சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து' திட்டம்: கோவையில் துவக்கி வைக்கிறார் கலாம் Khan11

ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து' திட்டம்: கோவையில் துவக்கி வைக்கிறார் கலாம்

Go down

ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து' திட்டம்: கோவையில் துவக்கி வைக்கிறார் கலாம் Empty ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து' திட்டம்: கோவையில் துவக்கி வைக்கிறார் கலாம்

Post by ராகவா Tue 3 Sep 2013 - 15:26

ஊருக்கொரு "பசுமை பஞ்சாயத்து' திட்டம்: கோவையில் துவக்கி வைக்கிறார் கலாம் Tamil_News_large_79456220130902235710
கோவை: கோவையை அடுத்துள்ள, அரசூர் கிராமத்தில், 11 ஏக்கர் பரப்பளவில், சோலை அமைக்கப்பட்டுள்ளது; இதை, முன் மாதிரியாகக் கொண்டு, "பசுமை பஞ்சாயத்து' என்ற திட்டத்தை, வரும், 7ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார்.

நகரங்களுக்குள் மரம் வளர்க்க போதுமான இடமில்லாததால், கிராமப்புறங்களில் அதிகளவில் மரங்களை வளர்க்கும் பொருட்டு, "பசுமை பஞ்சாயத்து' என்ற திட்டத்தைச் செயல்படுத்த, கோவையைச் சேர்ந்த, "சிறுதுளி' மற்றும் "ராக்' அமைப்புகள் இணைந்து திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் முயற்சி, அரசூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கிராம ஊராட்சியில், 66 தொழிற்சாலைகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட, "பவுண்டரி கிளஸ்டர்' ஆகியவை அமைந்துள்ளன. நீர் ஆதாரம், மழைப்பொழிவு எல்லாமே குறைவு என்பதோடு, சரளை மண் நிறைந்த பகுதி என்பதால், மரங்களும், பசுமையும் மிகக் குறைவு. இந்த கிராமத்தில், பசுமை பஞ்சாயத்து திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம், எல்லாருக்கும் இருந்தது. ஆனால், ஓராண்டுக்கு முன், பரிசோதனையாகத் துவங்கிய இந்த முதல் முயற்சி, வெற்றியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு, செப்., மாதம், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், காலியாக இருந்த, 11 ஏக்கர் புறம்போக்கு இடத்தை, சோலை அமைப்பதற்குத் தயார் செய்து கொடுத்த, ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், அவரது சொந்தச் செலவிலேயே, வேலி அமைத்து, நான்கு "போர்வெல்'களும் அமைத்துத் தந்தார். அதன் பின், கிராம ஊராட்சி நிதியில் தொட்டி கட்டப்பட்டது; செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கு, சிறுதுளி அமைப்பின் சார்பில், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்பட்டது. வனத் துறையின் சார்பில், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கோவையைச் சேர்ந்த, தியானா பொது சேவை மையம், அரசூர் இளைஞர்களால் நடத்தப்படும் உலக பசுமைப்புரட்சி அமைப்பு ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து, 3,200 குழிகளை வெட்டி, அவற்றில் மரக்கன்றுகளை நட்டனர். விரைவாக வளர்ந்து, அதை விட வேகமாக மடிந்து விடும் வெளிநாட்டு மரங்களை, அழகிற்காக வைக்காமல், ஆல், அரசு, வேம்பு, புங்கன், பூவரசு, நாவல் மற்றும் வாகை போன்ற, நம் மண்ணின் மரங்கள் மட்டுமே அங்கு நடப்பட்டன. வெட்டவெளியில் இருப்பதால், காற்றில் செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, அவற்றில் நாணல் குச்சிகள் வைத்துக் கட்டப்பட்டன. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாத நாட்களில், வெளியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, இவற்றை கருக விடாமல், உள்ளூர் இளைஞர்கள் காத்துள்ளனர்; இயற்கை உரங்களையும் இட்டு, அவற்றை பராமரித்துள்ளனர். இதன் விளைவாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகள், இப்போது ஆள் உயரம் வளர்ந்து, கம்பீரமாக நிற்கின்றன. இந்த சோலை நன்றாக வளர்ந்திருப்பதை அடுத்து, "பசுமை பஞ்சாயத்து' திட்டத்தை, வெவ்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, சூழல் அமைப்புகள் இணைந்து, களம் இறங்கியுள்ளன.

கோவை மாவட்டத்திலுள்ள, 229 கிராம ஊராட்சிகளிலும், காலியிடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு சோலைகள் அமைப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வரும், 7ம் தேதி, இதற்கான துவக்க விழா, நடக்கிறது. கோவையில் ஜாதி, மத வேறுபாடின்றி ஊர் மக்கள் இணைந்து தூர் வாரியதால், புதுப்பொலிவு பெற்றுள்ள உக்கடம் பெரியகுளத்தில் நடக்கும் இவ்விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்று, பசுமை பஞ்சாயத்து திட்டத்தைத் துவக்கி வைக்கவுள்ளார். இது குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், முழு பக்க கட்டுரை வெளியானது. அதைப் பார்த்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 66 கிராம ஊராட்சித் தலைவர்கள், இந்த திட்டத்தை தங்களது ஊராட்சிகளில் செயல்படுத்த முன் வந்துள்ளனர். மேலும் பல ஊராட்சிகளிலும் இதேபோல, பல ஏக்கர் பரப்பளவிலான சோலைகள் உருவாகும் பட்சத்தில், இன்னும், 10 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல் பசுமை மாவட்டம் என்ற பெயரை, கோவை மாவட்டம் பெறும்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum