சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி Khan11

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

2 posters

Go down

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி Empty கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 21:02

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி S_1

விசாகப்பட்டினத்தில் நடந்த அவுஸ்திரேலி யாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே கொச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பகல் - இரவு மோதலாக விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இரு அணியிலும் தலா 2 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறக்கப்பட்டனர். இந்திய அணியில் ஷிகர் தவான். சவுரப் திவாரி ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றனர்.

இதேபோல் அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் முதல்முறையாக சர்வதேச போட்டியில் இடம் பிடித்தனர். அதிரடி மன்னன் டேவிட் வார்னருக்கு அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது ஆச்சரியம் அளித்தது.

நாணயச் சுழற்சியில் ஜெயித்த இந்திய அணியின் கெப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி இந்திய வீரர்கள் முதலில் களத்தடுப்பு செய்ய களம் புகுந்தனர். இந்திய வீரர்கள் புதிய உடையில் ஜொலித்தனர். முன்பு அடர் புளு நிற உடையில் வலம் வந்தனர். தற்போது அது வெளிர் நீலநிற சீருடையாக மாறியிருக்கிறது.

ஷோன் மார்சும், டிம் பெய்னும் அவுஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினார்கள். மார்ஷ் (0), பெய்ன் (9) இருவரும் ஆஷிஷ் நெஹ்ராவின் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அணியை கப்டன் மைக்கேல் கிளார்க்கும் மைக் ஹஸ்ஸியும் மீட்டனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. இதனால் ஆட்டத்தின் போக்கு ஓரளவு இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 26 வது ஓவரில் தான் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்களை கடந்தது.

நிதானமாக ஆடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 160 ஓட்டங்களாக உயர்ந்த போது பிரிந்தது. மைக் ஹஸ்ஸி 69 ஓட்டங்களில் (78 பந்து, 7 பவுண்டரி) தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதை தொடர்ந்து துணை கப்டன் கமரூன் ஒயிட் ஆட வந்தார். மறுமுனையில் கப்டன் பொறுப்புடன் ஆடிய கிளார்க் சதத்தை நெருங்கினார்.

45 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதாவது அவர்களின் ஓட்ட விகிதம் 4.55 ஆக இருந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் ஒட்டுமொத்த போக்கையும் கமரூன் ஓயிட் தலைகீழாக மாற்றி காட்டினார். அவரது விசுவரூபத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் ஜெட்வேகத்தில் உயர்ந்தது. தொடக்கத்தில் மிரட்டிய நெஹ்ராவின் பந்து வீச்சையும் சிதறடித்தார். இதற்கிடையே மைக்கேல் கிளார்க் தனது 5வது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது 2வது சதமாகும்.

இறுதி 5 ஓவர்களில் மட்டும் மொத்தம் 7 சிக்சர்கள் பறந்தன. இந்த சரவெடியால் அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட ஏறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 289 ஓட்டங்கள் குவித்தது. கிளார்க் 111 ஓட்டங்களுடனும் (138 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தனது 11வது அரைசதத்தை கடந்த கமரூன் ஒயிட் 89 ஓட்டங்களுடனும் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் 84 ஓட்டங்கள் திரட்டினர்.

அத்துடன் கமரூன் ஒயிட் எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்த ஒரு பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த ஒரு முதியவரை பதம் பார்த்து விட்டது. பந்து தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல் கிளார்க் 46 வது ஓவரில் நேராக ஒரு பவுண்டரி விளாசிய போது நடுவர் பில்லி பவ்டன் குனிந்து தப்பி விட்டார். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கு சிறிது நேரம் பிடித்தது. அந்த அளவுக்கு அந்த பந்து அகர வேகத்தில் பறந்தது.

இதைத் தொடர்ந்து 290 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஷிகர் தவானும், முரளி விஜயும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2 வது பந்திலேயே தவான் (0) போல்ட் ஆனார். அறிமுக போட்டியில் டக் அவுட் ஆன 17 வது இந்தியர் தவான் ஆவார். டெண்டுல்கர், டோனி, ரெய்னா உள்ளிட்டோரும் தங்களது அறிமுக போட்டியில் டக் அவுட் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரத்தில் விஜயும் (15) வெளியேறினார். இதை தொடர்ந்து விராட் கோக்லியும், யுவராஜ் சிங்கும் கைகோர்த்து அணியை சிக்கலான நிலையில் இருந்து மீட்டதுடன், நல்ல நிலைக்கும் உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 172 ஓட்டங்களை எட்டிய போது யுவராஜ் சிங் (58) போல்ட் ஆனார்.

அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா அடித்து விளையாடி துரிதமாக ஓட்டங்களை சேகரித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். மறுமுனையில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட விராட் கோஹ்லி, பை-ரன்னர் உதவியுடன் தொடர்ந்து அசத்தினார். தனது 3வது சதத்தையும் பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு சிறிது நேரம் அதிரடி காட்டிய கோஹ்லி 118 களில் பிடி ஆனார்.

இதன் பிறகு வந்த கப்டன் டோனி (0) வந்த வேகத்தில் நடையை கட்டியதால், இந்தியாவுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் ரெய்னா களத்தில் நின்று மிரட்டவே, இந்திய அணி வெற்றிக்கனியை 7 பந்துகள் மீதம் வைத்து பறித்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரெய்னா 71 ஓட்டங்களுடனும் சவுரப் திவாரி 12 கடைசி வரை களத்தில் இருந்தனர்.

விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா தொடர்ந்து பெற்ற 3 வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். இதற்கு முன்பாக இங்கு நடந்து ள்ள இரு ஆட்டத்திலும் (2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எதிராக 2007ஆம் ஆண்டு இல ங்கை எதிராக) இந்திய அணி வெற்றி பெற்றி ருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி Empty Re: கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

Post by இன்பத் அஹ்மத் Sat 12 Feb 2011 - 21:36

:!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum