Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
திரை விமர்சனம்: ஸ்பைடர்
Page 1 of 1
திரை விமர்சனம்: ஸ்பைடர்
உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுபவர் மகேஷ் பாபு.
அவசர உதவி கேட்டு அழைக்கும் பொதுமக்களுக்கு ஓடிச்சென்று
உதவுவது அவரது பணி.
ஒருநாள் எதேச்சையாக 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்ற
தன் காவல்துறை தோழியை அனுப்புகிறார். மாணவியும், தோழியும்
கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலைகள் ஏன் நடந்தது?
கொலையாளி யார்? ஏன் அப்படி கொலைகள் செய்கிறார்? அவர்
எப்படி தண்டிக்கப்படுகிறார் என்பது கதை.
தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகன் மகேஷ் பாபு,
தமிழில் அறிமுகமாகியுள்ள படம். கம்பீரம், துடிப்பு, துள்ளல் என
கச்சிதமாக இருக்கிறார். ஆனால் சுகம், சோகம் என எல்லாவற்றுக்கும்
ஒரே முகபாவனையை வெளிப்படுத்துகிறார்.
வேறு யாராவது குரல் கொடுத்திருந்தால், டப்பிங்கிலாவது சற்று
ஒப்பேற்றியிருக்கலாம். சிரமப்பட்டு அவரே டப்பிங்கும் பேசி
விட்டதால், அந்த வாய்ப்பும் போய்விட்டது.
சின்ன காதல் காட்சிகள், நாயகனுடன் நடனமாடுவது, பெயருக்கு
இறுதிக்காட்சிகளில் நாயகனுக்கு உதவுவது.. இதற்கு மட்டுமே
உதவியிருக்கிறார் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங். ஆர்.ஜே.பாலாஜி,
ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜன், ஷாஜி, சாயாஜி ஷிண்டே
ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
பெரிதாக பில்டப் கொடுக்கப்பட்ட பரத் பாத்திரம், திடீரென
மறைவது பெருங்குறை.
படம் முழுவதும் சைக்கோ வில்லன் எஸ்.ஜே.சூர்யாவைச் சுற்றிதான்
நகர்கிறது. இதை உணர்ந்து பிரமாதமாக நடித்திருக்கிறார்.
கோபம், அழுகை, சண்டை, நாயகனை தொலைபேசியில் மிரட்டுவது
என காட்சிக்கு காட்சி இவரது ராஜ்ஜியம்தான்.
அதிலும், அழும் பெண்களை இமி டேட் செய்யும் காட்சியில் தேர்ந்த
நடிக ராக அப்ளாஸ் அள்ளுகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் சிறுவயது
கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுவனும் நடிப்பில் மிரட்டி யிருக்கிறார்.
ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை தன் முந்தைய படங்களின்
பாணியில் எழுதி, இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால்,
‘கொடூரமான கொலையை செய்தது யார்?’ என்ற தேடல் போய்
முடியும் இடம் அபத்தமாக இருக்கிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: திரை விமர்சனம்: ஸ்பைடர்
சுடுகாட்டில் மரண ஓலத்தை கேட்டுக்கொண்டே பிறப்பவன்
கொலைக்காரனாகத்தான் வளர்வான். பிணங்களைப் பார்க்கா
விட்டால் அவனுக்கு சாப்பாடு இறங்காது. அதற்காக சிறு
வயதிலேயே கொலைகளை செய்வான். மரணத்தை ரசிப்பான்.
மனிதாபிமானமின்றி, குரூர சைக்கோவாக இருப்பான் என
முருக தாஸ் காட்சிப்படுத்தியுள்ள அனைத்தும் கண்டனத்துக்கு
உரியவை.
சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் அழுத்தப்பட்டு, ஊரை
விட்டு விரட்டப்பட்டு, சுடுகாட்டில் ஒடுங்கியிருக்கும் எளிய
மனிதர்களை இப்படியா சித்தரிப்பது? தலையில் ஆணி அடித்துக்
கொல்வது போன்ற காட்சிகள், தணிக்கையில் எப்படி தப்பின
என்பது புரியவில்லை.
உட்கார்ந்த இடத்தில் லேப்டாப் மூலம் அனைவரது தொலை
பேசியையும் ஒட்டுக்கேட்பது, நகரின் அனைத்து சிசிடிவி
கேமராக்களையும் ஹேக் செய்வது, சேட்டிலைட் சேனலின்
ஒளிபரப்பை இடை மறித்து, தான் விரும்பியதை ஒளிபரப்பு வது
போன்றவை நம்பும்படி இல்லை.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரோலர் கோஸ்டர் சண்டைக்
காட்சி பிரமாதம். ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை கவனிக்க
வைக்கிறது. பாடல்கள் வலிந்து நுழைக்கப்பட்டுள்ளதால், மனதில்
நிற்கவில்லை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், கிராஃபிக்ஸ்
போன்றவற்றை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனுக்கு கொடூரமான தண்டனையைக் கொடுக்கும்
கதாநாயகன், இறுதிக் காட்சியில் மனிதாபிமானம் பற்றி லெக்சர்
அடிப்பது ஏற்கும்படி இல்லை.
படத்தில் சில பகுதிகள், முருகதாஸின் முந்தைய படங்களை
நினைவூட்டினாலும், கொலையாளியைக் கண்டுபிடிக்க சமூக
வலைதளத்தில் வலைவீசுவது, அம்மா, தம்பியைக் காப்பாற்ற
கால் டாக்ஸி, பீட்சா, ஆம்புலன்ஸை அழைப் பது போன்ற
இடங்கள் கவனிக்க வைக்கின்றன.
எஸ்.ஜே.சூர்யாவின் கொலைகாரன் கதாபாத்திரத்தை மிக
கவனமாகவும், அவர் ஏன் கொலையாளி யாக மாறினார்
என்பதை மிக கச்சிதமாகவும் வடிவமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் கந்தல் இல்லாமல் ஓரளவு நன்றாகவே வலை
பின்னியிருக்கிறது ஸ்பைடர்.
–
———————
நன்றி- தி இந்து
கொலைக்காரனாகத்தான் வளர்வான். பிணங்களைப் பார்க்கா
விட்டால் அவனுக்கு சாப்பாடு இறங்காது. அதற்காக சிறு
வயதிலேயே கொலைகளை செய்வான். மரணத்தை ரசிப்பான்.
மனிதாபிமானமின்றி, குரூர சைக்கோவாக இருப்பான் என
முருக தாஸ் காட்சிப்படுத்தியுள்ள அனைத்தும் கண்டனத்துக்கு
உரியவை.
சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் அழுத்தப்பட்டு, ஊரை
விட்டு விரட்டப்பட்டு, சுடுகாட்டில் ஒடுங்கியிருக்கும் எளிய
மனிதர்களை இப்படியா சித்தரிப்பது? தலையில் ஆணி அடித்துக்
கொல்வது போன்ற காட்சிகள், தணிக்கையில் எப்படி தப்பின
என்பது புரியவில்லை.
உட்கார்ந்த இடத்தில் லேப்டாப் மூலம் அனைவரது தொலை
பேசியையும் ஒட்டுக்கேட்பது, நகரின் அனைத்து சிசிடிவி
கேமராக்களையும் ஹேக் செய்வது, சேட்டிலைட் சேனலின்
ஒளிபரப்பை இடை மறித்து, தான் விரும்பியதை ஒளிபரப்பு வது
போன்றவை நம்பும்படி இல்லை.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரோலர் கோஸ்டர் சண்டைக்
காட்சி பிரமாதம். ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை கவனிக்க
வைக்கிறது. பாடல்கள் வலிந்து நுழைக்கப்பட்டுள்ளதால், மனதில்
நிற்கவில்லை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், கிராஃபிக்ஸ்
போன்றவற்றை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனுக்கு கொடூரமான தண்டனையைக் கொடுக்கும்
கதாநாயகன், இறுதிக் காட்சியில் மனிதாபிமானம் பற்றி லெக்சர்
அடிப்பது ஏற்கும்படி இல்லை.
படத்தில் சில பகுதிகள், முருகதாஸின் முந்தைய படங்களை
நினைவூட்டினாலும், கொலையாளியைக் கண்டுபிடிக்க சமூக
வலைதளத்தில் வலைவீசுவது, அம்மா, தம்பியைக் காப்பாற்ற
கால் டாக்ஸி, பீட்சா, ஆம்புலன்ஸை அழைப் பது போன்ற
இடங்கள் கவனிக்க வைக்கின்றன.
எஸ்.ஜே.சூர்யாவின் கொலைகாரன் கதாபாத்திரத்தை மிக
கவனமாகவும், அவர் ஏன் கொலையாளி யாக மாறினார்
என்பதை மிக கச்சிதமாகவும் வடிவமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் கந்தல் இல்லாமல் ஓரளவு நன்றாகவே வலை
பின்னியிருக்கிறது ஸ்பைடர்.
–
———————
நன்றி- தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சி..வி.2 -திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
» விஸ்வரூபம் –திரை விமர்சனம்
» திரை விமர்சனம் - சந்தமாமா.
» 83 -திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
» விஸ்வரூபம் –திரை விமர்சனம்
» திரை விமர்சனம் - சந்தமாமா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|