Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை
3 posters
Page 1 of 1
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை
[/img]
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகாலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலையாகியுள்ளார்கள்.
இதே வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது போல, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி இன்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் தொண்டர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் தான் இதை தெரிவித்தார். அத்தோடு இந்த வழக்கில் தான் மேல்முறையீடு செய்யப்போவாதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி சி.ஆர். குமாரசாமி முன்பாக விசாரணைகள் 45 நாட்களுக்கு நடைபெற்று வந்தன. பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்த உச்சநீதிமன்றம், மே மாதம் 12ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என தி.மு.கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவிட்டது. அதில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடான விவகாரம்தான் என்று கூறியிருந்த இந்திய உச்சநீதிமன்றம், எனினும் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. அத்தோடு தி.மு.கவைச் சேர்ந்த க.அன்பழகனும் கர்நாடக அரசு நியமிக்கும் வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தங்கள் வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
நன்றி: (http://www.bbc.co.uk/tamil/india/2015/05/150511_jayaacquitted)
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகாலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலையாகியுள்ளார்கள்.
இதே வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது போல, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி இன்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் தொண்டர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
சுப்ரமணிய சுவாமி "அதிர்ச்சி"
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று திங்களன்று வெளியாகியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் தான் இதை தெரிவித்தார். அத்தோடு இந்த வழக்கில் தான் மேல்முறையீடு செய்யப்போவாதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி சி.ஆர். குமாரசாமி முன்பாக விசாரணைகள் 45 நாட்களுக்கு நடைபெற்று வந்தன. பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்த உச்சநீதிமன்றம், மே மாதம் 12ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என தி.மு.கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவிட்டது. அதில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடான விவகாரம்தான் என்று கூறியிருந்த இந்திய உச்சநீதிமன்றம், எனினும் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. அத்தோடு தி.மு.கவைச் சேர்ந்த க.அன்பழகனும் கர்நாடக அரசு நியமிக்கும் வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தங்கள் வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
நன்றி: (http://www.bbc.co.uk/tamil/india/2015/05/150511_jayaacquitted)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை
தர்மம் வீழ்ந்தது அதர்மம் ஜெயித்தது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை
யார் நிரபராதி யார் குற்றவாளி, எது தர்மம், எது அதர்மம்... எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம். இன்றைய அரசியல் மிகவும் மோசமாக உள்ளது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை
கடவுளின் தீர்ப்பு என்றுமே பிழையாக இருக்காது.
தெய்வம் நின்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|