Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
எதுவும் இலவசம் இல்லை
2 posters
Page 1 of 1
எதுவும் இலவசம் இல்லை
கல்லூரிகளில், மாணவத் தலைவர்கள் இருப்பார்கள். ஆளுமைத்தன்மை அவர்களுக்கு மட்டுமே என நினைப்பது சரியல்ல. அனைவருக்கும் தலைமைப்பண்புகள் தேவைப்படுகிறது.
மாணவர்களிடம் இலவசமாக எது கிடைக்கும் என்று கேட்டால், அறிவுரை இலவசம் என்கிறார்கள். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது. சில சாமியார்களெல்லாம் கூட்டம் போட்டு ஒரு மணிநேரம் பேசுகிறார்கள். ஆயிரம் ரூபாய் தொடங்கி, ஐந்தாயிரம் வரை டிக்கெட் விற்பனையாகிறது. இப்போது சொல்லுங்கள், அறிவுரை இலவசமா? சாமியாரின் அறிவுரை நிகழ்ச்சியின் வசூல் 20 லட்சம்!
தனியார் கலைக்கல்லூரியில் படிக்க கட்டணம் கட்டுகிறீர்கள். உங்களுக்கு ஒரு மணிநேரம் அறிவுரை சொல்லும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியரின் அறிவுரை இலவசம் கிடையாது. நீங்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியருக்கு சம்பளம். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது.
மிகவும் உயர்ந்த பொருள் என்றால் நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும். ஒரு பெரிய விஞ்ஞானியாக வேண்டுமா? பெரிய சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக வேண்டுமா? பெரிய தொழிலதிபராக மாற வேண்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரவேண்டுமா? நோபல் பரிசு பெற வேண்டுமா? இப்படி உங்களுக்கு எத்தனை கனவுகள் இருந்தாலும், அதை அடைய அவற்றிற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். விலையென்பது பணமில்லை, முயற்சி. அதற்கான முயற்சியிருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்.
உலகத்தில் உங்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் இலவசமாய் கிடைக்கும். அது உங்களின் உடல். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது இலவசம் இல்லை என்றாலும், அதை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏன் இலவசம் என்று சொல்கிறேனென்றால், எந்தப் பெற்றோரும் ‘உன்னை கஷ்டப்பட்டுப் பெற்றுப் போட்டேன். பணம் கொடு’ என்று கேட்க மாட்டார்கள். ஆனால் இந்த உடல், உள்ளம் இருக்கிறதல்லவா, அதுதான் மிகமிக முக்கியமான வளம். மனித வளம்! (Human Resource).
ஒரு தொழில் தொடங்க இடம், முதலீடு, தொழிலாளர்கள் வேண்டும். இதில் மிகமிக முக்கியமானது மனித வளம். ஒரு மனிதனுடைய மிகப்பெரிய சொத்து (Asset) அவனது உடல். அறிவு, செயல்திறன், தன்னம்பிக்கை, ஞாபகத்திறன், முடிவு எடுக்கும் திறன், உற்சாகம் ஆகியவை தான் மிகப்பெரிய மூலதனங்கள். இவை அனைத்தும் மனித உடலுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
ஹார்வர்டு மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள். அப்போது உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர், போர்டு மோட்டார் கம்பெனியின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹென்றி போர்டின் வருமானம் (அவர் உயிருடனிருக்கும் போது) இந்திய அரசாங்கத்தின் வருமானத்தைவிட அதிகம். ஃபோர்டின் உண்மையான சொத்து எது? என்று மாணவர்களிடம் வினா எழுப்பினார் பேராசிரியர். பல மாணவர்கள், பத்து லட்சம் கார்கள் தயாரிக்கும் அவரது ஃபோர்டு கம்பெனி 95 சதவீதம். மீதி 5 சதவீதம் அவரது வீடு மற்ற சொத்துக்கள் என்று குறிப்பிட்டார்கள்.
ஒரு மாணவன், ஹென்றி ஃபோர்டின் சொத்தின் மதிப்பிலேயே 5 சதவீதம் தான் அவரது ஃபோர்டு கம்பெனி, அவரது வீடு, கார் சொத்துக்கள் என்றான். மீதி 95 சதவீதம் எது என்று கேட்டார் ஆசிரியர். மீதி 95 சதவீதம், அது ஹென்றி ஃபோர்டுதான் என்றான் மாணவன். எப்படியென்று பேராசிரியர் கேட்டதற்கு, அவரது சொத்துக்களையெல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்து விட்டு அவரை நடுத்தெருவில் விட்டாலும் அடுத்த ஃபோர்டு கம்பெனியை அவர் ஆரம்பிப்பார். அவருக்கு அதற்கான அறிவு, ஆற்றல், தொழில் நுட்பம் இருக்கின்றன. எனவே, அவர் தான் 95 சதவீத சொத்து என்று கூறினான். சபாஷ்! என்ன அருமையான சிந்தனை.
உங்களுடைய மிகப்பெரிய சொத்து நீங்கள் தான்:
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரிக்குப் போயிருந்தேன். அந்தக் கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி என்னிடம் ஆட்டோகிராப் கேட்டாள், “நீ ஓர் அதிசயம்” என்று எழுதினேன். அந்த மாணவி, “ஏன் அப்படி எழுதினீர்கள்” என்று கேட்டாள். “உனது உடலை செயற்கையாக செய்துவிட முடியாது.
மனித உடலில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படும்படி உள்ளது” என்றேன். அங்கு ஆறு மாணவிகள் நடனமாடினார்கள். அதில் ஒரு மாணவியை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அந்த மாணவிக்கு ஒரு கையே கிடையாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் நடனம் எப்படியிருந்தது என்று ஓடிவந்து கேட்டார்கள். “மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினேன்.
கையில்லாத பெண் ஆட்டோகிராப் கேட்டபோது, “நீ ஓர் அதிசயம் என்று எழுதிக் கொடுத்தேன். அந்த மாணவிக்கு கையில்லாவிட்டால் கூட நடனமாட வேண்டும் என்று ஆசை; ஆர்வம் இருக்கிறது. இரு கைகள் கொண்ட மாணவிகளைவிட, அவர் நடனம் தான் அற்புதமாக இருந்தது. அங்கத்தில் ஒரு குறை என்றாலும் முயற்சியில் குறைவில்லை. அம்மாணவியை அரவணைத்துப் பாராட்டினேன். அவளது கண்களில் கண்ணீர்; அழுதுவிட்டாள். அவளது முயற்சிக்கு பலன் கிட்டிவிட்டது.
நமது மாணவர்களை மனமுவந்து அவ்வப்போது பாராட்ட வேண்டும். குறைகளைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பது மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகாது. அப்படி தண்டிப்பதால் மட்டுமே விரும்பாத செயல்கள் மறைந்து போவது இல்லை. நாம் விரும்பும் பல நல்ல செயல்களை செய்யும்போது பாராட்ட வேண்டும்.
நன்றி:தன்நம்பிக்கை
மாணவர்களிடம் இலவசமாக எது கிடைக்கும் என்று கேட்டால், அறிவுரை இலவசம் என்கிறார்கள். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது. சில சாமியார்களெல்லாம் கூட்டம் போட்டு ஒரு மணிநேரம் பேசுகிறார்கள். ஆயிரம் ரூபாய் தொடங்கி, ஐந்தாயிரம் வரை டிக்கெட் விற்பனையாகிறது. இப்போது சொல்லுங்கள், அறிவுரை இலவசமா? சாமியாரின் அறிவுரை நிகழ்ச்சியின் வசூல் 20 லட்சம்!
தனியார் கலைக்கல்லூரியில் படிக்க கட்டணம் கட்டுகிறீர்கள். உங்களுக்கு ஒரு மணிநேரம் அறிவுரை சொல்லும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியரின் அறிவுரை இலவசம் கிடையாது. நீங்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியருக்கு சம்பளம். இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது.
மிகவும் உயர்ந்த பொருள் என்றால் நீங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும். ஒரு பெரிய விஞ்ஞானியாக வேண்டுமா? பெரிய சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக வேண்டுமா? பெரிய தொழிலதிபராக மாற வேண்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரவேண்டுமா? நோபல் பரிசு பெற வேண்டுமா? இப்படி உங்களுக்கு எத்தனை கனவுகள் இருந்தாலும், அதை அடைய அவற்றிற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். விலையென்பது பணமில்லை, முயற்சி. அதற்கான முயற்சியிருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும்.
உலகத்தில் உங்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் இலவசமாய் கிடைக்கும். அது உங்களின் உடல். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது இலவசம் இல்லை என்றாலும், அதை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏன் இலவசம் என்று சொல்கிறேனென்றால், எந்தப் பெற்றோரும் ‘உன்னை கஷ்டப்பட்டுப் பெற்றுப் போட்டேன். பணம் கொடு’ என்று கேட்க மாட்டார்கள். ஆனால் இந்த உடல், உள்ளம் இருக்கிறதல்லவா, அதுதான் மிகமிக முக்கியமான வளம். மனித வளம்! (Human Resource).
ஒரு தொழில் தொடங்க இடம், முதலீடு, தொழிலாளர்கள் வேண்டும். இதில் மிகமிக முக்கியமானது மனித வளம். ஒரு மனிதனுடைய மிகப்பெரிய சொத்து (Asset) அவனது உடல். அறிவு, செயல்திறன், தன்னம்பிக்கை, ஞாபகத்திறன், முடிவு எடுக்கும் திறன், உற்சாகம் ஆகியவை தான் மிகப்பெரிய மூலதனங்கள். இவை அனைத்தும் மனித உடலுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
ஹார்வர்டு மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள். அப்போது உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர், போர்டு மோட்டார் கம்பெனியின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹென்றி போர்டின் வருமானம் (அவர் உயிருடனிருக்கும் போது) இந்திய அரசாங்கத்தின் வருமானத்தைவிட அதிகம். ஃபோர்டின் உண்மையான சொத்து எது? என்று மாணவர்களிடம் வினா எழுப்பினார் பேராசிரியர். பல மாணவர்கள், பத்து லட்சம் கார்கள் தயாரிக்கும் அவரது ஃபோர்டு கம்பெனி 95 சதவீதம். மீதி 5 சதவீதம் அவரது வீடு மற்ற சொத்துக்கள் என்று குறிப்பிட்டார்கள்.
ஒரு மாணவன், ஹென்றி ஃபோர்டின் சொத்தின் மதிப்பிலேயே 5 சதவீதம் தான் அவரது ஃபோர்டு கம்பெனி, அவரது வீடு, கார் சொத்துக்கள் என்றான். மீதி 95 சதவீதம் எது என்று கேட்டார் ஆசிரியர். மீதி 95 சதவீதம், அது ஹென்றி ஃபோர்டுதான் என்றான் மாணவன். எப்படியென்று பேராசிரியர் கேட்டதற்கு, அவரது சொத்துக்களையெல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்து விட்டு அவரை நடுத்தெருவில் விட்டாலும் அடுத்த ஃபோர்டு கம்பெனியை அவர் ஆரம்பிப்பார். அவருக்கு அதற்கான அறிவு, ஆற்றல், தொழில் நுட்பம் இருக்கின்றன. எனவே, அவர் தான் 95 சதவீத சொத்து என்று கூறினான். சபாஷ்! என்ன அருமையான சிந்தனை.
உங்களுடைய மிகப்பெரிய சொத்து நீங்கள் தான்:
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரிக்குப் போயிருந்தேன். அந்தக் கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி என்னிடம் ஆட்டோகிராப் கேட்டாள், “நீ ஓர் அதிசயம்” என்று எழுதினேன். அந்த மாணவி, “ஏன் அப்படி எழுதினீர்கள்” என்று கேட்டாள். “உனது உடலை செயற்கையாக செய்துவிட முடியாது.
மனித உடலில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படும்படி உள்ளது” என்றேன். அங்கு ஆறு மாணவிகள் நடனமாடினார்கள். அதில் ஒரு மாணவியை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அந்த மாணவிக்கு ஒரு கையே கிடையாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் நடனம் எப்படியிருந்தது என்று ஓடிவந்து கேட்டார்கள். “மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினேன்.
கையில்லாத பெண் ஆட்டோகிராப் கேட்டபோது, “நீ ஓர் அதிசயம் என்று எழுதிக் கொடுத்தேன். அந்த மாணவிக்கு கையில்லாவிட்டால் கூட நடனமாட வேண்டும் என்று ஆசை; ஆர்வம் இருக்கிறது. இரு கைகள் கொண்ட மாணவிகளைவிட, அவர் நடனம் தான் அற்புதமாக இருந்தது. அங்கத்தில் ஒரு குறை என்றாலும் முயற்சியில் குறைவில்லை. அம்மாணவியை அரவணைத்துப் பாராட்டினேன். அவளது கண்களில் கண்ணீர்; அழுதுவிட்டாள். அவளது முயற்சிக்கு பலன் கிட்டிவிட்டது.
நமது மாணவர்களை மனமுவந்து அவ்வப்போது பாராட்ட வேண்டும். குறைகளைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பது மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகாது. அப்படி தண்டிப்பதால் மட்டுமே விரும்பாத செயல்கள் மறைந்து போவது இல்லை. நாம் விரும்பும் பல நல்ல செயல்களை செய்யும்போது பாராட்ட வேண்டும்.
நன்றி:தன்நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எதுவும் இலவசம் இல்லை
அருமையான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|