Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+7
rinos
கவிதை ரசிகன்
ராகவா
kalainilaa
நண்பன்
rammalar
கவிப்புயல் இனியவன்
11 posters
Page 1 of 13
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Last edited by கே.இனியவன் on Thu Oct 30, 2014 9:46 pm; edited 1 time in total
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என்னை தாக்கிவிட்டாய்....!!!
------------------------------------------
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!
உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!
அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!
குறள் - 1082
தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
--------------------------------------------
உயிரை
எடுக்க யமன் வருவான்
பாசகயிராய் எறிவான்
என்றெல்லாம் கேள்வி
பட்டிருக்கிறேன் ....!!!
மங்கை உன் கண்னை
பார்த்தபின் தான்
உணர்ந்தேன் என்னை
கொல்ல யமன்
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
குறள் - 1083
தகையணங்குறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
திருக்குறளும் கவிதையும்
-------------------------------------------
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
-------------------------------------------
என்னவே என் உயிரே
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!
உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம்
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும்
அறிவுக்கும் அப்பால்
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
குறள் - 1084
தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நீ என்ன எனக்கு யமனா ..?
-------------------------------------
என்னவளே
நீ பார்த்த நொடியே
பாசக்கயிறு எறிந்து விட்டான்
நீ என்ன எனக்கு யமனா ..?
அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது
உன் கண்ணா ...?
ராமனை மயக்க வந்த
மாயமான் போல் -நீ
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?
குறள் - 1085
தகையணங்குறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கே.இனியவன் wrote:
பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
அடடா என்னமா சிந்திக்கிறீர்
பாராட்டுக்கள் அழகு எல்லாம் அழகு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மிக்க நன்றி மேலும் தொடரும்நண்பன் wrote:கே.இனியவன் wrote:
பெண்ணே நீ யார் ....?
-------------------------------
என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?
குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
அடடா என்னமா சிந்திக்கிறீர்
பாராட்டுக்கள் அழகு எல்லாம் அழகு..
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அருமை தொடருங்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
நிச்சயமாக தொடர்வேன்
அனைத்து தரப்பினரின் கருத்துக்கும் நன்றி
அனைத்து தரப்பினரின் கருத்துக்கும் நன்றி
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!
----------------------------------------------------------------
என் கண் அழகியே ....!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன்
வில் போன்ற புருவம் தானடி
என்னை மிரட்டுகிறது ....!!!
விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக
படைத்த இறைவன் தானடி
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை
குற்றுகிறாள்..............!!!
குறள் - 1086
தகையணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06
மேலும் தொடரும் .....
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன்
சற்றே எனக்கும் நாணம் வர
தலைகுனிந்தேன் .....!!!
அதிர்ந்தேன்
உன் திரண்ட மார்பழகில்
நிமிர்த்த நேரழகில் மருண்டேன்
இரு குன்றுகளையும்
மறைக்கும் மெல்லிய ஆடை
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
குறள் - 1087
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 07
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!
என்னை கண்டு அஞ்சாத
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத
மங்கையும் இல்லை .....!!!
அத்தனையும் ஒரு நொடியில்
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய்
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம்
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!
குறள் - 1088
தகையணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 08
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
உன் அழகை கெடுக்கிறாய் ................!!!
என்னவளே
ஏனடி என்னை கண்டவுடன்
புலியை பார்த்த பெண் மானை
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை
பேரழகா ....?
அகத்தே நாணம் என்ற
பொன் அழகையும்
கொண்டவளே .எதுக்கடி
பொன் நகை அணிகலன்
அணிந்து உன் அழகை
கெடுக்கிறாய் ................!!!
குறள் - 1089
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 09
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
எப்படி புரிய வைப்பேன் ..?
போதையை உண்டவனுக்கும்
பேதையிடன் மாண்டவனுக்கும்
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!
பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு
காதல் உணர்வு இல்லாதவனுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும்
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!
குறள் - 1090
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 10
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
என் ஆதியும் அந்தமும் ....!!!
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும்
அவள் கருமை கொண்ட கரு
விழிப்பார்வை என் உயிரையே
கொல்லும் பார்வை ...!!!
மறுமுறை பார்வை
உயிர்த்தெழும் உயிராய்
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான்
என் ஆதியும் அந்தமும் ....!!!
குறள் - 1091
குறிப்பு அறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?
நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?
இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?
குறள் - 1092
குறிப்பு அறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!
நான்
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை
பார்க்காமலும்
நான்
பார்க்காத போது அவள்
என்னை பார்ப்பதும் என்ற
பார்வை போட்டிதானடி ....?
நம் காதல் என்னும்
பயிருக்கு நீ ஊரறிய
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர்
மட்டுமல்ல
காதலை வளர்க்கும்
பன்னீரும் உண்டு .....!!!
குறிப்பு அறிதல்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
திருக்குறள் : 1093
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!
என்னவளை பார்க்கும்
வேளையில்
நிலத்தை நோக்கும்
நெற் கதிர் போல்
தலை குனிகிறாள் ....!!!
நான் அவளை பார்க்காத
நேரம் பார்த்து என்னை
பார்த்து வெட்கத்தில்
தனக்குள்ளே தனியே
சிரிக்கும் அந்த அழகு
காதலில் கிடைக்கும்
மற்றுமொரு சுகமடி .....!!!
திருக்குறள் : 1094
குறிப்பு அறிதல்
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!
காதலில்
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம்
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு
பார்க்கும் அழகு அழகோ
அழகு ......!!!
நேரே பார்க்க முடியாத
வேளையில் விழியை
ஓரமாக்கி பார்க்கும் அழகை
தனக்குள்ளே
நினைத்து சிரிக்கும் அழகு
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!
திருக்குறள் : 1095
குறிப்பு அறிதல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
அகத்தால் எனக்காக நீ துடிக்கிறாய் .....!!!
எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
திருக்குறள் : 1096
குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும்
வெளி மூச்சாகவும் நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!
உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
அகத்தால் எனக்காக நீ
துடிக்கிறாய் .....!!!
திருக்குறள் : 1096
குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!
நீ
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
மனம் முழுதும் நான்
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
திருக்குறள் : 1097
குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
நீ
வேண்டுமென்றே திட்டுகிறாய்
என்னை பிடிக்காதது போல்
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய்
அத்தனையும் பொய் உயிரே ...
மனம் முழுதும் நான்
நிறைந்திருக்கிறேன்
உன் நினைவு முழுதும்
நானே இருக்கிறேன்
என்னை
யாருக்கும் விட்டு கொடுக்க
விரும்பாத மனமே எதிரிபோல்
பார்க்கும் காதலில் இதுவும்
ஒரு உத்திதான் அன்பே ....!!!
திருக்குறள் : 1097
குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறா அர்போன்று உற்றார் குறிப்பு
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!
என்னை தெரியாததுபோல்
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
திருக்குறள் : 1098
குறிப்பு அறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
என்னை தெரியாததுபோல்
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல்
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை
பிடிக்காதது போல்
நடிக்கிறாய் ....!!!
அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை
காதல் கொண்ட கருணை
பார்வையால் - உன் காதல்
சிரிப்பில் புரிந்ததடி
உன் காதலின் ஆழம் .....!!!
திருக்குறள் : 1098
குறிப்பு அறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
காதல் ரகசிய நாடகம் ....!!!
உன்னை எனக்கு தெரியாது
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
இரண்டு வெறுமையில்
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
திருக்குறள் : 1099
குறிப்பு அறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
உன்னை எனக்கு தெரியாது
எனக்கு உன்னை தெரியாது
என்று ஒருவரை ஒருவர்
நோக்கும் மாயவித்தை
காதலில் தவிர எங்குண்டு ...?
இரண்டு வெறுமையில்
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல்
ஏக்கம் கொண்டு பார்ப்பது
காதலர்கள் இடையே நடக்கும்
காதல் ரகசிய நாடகம் ....!!!
திருக்குறள் : 1099
குறிப்பு அறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
Similar topics
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» கவிதையும் கழுதையும் - கவிதை
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» காதல் கவிதையும் தத்துவமும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» கவிதையும் கழுதையும் - கவிதை
Page 1 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|