Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
இன்று நாம் சக உயிர்கள் குறித்த சிந்தனை ஏதுமின்றி சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றோமே அது எதற்கு! தர்மம் செய்யும் அறச்சிந்தனை இந்த மண்ணிலே ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற விழிப்பு கூட இல்லாதது வருந்தத்தக்கதே. மகிழ்வை, சந்தோசத்தை, சர்வ மங்கலத்தை கொடுக்கும் மனதை, புத்தம் புது மலராய் மலரச் செய்யும் அன்பை நோக்கி பயணிக்கச் செய்வோமா இனியாவது. அன்பை நாம் வழியச் சென்று வாரிவாரி வழங்குவோம், வாருங்கள்! அன்பின் வெளிப்பாடு எத்தனை விதத்தில் இருக்கின்றது…
“செல்வந்தன் ஏழைகள் மீது செலுத்தும்
அன்பிற்கு பெயர் இரக்கம்!
பலம் படைத்தான் நோஞ்சான்
மீது காட்டும்
அன்பிற்கு பெயர் கருணை!
புல் முதல் மனிதப் புழு வரை
எல்லா உயிரிடத்திலும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காரூண்யம்!
தொழிலாளி மீது முதலாளி காட்டும்
அன்பிற்குப் பெயர் மனிதாபிமானம்!
முதலாளி மீது தொழிலாளி வைக்கும்
அன்பிற்குப் பெயர் – விசுவாசம்!
தாய் பிள்ளை மீதும், பிள்ளை
தாய் மீதும் காட்டும்
அன்பிற்குப் பெயர் தாய்ப்பாசம்!
நண்பர்களுக்கிடையே ஏற்படும்
அன்பிற்குப் பெயர் நேசம்!
நாடு, மொழி மீது நாம் காட்டும்
அன்பிற்குப் பெயர் அபிமானம்!
கணவன் மனைவியிடமும்,
மனைவி கணவனிடமும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காதல்!
கடவுள் மீது அனைவரும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் பக்தி!
அன்பானவர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ அன்பின் வெளிப்பாடுகள் இருக்க, என்னிடத்தில் என்ன இருக்கு, மற்றவருக்கு உதவுவதற்கு, என்னால் அன்பை வெளிப்படுத்த இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நன்றி தன்னம்பிக்கை.கொம்
“செல்வந்தன் ஏழைகள் மீது செலுத்தும்
அன்பிற்கு பெயர் இரக்கம்!
பலம் படைத்தான் நோஞ்சான்
மீது காட்டும்
அன்பிற்கு பெயர் கருணை!
புல் முதல் மனிதப் புழு வரை
எல்லா உயிரிடத்திலும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காரூண்யம்!
தொழிலாளி மீது முதலாளி காட்டும்
அன்பிற்குப் பெயர் மனிதாபிமானம்!
முதலாளி மீது தொழிலாளி வைக்கும்
அன்பிற்குப் பெயர் – விசுவாசம்!
தாய் பிள்ளை மீதும், பிள்ளை
தாய் மீதும் காட்டும்
அன்பிற்குப் பெயர் தாய்ப்பாசம்!
நண்பர்களுக்கிடையே ஏற்படும்
அன்பிற்குப் பெயர் நேசம்!
நாடு, மொழி மீது நாம் காட்டும்
அன்பிற்குப் பெயர் அபிமானம்!
கணவன் மனைவியிடமும்,
மனைவி கணவனிடமும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காதல்!
கடவுள் மீது அனைவரும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் பக்தி!
அன்பானவர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ அன்பின் வெளிப்பாடுகள் இருக்க, என்னிடத்தில் என்ன இருக்கு, மற்றவருக்கு உதவுவதற்கு, என்னால் அன்பை வெளிப்படுத்த இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நன்றி தன்னம்பிக்கை.கொம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நிஜம் தான்பா! அன்பை செலுத்துவதை விட இவ்வுலகில் வேறேதும் இல்லை.
ஆனாலும் இந்த அன்பு செலுத்துவது இரக்கம் காட்டுவதும் நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் பல நேரம் பயன் படுத்தப்படும் போது கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.
அன்பு, பாசம், இரக்கம் என நாம் அனைவரையும் அணைத்து நடத்த பலர் தம் சுய நலத்தோடு தேவைக்கு பயன் படுத்தி தூக்கி எறியும் போது கிடைக்கும் வலிகளை உணர்ந்த பின் மனிதர் மேல் அன்பு காட்டாமல் இரும்பு மனிதராய் வாழ்ந்தால் என்ன எனும் எண்ணம் தான் தோன்றுகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நிஜம் தான்பா! அன்பை செலுத்துவதை விட இவ்வுலகில் வேறேதும் இல்லை.
ஆனாலும் இந்த அன்பு செலுத்துவது இரக்கம் காட்டுவதும் நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் பல நேரம் பயன் படுத்தப்படும் போது கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.
அன்பு, பாசம், இரக்கம் என நாம் அனைவரையும் அணைத்து நடத்த பலர் தம் சுய நலத்தோடு தேவைக்கு பயன் படுத்தி தூக்கி எறியும் போது கிடைக்கும் வலிகளை உணர்ந்த பின் மனிதர் மேல் அன்பு காட்டாமல் இரும்பு மனிதராய் வாழ்ந்தால் என்ன எனும் எண்ணம் தான் தோன்றுகிறது.
நானும் அப்படி பல முறை யோசித்திருக்கிறேன் ஆனால் அப்படி முடிவதில்லை அவர்களைப் போல் எம்மால் இருக்க முடியாது நமது குணம் இது அவர்கள் குணம் அது இந்த உலகில் அவர்களுக்கு வெற்றி மறுமையில் நமக்குத்தான் வெற்றி ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆண்டவனுக்காக நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் பலனும் கிடைக்கும் மன அமைதியும் கிடைக்கும்
வாழ்க நண்பனின் நல்ல குணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
அது யாரு நண்பன்?
அதென்ன நல்ல குணம்?
அதென்ன நல்ல குணம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:அது யாரு நண்பன்?
அதென்ன நல்ல குணம்?
அது யாருன்னா சுயநல வாதியையும் பொது நலனாய் சிநேகிக்கும் நல்ல குணமுடயவன்தான் அந்த நண்பன் என்று சொன்னேன் அது யாரா இருக்கும் கண்டு பிடிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:Nisha wrote:உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நிஜம் தான்பா! அன்பை செலுத்துவதை விட இவ்வுலகில் வேறேதும் இல்லை.
ஆனாலும் இந்த அன்பு செலுத்துவது இரக்கம் காட்டுவதும் நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் பல நேரம் பயன் படுத்தப்படும் போது கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.
அன்பு, பாசம், இரக்கம் என நாம் அனைவரையும் அணைத்து நடத்த பலர் தம் சுய நலத்தோடு தேவைக்கு பயன் படுத்தி தூக்கி எறியும் போது கிடைக்கும் வலிகளை உணர்ந்த பின் மனிதர் மேல் அன்பு காட்டாமல் இரும்பு மனிதராய் வாழ்ந்தால் என்ன எனும் எண்ணம் தான் தோன்றுகிறது.
நானும் அப்படி பல முறை யோசித்திருக்கிறேன் ஆனால் அப்படி முடிவதில்லை அவர்களைப் போல் எம்மால் இருக்க முடியாது நமது குணம் இது அவர்கள் குணம் அது இந்த உலகில் அவர்களுக்கு வெற்றி மறுமையில் நமக்குத்தான் வெற்றி ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆண்டவனுக்காக நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் பலனும் கிடைக்கும் மன அமைதியும் கிடைக்கும்
வாழ்க நண்பனின் நல்ல குணம்
ஆமா நண்பனிடம் இருந்த அந்த நல்ல குணம் இப்ப எங்கே?! நான் எத்தனை முறை சொன்னேன் கால் செய்ய சொல்லி ஏன் பண்ண வில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:Nisha wrote:அது யாரு நண்பன்?
அதென்ன நல்ல குணம்?
அது யாருன்னா சுயநல வாதியையும் பொது நலனாய் சிநேகிக்கும் நல்ல குணமுடயவன்தான் அந்த நண்பன் என்று சொன்னேன் அது யாரா இருக்கும் கண்டு பிடிங்க
அது என் நண்பன்தான் அதை நான் எப்பவும் சொல்வேன் என்றும் சொல்வேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
அந்த நண்பன் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
இந்த கேள்வி யாரிடம் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
இடம் பொருள் ஏவல் என்று சில சந்தர்ப்பங்கள் இருக்கு சிலருக்கு திருந்த நாள் கொடுக்க வேண்டும் சிலருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நிஜம் தான்பா! அன்பை செலுத்துவதை விட இவ்வுலகில் வேறேதும் இல்லை.
ஆனாலும் இந்த அன்பு செலுத்துவது இரக்கம் காட்டுவதும் நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் பல நேரம் பயன் படுத்தப்படும் போது கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.
அன்பு, பாசம், இரக்கம் என நாம் அனைவரையும் அணைத்து நடத்த பலர் தம் சுய நலத்தோடு தேவைக்கு பயன் படுத்தி தூக்கி எறியும் போது கிடைக்கும் வலிகளை உணர்ந்த பின் மனிதர் மேல் அன்பு காட்டாமல் இரும்பு மனிதராய் வாழ்ந்தால் என்ன எனும் எண்ணம் தான் தோன்றுகிறது.
நானும் அப்படி பல முறை யோசித்திருக்கிறேன் ஆனால் அப்படி முடிவதில்லை அவர்களைப் போல் எம்மால் இருக்க முடியாது நமது குணம் இது அவர்கள் குணம் அது இந்த உலகில் அவர்களுக்கு வெற்றி மறுமையில் நமக்குத்தான் வெற்றி ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆண்டவனுக்காக நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் பலனும் கிடைக்கும் மன அமைதியும் கிடைக்கும்
வாழ்க நண்பனின் நல்ல குணம்
ஆமா நண்பனிடம் இருந்த அந்த நல்ல குணம் இப்ப எங்கே?! நான் எத்தனை முறை சொன்னேன் கால் செய்ய சொல்லி ஏன் பண்ண வில்லை
தவறை மன்னிக்கலாம் அடிக்கடி தவறு நடந்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் தப்பை ஒரு தடவை மன்னிக்கலாம் அடிக்கடி தப்பு பண்ணினால் ????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:அந்த நண்பன் யார்?
யாரோ
யாராக இருந்தாலும்
நல்ல உள்ளம் வாழ்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
இடம் பொருள் ஏவல் என்று சில சந்தர்ப்பங்கள் இருக்கு சிலருக்கு திருந்த நாள் கொடுக்க வேண்டும் சிலருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
தவறை மன்னிக்கலாம் அடிக்கடி தவறு நடந்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் தப்பை ஒரு தடவை மன்னிக்கலாம் அடிக்கடி தப்பு பண்ணினால் ????????
கரெக்டு தான்,
ஆமாம் அடிக்கடி தப்பு பண்ணி மாட்டிகிட்ட புண்ணீயவன் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:இடம் பொருள் ஏவல் என்று சில சந்தர்ப்பங்கள் இருக்கு சிலருக்கு திருந்த நாள் கொடுக்க வேண்டும் சிலருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நிஜம் தான்பா! அன்பை செலுத்துவதை விட இவ்வுலகில் வேறேதும் இல்லை.
ஆனாலும் இந்த அன்பு செலுத்துவது இரக்கம் காட்டுவதும் நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் பல நேரம் பயன் படுத்தப்படும் போது கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.
அன்பு, பாசம், இரக்கம் என நாம் அனைவரையும் அணைத்து நடத்த பலர் தம் சுய நலத்தோடு தேவைக்கு பயன் படுத்தி தூக்கி எறியும் போது கிடைக்கும் வலிகளை உணர்ந்த பின் மனிதர் மேல் அன்பு காட்டாமல் இரும்பு மனிதராய் வாழ்ந்தால் என்ன எனும் எண்ணம் தான் தோன்றுகிறது.
நானும் அப்படி பல முறை யோசித்திருக்கிறேன் ஆனால் அப்படி முடிவதில்லை அவர்களைப் போல் எம்மால் இருக்க முடியாது நமது குணம் இது அவர்கள் குணம் அது இந்த உலகில் அவர்களுக்கு வெற்றி மறுமையில் நமக்குத்தான் வெற்றி ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆண்டவனுக்காக நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் பலனும் கிடைக்கும் மன அமைதியும் கிடைக்கும்
வாழ்க நண்பனின் நல்ல குணம்
ஆமா நண்பனிடம் இருந்த அந்த நல்ல குணம் இப்ப எங்கே?! நான் எத்தனை முறை சொன்னேன் கால் செய்ய சொல்லி ஏன் பண்ண வில்லை
தவறை மன்னிக்கலாம் அடிக்கடி தவறு நடந்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் தப்பை ஒரு தடவை மன்னிக்கலாம் அடிக்கடி தப்பு பண்ணினால் ????????
மன்னிப்பு கோரினால் கண்டிப்பாக கொடுக்கணும் பாஸ் மன்னித்திடு நீ நல்லவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
இன்னுமே புரியல்ல
மர்மமாய் இருக்குது
இன்னுமே புரியல்ல
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
சம்ஸ் பதில் சொல்வார்Nisha wrote:இடம் பொருள் ஏவல் என்று சில சந்தர்ப்பங்கள் இருக்கு சிலருக்கு திருந்த நாள் கொடுக்க வேண்டும் சிலருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
தவறை மன்னிக்கலாம் அடிக்கடி தவறு நடந்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் தப்பை ஒரு தடவை மன்னிக்கலாம் அடிக்கடி தப்பு பண்ணினால் ????????
கரெக்டு தான்,
ஆமாம் அடிக்கடி தப்பு பண்ணி மாட்டிகிட்ட புண்ணீயவன் யார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
இன்னுமே புரியல்ல
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒரு கஸ்டம் வந்தால் தாங்குவான் ஒரு நாளைக்கு பல கஸ்டங்கள் வந்தால் என்ன செய்வான் ?
”பொதுவாக கருத்து சொல்லுங்கள் அக்கா”
அப்படியான சந்தர்ப்பம் வரும் போது நாம் எந்த வகையான ஐடியாக்களை கையாள வேண்டும் ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
உலகமே ஒரு நாடக மேடை!
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..
மௌனம் தான் என் பதில் கண்ணா. பிடிக்காதது, நம்மை காயப்படுத்துவது எதுவெனினும் அவ்விடம் விட்டகன்று மௌனமாய் இருப்பதும் விலகி இருப்பதும் நான் கையாளும் வழி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:சம்ஸ் பதில் சொல்வார்Nisha wrote:இடம் பொருள் ஏவல் என்று சில சந்தர்ப்பங்கள் இருக்கு சிலருக்கு திருந்த நாள் கொடுக்க வேண்டும் சிலருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
தவறை மன்னிக்கலாம் அடிக்கடி தவறு நடந்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் தப்பை ஒரு தடவை மன்னிக்கலாம் அடிக்கடி தப்பு பண்ணினால் ????????
கரெக்டு தான்,
ஆமாம் அடிக்கடி தப்பு பண்ணி மாட்டிகிட்ட புண்ணீயவன் யார்?
மாட்டி முழிப்பவர் சம்ஸ் தானா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:உலகமே ஒரு நாடக மேடை!
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..
மௌனம் தான் என் பதில் கண்ணா. பிடிக்காதது, நம்மை காயப்படுத்துவது எதுவெனினும் அவ்விடம் விட்டகன்று மௌனமாய் இருப்பதும் விலகி இருப்பதும் நான் கையாளும் வழி!
அக்கா அங்கு மௌனமாக இருக்க முடியாது சமாளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது இப்படியான சந்தர்ப்பம் வரும் போது சிலருக்கு பைத்தியம் பிடித்திராதா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
பிடிக்கும் தான்.
நம் அன்பு, இரக்கம், பாசமெனும் பலவீனத்தை பலமாக பிடிக்கத்தெரிந்தவர்கள் முன் தோற்பதை விட இது மேல் தானே தும்பியேய்!
நம் அன்பு, இரக்கம், பாசமெனும் பலவீனத்தை பலமாக பிடிக்கத்தெரிந்தவர்கள் முன் தோற்பதை விட இது மேல் தானே தும்பியேய்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:பிடிக்கும் தான்.
நம் அன்பு, இரக்கம், பாசமெனும் பலவீனத்தை பலமாக பிடிக்கத்தெரிந்தவர்கள் முன் தோற்பதை விட இது மேல் தானே தும்பியேய்!
ஆமாம் உண்மைதான் சிலர் நமது பாசத்தை பயன் படுத்தி அதாவது நாம் அவர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை பயன் படுத்தி நம் மனதை காயப்படுத்துகிறார்கள் எத்தனை தடவைதான் காப்பட்டாலும் இந்தப்பாழாப்போன மனசு இன்னும் அவர்கள் மேல் பாசமாகத்தான் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:Nisha wrote:பிடிக்கும் தான்.
நம் அன்பு, இரக்கம், பாசமெனும் பலவீனத்தை பலமாக பிடிக்கத்தெரிந்தவர்கள் முன் தோற்பதை விட இது மேல் தானே தும்பியேய்!
ஆமாம் உண்மைதான் சிலர் நமது பாசத்தை பயன் படுத்தி அதாவது நாம் அவர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை பயன் படுத்தி நம் மனதை காயப்படுத்துகிறார்கள் எத்தனை தடவைதான் காப்பட்டாலும் இந்தப்பாளாப்போன மனசு இன்னும் அவர்கள் மேல் பாசமாகத்தான் உள்ளது
அதுதான் என் நண்பன் ஒரு முறை மன்னித்து விடு அல்லாஹ் அவர்களுக்கு நல்ல வழியை காட்டடும் ப்ளீஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
ஹேய் யாருப்பா அது?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:ஹேய் யாருப்பா அது?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
என்னைதான் மன்னிக்க சொல்கிறேன் மேடம் செய்யத தப்புக்காக முடியாது என்கிறார் நான் என்ன செய்ய?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
இன்று வீடுகளிலும் சரி, சமூகங்களுக்கு இடையிலும் சரி, ஏதேனும் கருத்து வேறுபாடோ, மோதலோ ஏற்பட்டால் உடனே பகைமைத் தீயை வளர்க்க என்ன வழி என்றுதான் ஆராயப்படுகிறதே தவிர, தவறு செய்தவர்களை மன்னித்து மகிழும் மனப்பான்மை அருகி வருகிறது. அழுக்கை அழுக்கால் நீக்க முடியாது. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. ‘மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலம்மா’ என்று கவிஞர் பாடுவார். ஆம், தவறு செய்பவர்கள் மனிதர்கள். அதை மன்னிப்பவர்கள் மகான்கள் ஆகிவிடுகிறார்கள். மதீனாவுக்கு அருகிலுள்ள கைபரில் ஜைனப் எனும் யூதப் பெண்மணி வசித்து வந்தாள். அவள் ஒருநாள் நபிகளாரையும் தோழர்களையும் விருந்துக்கு அழைத்தாள்.
உண்மையில் விருந்து கொடுப்பது அவள் நோக்கமன்று. நஞ்சு கொடுத்து எப்படியாவது நபிகளாரைக் கொன்றுவிட வேண்டும் என்பதே அவள் திட்டம். நஞ்சு கலந்த இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டன. ஒரு துண்டை எடுத்து நாவில் வைத்ததுமே அதில் நஞ்சு கலந்திருப்பதை அறிந்து கொண்ட நாயகம் (ஸல்) உடனே துப்பிவிடுகிறார். பிறகு அப்பெண் அண்ணலாரின் முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டாள். ‘‘நாயகத்தைக் கொல்லவே நஞ்சு கலந்து கொடுத்தேன்’’ என அப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். உடனே நாயகத் தோழர்கள் தம் வாள்களை உருவினர். ஆனால் அண்ணலார் அவர்கள் தோழர்களைத் தடுத்து நிறுத்தி விட்டார். அந்தப் பெண்ணுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை.
ஆனால் அண்ணலாருடன் விருந்தில் கலந்துகொண்ட தோழர்களில் பஷர் (ரலி) என்பவரும் ஒருவர். நஞ்சு கலந்த இறைச்சியை அவரும் உட்கொண்டி ருந்தார். மூன்று நாள்களுக்குப் பின்னர் அந்த நஞ்சின் காரணமாக அவர் இறந்துவிடவே அப்பெண் மீது சட்ட ரீதியாகக் கொலைக் குற்றம் சுமத்தப்பட் டது. நஞ்சு கொடுத்து ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஒன்பது ஆண்டுகள் நான் நபிகளாருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அண்ணலார் யாரையும் கடிந்து பேசியதையோ தமக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்ததையோ நான் பார்த்ததில்லை. வஞ்சம் தீர்த்ததும் கிடையாது. தமது அடிமைகளையோ பணியாளர்களையோ ஏன் ஒரு விலங்கைக்கூட அடித்தது கிடையாது.’’
உஹத் போரில் ஹம்சா (ரலி) அவர்களின் நெஞ்சைக் கிழித்து அவருடைய ஈரலைக் கடித்துக் குதறியவள் ஹிந்தா என்பவள். மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டபோது அதே ஹிந்தா முகமூடி அணிந்துகொண்டு அண்ணலார் முன் வந்து நின்றாள். அந்த நிலையிலும்கூட அவள் கடுமையான வார்த் தைகளைத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் கருணை நபி (ஸல்) அவர்கள் அவளை மன்னித்துவிட்டார்கள். அண்ணலாரின் அருட்பண்பைக் கண்டு அவள் முழு மனதுடன் இறைநெறியை ஏற்றுக் கொண்டாள். நபிகளாரின் வாழ்க்கை ஏட்டில் இப்படிப் பகைவர்களையும் மன்னித்து ஆட்கொண்ட நிகழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..’எனும் பாரதியின் பாடல் வரியைக் காட்சிப்படுத்திக் காண வேண்டும் எனில் நபிகளாரின் வாழ்க்கையைப் படித்தால் போதும். அந்த அளவுக்கு மாநபி அவர்கள் மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்ந்தார்.
உண்மையில் விருந்து கொடுப்பது அவள் நோக்கமன்று. நஞ்சு கொடுத்து எப்படியாவது நபிகளாரைக் கொன்றுவிட வேண்டும் என்பதே அவள் திட்டம். நஞ்சு கலந்த இறைச்சித் துண்டுகள் பரிமாறப்பட்டன. ஒரு துண்டை எடுத்து நாவில் வைத்ததுமே அதில் நஞ்சு கலந்திருப்பதை அறிந்து கொண்ட நாயகம் (ஸல்) உடனே துப்பிவிடுகிறார். பிறகு அப்பெண் அண்ணலாரின் முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டாள். ‘‘நாயகத்தைக் கொல்லவே நஞ்சு கலந்து கொடுத்தேன்’’ என அப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். உடனே நாயகத் தோழர்கள் தம் வாள்களை உருவினர். ஆனால் அண்ணலார் அவர்கள் தோழர்களைத் தடுத்து நிறுத்தி விட்டார். அந்தப் பெண்ணுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை.
ஆனால் அண்ணலாருடன் விருந்தில் கலந்துகொண்ட தோழர்களில் பஷர் (ரலி) என்பவரும் ஒருவர். நஞ்சு கலந்த இறைச்சியை அவரும் உட்கொண்டி ருந்தார். மூன்று நாள்களுக்குப் பின்னர் அந்த நஞ்சின் காரணமாக அவர் இறந்துவிடவே அப்பெண் மீது சட்ட ரீதியாகக் கொலைக் குற்றம் சுமத்தப்பட் டது. நஞ்சு கொடுத்து ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஒன்பது ஆண்டுகள் நான் நபிகளாருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அண்ணலார் யாரையும் கடிந்து பேசியதையோ தமக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்ததையோ நான் பார்த்ததில்லை. வஞ்சம் தீர்த்ததும் கிடையாது. தமது அடிமைகளையோ பணியாளர்களையோ ஏன் ஒரு விலங்கைக்கூட அடித்தது கிடையாது.’’
உஹத் போரில் ஹம்சா (ரலி) அவர்களின் நெஞ்சைக் கிழித்து அவருடைய ஈரலைக் கடித்துக் குதறியவள் ஹிந்தா என்பவள். மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டபோது அதே ஹிந்தா முகமூடி அணிந்துகொண்டு அண்ணலார் முன் வந்து நின்றாள். அந்த நிலையிலும்கூட அவள் கடுமையான வார்த் தைகளைத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் கருணை நபி (ஸல்) அவர்கள் அவளை மன்னித்துவிட்டார்கள். அண்ணலாரின் அருட்பண்பைக் கண்டு அவள் முழு மனதுடன் இறைநெறியை ஏற்றுக் கொண்டாள். நபிகளாரின் வாழ்க்கை ஏட்டில் இப்படிப் பகைவர்களையும் மன்னித்து ஆட்கொண்ட நிகழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..’எனும் பாரதியின் பாடல் வரியைக் காட்சிப்படுத்திக் காண வேண்டும் எனில் நபிகளாரின் வாழ்க்கையைப் படித்தால் போதும். அந்த அளவுக்கு மாநபி அவர்கள் மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்ந்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பன் படித்ததில் பிடித்தது...
» இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!
» படித்ததில் பிடித்தது 2
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!
» படித்ததில் பிடித்தது 2
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|