சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Khan11

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

2 posters

Go down

முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Empty முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Post by ந.க.துறைவன் Tue 22 Apr 2014 - 7:46

*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?    
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்
    இளமையில் கருமை
    முதுமையில் வெண்நரை
    வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
                                           பக்கம் – 12.
ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா. 
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.            { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
                      நூல் – பக்கம் – 159 }
 
 
 
சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.
       அது நல்லது இதுவும் நல்லது     
       புத்தாண்டு தினம்
       என் வயதான காலத்தில்
-    ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.
 
ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
     பொம்மைகளின் முகங்கள்
     நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
     என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
-    - செய்பூ.
-    - தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.
செல் :- 9442234822 / 8903905822

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Empty Re: முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Post by Nisha Tue 22 Apr 2014 - 13:36

ந.க.துறைவன் wrote:*
முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்துஅனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டிஇருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக்கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேறவேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில் எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும்முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.முதுமை, வாழ்வில் நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமையான இறுதி பருவக் காலமாகும்.
*
இன்றைய, தமிழ் ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்பற்றி கவிஞர்கள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்கிறார்கள் என்பதனைச் சற்றுப் பார்ப்போமா?
*
இளமையில், வாலிபத்தில் உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்பளபளப்பாக மின்னும் அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்புநிறம் மெல்ல மெல்ல மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை என்கிறோம். ஆக, நிறங்களே வயதினைஉணர்த்துகின்றன என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்ஹைக்கூக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்

இளமையில் கருமை

முதுமையில் வெண்நரை
வயதினை உணர்த்தும் வண்ணங்கள்.
{உப்பு பொம்மைகள்-நூல்}
பக்கம் – 12.

ஒரு மரத்தின் வயதினை எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவதுமிகச் சிரமமானதேயாகும். அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்தாவரவியல் வல்லுநர்கள். அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில பழுத்து பொன்னிறமாக பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும். அதனையே சருகுகள் என்கிறோம். அச்சருகுகளை முதுமைக் கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.

மித்ரா.
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள்.
{ மித்ரா – புல் நுனி வைரங்கள்
நூல் – பக்கம் – 159 }
 
சருகுகள் போன்று இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்துவிடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல் ஹைக்கூவாகத்திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும் நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையானசிந்தனையாகும். சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களைமனம் தோற்றுவிக்கும். புத்தாண்டு தினத்தில் தன் வயதான காலத்தில் அவருக்கு இப்படித் தோன்றுகிறது.

அது நல்லது இதுவும் நல்லது
புத்தாண்டு தினம்
என் வயதான காலத்தில்-    ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ” கசிகிறது மழைநீர் ”என்ற நூல் – பக்கம் – 10.
 ரையாட்டோவின் இந்த ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப் பரிமாணங்களில் சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக அழகு செய்கையாக இருந்தாலும்,பார்ப்பதற்கு ரசிக்கவே தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பிவிளையாடும் பொம்மைகளுக்கு முதுமை என்பதில்லை. அவைகள்வயதானவைகள் என்று யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்அவைகளை விட நான். முதுமையடைந்து விட்டேன் என்று பறைசாற்றுகின்றார் செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.

பொம்மைகளின் முகங்கள்
நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
என்றாலும் முதுமையடைந்து விட்டேன். -    - செய்பூ.

தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..

நான் முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்பெருமிதம் போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியதுஅவசியமாகும். இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசேமுதுமையாகும். முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய், ஆரோ்க்கியமாய் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று, இச்கமூகத்தில் இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி, ஏற்றமுடன் வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க. துறைவன்
வேலூர் – 632 009.
செல் :- 9442234822 / 8903905822

 


கட்டுரையோ கதையோ எழுதும் போது நாம் பதிவு செய்யும் முறை அந்தபக்கத்தை திறப்போருக்கு படிக்கவேண்டும் எனும் எண்ணத்தினை தருவதாய் இருக்க வேண்டும்.

பெரிய பதிவுகள் இடும் போது ஒவ்வொரு பந்திக்கும் இடையும் போதுமான இடைவெளி, சொல்ல வந்த கருத்தினை தனிப்படுத்தி காட்டுதல், சின்னசின்ன மேக்கப்கள் பதிவில் செய்வது பார்த்தவுடன் படிக்க வேண்டும் எனும் உணர்வைத்தரும்.

நாம் படிக்கும் காலத்தில் பரிட்சையில் கட்டுரை வந்தால் கட்டுரைக்கான கருவோடு எழுத்தின் அழகும், பந்தி பிரித்து, தேவையன இடத்தில் குறியீடுகள் இ்ட்டு எழுதுவதும் கூட கவனிகப்டுகின்றது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே,, அதை விட ஆசிரியராம் உங்களுக்கு  எல்லாமே தெரியும் துறைவன் சார்!

சுட்டியது தவறென தோன்றினால் எந்தலையில் குட்டுங்கள்..

முதியோர் குறித்த தெளிவான, அருமையான சிறு கட்டுரையுடன் ஹைக்கூவுமாய்  பகிர்ந்தமைக்கு நன்றி சார்!

தொடர்ந்து எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Empty Re: முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Post by ந.க.துறைவன் Tue 22 Apr 2014 - 13:46

தாங்கள் சுட்டிய தவறுகளைக் கவனத்தில் கொள்கிறேன் . மிக்க நன்றி நிசா.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

முதியோர் வாழ்க...!! { கட்டுரை } Empty Re: முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum