சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Khan11

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

+7
rinos
கவிதை ரசிகன்
ராகவா
kalainilaa
நண்பன்
rammalar
கவிப்புயல் இனியவன்
11 posters

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Jul 2014 - 11:01

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Xmcjh_204797


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.


Last edited by கே.இனியவன் on Thu 30 Oct 2014 - 17:46; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 11:55

காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

என் 
காதலை என் பார்வையால் 
சொல்லிவிட்டேன் ....!!!
உன் 
காதலை உன் பார்வையால் 
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும் 
ஊடகம் பார்வைதானடி ...!!!

இதற்கு மேல் எதற்கு 
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும் 
உயிர் பரிமாற்றம் ...!!!


திருக்குறள் : 1100

குறிப்பு அறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 8:57

21) இன்பத்தை அள்ளி தரவல்ல...?

மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!
என் ஐயம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!

திருக்குறள் : 1101

புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 8:59

என்னவளே நீ மட்டும் ..?

நோய்கள் ஆயிரம் ஆயிரம் 
நோய்க்கான மருந்துகளும் 
ஆயிரம் ஆயிரம் ....!!!

பொருத்தமான நோய்க்கு 
பொருத்தமான மருந்து 
அபூர்வமோ அபூர்வம் ...!!!

என்னவளே நீ மட்டும் 
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும் 
இருக்கிறாயடி .....!!!


திருக்குறள் : 1102

புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்நோய்க்குத் தானே மருந்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 9:04

23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
 
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
 
திருக்குறள் : 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 9:05

எங்கே கற்று கொண்டாளோ..?

உன்னை விட்டு விலகினால் 
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால் 
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை 
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!

இயற்கைக்கு மாறான 
தீயை எனக்குள் கொண்டுவரும் 
இந்த மாய வித்தையை 
எங்கே கற்று கொண்டாளோ..?


திருக்குறள் : 1104

புணர்ச்சிமகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 9:10

எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்... 
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்... 
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

என்னவளே -நீ 
தலை நிறைய பூசூடி 
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது 
கூடினாலும் இன்பம்தான் ...!!!



திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே 
தோட் டார் கதுப்பினாள் தோள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 9:16

கே.இனியவன் wrote:திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Wbihu_203734

நீ என்ன எனக்கு யமனா ..?
-------------------------------------
என்னவளே 
நீ பார்த்த நொடியே 
பாசக்கயிறு எறிந்து விட்டான் 
நீ என்ன எனக்கு யமனா ..?

அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது 
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த 
மாயமான் போல் -நீ 
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
அருமையாக உள்ளது *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 9:17

கே.இனியவன் wrote:23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
 
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
 
திருக்குறள் : 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
ஆஹா அருமை *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 2 Aug 2014 - 9:31

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
 
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
 
திருக்குறள் : 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
ஆஹா அருமை *_ *_ 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 11:07

என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!

என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!

தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும் 
ஜிவனடி....நீயோ 
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!


திருக்குறள் : 1106

புணர்ச்சிமகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 11:20

அந்த சுகத்தை தந்தாய் 

என்னவளே 
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி 
மாநிறம் என்ற சொல்லே 
தோன்றியதோ ....?

தானே உழைத்து 
தானே கட்டிய வீட்டில் 
குடியிருப்பது ஒரு சுகம் 
அந்த சுகத்தை தந்தாய் 
உயிரே நீ என்னை தழுவும் 
இன்பமடி ....!!!


திருக்குறள் : 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 11:46

இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு 
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

நம் 
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம் 
இதுதானே உயிரே ....!!!


திருக்குறள் : 1108

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 12:03

அவளிடம் சிறுகோபம்

அவள் என்னை சீண்ட 
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம் 
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!

சின்ன சின்ன ஊடல் 
நம் கூடலுக்கு நடக்கும் 
ஒத்திகை நாடகமாடி 
இதுதானே அன்பே உன்னை 
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!


திருக்குறள் : 1109

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 12:23

முகத்தில் புன்னகையுடன் ...!!!

படித்தேன் பல புத்தகம் 
அறிந்தேன் பொது விடயம் 
கசக்கி புளிந்தேன் மூளையை 
தெரிந்தது என் இறந்த கால 
அறியாமை ....!!!

கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன் 
முகத்தில் புன்னகையுடன் 
இருக்கும் என்னவளே 
உன்னை தழுவ தழுவ 
கிணற்று நீர் ஊற்று எடுப்பது 
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!


திருக்குறள் : 1110

புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 8:05

அழகுக்கும் மென்மைக்கும் -நீ 

ஏய் பூக்களின் ராணியே 
மென்மையில் சிகரமாம் நீ 
அழகின் வானமாம் நீ 
பூக்களில் கர்வம் கொண்டவளே 
அனிச்சம் பூவே! - நீ 
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!

என்னவளின் 
அழகுக்கும் மென்மைக்கும் -நீ 
ஏணிவைத்தாலும் எட்டாதவள் 
மென்மைக்கு அனிச்சம் இல்லை 
என் மனைவிதான் இனி மேல் ...!!!



திருக்குறள் : 1111

நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம்வீழ் பவள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 8:32

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

ஓ மனமே ....
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே... 
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!

மனமே இதுவரை 
பிறர் பார்த்த பூக்களைப்போல் 
என்னவளின் கண்னை 
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!


திருக்குறள் : 1112

நலம்புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் 
பலர்காணும் பூவொக்கும் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 8:57

தேவதை என் இதயதேவதை ...!!!

என் இதய தேவதையே ....
கொல்கிறாய் அழகால் ..?
மினுமினுப்பாய் மூங்கில்போல் 
இருக்கும் தோள்...!
உடம்போ மேனி இளந்தளிர் ...
ஆழ்கடல் தேடி எடுத்த முத்து 
உன் பற்றொடர் ....!

நான் இதுவரை முகராத 
நறுமணம் உன் மேனிவாசம் ...
என் இதயத்தை கூர் வேல் 
கொண்டு குற்றும் உன் 
வேல் கொண்ட கண் ....!
அத்தனையும் பெற்ற அழகு 
தேவதை என் இதயதேவதை ...!!!


திருக்குறள் : 1113

நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 9:20

பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

உயிரே
அழகையும் கண்ணையும் காணும் 
பாக்கியத்தை குவளை பூக்கள் 
பெற்றிருந்தால் ....!!!

உன் 
பொன் நகையையும் 
புன்னகையும் அழகையும் 
காந்த கண்ணையும் கண்டு 
உனக்கு நிகராக தாம் இல்லையே 
வெட்கப்பட்டு வேதனை பட்டு 
தலைகுனியும் -என் அழகியே ...!!!


திருக்குறள் : 1114

நலம்புனைந்துரைத்தல்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண்ணொவ்வேம் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 9:43

உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

மெல்லிடையாளே ....
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம் 
அனிச்சம் பூவை காம்போடு 
அணிந்து விட்டாயடி ....!!!

போச்சு போச்சு ...
உன் மெல்லிடை ஒடிந்து 
இடையின் ஓசையை இழக்க 
போகிறேன் -பூவின் காம்பின் 
கனம் தாங்காமல் உன் இடை 
மெல்ல சாகப்போகிறது ....!!!


திருக்குறள் : 1115

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 
நல்ல படாஅ பறை.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 16:04

பூலோக வெண்ணிலா ...!!!


என்னவளே 
வெண்ணிலா வானத்தில் 
தானே இருக்கும் - நீ 
எனக்காக படைக்கப்பட்ட 
பூலோக வெண்ணிலா ...!!!

நீ 
தரையில் நடமாடுவதை
பார்த்த விண் மீன்கள் 
தலை சுற்றி நிற்கின்றன 
நிலவு ஏன் நிலத்தில் 
நடமாடுகிறது ...?



திருக்குறள் : 1116

நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 16:23

என்னவளின் அழகில் 

ஏய் நட்சத்திரங்களே ...
ஏன் குழப்பம் அடைகிறீர்கள் 
என்னவளின் முகத்துக்கும் 
முழு நிலாவுக்கும் என்ன 
வேறுபாடு கண்டீர்கள் ..?

தேய்ந்து வளரும் மதி 
போல் என்னவளின் 
அழகும் வளந்து கொண்டே 
செல்கிறது நிலவை ஒத்த 
என்னவளின் அழகில் 
என்ன குழப்பம் 
விண் மீன்களே ..?


திருக்குறள் : 1117

நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல 
மறுவுண்டோ மாதர் முகத்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 16:44

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

வான் மதியே ...
அழகு தேவதையே ...
என்னவளின் அழகுக்கு 
நிகரானவளோ ....?

என் உயிரானவளின் 
அழகுக்கு அழகு அவளே 
நீ என்னவளின் 
அழகுக்கு நிகராய் ஒளி 
வீசுவாயானால் உன்னை 
காதலிக்க மனம் தூண்டும் ...!!!


திருக்குறள் : 1118

நலம்புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 38
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 17:06

அழகுக்கு சிகரமானவளே....

வெண்ணிலவே 
அழகுக்கு சிகரமானவளே....
என்னவளின் கண்கள் 
ஆயிரம் ஆயிரம் மலர் 
அழகுக்கு நிகரானவை ....!!!

என்னவளின் கண்ணுக்கு 
நீ ஆசைப்படாதே 
அழகு கண்ணை நீ பெற்றால் 
சந்தை பூவாக மாறி விடாதே 
நான் ரசிக்கும் பூவாக 
இருந்து விடு .....!!!


திருக்குறள் : 1119

நலம்புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 17:22

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின் 
மென்மை ராணியே 
அழகுகளின் ராணியே 
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே 
அழகின் உருவமே 
என்னவளின் பாத அழகு 
நெருஞ்சிப்பழம் போல் 
வருந்தம் தருகிறதோ ...?

திருக்குறள் : 1120

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் 
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by ராகவா Tue 12 Aug 2014 - 19:18

அத்தனை கவியும் அட்டகசமான காவியங்கள்..
தொடருங்கள்,,,,வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum