சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Khan11

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்

Go down

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Empty சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 9:34

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Nanjiesun+1

மாவோவின்
மரணத்திற்குப் பின்னர், சீனாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய
டென்ங்சியாபிங், சோஷலிசத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, சந்தைப்
பொருளாதாரத்தை தழுவிக் கொண்டார். எண்பதுகளுக்குப்பிறகு, சீனாவின் சோஷலிச
கட்டுமானங்கள் படிப்படியாக தகர்க்கப்பட்டு, முதலாளித்துவ
பொருளாதாரம்புகுத்தப் பட்டது. இதனால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட
கம்யூன் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இன்று சீனாவுக்கு செல்லும் யாரும்,
முதலாளித்துவ சீனாவை தான் தரிசிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர்
இருந்த சோஷலிச சீனா, எப்படி இருந்திருக்கும் என்பது இன்றைய தலைமுறையை
சேர்ந்தவர்களுக்கு தெரியாது. ஆனால், இன்றைக்கும் ஓரிடத்தில் பழைய சோஷலிச
கட்டுமானங்களை கொண்ட கிராமம் (அல்லது நகரம்) ஒன்று, திறந்த வெளி
அருங்காட்சியகம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. சீனாவுக்கு செல்லும்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் வாழும் உள்நாட்டு சுற்றுலாப்
பயணிகளும் அந்த இடத்திற்கு சென்று வருகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்பதைப் போல, அன்றைய கம்யூனிச சீன எப்படி இருந்திருக்கும்
என்று, அங்கு செல்பவர்கள் கண்டு களிக்கலாம்.

நாஞ்சிசுன் ( Nanjiecun)
என்ற ஊரில், மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். முப்பது
வருடங்களுக்கு முன்னர், முதலாளித்துவ சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள
மறுத்து, கம்யூனிசக்கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முடிவு செய்தனர்.
அவர்களுக்கு அயலில் இருக்கும் ஊர்கள் எல்லாம், முதலாளித்துவத்திற்கு
மாறியதால், ஒரு பக்கம் ஏழைகளும், மறுபக்கம் பணக்காரர்களும் அதிகரித்தனர்.
அந்த ஊர்களில், வேலயில்லாத் திண்டாட்டம், ஊழல், திருட்டு, விபச்சாரம்,
போதைவஸ்து பாவனை என்று, முதலாளித்துவத்திற்கே உரிய பல்வேறு சமூகப்
பிரச்சனைகளை எதிர்கொண்டன. ல்வேறு சமூகப் பிரச்சினைகளும் தோன்றின. ஆனால்,
நாஞ்சிசுன் மக்கள், அவற்றைப் பற்றிய எந்தக் கவலையுமற்று வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Nanjicun1

அதை
ஏன் சொர்க்கம் என்று அழைக்க வேண்டும்? நாஞ்சிசுன் நகர தெருக்கள் சுத்தமாக
வைத்திருக்கப் படுகின்றன. தெருவில் பிச்சை எடுப்போரைக் காண முடியாது. அங்கே
வேலையில்லாப் பிரச்சினை என்ற பேச்சே கிடையாது. எல்லோருக்கும் தொழில்
வாய்ப்புண்டு. வீடின்றி யாரும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
வசதியான வீடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில்அது போன்ற வீடுகளில்
பணக்காரர்கள் மட்டுமே வசிக்கலாம். நாஞ்சிசுன் வாழ் மக்கள், அந்த வசதியான
வீடுகளுக்கு வாடகை கட்டுவதில்லை என்பது தான் விசேஷம். வீடு
அவர்களுக்குஇலவசமாகக் கிடைக்கின்றது. வீட்டு பாவனைக்கு தேவையான மின்சாரம்
கூட இலவசமாகக் கிடைக்கின்றது. பெற்றோர், பிள்ளைகளின் படிப்புச்
செலவுகளுக்கு என்று, பணம் சேர்க்கத் தேவையில்லை. பாலர் பாடசாலையில்
இருந்து, பல்கலைக்கழகம் வரையில் கல்வி இலவசம். எதிர்பாராமல் வரும்,
மருத்துவ செலவுக்காவும் பணத்தை சேமித்து வைத்திருக்க தேவையில்லை. சாதாரணமாக
வைத்தியரிடம் பரிசோதிப்பது முதல், அறுவைச் சிகிச்சைகள் வரையில் அனைத்தும்
இலவசம்.இதை எல்லாம், சீனாவின் பிற பகுதிகளில் நினைத்தும் பார்க்க முடியாது.
உதாரணத்திற்கு, இந்தியாவில் கல்விக்கும், மருத்துவத்திற்கும்
செலவளிப்பதற்காக, ஒரு சராசரி குடிமகன் என்ன பாடுபட வேண்டுமோ, அதே நிலைமை
தான் இன்றைய சீனாவிலும் உள்ளது.

வெறும் 3500 பேரை சனத்தொகையாக
கொண்டிருந்தால், அது ஒரு கிராமம். ஆனால், நாஞ்சிசுன் ஒரு நகரம் போலக்
காட்சியளிக்கின்றது.ஒரு நகரத்தில் உள்ள அத்தனைவசதிகளும் அங்கே உண்டு. நமது
நாட்டில், தினசரி எத்தனை பேர் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு
குடிபெயர்ந்து செல்கின்றனர்? பிள்ளைகளின் படிப்புக்காக, வேலை
வாய்ப்புக்காக, மருத்துவ வசதிக்காக, இவ்வாறு பல்வேறு காரணங்களை சொல்லிக்
கொண்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் அது
தான் நிலைமை. ஆனால், நகரங்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமங்களில்
கிடைத்தால் யாராவது குடிபெயர யோசிப்பார்களா? விரும்பினால் ஒரு சுற்றுலாப்
பயணியாக மற்ற இடங்களை பார்த்து விட்டு வரலாம். அதைத் தான் நாங்கள்
கம்யூனிசம் என்று சொல்கிறோம். அதாவது, ஒரு கம்யூனிச சமுதாயத்தில்,
நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து விடும்.
முன்பு சோஷலிச நாடுகளாக இருந்த, ரஷ்யாவோ, சீனாவோ அந்தளவு வளர்ச்சி அடைந்து
விடவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.ஆனால், சில இடங்களில்
அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. நாஞ்சிசுன் கம்யூன் அப்படியான
மாதிரிக் கிராமங்களில் ஒன்று. கடந்தமுப்பது வருடங்களாக, அது தொடர்ந்து
இயங்கிக் கொண்டிருப்பது ஒரு சாதனை தான்.

ஒரு கம்யூன் எப்படி
இயங்குகின்றது? சுருக்கமாக சொன்னால், அது ஒரு தனி நாடு. பாதுகாப்பு போன்ற
சில விடயங்களைத் தவிர, தனது பொருளாதாரத்தை தானே தீர்மானித்துக்
கொள்கின்றது. கம்யூன் உறுப்பினர்களுக்கு இடையில் அந்தஸ்து வேறுபாடு
கிடையாது. சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கிடையாது. எல்லோரும் சமமாக மதிக்கப்
படுகின்றனர். ஒரு கம்யூனில், அதன் "குடி மக்கள்", கூட்டுத்துவ உழைப்பை
செலுத்துகின்றனர்.தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக்
கொள்கின்றனர்.பால், இறைச்சி போன்றவற்றிற்காக, விலங்குப் பண்ணைகளை
அமைகின்றனர். உணவை பதப் படுத்துவதற்கு, அல்லது அந்தப் பிரதேசத்தில்
கிடைக்கும் மூலப் பொருட்களை பாவனைப் பொருட்களாகுவதற்காக, தொழிற்சாலைகளை
கட்டுகின்றனர். அவற்றை சுற்றி, சேவைத் துறைகளும் உருவாகின்றன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Empty Re: சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 9:34

சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம் Nanjiecun2
நாஞ்சிசுன்
கிராமம், தனக்கென்று சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளுமளவிற்கு,
அது பல high tech தொழிலகங்களை கொண்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளில்
பணி புரிவோர் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால், உழவர்களுக்கும்,
தொழிலாளர்களுக்கும் தமது சேவையை வழங்குகின்றனர். ஒரு கம்யூனில், பணப்
புழக்கம் கிடையாது. அதனால், அங்கே லஞ்சம், ஊழலும் கிடையாது. நாம்
பயன்படுத்தும் நாணயத் தாளுக்கு பதிலாக, ஒரு பொருளின், சேவையின் பெறுமதி
கணக்கிடப் படுகின்றது. இன்றைய நாகரிகஉலகில், வங்கி அட்டைகளையும், கடன்
அட்டைகளையும் மட்டுமே பாவிக்கும் மக்களும், காசைகண்ணால் காண்பதில்லை.
கம்யூன்
மக்களின் உழைப்பு அதிகரிக்கும் பொழுது, அவர்களின் செல்வமும்
அதிகரிக்கின்றது. இன்று நாஞ்சிசுன் கிராமம், அயலில் உள்ள நூற்றுக் கணக்கான
கிராமங்களை விட "பணக்கார கிராமமாக" உள்ளது. நாஞ்சிசுன் கம்யூனில்
வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அயல் கிராமங்களில்இருந்து வேலை
தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம்
போன்ற காரணங்களுக்காக ஒரு நகரத்திற்கு, அல்லது பணக்கார நாடொன்றுக்கு வேலை
தேடி செல்லும் தொழிலாளர்கள் போன்று தான்,அவர்களும் நாஞ்சிசுன் கம்யூனில்
தங்கி இருக்கின்றனர்."குடிவரவாளர்களான" அயல் கிராம தொழிலாளர்களுக்கு, இலவச
தங்குமிடமும், உணவும்கிடைக்கின்றது. அது மட்டுமல்ல, அவர்கள் தமது சொந்த
ஊரில் சம்பாதிப்பதை விட அதிகளவு சம்பளம் பெறுகின்றனர்.
சீன முதலாளித்துவ
ஆதரவாளர்கள், நாஞ்சிசுன் கம்யூனைப் பற்றி குறை சொல்லாமல் சும்மா
இருக்கவில்லை. சீன அரசில், சில மேல் மட்ட நண்பர்களின்செல்வாக்கு, அவர்களின்
உதவியால் கிடைக்கும் கடன்கள், குடியேற்ற தொழிலாளரின் கூலி உழைப்பு போன்ற
பல காரணங்களினால் தான் அந்தக் கம்யூன் இயங்கிக் கொண்டிருப்பதாக குறை
கூறுகின்றனர். ஆனால், இதே மாதிரியான குற்றச் சாட்டுகள், இஸ்ரேலை ஸ்தாபித்த
கிப்பூட்ஸ் பண்ணைகள் மீதும் சுமத்தப் பட்டன. 20 ம் நூற்றாண்டு
தொடக்கத்தில், பாலஸ்தீனத்தில் குடியேறியமார்க்சிய யூதர்கள்,
அங்கேகம்யூனிசப் பொருளாதாரத்தைஅடிப்படையாகக் கொண்ட கிராமங்களை
உருவாக்கினார்கள். அவர்களுக்கு சர்வதேச யூத நிதியத்தில் இருந்து கடனுதவி
கிடைத்தது. மேலும், அயல் கிராமங்களில்இருந்த பாலஸ்தீன கூலித்
தொழிலாளர்களின் உழைப்பையும் பயன்படுத்தினார்கள்.
சீனா முழுவதிலும்
இருந்து,தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாஞ்சிசுன் கம்யூனை
பார்வையிட வந்து செல்கின்றனர். "கம்யூனிச சுற்றுலா" வருபவர்களிடம்
இருந்தும், அந்த கிராமத்திற்கு மேலதிக வருமானம் கிடைக்கிறது. அங்கிருக்கும்
முப்பதடி உயரமான மாவோ சிலை, அதற்கு அருகில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ்,
லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும் சுற்றுலாப் பயணிகளை
கவருகின்றன. அதற்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
திரும்பிப் போகும் பொழுது,உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக, பல
நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

kalai blogspot
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum