Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
2 posters
Page 1 of 1
குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
குளித்தலை, ஜூன். 3-
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நடுவதியம் காலனி பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 32). இவர் அங்குள்ள மணல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு கிஷோர், கீர்த்தி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கருணாமூர்த்தி தினமும் மொபட்டில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். நேற்றும் அதேபோல் காலையில் வேலைக்கு சென்றார். இரவு வெகு நேரமாகியும் கருணாமூர்த்தி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அவரை தேட தொடங்கினர்.
அப்போது வதியம் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் கருணாமூர்த்தி படுகாயத்துடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற உறவினர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருணாமூர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி குளித்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கருணாமூர்த்தியை மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கருணாமூர்த்தியின் நெற்றி மற்றும் தலை பகுதியில் வெட்டு காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக கருணாமூர்த்தியின் மைத்துனர் ஸ்ரீதர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மாமா வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. வழக்கமாக வேலை முடிந்துவந்த அவரை மர்ம கும்பல் வழிமறித்து இந்த செயலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
என்னங்க இந்த பசங்க பொசுக்கு கொன்னு போடறாங்க
நிதானமா யோசிச்சு செயல் பட்டாலே இந்த மாதிரி தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது
நிதானமா யோசிச்சு செயல் பட்டாலே இந்த மாதிரி தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|