Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
மதுபானம் சில தகவல்கள்
2 posters
Page 1 of 1
மதுபானம் சில தகவல்கள்
மதுபானம் சில தகவல்கள்
அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ??
ஆல்கஹால் என்று சொன்னாலே விஸ்கியும் , பிராண்டியும்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். பிராண்டி என்பது Brandewijn
என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. ” எரிக்கப்பட்ட வைன்”
( Burnt Wine ) என்பது இதன் பொருள்.... ! ஆம், வைனை உயர்வெப்ப நிலையில் கொதிக்கவைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து , ஆல்கஹாலாகவும் , நீராகவும் மாறுகிறது.
இந்த ஆல்கஹாலே பின்னர் பல்வேறு மதுபானங்களாக நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. “ வைன் “ என்பது திராட்சை பழரசத்தினை பல நாட்களுக்கு புளிக்கவைக்கிறபோது கிடைக்கிற ஒன்று. இந்த புளிக்கவைத்தலை ஆங்கிலத்தில் FERMENTATION என்று சொல்வார்கள்.
பொதுவாக திராட்சை தவிர ஆப்பிள்,அரிசி,கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதெற்கென பிரத்தியோகமான பிராண்டி மதுபான பிராண்டுகள் உண்டு . இத்தாலியில் கிரப்பா , போலாஇந்தில் ஸ்லிவிவிட்ஸ் , ஜப்பானில் சோச்சு , அமெரிக்காவில் பார்பன் , பிரெஞ்சு கோக்நாக் .....இப்படி பல பிராண்டுகள் இருந்தாலும் பிரெஞ்சின் கோக்நாக் தான் உலகிலேயே உன்னதமான தரமான பிராண்ட்.....!!!
மனித நாகரிகம் தோன்றிய பொழுதே மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தியிருப்பாளோ..? என்ற சந்தேகத்தில் ரோமானிய வீரன் ஒருவன் முதன்முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க , அதிலிருந்து வந்தது தான் காதலர்கள் இதழ்களில் முத்தத்தை பரிமாறிக்கொள்கிற பழக்கம் என்கிற சுவையான தகவலும் உண்டு..... ! வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது கிமு 800 வாக்கில்தான்... ஜாபீர் இபின் ஹய்யான் என்கிற அரேபிய விஞ்ஞானி தன்னுடைய புத்தகத்தில் மதுபானம் தயாரிக்கிற முறைகளை எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாக சொல்லியிருக்கிறார் ...
எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரித்தில் மதுபானம்
முக்கிய இடம் வகித்திருந்தது என்பதற்கு ரோமானியர்கள் அதை இலத்தீன் மொழியில் அழைத்த விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. ”அக்வா விட்டே” ( aqua vitae) , உயிர்தண்ணீர் ( water of life ) என்றே அது அழைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... ! நம்முடைய இதிகாசங்களிலும் , வேதங்களிலும் கூட .. சோமபானம், சுரபானம் என்கிற மதுபானங்களை தேவர்களும், அசுரர்களும் அருந்தியதாக அறிகிறோம்....!
ஐரோப்பியர்கள் திராட்சையிலிருந்து மதுபானம் தயாரிக்க , மத்திய கிழக்கினை சேர்ந்தவர்கள் அரிசி,கோதுமை போன்ற உணவுப்பொருட்களிலிருந்து தயாரிக்க, ஆசியர்கள் குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்ததுதான் சுவாரஸ்யம்... முதன்முதலில் வடிகட்டி தயாரிக்கபட்ட சுத்தமான( ??) மதுபானமும் இதுதான்... !!!!
இவ்வளவு ஏன்.... அமெரிக்காவில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ( நம்புங்கள்... காந்தியின் மதுவிலக்கு கொள்கைக்கு முன்னரே, மதுவிலக்கு அமெரிக்காவில் 1920 களில் இருந்து 1932 வரை அமலில் இருந்தது...)
சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலால் கள்ளச்சாராய விபத்துகள் அதிகமாக , 1932 போட்டியிட்ட ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் , மதுபான தடையை நீக்குவதாக பிரச்சாரம் செய்ய, அவரின் இந்த பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது... ஆம், அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் வெற்றிபெற்றார்....
( ஏன் நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததா.... ? )
மனித இனம் இருக்கும் வரைக்கும் மயக்கும் மதுபானமும் இருக்கும்.. எந்த அரசாங்கம் வந்தாலும் , இதை மட்டும் தடைசெய்யவோ , ஒழிக்கவோ முடியாது என்பது மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகிறது...
அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ??
ஆல்கஹால் என்று சொன்னாலே விஸ்கியும் , பிராண்டியும்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். பிராண்டி என்பது Brandewijn
என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. ” எரிக்கப்பட்ட வைன்”
( Burnt Wine ) என்பது இதன் பொருள்.... ! ஆம், வைனை உயர்வெப்ப நிலையில் கொதிக்கவைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து , ஆல்கஹாலாகவும் , நீராகவும் மாறுகிறது.
இந்த ஆல்கஹாலே பின்னர் பல்வேறு மதுபானங்களாக நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. “ வைன் “ என்பது திராட்சை பழரசத்தினை பல நாட்களுக்கு புளிக்கவைக்கிறபோது கிடைக்கிற ஒன்று. இந்த புளிக்கவைத்தலை ஆங்கிலத்தில் FERMENTATION என்று சொல்வார்கள்.
பொதுவாக திராட்சை தவிர ஆப்பிள்,அரிசி,கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதெற்கென பிரத்தியோகமான பிராண்டி மதுபான பிராண்டுகள் உண்டு . இத்தாலியில் கிரப்பா , போலாஇந்தில் ஸ்லிவிவிட்ஸ் , ஜப்பானில் சோச்சு , அமெரிக்காவில் பார்பன் , பிரெஞ்சு கோக்நாக் .....இப்படி பல பிராண்டுகள் இருந்தாலும் பிரெஞ்சின் கோக்நாக் தான் உலகிலேயே உன்னதமான தரமான பிராண்ட்.....!!!
மனித நாகரிகம் தோன்றிய பொழுதே மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தியிருப்பாளோ..? என்ற சந்தேகத்தில் ரோமானிய வீரன் ஒருவன் முதன்முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க , அதிலிருந்து வந்தது தான் காதலர்கள் இதழ்களில் முத்தத்தை பரிமாறிக்கொள்கிற பழக்கம் என்கிற சுவையான தகவலும் உண்டு..... ! வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது கிமு 800 வாக்கில்தான்... ஜாபீர் இபின் ஹய்யான் என்கிற அரேபிய விஞ்ஞானி தன்னுடைய புத்தகத்தில் மதுபானம் தயாரிக்கிற முறைகளை எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாக சொல்லியிருக்கிறார் ...
எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரித்தில் மதுபானம்
முக்கிய இடம் வகித்திருந்தது என்பதற்கு ரோமானியர்கள் அதை இலத்தீன் மொழியில் அழைத்த விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. ”அக்வா விட்டே” ( aqua vitae) , உயிர்தண்ணீர் ( water of life ) என்றே அது அழைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... ! நம்முடைய இதிகாசங்களிலும் , வேதங்களிலும் கூட .. சோமபானம், சுரபானம் என்கிற மதுபானங்களை தேவர்களும், அசுரர்களும் அருந்தியதாக அறிகிறோம்....!
ஐரோப்பியர்கள் திராட்சையிலிருந்து மதுபானம் தயாரிக்க , மத்திய கிழக்கினை சேர்ந்தவர்கள் அரிசி,கோதுமை போன்ற உணவுப்பொருட்களிலிருந்து தயாரிக்க, ஆசியர்கள் குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்ததுதான் சுவாரஸ்யம்... முதன்முதலில் வடிகட்டி தயாரிக்கபட்ட சுத்தமான( ??) மதுபானமும் இதுதான்... !!!!
இவ்வளவு ஏன்.... அமெரிக்காவில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ( நம்புங்கள்... காந்தியின் மதுவிலக்கு கொள்கைக்கு முன்னரே, மதுவிலக்கு அமெரிக்காவில் 1920 களில் இருந்து 1932 வரை அமலில் இருந்தது...)
சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலால் கள்ளச்சாராய விபத்துகள் அதிகமாக , 1932 போட்டியிட்ட ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் , மதுபான தடையை நீக்குவதாக பிரச்சாரம் செய்ய, அவரின் இந்த பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது... ஆம், அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் வெற்றிபெற்றார்....
( ஏன் நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததா.... ? )
மனித இனம் இருக்கும் வரைக்கும் மயக்கும் மதுபானமும் இருக்கும்.. எந்த அரசாங்கம் வந்தாலும் , இதை மட்டும் தடைசெய்யவோ , ஒழிக்கவோ முடியாது என்பது மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகிறது...
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|