Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது.
கடந்த ஜுன் மாதத்தில் மூன்று யூத இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு எதிராக இராஜ தந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலஸ்தீன பிரதான அமைதிப் பேச்சுவார்த் தையாளர் சயெப் எரகத் வலியுறுத்திள்ளார். 'பலஸ்தீன மக்கள் மீதும் அவர்களது ஆக்கிர மிப்பு நிலத்தின் மீதும் இஸ்ரேல் அரசு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது" என்று எரகத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
'காசாவில் எமது மக்களுக்கு எதிராக மேற் கொண்ட யுத்த நடவடிக்கை மற்றும் குற்றச் செயல்களுக்கும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய குடியேற்ற செயல்களுக்கும் எதிராக இஸ்ரேல் மீது சர்வதேச சமூகம் பதில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையின் சிவில் விவகார நிர்வாகத் திற்கு பொறுப்பான இஸ்ரேல் இராணுவத் திணைக்களமே பலஸ்தீன நிலத்தை கையகப் படுத்தும் முடிவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் கொவோட் என்று அழைக் கப்படும் யு+தக் குடியேற்றம் அமைந்திருக்கும் குஸ் எட்சியோன் பகுதியின் நிலமே கைப்பற் றப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் குடி யேற்ற பகுதியை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.
குறித்த பகுதியில் இருக்கும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் இஸ்ரேல் கையகப்படுத்திய நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இந்த நிலப்பகுதி யில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பல ஒலிவ் மரத் தோப்புகள் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீனம் தனது எதிர்கால தேசத்தின் நிலப் பகுதி என்று அழைக்கும் பகுதிகளில் நிலையான யு+தக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதே இஸ் ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அரசின் கொள்கையாக உள்ளது. எனினும் இஸ்ரேல் அரசின் இந்த செயலை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சட்ட விரோதமாக கருதுகிறது.
'இஸ்ரேலின் இன்றைய அறிவிப்பின் மூலம் அது ஒரே தேசம் என்ற தீர்வை திணிப்பதற்கு முயற்சிப்பது தெளிவாவதோடு பலஸ்தீனர்களின் இருப்பை முற்றாக இல்லாமல் செய்வதற்கு முயற் சிப்பது உறுதியாகிறது" என்று பலஸ்தீன நிர்வா கத்தின் அதிகாரி ஹனான் அஷ்ராபி குறிப் பிட்டார்.
இஸ்ரேலின் புதிய நில அபகரிப்பு காசா யுத்தத் திற்கு பின்னர் மேலும் மோதலையே அதிகரிக்கும் என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் எச்சரித்துள் ளார். காசா மீது இஸ்ரேல் 50 தினங்கள் நடத் திய தாக்குதல்களில் 2,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். காசாவில் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்து ஒருசில தினங்களிலேயே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தி யுள்ளார். 'இந்த முடிவு மேலும் ஸ்திரமற்ற நிலை யையே ஏற்படுத்தும். காசா யுத்தத்திற்கு பின்னர் நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்று ஜனாதிபதியின் பேச்சாளர் அபு+ ரடைனா குறிப் பிட்டுள்ளார்.
'பலஸ்தீனர்களுக்கு இரு தேச தீர்வை வழங் கும் பேச்சுவார்த்தைக்கு எதிரானதாக இது அமைந்திருக்கிறது" என்று அமெரிக்க இராஜhங் கத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட் டுள்ளார். 'இஸ்ரேல் அரசு இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
இஸ்ரேல் அரசின் இந்த நில அபகரிப்பு மூலம் குறித்த பகுதியில் தற்போது யு+தக் கல்லூரி ஒன்றுக்கு அருகில் வாழும் 10 குடும்பங்களும் ஒரு நிரந்தர குடியேற்றமாக மாற்றப்படுகிறது என்று இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிராக செயற்படும் 'பீஸ் நவ்" குறிப்பிட்டுள்ளது.
'இந்த பிரகடனத்தின் மூலம் 1980களில் இருந்த முன்னெப்போதும்போலன்றி அதன் நோக்கம் தெளிவாக தெரிவதோடு குஸ் எட்சியோன் மற்றும் பெத்லஹாம் பகுதிகளின் உண்மை நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது" என்று பீஸ் நவ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜ{ன் மாதம் நடுப்பகுதியில் இருந்து பெத்லஹாமை சூழவுள்ள பகுதி உட்பட மேற்குக் கரை எங்கும் சுமார் 6,000 யு+த குடியேற்றவாசி களுக்கு 1,472க்கும் அதிகமான புதிய குடியேற்ற வீட்டுத் திட்டங்களை அறிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.
1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமித்த அனைத்து நிலப்பகுதியையும் இஸ் ரேல் தனது நிலப்பகுதியாக உள்வாங்க முயற் சித்து வருகிறது.
எனினும் இது சட்டவிரோத மானதென சர்வதேச சமூகம் கருதுகிறது.
பலஸ்தீன நிலப்பகுதியென கருதப்படும் மேற் குக் கரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜரூசலத்தில் வாழும் 2.4 மில்லியன் பலஸ் தீனர்களுடன் சுமார் 550,000 இஸ்ரேலியர்களும் வாழ்கின்றனர்.
இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங் களை மலைகள், பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களை சூழவே அமைத்துவருகிறது. இவ்வாறான திட்டமிட்ட சுற்றிவளைப்பு குடியேற் றங்கள் மூலம் பலஸ்தீன தேசம் ஒன்றை உரு வாக்குவதற்கான சாத்தியத்தை இல்லாமல் செய்வதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்து கின்றனர்.
தினகரன்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது.
கடந்த ஜுன் மாதத்தில் மூன்று யூத இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு எதிராக இராஜ தந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலஸ்தீன பிரதான அமைதிப் பேச்சுவார்த் தையாளர் சயெப் எரகத் வலியுறுத்திள்ளார். 'பலஸ்தீன மக்கள் மீதும் அவர்களது ஆக்கிர மிப்பு நிலத்தின் மீதும் இஸ்ரேல் அரசு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது" என்று எரகத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
'காசாவில் எமது மக்களுக்கு எதிராக மேற் கொண்ட யுத்த நடவடிக்கை மற்றும் குற்றச் செயல்களுக்கும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய குடியேற்ற செயல்களுக்கும் எதிராக இஸ்ரேல் மீது சர்வதேச சமூகம் பதில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையின் சிவில் விவகார நிர்வாகத் திற்கு பொறுப்பான இஸ்ரேல் இராணுவத் திணைக்களமே பலஸ்தீன நிலத்தை கையகப் படுத்தும் முடிவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் கொவோட் என்று அழைக் கப்படும் யு+தக் குடியேற்றம் அமைந்திருக்கும் குஸ் எட்சியோன் பகுதியின் நிலமே கைப்பற் றப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் குடி யேற்ற பகுதியை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.
குறித்த பகுதியில் இருக்கும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் இஸ்ரேல் கையகப்படுத்திய நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இந்த நிலப்பகுதி யில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பல ஒலிவ் மரத் தோப்புகள் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீனம் தனது எதிர்கால தேசத்தின் நிலப் பகுதி என்று அழைக்கும் பகுதிகளில் நிலையான யு+தக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதே இஸ் ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அரசின் கொள்கையாக உள்ளது. எனினும் இஸ்ரேல் அரசின் இந்த செயலை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சட்ட விரோதமாக கருதுகிறது.
'இஸ்ரேலின் இன்றைய அறிவிப்பின் மூலம் அது ஒரே தேசம் என்ற தீர்வை திணிப்பதற்கு முயற்சிப்பது தெளிவாவதோடு பலஸ்தீனர்களின் இருப்பை முற்றாக இல்லாமல் செய்வதற்கு முயற் சிப்பது உறுதியாகிறது" என்று பலஸ்தீன நிர்வா கத்தின் அதிகாரி ஹனான் அஷ்ராபி குறிப் பிட்டார்.
இஸ்ரேலின் புதிய நில அபகரிப்பு காசா யுத்தத் திற்கு பின்னர் மேலும் மோதலையே அதிகரிக்கும் என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் எச்சரித்துள் ளார். காசா மீது இஸ்ரேல் 50 தினங்கள் நடத் திய தாக்குதல்களில் 2,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். காசாவில் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்து ஒருசில தினங்களிலேயே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தி யுள்ளார். 'இந்த முடிவு மேலும் ஸ்திரமற்ற நிலை யையே ஏற்படுத்தும். காசா யுத்தத்திற்கு பின்னர் நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்று ஜனாதிபதியின் பேச்சாளர் அபு+ ரடைனா குறிப் பிட்டுள்ளார்.
'பலஸ்தீனர்களுக்கு இரு தேச தீர்வை வழங் கும் பேச்சுவார்த்தைக்கு எதிரானதாக இது அமைந்திருக்கிறது" என்று அமெரிக்க இராஜhங் கத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட் டுள்ளார். 'இஸ்ரேல் அரசு இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
இஸ்ரேல் அரசின் இந்த நில அபகரிப்பு மூலம் குறித்த பகுதியில் தற்போது யு+தக் கல்லூரி ஒன்றுக்கு அருகில் வாழும் 10 குடும்பங்களும் ஒரு நிரந்தர குடியேற்றமாக மாற்றப்படுகிறது என்று இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிராக செயற்படும் 'பீஸ் நவ்" குறிப்பிட்டுள்ளது.
'இந்த பிரகடனத்தின் மூலம் 1980களில் இருந்த முன்னெப்போதும்போலன்றி அதன் நோக்கம் தெளிவாக தெரிவதோடு குஸ் எட்சியோன் மற்றும் பெத்லஹாம் பகுதிகளின் உண்மை நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது" என்று பீஸ் நவ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜ{ன் மாதம் நடுப்பகுதியில் இருந்து பெத்லஹாமை சூழவுள்ள பகுதி உட்பட மேற்குக் கரை எங்கும் சுமார் 6,000 யு+த குடியேற்றவாசி களுக்கு 1,472க்கும் அதிகமான புதிய குடியேற்ற வீட்டுத் திட்டங்களை அறிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.
1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமித்த அனைத்து நிலப்பகுதியையும் இஸ் ரேல் தனது நிலப்பகுதியாக உள்வாங்க முயற் சித்து வருகிறது.
எனினும் இது சட்டவிரோத மானதென சர்வதேச சமூகம் கருதுகிறது.
பலஸ்தீன நிலப்பகுதியென கருதப்படும் மேற் குக் கரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜரூசலத்தில் வாழும் 2.4 மில்லியன் பலஸ் தீனர்களுடன் சுமார் 550,000 இஸ்ரேலியர்களும் வாழ்கின்றனர்.
இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங் களை மலைகள், பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களை சூழவே அமைத்துவருகிறது. இவ்வாறான திட்டமிட்ட சுற்றிவளைப்பு குடியேற் றங்கள் மூலம் பலஸ்தீன தேசம் ஒன்றை உரு வாக்குவதற்கான சாத்தியத்தை இல்லாமல் செய்வதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்து கின்றனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
யுத்த நிறுத்தம் என்றார்கள். என்றுதான் இதெல்லாம் முடிவுக்கு வருமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|