்திரத்தின் வெளிப்பகுதியை எளிதாக உடைத்து விட்டு அவர்களால் லாக்கர் இருக்கும் பகுதியை உடைக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். லட்சக் கணக்கான ரூபாய் தப்பியது.
இன்று காலை 6 மணிக்கு இன்னொரு காவலாளியான சுப்பிரமணி பணிக்கு வந்தார். அப்போது கோபால் வாயில் துணி அமுக்கப்பட்ட நிலையில் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கோபாலின் வாயில் இருந்த துணியை எடுத்து அவரை மீட்டனர்.
பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னர்தான் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் அந்த வழியாக ரோந்து சென்றுள்ளார். ஏ.டி.எம். மையத்தில் தொங்க விடப்பட்டுள்ள ரோந்து புத்தகத்திலும் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.
இதன் பிறகுதான் முகமூடி கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலாக ஏ.டி.எம். மையத்தில் புகுந்துள்ளனர். அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் போட்டுப் பார்த்தனர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் கையெழுத்து போடுவது வரையில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் கொள்ளையர்கள் உள்ளே நுழைவது, ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது போன்ற காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.
எனவே கொள்ளையர்கள் துணியை போட்டு கேமராவை மூடி வைத்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆவடி: காவலாளியை கட்டிப் போட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி
எடிஎம்மில் பணம் இருப்பதும் ஒரு பெட்டியில் பணத்தைப் போட்டு ரோட்ல வைக்கிறதும் ஒன்னு தான் போல 2 க்கும் வித்தியாசமில்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|