சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Khan11

இரட்டைக்கிளவி என்றால் என்ன?

4 posters

Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 1:40

தமிழ் மொழிக்கே உள்ள சிறப்புக்களாய் இரட்டைக்கிளவி,  அடுக்கு மொழி, ஒரு சொல் பலபொருள்,  ஒலி வேறுபாடுகள் தரும் மாறுபட்ட அர்த்தங்கள் என  நீண்டு கொண்டே செல்லும். 

தமிழை மேன்மையுற செய்யும் சிறப்புக்களில் ஒன்றாம் இரட்டைக்கிளவி குறித்து இந்த திரியில் அறிவோம்!

இரட்டைக்கிளவி என்றால் என்ன?


ஒரே வார்த்தை இருமுறை வரவேண்டும். வார்த்தைகளை பிரித்தால் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் எதுவும் இருக்கக்கூடாது. 

நம் பேச்சு வழக்கில்  அடிக்கடி இந்த இரட்டைக்கிளவிகளை பயன் படுத்தி இருப்போம். அவற்றினையும் இங்கே  தொகுப்போம்!  

நான் சில உதாரணங்களை சொல்கின்றேன்! அதனைத்தொடர்ந்து நீங்களும் உங்களுக்கு தெரிந்த இரட்டைக்கிளவிகளை இங்கே பகிரலாம்.!

உதாரணங்களை கவனியுங்கள். 

படபடவென இருந்தது
மடமடவென வேலை செய்தேன்
சிடு சிடுவென பேசினாள் 
வளவள வெனப்பேசாதே

பட... பட   இரண்டாய் பிரித்தால் பட என்பதற்கு அர்த்தமும் இல்லை.  பொருளும் இல்லை.
மட... மட   என தனித்து வந்தால் பொருள் இல்லை.

இப்படி ஒரே மாதிரியான இரண்டு வார்த்தை,,ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்தால் பொருளற்றதாகி விடும்!அதை இரட்டைக்கிளவி என்பர்.

அதே நேரம் பார்த்துப்பார்த்து, முட்டு முட்டு, குட்டை குட்டை என  ஒரே வார்த்தை இரு தடவை வந்து  பிரித்திடும் போதும் அது தனித்த சொல்லாய்  இருந்தால் அதை அடுக்குத்தொடர் என்பர். ஒரே மாதிரியான  இரு வார்த்தையும்.. பிரித்திடும் போது  ஒரு வார்த்தை தனித்து  பொருள்  உணர்த்தினால் அது அடுத்துக்குதொடர் என  புரிந்து இரட்டைக்கிளவிகளுக்கான வார்த்தைகளை இடலாமா?


ஆரம்பிப்போமா...


Last edited by Nisha on Thu 18 Dec 2014 - 2:02; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 1:42

ஜிகிஜிகு ஜில்ராணி. 
தகதக மின்னும் மேனி 
துறுதுறு என்ற விழிகள் 
தளதள என்று ததும்பும் பருவம் 
தைதை என்று ஆடிய பின்னர் 
வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 1:43

கிடுகிடு பள்ளம் பார்த்தேன். 
பக்பக் என்று நெஞ்சு அடித்தது. 
கிறுகிறு என்று தலை சுற்றியது 
வெலவெல என்று நடுங்கினேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 1:43

தட தடவென்று ஓடி வந்தேன் 
சலசல என்று ஓடிய அருவி கண்டு 
சதசத என்ற சேற்றில் விழுந்தேன். 
பளபள என்று பாறை மின்னியது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 1:47

இரட்டைகிளவிகளை நீங்களும் உருவாக்க முயற்சி செய்யுங்கள். 

அன்றாட வாழ்வில் நீங்கள் பயன் படுத்தும் சொற்களை கொண்டே வார்த்தைகளை உருவாக்கலாம். 

பொலு பொலு வென விடிந்தது.
சிலு சிலு வென காற்று வீசியது
பட படவென   உணர்ந்தேன் 
குளிரில் வெடு வெடு என நடுங்கினேன்
மசமச வென நில்லாதே. 
 குழந்தை துரு துருவென இருந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by சுறா Thu 18 Dec 2014 - 6:40

நிஷா நிஷா 
சுறா சுறா
சம்ஸ் சம்ஸ்

இதெல்லாம் இரட்டை கிளவி ஆகாது ஏனென்றால் இரண்டை பிரித்தாலும் பொருள் வரும் சரிதானே நிஷா டீச்சர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 15:20

சுறா wrote:நிஷா நிஷா 
சுறா சுறா
சம்ஸ் சம்ஸ்

இதெல்லாம் இரட்டை கிளவி ஆகாது ஏனென்றால் இரண்டை பிரித்தாலும் பொருள் வரும் சரிதானே நிஷா டீச்சர்

இங்கேயும் அரட்டையா?

நான்கு இரட்டைக்கிளவிகளை பிடித்து  போடுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 18:25

கிறுகிறு என்று தலை சுற்றியது
கீசுகீசு என குருவிகள் கத்தின
கும்கும் என என்று குத்தினான்
சலசல என்று நீர் ஓடியது
சுடசுட தோசை நன்றாக இருந்தது
தகதக வென்று மின்னிக் கொண்டுருக்கும்  நெருப்பு
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:10

 இந்த மாதிரி இரட்டைக்கிளவி என  முத்தமிழ் மன்றத்தில்  விளையாட்டுத்திரி ஆரம்பித்து  இரட்டைகிளவிகளை கொண்டே குட்டிக்குட்டி கதைகளை  எழுதி இருந்தேன்.. 

2009 ம் ஆண்டு அக்ரோபரில்  இம்மாதிரி தொகுத்தோம்.  நான் தொகுத்தவை பெரும்பாலும் நான் படித்ததும் என் பிள்ளைகளுக்காக பாடப்புத்தகத்தில்  இருந்ததை தட்டச்சிட்டதுமே..

ஆனால் அங்கே தொகுத்த அத்தனை சொல்லும்  வார்த்தை மாற்றமின்றி விக்கி மீடியாவில் தொகுத்திருக்காங்க.. 

விக்கிமீடியாவின் கடைசித்தொகுப்பு இவ்வருடம் ஆகஸ்டில் செய்ததென பதிவு காட்டுது. 

விக்கி மீடியா தொகுப்பு கீழே 

[*]நீர் சலசல என ஓடிற்று.
[*]மரம் மடமட என முறிந்தது.
[*]கசகச என வேர்வைகசகச என மக்கள் பேசிக்கொண்டு
[*]கலகலப்பான பேச்சு
[*]கடகட என சிரித்தான்
[*]கமகம என மணந்தது முல்லை
[*]கரகரத்த குரலில் பேசினான்
[*]கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி
[*]கிசுகிசு ஒன்றை கேட்டேன்
[*]கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
[*]கிளுகிளு படம் பார்த்தாராம்
[*]கிறுகிறு என்று தலை சுற்றியது
[*]கீசுகீசு என குருவிகள் கத்தின
[*]குசுகுசு என்று அதை சொன்னார்
[*]குடுகுடு கிழவர் வந்தார்
[*]குபுகுபு என குருதி கொட்டியது
[*]கும்கும் என்றும் குத்தினார்
[*]குளுகுளு உதகை சென்றேன்
[*]குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
[*]கொழகொழ என்று ஆனது சோறு
[*]கொழுகொழு என்று குட்டி
[*]சதசத என்ற சேற்றில் விழுந்தேன்
[*]சரசர என்று மான்கள் ஓடின
[*]சவசவ என்று முகம் சிவந்தது
[*]சாரைசாரையாக மக்கள் வந்தனர்
[*]சிலுசிலு என் காற்று வீசியது
[*]சுடசுட தோசைக் கொடுத்தாள்
[*]சொரசொரப்பான தாடி
[*]தகதக மின்னும் மேனி
[*]தடதட என் கதவைத் தட்டினான்
[*]தரதர என்று இழுத்து சென்றான்
[*]தளதள என்று ததும்பும் பருவம்
[*]திக்குதிக்கு என் நெஞ்சம் துடிக்கும்
[*]திடுதிடு என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” - திருப்புகழ் )
[*]திபுதிபு என மக்கள் புகுந்தனர்
[*]திருதிரு என விழித்தான்
[*]துறுதுறு என்ற விழிகள்
[*]தைதை என்று ஆடினாள்
[*]தொள தொள என சட்டை அணிந்தார்
[*]நங்குநங்கு எனக் குத்தினான்
[*]நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
[*]நறநற என பல்லைக் கடித்தான்
[*]நைநை என்று அழுதாள்
[*]நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
[*]பக்பக் என்று நெஞ்சு அடிக்கும்
[*]படபட என இமைகள் கொட்டும்
[*]பரபரப்பு அடைந்தது ஊர்
[*]பளபள என்று பாறை மின்னியது
[*]பிசுபிசுத்தது போராட்டம்
[*]பேந்தப்பேந்த விழித்தான்
[*]பொதபொத பன்றியின் வயிறு
[*]பொலபொல என வடித்தாள் கண்ணீர்
[*]மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
[*]மசமச என்று நிற்கவில்லை
[*]மடக் மடக் எனவும் குடித்தார்
[*]மடமட என நீரைக் குடித்தார்
[*]மலங்க மலங்க விழித்தான்
[*]மள மள என எல்லாம் நிகழ்ந்தது
[*]மாங்குமாங்கு என்று உழைப்பார்
[*]மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
[*]முணுமுணுத்து அவர் வாய்
[*]மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன்
[*]மொசுமொசு என மயிர்
[*]மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
[*]மொழுமொழு என்று தலை வழுக்கை.
[*]மொறு மொறு என்று சுட்டாள் முறுக்கு
[*]லபக் லபகென்று முழுங்கினார்
[*]லபலப என்று அடித்துக் கொண்டாள்
[*]லபோலபோ என அடித்துக் கொண்டாள்
[*]லொடலொட என்றும் பேசுவாள்
[*]வடவட என வேர்த்தன கைகள்
[*]வதவத என ஈன்றன் குட்டிகள்
[*]வழவழ என்று பேசினாள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்)
[*]விக்கி விக்கி அழுதது குழந்தை
[*]விசுவிசு என்று குளிர் அடித்தது
[*]விறுவிறுப்பான கதையாம்
[*]வெடவெட என நடுங்கியது உடல்
[*]வெடுவெடு என நடுங்கினாள்
[*]வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
[*]வெலவெல என்று நடுங்கினேன்.
[*]ஜிகிஜிகு ராணி ஜில்ராணி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:12

முத்தமிழ் மன்றத்தில் இட்டவை. 
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=198&t=33441&start=60#p624057

பொதபொத பன்றியின் வயிறு 
வதவத என ஈன்றன் குட்டிகள் 
கொழுகொழு என்று குட்டி. 
மொசுமொசு என மயிர். 
பிசுபிசுப்பாக இருந்தது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:13

ஜிகிஜிகு ஜில்ராணி. 
தகதக மின்னும் மேனி 
துறுதுறு என்ற விழிகள் 
தளதள என்று ததும்பும் பருவம் 
தைதை என்று ஆடிய பின்னர் 
வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:13

குடுகுடு என வந்த பொன்னனுக்கு 
மொழுமொழு என்று தலை வழுக்கை. 
சொரசொரப்பான தாடி. 
கரகரப்பான குரலில்
கிசுகிசு ஒன்றை சொன்னார்.
கிளுகிளு படம் பார்த்தாராம். 
விறுவிறுப்பான கதையாம் 
குசுகுசு வென 
முணுமுணுத்து அவர் வாய்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:13

கிடுகிடு பள்ளம் பார்த்தேன். 
பக்பக் என்று நெஞ்சு அடித்தது. 
கிறுகிறு என்று தலை சுற்றியது 
வெலவெல என்று நடுங்கினேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:13

தட தடவென்று ஓடி வந்தேன் 
சலசல என்று ஓடிய அருவி கண்டு 
சதசத என்ற சேற்றில் விழுந்தேன். 
பளபள என்று பாறை மின்னியது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:14

திடுதிடு என உள் நுழைந்து
நற நற என பல்லை கடித்து 
தரதர என்று அவளை இழுத்து 
நங்குநங்கு என குத்தினான். 
பொலபொல என கண்ணீர் வடித்தாள் 
குபுகுபு என கண்ணீர் பெருகியது.
வெடவெட என உடல் நடுங்கியது 
பயத்தில் வெலவெலத்து போனாள் 
காலகள்வெடுவெடு என நடுங்கியது 
கைகள் வடவட என வேர்த்தன 
மள மள என எல்லாம் நிகழ்ந்தது 
குறுகுறு த்தது குற்ற நெஞ்சம். 
திருதிரு என் விழித்தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:14

திபுதிபு என மக்கள் வந்தனர் 
சாரைசாரையாக மக்கள் வந்தனர் 
பரபரப்பு அடைந்தது ஊர் 
கசகச என தொடர்ந்த பேச்சு 
மசமச என்று நிற்கவில்லை 
தடதடவென்று வந்த பொலிஸார்
திருதிருவென முழித்தவரையெல்லாம் 
கடு கடு முகத்துடனே 
தரதரவ்ன்று கைது பண்ணியதால் 
பிசுபிசுத்தது போராட்டம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:14

தொள தொள என சட்டை அணிந்து 
குளுகுளு உதகை சென்றேன் 
கீசுகீசு என குருவிகள் கத்தின. 
சடசடவென்று பறந்தன பறவைகள்.
சரசர என்று ஊர்ந்தது பாம்பு 
விசுவிசு என்று குளிராயிருந்தது
சலசல என்று அருவி ஓடியது 
சிலுசிலு என் வீசிய காற்றில் 
கமகம என மணந்தன மலர்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:15

பொல பொலவென்று பொழுது விடிந்தது 
கமகம என்று மல்லிகை மணத்தது
மாங்கு மாங்கென வேலை செய்தேன் 
நொகுநொகு (நெகுநெகு)என்று மாவை அரைத்தேன் 
கணகணவென கொதித்த அடுப்பில் 
சுடசுட தோசை சுட்டேன் 
மொறு மொறு என்று முறுக்கும் சுட்டேன் 
மொச்சுமொச்சு என்று தின்றனர் குழந்தைகள் 
லபக் லபகென்று முழுங்கினர் பசியில் 
மடமட என நீரைக் குடித்து
மடக் மடக்கென்று விழுங்கி 
சட சட வென்று உடையை மாற்றி
வழவழவென்று பேசிக்காமல் 
மள மளவென்று வெளியே சென்றேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 19:15

வழவழ என்று பேசிய அமைச்சர் 
கடுகடு என்ற முகத்தை வைத்துக்கொண்டு 
லொடலொட என் தொடர்ந்த போது
பளிச் பளிச் என்று மின்னின கமேறா
அதைப்பார்த்து சிடு சிடுப்பான மந்திரி குமரன் 
பரபரவென்று விரைந்து சென்று 
படபடவென்று தட்டிக்கேட்டார்
கணீர் கணீரேன ஒலித்த குரலால் 
வெட வெடவென்று நடுங்கிய நிருபர்
திரு திருவென்று விழித்துப்பார்த்தார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 19:37

ஒவ்வொன்றாக கற்றேன் பதிய நாடியபோது அத்தனையும் அக்காவினால் இடப்படடதாய் உணர்ந்தேன் கற்றுத்தந்த அக்காவுக்கு மிக்க நன்றிகள்


 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 20:16

இல்லையே! இன்னும் யோசித்தால் வரும் ஹாசிம்!  யோசித்து இடுங்கள்!

 இரட்டைகிளவிகளை மாற்றிப்போட்டு  சிறு கதைகளை உருவாக்குங்கள்.  கதை போட்டிக்கு உந்துதலாயிருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 20:20

Nisha wrote:இல்லையே! இன்னும் யோசித்தால் வரும் ஹாசிம்!  யோசித்து இடுங்கள்!

 இரட்டைகிளவிகளை மாற்றிப்போட்டு  சிறு கதைகளை உருவாக்குங்கள்.  கதை போட்டிக்கு உந்துதலாயிருக்கும்.
அது சிறப்பு அக்கா முயற்சிக்கிறேன்


 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Thu 18 Dec 2014 - 20:25

தமிழில் இவைகளை அறிந்திருப்பது பிள்ளைகளுக்கும் தமிழ் பாடத்தில் இலக்கணம் கற்பிக்க உதவியாக இருக்கும் ஹாசிம். 

நமக்கு தெளிவாக புரிந்தால் நம் பிள்ளைகளுக்கு புரிய வைக்க நாம் யாரிடமும் கேட்க தேவையில்லை.  நாமே நல் ஆசிரியர் ஆகலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 13:17

இந்த திரி சிறப்பாக அமைந்திருக்கிறது.
நன்றி நிஷா! 
தமிழை நாமும் கற்றுக் கொள்வோம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:24

ரெம்ப நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இரட்டைக்கிளவி என்றால் என்ன? Empty Re: இரட்டைக்கிளவி என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum