Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
2 posters
Page 1 of 1
பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
![பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான் Hello-thozhi-01-1508](http://senthilvayal.files.wordpress.com/2008/07/hello-thozhi-01-1508.jpg?w=600)
பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
பெண்களுக்கு டீன்ஏஜ் வயது தொடங்கிவிட்டாலே, நாம் அழகாக இருக்கிறோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்துவிடும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி முகத்தை பார்த்து கொள்வர். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலே போதும், தனது அழகே போய் விட்டதாக எண்ணி மிகவும் வருத்தப்படுவர். டீன் ஏஜில் பருக்கள் வருவது இயல்பு தான். அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
பருக்கள் வருவதற்கான காரணங்கள்:
* எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் பருக்கள் வரலாம்.
* சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பருக்கள் வரலாம்.
* பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் பருக்கள் வரலாம்.
* அதிக நேரம் வெயிலில் அலைந்தால் உஷ்ணமும், தூசியும் கலந்து பருக்கள் உண்டாகலாம்.
பருக்கள் தோன்றினால் செய்யக் கூடாதவை:
* அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றை பயன் படுத்தக் கூடாது.
* பருக்கள் உள்ளவர்கள் காபி, டீ, கோகோ கலந்த பானங்களை அருந்தக் கூடாது.
* சிப்ஸ், சாக்லேட் போன்ற கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நகம் விஷத்தன்மை உடையது. எனவே, பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படி செய்தால் பருக்கள் இன்னும் அதிகமாக பரவிடுமே தவிர குறையாது.
* உஷ்ணக்காற்று முகத்தில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* பொடுகு இல்லாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும். தலையணை உறையை அடிக்கடி துவைக்க வேண்டும். தலையிலிருந்து பொடுகு உதிர்ந்து தலையணையில் விழும். அதில் முகத்தை வைத்து படுக்கும் போது பருக்கள் தோன்றும்.
பருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள்:
முகத்தில் பருக்கள் வந்துவிட்டால், பார்லருக்கு போய் தான் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பருக்களை அகற்றுவதற்கான சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
அதற்கான எளிய டிப்ஸ்கள்:
* ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.
* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானி மட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். மிதமான சுடுநீரில் அவற்றை கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.
* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
* தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.
மேற்கூறிய எளிய சிகிச்சை முறைகளை அடிக்கடி செய்து வந்தால், பருக்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து முகம் பொலிவு பெறும்.
எத்தனை முறை முகம் கழுவலாம்? :
பருக்கள் வராமல் இருக்க, சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான் X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்
நன்றி சரண்யா பகிர்விற்க்கு ##* :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்.
» கொடி போல இடை வேண்டுமா? அதிகம் சதை உங்கள் அழகை குறைத்துவிடும்
» அழகு ராணி
» அழகு ராணி
» நீங்களும் உங்கள் காதலும்
» கொடி போல இடை வேண்டுமா? அதிகம் சதை உங்கள் அழகை குறைத்துவிடும்
» அழகு ராணி
» அழகு ராணி
» நீங்களும் உங்கள் காதலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|