சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மகேஸ்வரன் பிரசாத், கரவெட்டி தினகரன் நிருபர் Khan11

மகேஸ்வரன் பிரசாத், கரவெட்டி தினகரன் நிருபர்

Go down

மகேஸ்வரன் பிரசாத், கரவெட்டி தினகரன் நிருபர் Empty மகேஸ்வரன் பிரசாத், கரவெட்டி தினகரன் நிருபர்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:27

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். மாதகல் பகுதி மீனவர்களும், குருநகர் மற்றும் பாசையூர் பகுதி மீனவர்களும் பலாலி வீதியிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியிலான போராட்டங்களை நேற்று நடத்தியிருந்தனர்.

இந்திய அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய சுலோக அட்டைகள் சகிதம், கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு மாதகல் பகுதி மீனவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந் தப் போராட்டத்தின் இறுதியில் கடற் றொழில் தலைவர்களுடன் இணைந்து மாதகல் பங்குத்தந்தை ஆனந்தகுமார், இந்தியத் துணை தூதரகத்தின் பிரதம அதிகாரி எஸ். மகாலிங்கத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

அதேநேரம் , குருநகர் மற்றும் பாசையூர் மீனவர்கள் யாழ். ஆரியகுளச் சந்தியில் இருந்து பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை பேரணியாக வந்ததுடன், தூதரகத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இதனால் இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படுவ தாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினமும் 60 படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியான போராட்டத்தில் தாம் ஈடுபட்ட தாகவும் மீனவர்கள் கூறினர்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த வலிகாமம் தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமா சத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம், 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித் தொழில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் இந்திய இழுவைப் படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளை வெட்டிச் செல்வதுடன் களவாடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளினால் மாதகல் மீனவர்கள் 85 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 145 படகுகளில் சென்று மீன்பிடியில் ஈடுபடும் மாதகல் மீனவர்கள் தற்போது 4 அல்லது 5 படகுகளிலேயே மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இதனால் மாதகல் மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum