Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
இதப்படிங்க முதல்ல...
Page 1 of 1
இதப்படிங்க முதல்ல...
எஸ்.ஜே.சூர்யாவை, 'டென்ஷன்' ஆக்கிய, 'ஹீரோ'கள்!
தற்போது, வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அவரது நடிப்புக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனபோதிலும், சில, 'ஹீரோ'கள், எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுப்பதற்கும் அல்லது பிரமோஷனில் அவரது புகைப்படங்களை அதிகமாக பயன்படுத்துவதற்கும் தடை போடுகின்றனர்.
இதையறிந்த எஸ்.ஜே.சூர்யா, தன்னை இருட்டடிப்பு செய்ய நினைக்கும், 'ஹீரோ'களின் படங்களை தவிர்க்கத் துவங்கி விட்டார். அதோடு, இயக்குனர்களிடத்தில் தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதோடு, படத்தின் விளம்பரங்களில், 'ஹீரோ'வுக்கு இணையாக தன் புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என, 'அக்ரிமென்ட்' போட்டு ஒப்பந்தமாகி வருகிறார்.
— சினிமா பொன்னையா
நயன்தாராவை வளைத்துப் போடும், பாலிவுட்!
'பாலிவுட் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்...' என்று, அடம் பிடித்து வந்த, நயன்தாராவை, ஷாருக்கானை வைத்து தான் இயக்கி வரும் படத்தில் நடிக்க வைத்து விட்டார், அட்லி. இந்த படத்தில், நயன்தாரா நடித்து வரும் புகைப்படங்கள் அங்குள்ள மீடியாக்களில் வெளியானதையடுத்து, தற்போது, சல்மான்கான் படத்தில் நடிப்பதற்கும், அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இதனால், சமந்தாவை தொடர்ந்து, நயன்தாராவும், பாலிவுட்டில் முகாம் போட தயாராகி வருகிறார். இப்படி, 40 வயதில் நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்து நிற்பதைப் பார்த்து அங்குள்ள இளவட்ட நடிகையர், மிரண்டு போயுள்ளனர்.
— எலீசா
தனுஷை ஸ்வீடன் நாட்டுக்கு அழைக்கும், நடிகை!
நானே வருவேன் படத்தில், நாயகியாக நடித்திருப்பவர், ஸ்வீடன் நாட்டு நடிகை, எல்லி அவ்ரம். இந்த படத்தில், நடிக்க துவங்கியபோது, எத்தனை கஷ்டமான காட்சியாக இருந்தாலும், 'சிங்கிள் ஷாட்'டில், தனுஷ் நடித்து ஓ.கே., பண்ணியதைப் பார்த்து, அசந்து விட்டார்.
படத்தில் நடித்து முடித்து, தன் நாட்டுக்கு திரும்பும்போது, 'உங்களுடைய திறமையை ஸ்வீடன் நாட்டு சினிமா இயக்குனர்களிடம் சொல்லி, அங்குள்ள படங்களிலும், நீங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கச் செய்வேன்...' என்று, தனுஷிடம் கூறிச் சென்றுள்ளார், எல்லி அவ்ரம்.
அதனால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என, பறந்து கொண்டிருக்கும், தனுஷின் கொடி, அடுத்தபடியாக, ஸ்வீடன் நாட்டிலும் பறக்கலாம்.
— எலீசா
விக்ரம் பிரபுவின், புதிய முடிவு!
சிவாஜியின் பேரன் மற்றும் பிரபுவின் மகன் என்ற பெருமையுடன் தமிழ் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தார், விக்ரம் பிரபு. பல படங்களில் நடித்திருந்த போதும், சிவாஜியின் பேரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, அவர் நடிப்பு இதுவரை பேசப்படவில்லை.
இதன் காரணமாக, தன் தாத்தா மற்றும் அப்பாவின் பெயரை காப்பாற்றும் வகையில், திறமைக்கு சவால் விடக்கூடிய முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்க தயாராகிவிட்டார்.
'இனிமேல், ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும், அந்த படங்களில், தாத்தா சிவாஜியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், அழுத்தமான நடிப்பை கொடுப்பதற்கு தயாராகி வருகிறேன். இதற்காக, ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் பலமுறை, 'ஹோம்வொர்க்' செய்து, களம் இறங்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், விக்ரம் பிரபு.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* கன்னட நடிகர், யஷ் நடித்து, சமீபத்தில் வெளியான, கேஜிஎப்- 2 படம், தமிழில், 100 கோடி ரூபாய் வசூலித்த முதல், 'டப்பிங்' படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
* அஜித் நடித்து வரும், 61வது படத்தில், மலையாள நடிகை மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார்.
* மணிரத்னம் இயக்கிய, செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் இணைந்து நடித்த அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி இருவரும், தற்போது, காந்தி டாக்ஸ் என்ற ஹிந்தி படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படம், பேசும் படம் பாணியில், வசனமே இல்லாமல் உருவாகிறது.
அவ்ளோதான்!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
நம் நாட்டில் அறியப்படாத பல தெய்வங்கள் உள்ளன. அவர்களில், சூலினி என்ற அம்மனும் அடக்கம். இவள் யார் தெரியுமா?
மனிதர், தேவர், விலங்கு என்ற எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றான், இரண்யன் என்ற அசுர மன்னன். இதனால், ஆணவம் கொண்ட அவன், தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.
'ஓம் இரண்யாய நமஹ' என்று, குருகுலத்தில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது. ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன், இந்த உத்தரவை ஏற்கவில்லை.
தாயின் கர்ப்பத்தில் இருந்த போது, திருமாலின் கதையை, நாரதர் சொல்ல கேட்ட அவன், நாராயண பக்தனாக விளங்கினான். 'ஓம் நமோ நாராயணாய நமஹ' என்பது அவனது தாரக மந்திரமாக மாறியது.
பெற்ற பிள்ளையே தனக்கு எதிராக மாறியதால், ஆத்திரமடைந்த இரண்யன், அவனைப் பல வழிகளிலும் கொல்ல முயன்றான். ஆனால், திருமால் அருளால் தப்பினான், பிரகலாதன்.
ஒரு கட்டத்தில் இரண்யனின் தொல்லை எல்லை மீறவே, மனிதன், மிருகம், தேவர் என்ற வித்தியாசமான கலவையாக, நரசிம்மர் என்ற பெயர் தாங்கி வந்து, அவனை அழித்தார், திருமால். அப்போது, அவர் அதீத கோபத்தில் இருந்தார். அவரது கோபத்தை தணிக்க சிவன், நரசிம்மத்தையும் விட உக்ர சக்தியாக, சரபேஸ்வரர் என்ற பெயர் தாங்கி தோன்றினார்.
சரபேஸ்வரரின் உக்கிரம், நரசிம்ம உக்கிரத்தை தணித்தது.
பறவையும், மனித, மிருக முகமும் கொண்டவராக தோன்றினார், சரபேஸ்வரர். அந்த பறவைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. அதில் ஒன்று காளி, மற்றது சூலினி. காளியை பிரத்யங்கிரா என்று அழைத்து, அவளுக்கு தனி வழிபாடு உருவானது. சூலினி என்பவள், துர்க்கை என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்.
இவள் சூரியன், சந்திரன், அக்னி என்ற முப்பெரும் சக்திகளை உள்ளடக்கியவள்.
எதிரிகளை வெற்றி கொள்ள செல்லும் மன்னர்கள், சூலினியை வழிபட்டே கிளம்பினர். பில்லி, சூன்யம் போன்ற கொடிய சக்திகள், மந்திரம் தெரிந்தவர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் யார் மீது ஏவுகின்றனரோ, அவர்களை அழித்து விடும். இந்த சக்திகளை அடக்கியாள்பவள், சூலினி.
மூன்று பிரிவு கொண்ட சூலத்தை ஏந்தியவள் என்பதால், இவள் சூலினி எனப்பட்டாள். இவளது கையிலுள்ள சூலத்தை, அம்மன் கோவில்களின் முன் ஊன்றி வைத்திருப்பர். இதற்கு எலுமிச்சை சாறு அபிஷேகம் செய்வதன் மூலம், அம்பாள் மனம் குளிர்ந்து, எதிரிகளை விரட்டுவாள்.
சூலினி துர்க்கையை வழிபடுவதன் மூலம், எதிரி நாடுகளால் பரப்பப்படும் கொடிய நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்; அவர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியாகும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிவாலயங்களின் பிரகாரத்தில், வடக்கு நோக்கி துர்க்கை சிலை இருக்கும். கர்நாடக மாநிலத்திலுள்ள மூகாம்பிகையும் இவளது அம்சமே. நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை நடக்க, சூலினியை வழிபடுவோம்.
தி. செல்லப்பா
மனிதர், தேவர், விலங்கு என்ற எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றான், இரண்யன் என்ற அசுர மன்னன். இதனால், ஆணவம் கொண்ட அவன், தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.
'ஓம் இரண்யாய நமஹ' என்று, குருகுலத்தில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது. ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன், இந்த உத்தரவை ஏற்கவில்லை.
தாயின் கர்ப்பத்தில் இருந்த போது, திருமாலின் கதையை, நாரதர் சொல்ல கேட்ட அவன், நாராயண பக்தனாக விளங்கினான். 'ஓம் நமோ நாராயணாய நமஹ' என்பது அவனது தாரக மந்திரமாக மாறியது.
பெற்ற பிள்ளையே தனக்கு எதிராக மாறியதால், ஆத்திரமடைந்த இரண்யன், அவனைப் பல வழிகளிலும் கொல்ல முயன்றான். ஆனால், திருமால் அருளால் தப்பினான், பிரகலாதன்.
ஒரு கட்டத்தில் இரண்யனின் தொல்லை எல்லை மீறவே, மனிதன், மிருகம், தேவர் என்ற வித்தியாசமான கலவையாக, நரசிம்மர் என்ற பெயர் தாங்கி வந்து, அவனை அழித்தார், திருமால். அப்போது, அவர் அதீத கோபத்தில் இருந்தார். அவரது கோபத்தை தணிக்க சிவன், நரசிம்மத்தையும் விட உக்ர சக்தியாக, சரபேஸ்வரர் என்ற பெயர் தாங்கி தோன்றினார்.
சரபேஸ்வரரின் உக்கிரம், நரசிம்ம உக்கிரத்தை தணித்தது.
பறவையும், மனித, மிருக முகமும் கொண்டவராக தோன்றினார், சரபேஸ்வரர். அந்த பறவைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. அதில் ஒன்று காளி, மற்றது சூலினி. காளியை பிரத்யங்கிரா என்று அழைத்து, அவளுக்கு தனி வழிபாடு உருவானது. சூலினி என்பவள், துர்க்கை என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்.
இவள் சூரியன், சந்திரன், அக்னி என்ற முப்பெரும் சக்திகளை உள்ளடக்கியவள்.
எதிரிகளை வெற்றி கொள்ள செல்லும் மன்னர்கள், சூலினியை வழிபட்டே கிளம்பினர். பில்லி, சூன்யம் போன்ற கொடிய சக்திகள், மந்திரம் தெரிந்தவர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் யார் மீது ஏவுகின்றனரோ, அவர்களை அழித்து விடும். இந்த சக்திகளை அடக்கியாள்பவள், சூலினி.
மூன்று பிரிவு கொண்ட சூலத்தை ஏந்தியவள் என்பதால், இவள் சூலினி எனப்பட்டாள். இவளது கையிலுள்ள சூலத்தை, அம்மன் கோவில்களின் முன் ஊன்றி வைத்திருப்பர். இதற்கு எலுமிச்சை சாறு அபிஷேகம் செய்வதன் மூலம், அம்பாள் மனம் குளிர்ந்து, எதிரிகளை விரட்டுவாள்.
சூலினி துர்க்கையை வழிபடுவதன் மூலம், எதிரி நாடுகளால் பரப்பப்படும் கொடிய நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்; அவர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியாகும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிவாலயங்களின் பிரகாரத்தில், வடக்கு நோக்கி துர்க்கை சிலை இருக்கும். கர்நாடக மாநிலத்திலுள்ள மூகாம்பிகையும் இவளது அம்சமே. நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை நடக்க, சூலினியை வழிபடுவோம்.
தி. செல்லப்பா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
அறியப்படாத அம்மன்!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: இதப்படிங்க முதல்ல...
இயற்கை அழகை ரசிக்க, நின்று செல்லும் ரயில்!
ரயில் பயணங்களின்போது, எதிர்படும் இயற்கை காட்சிகள் நம் மனதை கொள்ளை கொள்ளும். 'ரயில் மெதுவாக செல்லக் கூடாதா... அப்படி சில நிமிடங்கள் நின்று சென்றால், இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே...' என்று, ஏங்குவதும் உண்டு.
இந்த ஏக்கத்தைப் போக்க வந்து விட்டது, 'இந்துார் ஹெரிடேஜ்' ரயில்.
மத்திய பிரதேசம், அம்பேத்கர் ரயில் நிலையத்திலிருந்து, காலக்குண்ட் வரை, 15 கி.மீ., துாரம் வரை செல்லும் இந்த ரயில் தான், பயணியருக்காக சிறப்பு வசதியை அளிக்கிறது.
இந்த பாதையில் அழகிய இயற்கை காட்சிகளும், படால்பானி என்ற அருவியும் உள்ளது. அருவி உள்ள இடத்திற்கு வந்ததுமே, ரயில், குறிப்பிட்ட நேரம் நின்று செல்லும். அப்போது, பயணிகள், இறங்கி, அருவியை ரசித்த பின், மீண்டும் ரயிலுக்கு திரும்பி விடலாம்.
மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்.
ஜோல்னாபையன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...{சினி துளிகள்}
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» இதப்படிங்க முதல்ல...
» இதப்படிங்க முதல்ல...{சினி துளிகள்}
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|