Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
2 posters
Page 1 of 1
நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கை விவரங்களை ஆட்சியில் உள்ளவர்களிடமும், அரசுத் துறை உயரதிகாரிகளிடமும் பகிர்ந்து கொண்டது தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் (சிபிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல் ஆகியவற்றை சி.பி.ஐக்கு வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2004 - 2009 ஆம் ஆண்டு வரை தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கை நீதிபதி ஆர். எம். லோதா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த ஒன்பது பக்கப் பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் பரிசீலித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர் கூலம் இ. வாகனவதி, “மத்திய சட்ட அமைச்சருடன் நடைபெற்ற கூட்டம், அவரது விருப்பத்தின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. நானாக முன்வந்து எந்தத் தருணத்திலும் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைக் கோரவில்லை” என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சரின் செயல்பாட்டுக்கும் சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்கும் அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:
சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளில் அரசுக்குப் பதில் கூறும் நிலை உருவானால் எந்த விசாரணையையும் ஒழுங்காக நடத்த முடியாது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் முக்கியப் பகுதிகள் அரசுத்துறை அதிகாரிகள் யோசனைப்படி நீக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உருப்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை. புகாருக்கு உள்ளானவர்கள் அரசின் மிக முக்கியப் பதவியில் இருப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை துறைக்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது ஒன்றும் “மதிப்பீட்டு அறிக்கை”கிடையாது.
சி.பி.ஐ விசாரணையில் தலையிட்டு அறிக்கையில் திருத்தம் செய்யும் நடவடிக்கை அதன் நேர்மையைக் களங்கப்படுத்தும் வகையில் அமையாதா? அரசுத்துறை மேற்பார்வையுடன் சி.பி.ஐ. நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அதன் விசாரணையில் அரசுத்துறையின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. அந்த வகையில் சி.பி.ஐ. செயல்பாடு சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.
உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் சி.பி.ஐ.யின் பணி வழக்கு தொடர்பான விபரங்களை மற்ற துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வது அல்ல. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி (டி.ஐ.ஜி ரவி காந்த்) மத்திய உளவுத் துறைப் பணிக்கு மாற்றப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது.
அந்த அதிகாரி மீண்டும் சி.பி.ஐ. பணியில் சேர்க்கப்பட்டு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கை அவரது தலைமையிலான குழுவே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடுகிறோம். வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் மாற்றமோ, கூடுதல் விவரமோ தேவைப்பட்டால் அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குத்தான் சி.பி.ஐ. முதலில் கொண்டுவர வேண்டும். நீதிமன்ற அனுமதி பெறாமல் துறைக்கு வெளியே உள்ள யாருடனும் வழக்கு குறித்து சி.பி.ஐ. ஆலோசிக்கவோ விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ கூடாது.
இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணை விபரங்களையும் சரிபார்த்து அவ்வப்போது அதன் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
“மேற்கண்ட உத்தரவையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவேன்” என்று உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தை சி.பி.ஐ. இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜுலை 10 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கை விவரங்களை ஆட்சியில் உள்ளவர்களிடமும், அரசுத் துறை உயரதிகாரிகளிடமும் பகிர்ந்து கொண்டது தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் (சிபிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல் ஆகியவற்றை சி.பி.ஐக்கு வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2004 - 2009 ஆம் ஆண்டு வரை தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கை நீதிபதி ஆர். எம். லோதா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த ஒன்பது பக்கப் பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் பரிசீலித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர் கூலம் இ. வாகனவதி, “மத்திய சட்ட அமைச்சருடன் நடைபெற்ற கூட்டம், அவரது விருப்பத்தின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. நானாக முன்வந்து எந்தத் தருணத்திலும் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைக் கோரவில்லை” என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சரின் செயல்பாட்டுக்கும் சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்கும் அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:
சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளில் அரசுக்குப் பதில் கூறும் நிலை உருவானால் எந்த விசாரணையையும் ஒழுங்காக நடத்த முடியாது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் முக்கியப் பகுதிகள் அரசுத்துறை அதிகாரிகள் யோசனைப்படி நீக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உருப்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை. புகாருக்கு உள்ளானவர்கள் அரசின் மிக முக்கியப் பதவியில் இருப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை துறைக்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது ஒன்றும் “மதிப்பீட்டு அறிக்கை”கிடையாது.
சி.பி.ஐ விசாரணையில் தலையிட்டு அறிக்கையில் திருத்தம் செய்யும் நடவடிக்கை அதன் நேர்மையைக் களங்கப்படுத்தும் வகையில் அமையாதா? அரசுத்துறை மேற்பார்வையுடன் சி.பி.ஐ. நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அதன் விசாரணையில் அரசுத்துறையின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. அந்த வகையில் சி.பி.ஐ. செயல்பாடு சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.
உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் சி.பி.ஐ.யின் பணி வழக்கு தொடர்பான விபரங்களை மற்ற துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வது அல்ல. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி (டி.ஐ.ஜி ரவி காந்த்) மத்திய உளவுத் துறைப் பணிக்கு மாற்றப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது.
அந்த அதிகாரி மீண்டும் சி.பி.ஐ. பணியில் சேர்க்கப்பட்டு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கை அவரது தலைமையிலான குழுவே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடுகிறோம். வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் மாற்றமோ, கூடுதல் விவரமோ தேவைப்பட்டால் அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குத்தான் சி.பி.ஐ. முதலில் கொண்டுவர வேண்டும். நீதிமன்ற அனுமதி பெறாமல் துறைக்கு வெளியே உள்ள யாருடனும் வழக்கு குறித்து சி.பி.ஐ. ஆலோசிக்கவோ விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ கூடாது.
இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணை விபரங்களையும் சரிபார்த்து அவ்வப்போது அதன் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
“மேற்கண்ட உத்தரவையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவேன்” என்று உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தை சி.பி.ஐ. இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜுலை 10 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஓரினச் சேர்க்கை விவகாரம் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்,,,???
» நிலக்கரி சுரங்க முறைகேடு; சி. பி. ஐ. உச்ச நீதிமன்றுக்கு இன்று அறிக்கை
» உச்ச நீதிமன்றம்
» 2 ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு விவகாரம் :விசாரணைக்கு ராசாவை அழைக்காதது ஏன்?
» அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி
» நிலக்கரி சுரங்க முறைகேடு; சி. பி. ஐ. உச்ச நீதிமன்றுக்கு இன்று அறிக்கை
» உச்ச நீதிமன்றம்
» 2 ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு விவகாரம் :விசாரணைக்கு ராசாவை அழைக்காதது ஏன்?
» அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|