Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
எதிர்பார்ப்போடு வாழ்தல்
2 posters
Page 1 of 1
எதிர்பார்ப்போடு வாழ்தல்
அடர்ந்த காடு... அழகான இயற்கை... ஆரோக்கியமான சூழல்... பாதுகாப்பாக பயணம் செய்து விட்டு வர ஒரு வாய்ப்பு வருகிறது. முதல் ஜோடி, அருவியையும் அடர்ந்த பசுமையையும் பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலிகளையும் ரசித்தபடியே காடு முழுக்க வளைய வருகிறார்கள். காட்டுக்குள் அவர்கள் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தபடி, மனநிறைவுடன் வெளியே வருகிறார்கள்.
இன்னொரு ஜோடி... பத்தடி எடுத்து வைத்ததுமே, வாகனத்தின் சாவியைத் தொலைத்துவிட்டதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லிக்கொண்டு, கோபப்பட்டுக் கொண்டு,கவலை ஆத்திரமாக வெளிப்படுகிறது. சாவி கிடைத்தால்தானே வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற தவிப்பில், அந்தக் காட்டின் வனப்போ, வளமோ அவர்களை ஒரு சதவிகிதம் கூட ஈர்க்கவில்லை.
பாதியில் திரும்பவும் முடியாமல், நடந்ததை மறந்து, நிகழ்காலத்தை ரசிக்கவும் முடியாமல், வெறுப்புடனும் விரக்தியுடனும் அவர்களது பயணமும் நிறைவுக்கு வருகிறது. இரண்டிலும் களம் ஒன்றுதான்... பயணம் செய்தவர்களின் நோக்கமும் ஒன்றுதான். ஒருவருக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்த அதே பயணம், இன்னொருவருக்கு மட்டும் ஏன் வெறுமையைத் தர வேண்டும்? மனநிலையில் உண்டான மாற்றம்!
வாழ்க்கையும் கிட்டத்தட்ட இப்படித்தான்... இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் அதில் பயணம் செய்ய ஆரம்பித்தால் இதுபோன்ற அனுபவங்கள் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தரலாம். அதுவே வாழ்க்கையை மகிழ்ச்சியான ஒரு பயணமாக, புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஒரு அனுபவமாகப் பார்க்கப் பழகுபவர்களுக்கு அது வேறு உலகத்துடன் காத்திருக்கிறது. அந்தப் பயணத்தில் கல்லோ, முள்ளோ குத்தலாம். அனுபவத்தில் அதுவும் ஒன்று என்கிற பக்குவம் அவசியம்.
கணவன் / மனைவி என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும்... அவரது லட்சணங்கள் இவையெல்லாம் என நமக்கு நாமே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம். நம்மை ‘தலைவனாக’ அல்லது ‘தலைவியாக’வும் மற்ற எல்லோரையும் நமது ‘அடிமைகளாக’வும் கற்பனை செய்கிறோம். மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துகிறவராக, குற்றம் சுமத்துகிறவராக, சரி-தவறுகளைத் தீர்மானிப்பவராக எல்லா பொறுப்புகளையும் நாமே எடுக்கிறோம். இந்த மனப்பான்மை, வேலையிடத்தில், வெளியில் சந்திக்கிற மனிதர்களிடத்தில் மட்டுமின்றி, வீட்டுக்குள்ளேயும் தொடர்கிறது.
வாழ்க்கைத்துணை என்பவர் தன்னைப் போலவே ஒரு தனிநபர் என்பதும், தனது விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப நடந்து கொள்ள எந்த அவசியமும் அற்றவர் என்பதையோ உணராமல், அதே ஆதிக்க அஸ்திரத்தை அங்கும் ஏவுகிறோம். நமது எதிர்பார்ப்பு நிறைவேறாத போது, அதாவது, வாழ்க்கைத்துணை, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்ளும் போது, ‘இந்த உலகத்தில் நம்மைத் தவிர வேறு யாருமே சரியில்லை... எல்லோரும் மோசம்...’ என நினைக்கத் தொடங்குகிறோம். இந்த எண்ணங்கள் வளர ஆரம்பித்தால், மெல்ல மெல்ல நம் வாழ்க்கையை நாமே தோற்கடித்துக் கொள்ள வழி வகுத்துக் கொண்டு விடுவோம்.
அற்புதமான திருமண உறவு வேண்டும் என நினைத்தால், இந்த அணுகுமுறை அடியோடு களையப்பட வேண்டும். காட்டுக்குள் நிறைவான, மகிழ்வான பயணத்தை அனுபவித்த ஜோடியைப் போல, வாழ்க்கையைப் பார்க்கப் பழக வேண்டும். துணையிடம் நெகட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். சின்னச் சின்ன குறைகளும் தவறுகளும் பொறுக்காமல் திட்டித் தீர்ப்பதைத் தவிர்த்து, முடிகிற போதெல்லாம் பாராட்டப் பழக வேண்டும். திட்டும் நெகட்டிவ் விமர்சனங்களும் துணையின் மனதில் கடுமையான, ஆழமான, அகலாத பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சரி... இந்த மனமாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்படுத்திக் கொள்வது?
இன்னொரு ஜோடி... பத்தடி எடுத்து வைத்ததுமே, வாகனத்தின் சாவியைத் தொலைத்துவிட்டதை உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லிக்கொண்டு, கோபப்பட்டுக் கொண்டு,கவலை ஆத்திரமாக வெளிப்படுகிறது. சாவி கிடைத்தால்தானே வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற தவிப்பில், அந்தக் காட்டின் வனப்போ, வளமோ அவர்களை ஒரு சதவிகிதம் கூட ஈர்க்கவில்லை.
பாதியில் திரும்பவும் முடியாமல், நடந்ததை மறந்து, நிகழ்காலத்தை ரசிக்கவும் முடியாமல், வெறுப்புடனும் விரக்தியுடனும் அவர்களது பயணமும் நிறைவுக்கு வருகிறது. இரண்டிலும் களம் ஒன்றுதான்... பயணம் செய்தவர்களின் நோக்கமும் ஒன்றுதான். ஒருவருக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்த அதே பயணம், இன்னொருவருக்கு மட்டும் ஏன் வெறுமையைத் தர வேண்டும்? மனநிலையில் உண்டான மாற்றம்!
வாழ்க்கையும் கிட்டத்தட்ட இப்படித்தான்... இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் அதில் பயணம் செய்ய ஆரம்பித்தால் இதுபோன்ற அனுபவங்கள் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தரலாம். அதுவே வாழ்க்கையை மகிழ்ச்சியான ஒரு பயணமாக, புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஒரு அனுபவமாகப் பார்க்கப் பழகுபவர்களுக்கு அது வேறு உலகத்துடன் காத்திருக்கிறது. அந்தப் பயணத்தில் கல்லோ, முள்ளோ குத்தலாம். அனுபவத்தில் அதுவும் ஒன்று என்கிற பக்குவம் அவசியம்.
கணவன் / மனைவி என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும்... அவரது லட்சணங்கள் இவையெல்லாம் என நமக்கு நாமே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம். நம்மை ‘தலைவனாக’ அல்லது ‘தலைவியாக’வும் மற்ற எல்லோரையும் நமது ‘அடிமைகளாக’வும் கற்பனை செய்கிறோம். மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துகிறவராக, குற்றம் சுமத்துகிறவராக, சரி-தவறுகளைத் தீர்மானிப்பவராக எல்லா பொறுப்புகளையும் நாமே எடுக்கிறோம். இந்த மனப்பான்மை, வேலையிடத்தில், வெளியில் சந்திக்கிற மனிதர்களிடத்தில் மட்டுமின்றி, வீட்டுக்குள்ளேயும் தொடர்கிறது.
வாழ்க்கைத்துணை என்பவர் தன்னைப் போலவே ஒரு தனிநபர் என்பதும், தனது விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப நடந்து கொள்ள எந்த அவசியமும் அற்றவர் என்பதையோ உணராமல், அதே ஆதிக்க அஸ்திரத்தை அங்கும் ஏவுகிறோம். நமது எதிர்பார்ப்பு நிறைவேறாத போது, அதாவது, வாழ்க்கைத்துணை, அதற்கு நேர்மாறாக நடந்து கொள்ளும் போது, ‘இந்த உலகத்தில் நம்மைத் தவிர வேறு யாருமே சரியில்லை... எல்லோரும் மோசம்...’ என நினைக்கத் தொடங்குகிறோம். இந்த எண்ணங்கள் வளர ஆரம்பித்தால், மெல்ல மெல்ல நம் வாழ்க்கையை நாமே தோற்கடித்துக் கொள்ள வழி வகுத்துக் கொண்டு விடுவோம்.
அற்புதமான திருமண உறவு வேண்டும் என நினைத்தால், இந்த அணுகுமுறை அடியோடு களையப்பட வேண்டும். காட்டுக்குள் நிறைவான, மகிழ்வான பயணத்தை அனுபவித்த ஜோடியைப் போல, வாழ்க்கையைப் பார்க்கப் பழக வேண்டும். துணையிடம் நெகட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். சின்னச் சின்ன குறைகளும் தவறுகளும் பொறுக்காமல் திட்டித் தீர்ப்பதைத் தவிர்த்து, முடிகிற போதெல்லாம் பாராட்டப் பழக வேண்டும். திட்டும் நெகட்டிவ் விமர்சனங்களும் துணையின் மனதில் கடுமையான, ஆழமான, அகலாத பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சரி... இந்த மனமாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்படுத்திக் கொள்வது?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எதிர்பார்ப்போடு வாழ்தல்
* வாழ்க்கையை அன்பின் இடத்திலிருந்து பார்க்கப் பழகுவதே முதல் படி. மனித உணர்வுகளை இரண்டாகப் பிரிக்கலாம். எந்தவொரு விஷயத்தையும் அன்பின் அடிப்படையிலும் அணுகலாம். பயத்தின் கோணத்திலிருந்தும் பார்க்கலாம். சந்தேகம், குறை காண்பது, பொறாமை, கோபம், குத்திக்காட்டிப் பேசுவது போன்ற எல்லாம் பயம் மற்றும் நெகட்டிவ் அணுகுமுறையின் வெளிப்பாடு. அதைத் தவிர்த்து, பரஸ்பர மரியாதையுடனும் புரிந்து கொள்ளலுடனும் நேர்மையுடனும் பார்க்கப் பழகினால், உறவு இனிக்கும்.
* தவறுகளைக் கண்டுபிடிப்பதும், சுட்டிக் காட்டுவதும் நம் எல்லோருக்குமே எளிது. அந்தப் பார்வையை மாற்றிக்கொண்டு, துணையிடம் உள்ள ‘சரி’களைப் பார்க்கப் பழகினால், நெருக்கம் கூடும்.
* நிகழ்காலத்தில் வாழ்வதும் தம்பதியின் நெருக்கத்தை அதிகரிக்கும் முக்கியமான வழி. ‘அன்னிக்கு அப்படிப் பேசினியே... அவமானப்படுத்தினியே...’ எனக் கடந்த காலம் பற்றியோ, ‘நாளைக்கு நீ எப்படி நடந்துப்பியோ தெரியலையே... என்னை ஏமாத்திட்டா என்ன செய்ய?’ என எதிர்காலம் பற்றியோ நினைக்க வேண்டாம். இருவரில் யாரேனும் அப்படி கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ பற்றிப் பேச ஆரம்பித்தால், இன்னொருவர் உடனடியாக அந்தப் பேச்சை மாற்ற வேண்டும். அவரை நிகழ்காலத்துக்குள் இழுக்க வேண்டும். நிகழ்காலத்திலிருந்து பேச்சு தடம் மாறும் போது, அப்படிப் பேசும் துணையின் கையை இறுகப் பிடித்து, நினைவூட்டுகிற மாதிரி ஏதேனும் ஒரு சங்கேத பாஷையைக் கடைப்பிடிக்கலாம்.
* நாம் எப்படி இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை மறந்து, துணை என்ன செய்கிறார், எப்படி நடந்து கொள்கிறார் என ஆராய்ந்து, அவரை மாற்ற நினைப்பது மிகப்பெரிய தவறு. எதிர்க்கும் மனநிலை தவிர்த்து, ஏற்றுக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது
இருவருக்குமே அடிப்படை!
* தவறுகளைக் கண்டுபிடிப்பதும், சுட்டிக் காட்டுவதும் நம் எல்லோருக்குமே எளிது. அந்தப் பார்வையை மாற்றிக்கொண்டு, துணையிடம் உள்ள ‘சரி’களைப் பார்க்கப் பழகினால், நெருக்கம் கூடும்.
* நிகழ்காலத்தில் வாழ்வதும் தம்பதியின் நெருக்கத்தை அதிகரிக்கும் முக்கியமான வழி. ‘அன்னிக்கு அப்படிப் பேசினியே... அவமானப்படுத்தினியே...’ எனக் கடந்த காலம் பற்றியோ, ‘நாளைக்கு நீ எப்படி நடந்துப்பியோ தெரியலையே... என்னை ஏமாத்திட்டா என்ன செய்ய?’ என எதிர்காலம் பற்றியோ நினைக்க வேண்டாம். இருவரில் யாரேனும் அப்படி கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ பற்றிப் பேச ஆரம்பித்தால், இன்னொருவர் உடனடியாக அந்தப் பேச்சை மாற்ற வேண்டும். அவரை நிகழ்காலத்துக்குள் இழுக்க வேண்டும். நிகழ்காலத்திலிருந்து பேச்சு தடம் மாறும் போது, அப்படிப் பேசும் துணையின் கையை இறுகப் பிடித்து, நினைவூட்டுகிற மாதிரி ஏதேனும் ஒரு சங்கேத பாஷையைக் கடைப்பிடிக்கலாம்.
* நாம் எப்படி இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை மறந்து, துணை என்ன செய்கிறார், எப்படி நடந்து கொள்கிறார் என ஆராய்ந்து, அவரை மாற்ற நினைப்பது மிகப்பெரிய தவறு. எதிர்க்கும் மனநிலை தவிர்த்து, ஏற்றுக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது
இருவருக்குமே அடிப்படை!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எதிர்பார்ப்போடு வாழ்தல்
முயற்சி செய்து பார்க்கலாமே!
‘இது என் ஏரியா... உனக்கென்ன வேலை’ என துணையை உங்கள் வேலைகளில் இருந்து ஒதுக்காதீர்கள். உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் அத்தனை விஷயங்களிலும் உங்கள் துணையின் பங்கீடும் ஆர்வமும் இருக்கட்டும். அதைத் தொந்தரவாக நினைக்காதீர்கள்.
உங்கள் துணையின் கருத்துகளை, நண்பர் சொல்லும் கருத்து போல காது கொடுத்துக் கேளுங்கள். ‘நீ என்ன சொல்றது? உனக்கென்ன தெரியும்?’ என உதாசீனப்படுத்தாதீர்கள்.
ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள்... அதற்கான நல்ல நேரம், காலம் பார்த்து காத்திருக்காதீர்கள். பிரச்னைகளைப் பற்றிப் பேசத்தான் சரியான நேரம் பார்க்க வேண்டும். மற்ற விஷயங்களுக்கு அல்ல. அப்படி நீங்கள் தள்ளிப் போடும் விஷயம், ஒரு கட்டத்தில் பேச முடியாமலே போகவும் கூடும்.
துணையின் மீது அளவுக்கு அதிக நம்பிக்கையை வையுங்கள். நம்பிக்கை என்பது இருவருக்குமான செக்ஸ் உறவில் உள்ள நேர்மை எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல...
‘நீ எப்போதும், எந்தச் சூழலிலும் எனக்குத் தீங்கு செய்ய மாட்டாய்... உதாசீனப்படுத்தமாட்டாய்... கட்டுப்படுத்த மாட்டாய்...’ என்கிற நம்பிக்கை. ‘எந்த நோக்கமும் இன்றி என்னைக்காதலிப்பாய்’ என்கிற நம்பிக்கை.‘நமக்கிடையிலான காதலும் திருமண உறவும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் முன்னுரிமை இழக்காது’ என்கிற நம்பிக்கை. ‘கோபத்திலோ, சண்டையிலோ, கருத்து வேறுபாடிலோ... உன் மீதான காதலைத் துறக்க மாட்டேன்’ என்கிற நம்பிக்கை..
நன்றி : தினகரன்
‘இது என் ஏரியா... உனக்கென்ன வேலை’ என துணையை உங்கள் வேலைகளில் இருந்து ஒதுக்காதீர்கள். உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் அத்தனை விஷயங்களிலும் உங்கள் துணையின் பங்கீடும் ஆர்வமும் இருக்கட்டும். அதைத் தொந்தரவாக நினைக்காதீர்கள்.
உங்கள் துணையின் கருத்துகளை, நண்பர் சொல்லும் கருத்து போல காது கொடுத்துக் கேளுங்கள். ‘நீ என்ன சொல்றது? உனக்கென்ன தெரியும்?’ என உதாசீனப்படுத்தாதீர்கள்.
ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள்... அதற்கான நல்ல நேரம், காலம் பார்த்து காத்திருக்காதீர்கள். பிரச்னைகளைப் பற்றிப் பேசத்தான் சரியான நேரம் பார்க்க வேண்டும். மற்ற விஷயங்களுக்கு அல்ல. அப்படி நீங்கள் தள்ளிப் போடும் விஷயம், ஒரு கட்டத்தில் பேச முடியாமலே போகவும் கூடும்.
துணையின் மீது அளவுக்கு அதிக நம்பிக்கையை வையுங்கள். நம்பிக்கை என்பது இருவருக்குமான செக்ஸ் உறவில் உள்ள நேர்மை எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல...
‘நீ எப்போதும், எந்தச் சூழலிலும் எனக்குத் தீங்கு செய்ய மாட்டாய்... உதாசீனப்படுத்தமாட்டாய்... கட்டுப்படுத்த மாட்டாய்...’ என்கிற நம்பிக்கை. ‘எந்த நோக்கமும் இன்றி என்னைக்காதலிப்பாய்’ என்கிற நம்பிக்கை.‘நமக்கிடையிலான காதலும் திருமண உறவும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் முன்னுரிமை இழக்காது’ என்கிற நம்பிக்கை. ‘கோபத்திலோ, சண்டையிலோ, கருத்து வேறுபாடிலோ... உன் மீதான காதலைத் துறக்க மாட்டேன்’ என்கிற நம்பிக்கை..
நன்றி : தினகரன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எதிர்பார்ப்போடு வாழ்தல்
அனைவரும் பின்பற்ற வேண்டிய சிறப்பு பதிவு அண்ணா..
மனநிலை மாறினால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ...
சுவையான பதிவு தந்த அஹமத் அண்ணா வாழ்த்துக்கள்...
மனநிலை மாறினால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ...
சுவையான பதிவு தந்த அஹமத் அண்ணா வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|