Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
Page 1 of 1
நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில்
மூழ்கிவிடுவார்.
-
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
-
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!.
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால்
ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
-
பெரியவரை நெருங்கினான்.
-
“ஐயா…!”
-
“என்ன தம்பி?”
-
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
-
“ஆமாம்!”
-
“அதில் என்ன தெரிகிறது?”
-
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால்
உன் முகம் தெரியும்!”
-
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”
-
“ஆமாம்!”
-
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
-
பெரியவர் புன்னகைத்தார்.
-
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும்
பாடங்கள் நிறைய!”
-
“பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”
-
“அப்படிக் கேள்.
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும்
மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” என்று
சொல்லியிருக்கிறார்கள்.
-
எத்துணை ஆழமான உவமை இது!”
-
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?. எனக்கு ஒன்றும்
புரியவில்லை!”
-
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட
வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம்
இறைத்தூதர் சிறப்பாகச் சொல்லி விட்டார்!”
-
“எப்படி?”
-
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி
கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி
காட்டுகிறது அல்லவா?
-
“ஆமாம்”
-
“அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்
அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ,
ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ,
கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன்
குறையைக்காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி
மௌனமாகிவிடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே
சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப்
பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது
பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால்
அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக
அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை
யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ
படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம்
இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும்
மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல் நபிகளார் கூறிய
கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா… அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும்
போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!”
பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
வாட்ஸ் அப் பகிர்வு
அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில்
மூழ்கிவிடுவார்.
-
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
-
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!.
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால்
ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
-
பெரியவரை நெருங்கினான்.
-
“ஐயா…!”
-
“என்ன தம்பி?”
-
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
-
“ஆமாம்!”
-
“அதில் என்ன தெரிகிறது?”
-
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால்
உன் முகம் தெரியும்!”
-
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”
-
“ஆமாம்!”
-
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
-
பெரியவர் புன்னகைத்தார்.
-
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும்
பாடங்கள் நிறைய!”
-
“பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”
-
“அப்படிக் கேள்.
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும்
மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” என்று
சொல்லியிருக்கிறார்கள்.
-
எத்துணை ஆழமான உவமை இது!”
-
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?. எனக்கு ஒன்றும்
புரியவில்லை!”
-
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட
வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம்
இறைத்தூதர் சிறப்பாகச் சொல்லி விட்டார்!”
-
“எப்படி?”
-
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி
கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி
காட்டுகிறது அல்லவா?
-
“ஆமாம்”
-
“அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்
அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ,
ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ,
கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன்
குறையைக்காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி
மௌனமாகிவிடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே
சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப்
பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது
பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால்
அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக
அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை
யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ
படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம்
இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும்
மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல் நபிகளார் கூறிய
கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா… அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும்
போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!”
பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சுப்பனுக்கே பாடம் சொன்ன அப்பன்
» மண்பானை சொன்ன அற்புதமான பாடம் !!
» மிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்!
» நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
» பாடம்
» மண்பானை சொன்ன அற்புதமான பாடம் !!
» மிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்!
» நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
» பாடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|