Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
3 posters
Page 1 of 1
பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
மாதம் மும்மாரி பொழிந்தது; நாடு செழித்தது; மக்கள் இன்பமுற இருந்தார்கள் என்று பழைய ராஜ கதைகளில் படித்து இருக்கிறோம்.
தற்போதைய ஆட்சி காலத்தில் மும்மாரி பொழியாவிட்டாலும், குறைந்தது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த பலன் கொடுக்குமா? இல்லை, வடகிழக்கு பருவமழை கொஞ்சம் அதிகமாக பெய்து தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதை ஈடுகொடுக்குமா? என்று பாரி ஆராய்ச்சி நிலையத்தை ஆட்சியாளர்களும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன காரணம்?
ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்த அளவு பங்களிப்பு, பருவமழை பொய்த்துவிட்டால் உணவுப்பொருட்கள் உற்பத்திக் குறைவு, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பின்னடைவு, இவைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.
உணவு உற்பத்தி குறைய நேர்ந்தால் விலைவாசி உயர்வு அடையும், கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் மற்ற மாநிலங்கள் நீரை மற்ற மாநிலங்கள் பற்றாக்குறை காலங்களில் தர மறுப்பதனால் அண்டை மாநிலங்களுடனான நல்லுறவு பாதிக்கப்படுவது போன்றபிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
பருவமழை ஏன் சீராக பெய்வதில்லை? எதனால் இப்படி நேர்கிறது? என்று கேட்டால் உலகத்தின் பல பகுதிகளில் பருவமழை மாற்றம் அடைந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பஞ்சம், பருவமழை பெய்யாத காரணத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலை போன்றவற்றை பல வருடங்களாக ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேநிலை நமக்கும் வராது என்பதற்கான உத்திரவாதம் என்ன உள்ளது?
இந்த பருவமழை ஏமாற்றங்கள் பல வருடங்களாக நடந்துகொண்டு வரும் நிகழ்வுகள் தான். இப்போது நாம் பார்க்கும் வறட்சியான ஆப்பிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மழை பெய்து செல்வ பூமியாக இருந்ததுதான். பருவமழை மாற்றத்தின் காரணமாக தற்போது வறண்ட பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
ஏன் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்று முன்னோக்கிப்பார்த்தால், கோயம்புத்தூரில் சுற்றி உள்ள வீட்டுமனை நிலங்கள் ஒரு காலத்தில் நல்ல விளைநிலங்களாக பருத்தி, சோளம் போன்ற பயிர்களை விளைவிக்கும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது கோவை குடிநீருக்கு அத்திகடவு திட்டம், பவானி ஆற்று நீர், கேரளாவில் மழை பெய்தால் தான் சிறுவாணி அணை நிரம்பும் என்று அனைவரும் குடிநீருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உள்ளோம்.
கிணறுகள் எவற்றிலும் நீர் இல்லாமல், அவை குப்பைகளைக் கொட்டும் கிணறுகளாகத் தான் காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்ததாலும், இருப்பிடத் தேவைக்காக ரியல் எஸ்டேட்களின் ஆக்கிரமிப்பாகவும் விளைநிலங்கள் உருமாறிவிட்டது. உண்மையான காரணம் பருவமழை குறைவை அறிந்த போதும், நிலத்தடி நீரைச் சேமிக்க தவறவிட்டோம். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பித்து இப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலை உள்ளது.
உலக வெப்பமடைதல் காரணமாக, புவியில் வெப்பமான பகுதிகள் அதிக வெப்பமடைவதும், குளிர் நிறைந்த பகுதிகள் மேலும் குளிரடைவதையும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் காணமுடிகிறது. இது இன்னும் மோசமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக வெப்படைதலுக்கு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிக இயற்கை சேதங்களைச் செய்ததால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வளர்ச்சியடையாத நாடுகளும், மக்கள்தொகை அதிகம் உள்ள வளர்ச்சி அடையாத நாடுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளும் குறைகூறி வருகின்றன.எப்படி குறைகூறினாலும் பாதிக்கப்படுவதில் நாமும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பருவமழை மாற்றம் விவசாயத்தை பெரும் அளவில் பாதிக்கச் செய்கிறது. பல ஆயிரக்கணக்கில் விதை, ஈடுபொருட்கள் செலவு செய்து பயிரிடும் விவசாயிகள் பருவ மழையை நம்பி தங்கள் விதைகளை மண்ணில் பயிரிட்டு வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்போது பருவமழை கைகொடுக்காவிட்டால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் பாதிப்பு உயிரை கொடுக்கும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் கிடைக்கும் அனைத்து நீரையும் வீணாக்காமல் குளம், ஏரி ஆகியவற்றில் சேமிக்கும்போது நிலத்தடி நீர் பெருக அதிக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மட்டுமே இன்றைய பருவநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய ஒரே தீர்வு!
நன்றி:தன்நம்பிக்கை
தற்போதைய ஆட்சி காலத்தில் மும்மாரி பொழியாவிட்டாலும், குறைந்தது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த பலன் கொடுக்குமா? இல்லை, வடகிழக்கு பருவமழை கொஞ்சம் அதிகமாக பெய்து தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதை ஈடுகொடுக்குமா? என்று பாரி ஆராய்ச்சி நிலையத்தை ஆட்சியாளர்களும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன காரணம்?
ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்த அளவு பங்களிப்பு, பருவமழை பொய்த்துவிட்டால் உணவுப்பொருட்கள் உற்பத்திக் குறைவு, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பின்னடைவு, இவைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.
உணவு உற்பத்தி குறைய நேர்ந்தால் விலைவாசி உயர்வு அடையும், கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் மற்ற மாநிலங்கள் நீரை மற்ற மாநிலங்கள் பற்றாக்குறை காலங்களில் தர மறுப்பதனால் அண்டை மாநிலங்களுடனான நல்லுறவு பாதிக்கப்படுவது போன்றபிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
பருவமழை ஏன் சீராக பெய்வதில்லை? எதனால் இப்படி நேர்கிறது? என்று கேட்டால் உலகத்தின் பல பகுதிகளில் பருவமழை மாற்றம் அடைந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பஞ்சம், பருவமழை பெய்யாத காரணத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலை போன்றவற்றை பல வருடங்களாக ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேநிலை நமக்கும் வராது என்பதற்கான உத்திரவாதம் என்ன உள்ளது?
இந்த பருவமழை ஏமாற்றங்கள் பல வருடங்களாக நடந்துகொண்டு வரும் நிகழ்வுகள் தான். இப்போது நாம் பார்க்கும் வறட்சியான ஆப்பிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மழை பெய்து செல்வ பூமியாக இருந்ததுதான். பருவமழை மாற்றத்தின் காரணமாக தற்போது வறண்ட பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
ஏன் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்று முன்னோக்கிப்பார்த்தால், கோயம்புத்தூரில் சுற்றி உள்ள வீட்டுமனை நிலங்கள் ஒரு காலத்தில் நல்ல விளைநிலங்களாக பருத்தி, சோளம் போன்ற பயிர்களை விளைவிக்கும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது கோவை குடிநீருக்கு அத்திகடவு திட்டம், பவானி ஆற்று நீர், கேரளாவில் மழை பெய்தால் தான் சிறுவாணி அணை நிரம்பும் என்று அனைவரும் குடிநீருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உள்ளோம்.
கிணறுகள் எவற்றிலும் நீர் இல்லாமல், அவை குப்பைகளைக் கொட்டும் கிணறுகளாகத் தான் காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்ததாலும், இருப்பிடத் தேவைக்காக ரியல் எஸ்டேட்களின் ஆக்கிரமிப்பாகவும் விளைநிலங்கள் உருமாறிவிட்டது. உண்மையான காரணம் பருவமழை குறைவை அறிந்த போதும், நிலத்தடி நீரைச் சேமிக்க தவறவிட்டோம். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பித்து இப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலை உள்ளது.
உலக வெப்பமடைதல் காரணமாக, புவியில் வெப்பமான பகுதிகள் அதிக வெப்பமடைவதும், குளிர் நிறைந்த பகுதிகள் மேலும் குளிரடைவதையும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் காணமுடிகிறது. இது இன்னும் மோசமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக வெப்படைதலுக்கு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிக இயற்கை சேதங்களைச் செய்ததால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வளர்ச்சியடையாத நாடுகளும், மக்கள்தொகை அதிகம் உள்ள வளர்ச்சி அடையாத நாடுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளும் குறைகூறி வருகின்றன.எப்படி குறைகூறினாலும் பாதிக்கப்படுவதில் நாமும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பருவமழை மாற்றம் விவசாயத்தை பெரும் அளவில் பாதிக்கச் செய்கிறது. பல ஆயிரக்கணக்கில் விதை, ஈடுபொருட்கள் செலவு செய்து பயிரிடும் விவசாயிகள் பருவ மழையை நம்பி தங்கள் விதைகளை மண்ணில் பயிரிட்டு வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்போது பருவமழை கைகொடுக்காவிட்டால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் பாதிப்பு உயிரை கொடுக்கும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் கிடைக்கும் அனைத்து நீரையும் வீணாக்காமல் குளம், ஏரி ஆகியவற்றில் சேமிக்கும்போது நிலத்தடி நீர் பெருக அதிக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மட்டுமே இன்றைய பருவநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய ஒரே தீர்வு!
நன்றி:தன்நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
நல்ல தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
அம்மா பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் குடிதண்ணீர்
வழங்குகிறார்கள்...
-
அடுத்து இலவசமாக அந்த தண்ணீர் பாட்டிலை
தருவதாக சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடுவோம்...!!!
வழங்குகிறார்கள்...
-
அடுத்து இலவசமாக அந்த தண்ணீர் பாட்டிலை
தருவதாக சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடுவோம்...!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?
» சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
» கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி?
» நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
» கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
» சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
» கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி?
» நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
» கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|