Latest topics
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவுby rammalar Today at 12:03 am
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 1:36 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 10:45 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 10:15 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 10:15 am
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 10:06 am
» பல்சுவை
by rammalar Yesterday at 6:19 am
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 6:09 am
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 6:07 am
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 6:02 am
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 5:55 am
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 5:48 am
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun Jun 16, 2024 11:57 pm
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun Jun 16, 2024 11:45 pm
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun Jun 16, 2024 11:41 pm
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun Jun 16, 2024 3:36 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun Jun 16, 2024 3:25 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun Jun 16, 2024 2:56 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun Jun 16, 2024 2:48 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun Jun 16, 2024 2:44 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun Jun 16, 2024 2:41 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun Jun 16, 2024 12:48 pm
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun Jun 16, 2024 8:39 am
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sun Jun 16, 2024 12:01 am
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat Jun 15, 2024 11:48 pm
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat Jun 15, 2024 5:41 pm
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat Jun 15, 2024 5:35 pm
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat Jun 15, 2024 5:28 pm
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat Jun 15, 2024 9:24 am
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat Jun 15, 2024 9:20 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Sat Jun 15, 2024 12:21 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm
பிரசவம்: அந்த நிமிடங்கள்.
4 posters
Page 1 of 1
பிரசவம்: அந்த நிமிடங்கள்.
![பிரசவம்: அந்த நிமிடங்கள். 5b5bd2f5-08de-4496-aebf-ed6a0d7b9fb0_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jul/5b5bd2f5-08de-4496-aebf-ed6a0d7b9fb0_S_secvpf.gif)
மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல் நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணி நேரம் வரை ஆகலாம். ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமே நீடிக்கும். கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும்.
கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும்.
இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு என்று பெயர்.
இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும்.
இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும்.
ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது. யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும்.
இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.
எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரசவம்: அந்த நிமிடங்கள்.
:”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அந்த கடைசி நிமிடங்கள்...
» வியக்கத்தக்க நிமிடங்கள்!
» சிரிக்க சில நிமிடங்கள்!!
» விடைகண்ட நிமிடங்கள்
» சிரிக்க சில நிமிடங்கள்
» வியக்கத்தக்க நிமிடங்கள்!
» சிரிக்க சில நிமிடங்கள்!!
» விடைகண்ட நிமிடங்கள்
» சிரிக்க சில நிமிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum