சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

திண்டுக்கல்லில் வக்கீலை தந்தையுடன் கட்டிப்போட்டு நகை கொள்ளை Khan11

திண்டுக்கல்லில் வக்கீலை தந்தையுடன் கட்டிப்போட்டு நகை கொள்ளை

Go down

திண்டுக்கல்லில் வக்கீலை தந்தையுடன் கட்டிப்போட்டு நகை கொள்ளை Empty திண்டுக்கல்லில் வக்கீலை தந்தையுடன் கட்டிப்போட்டு நகை கொள்ளை

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 7:35

திண்டுக்கல்லில் வக்கீலை தந்தையுடன் கட்டிப்போட்டு நகை கொள்ளை 94619189-5cfb-49f5-9059-129941faf73d_S_secvpf


திண்டுக்கல், ஜூன்.20- 

திண்டுக்கல் நாகல்நகர் பாம்பன் ஆசாரிசந்து பகுதியை சேர்ந்தவர் அழகர்(80). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மகன் கண்ணன்(52). வக்கீலாக உள்ள இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர். 

நேற்று இரவு 11.30 மணியளவில் அழகர் தன் வீட்டு முன்கேட்டை அடைக்க சென்றார். அப்போது திடீரென 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் அழகரை இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கினர். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த கண்ணன் தந்தையை மர்மகும்பல் தாக்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

தந்தையை காப்பாற்ற முயன்றபோது அந்த மர்ம கும்பல் அவரையும் சரமாரியாக தாக்கினர். இருவருக்கும் தலை, கை கால்களில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. இருவரையும் அந்த கும்பல் கயிறுகளால் கட்டிப் போட்டனர். 

பின்னர் முகமூடி கும்பல் அழகர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகையை கொள்ளையடித்தனர். மேலும் ரொக்க பணம் உள்ளதா? என தேடிப்பார்த்தனர். பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்களை வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் மயங்கிய நிலையில் கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் இன்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தந்தை-மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் முகமூடி கும்பல் தந்தை-மகனை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இன்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி யிருப்பது திண்டுக் கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் அழகர் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீப காலமாக திண்டுக்கல் நகரில் பூட்டி கிடக்கும் வீடுகள், தனியாக வசிக்கும் முதியோர் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். 

மேலும் தனியாக செல்லும் பெண்கள், கணவனுடன் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த விசயத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என திண்டுக்கல் நகர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தற்போது வக்கீல் வீட்டில் நடந்துள்ள கொள்ளை சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர்காரர்களா? அல்லது வெளிமாவட்ட கொள்ளையர்களா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum