Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
2 posters
Page 1 of 1
ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க முடிவு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் நீக்கப்படலாம் என்றும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி உயர்வுக்கு மருமகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் பதவிக்கும் ஆபத்து நீடிக்கிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணை பற்றிய அறிக்கையில், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறிய திருத்தங்களை செய்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்திருந்தார். இது டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகளின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட புதிய சட்டத்தை கொண்டு வரவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் ரயில்வேயில் பதவி உயர்வு பெறுவதற்கு ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் ரூ. 90 இலட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரமும் டெல்லியை கலக்கியது. இந்த இரு விவகாரங்களால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.
உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயன்றது. ஆனால், 2 அமைச்சர்களையும் நீக்கினால்தான் மசோதாக்களை நிறைவேற்ற உதவுவோம் என்று பா.ஜ. நிபந்தனை விதித்தது. இதை அரசு ஏற்காததால் நாடாளுமன்றம் 2 நாளுக்கு முன்பே மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு அமைச்சர் அஸ்வனி குமார் நேற்று முன்தினம் வந்திருந்தார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே 30 நிமிடங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அஸ்வனி குமார் வெளியே வந்த போது அவரிடம் ‘பிரதமரிடம் என்ன பேசினீர்கள்’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அஸ்வனிகுமார் பதிலளிக்கையில், “பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் அலுவலக அதிகாரிகளைத்தான் சந்தித்தேன்” என்றார். உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் அவர் பேசியதாக தெரிகிறது.
இதற்கிடையே பிரதமர் அலுவலகத்தில் அஸ்வனி குமார் இருந்த போது ஜனாதிபதியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததால் ஜனாதிபதியை பிரதமர் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அஸ்வனி குமாரை நீக்குவதென பிரதமர் முடிவெடுத்துள்ளதாகவும், இது பற்றி ஜனாதிபதியிடம் விவாதித்து ள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் கலந்து கொள்ளவில்லை. டில்லியில் தனது வீட்டில்தான் பன்சால் இருந்தார். ஆனால், ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கும் அவர் செல்லவில்லை. இதனால், பன்சாலின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு நிலவுகிறது.
ஆனால், உடல் நிலை பாதிக்கப் பட்டதால் பன்சால் ஓய்வு எடுப்பதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே துறை தொடர்பாக எதுவும் விவாதிக்கப் படாததால் அவர் செல்லவில்லை என்றும் அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையில் அரசு தலையீடு தொடர்பாக சி.பி.ஐ.யிடம் மத்திய விஜிலன்ஸ் ஆணைக்குழு விளக்கம் கேட்டுள்ளது.
தினகரன்
சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க முடிவு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் நீக்கப்படலாம் என்றும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி உயர்வுக்கு மருமகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் பதவிக்கும் ஆபத்து நீடிக்கிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணை பற்றிய அறிக்கையில், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறிய திருத்தங்களை செய்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்திருந்தார். இது டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகளின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட புதிய சட்டத்தை கொண்டு வரவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் ரயில்வேயில் பதவி உயர்வு பெறுவதற்கு ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் ரூ. 90 இலட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரமும் டெல்லியை கலக்கியது. இந்த இரு விவகாரங்களால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.
உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயன்றது. ஆனால், 2 அமைச்சர்களையும் நீக்கினால்தான் மசோதாக்களை நிறைவேற்ற உதவுவோம் என்று பா.ஜ. நிபந்தனை விதித்தது. இதை அரசு ஏற்காததால் நாடாளுமன்றம் 2 நாளுக்கு முன்பே மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு அமைச்சர் அஸ்வனி குமார் நேற்று முன்தினம் வந்திருந்தார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே 30 நிமிடங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அஸ்வனி குமார் வெளியே வந்த போது அவரிடம் ‘பிரதமரிடம் என்ன பேசினீர்கள்’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அஸ்வனிகுமார் பதிலளிக்கையில், “பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் அலுவலக அதிகாரிகளைத்தான் சந்தித்தேன்” என்றார். உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் அவர் பேசியதாக தெரிகிறது.
இதற்கிடையே பிரதமர் அலுவலகத்தில் அஸ்வனி குமார் இருந்த போது ஜனாதிபதியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததால் ஜனாதிபதியை பிரதமர் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அஸ்வனி குமாரை நீக்குவதென பிரதமர் முடிவெடுத்துள்ளதாகவும், இது பற்றி ஜனாதிபதியிடம் விவாதித்து ள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் கலந்து கொள்ளவில்லை. டில்லியில் தனது வீட்டில்தான் பன்சால் இருந்தார். ஆனால், ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கும் அவர் செல்லவில்லை. இதனால், பன்சாலின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு நிலவுகிறது.
ஆனால், உடல் நிலை பாதிக்கப் பட்டதால் பன்சால் ஓய்வு எடுப்பதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே துறை தொடர்பாக எதுவும் விவாதிக்கப் படாததால் அவர் செல்லவில்லை என்றும் அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையில் அரசு தலையீடு தொடர்பாக சி.பி.ஐ.யிடம் மத்திய விஜிலன்ஸ் ஆணைக்குழு விளக்கம் கேட்டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
» அன்னா ஹசாரே கைது விவகாரம்: ஜனாதிபதியுடன் யோகா குரு ராம்தேவ் இன்று சந்திப்பு
» பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் இராணுவ தளபதி திடீர் சந்திப்பு
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» அன்னா ஹசாரே கைது விவகாரம்: ஜனாதிபதியுடன் யோகா குரு ராம்தேவ் இன்று சந்திப்பு
» பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் இராணுவ தளபதி திடீர் சந்திப்பு
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|