Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்by rammalar Today at 19:27
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
மழை துளிகள்
+3
நண்பன்
*சம்ஸ்
செய்தாலி
7 posters
Page 1 of 1
மழை துளிகள்
வேட்கையின் வெட்டங்களை
சிறுக சிறுக உள்வாங்கியபடி
சற்று அயர்ந்த கதிரவன்
வானம் கறுத்து இருள்சூழ
முட்டி மோதிக் கொண்டது
பார்வை இழந்த மேகங்கள்
ஓயாத மேகச் சண்டை
கோர ஆயுதமாய் உயிர்த்தெழுந்து
இடியும் மின்னலும்
தென்றலின் சமரசத்தில்
கனிந்து இளகிய மேகங்கள்
மண்ணை முத்தமிட்டது மழைத்துளி
மழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள்
பெரும் துளிகள் உடைந்து
சிறு துளிகளாய் கொட்டியது
பூமித் தாயின் மேனியில்
அனல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள்
ஒழுகாத இடம் தேடி
ஓடி ஒளிந்து கொண்டது
நாயும் பூனையும் கோழிகளும்
சத்தமிட்டு ஊரை கூட்டியது
வெட்ட வெளியில் கட்டியிருந்த
ஆடும் மாடுகளும்
ஒட்டுத் துணியின்றி
நிர்வனாமாய் குளித்தது
வீதியில் நின்ற வாகனங்கள்
எங்கள் தேகங்களை நனைக்காதே
கறுப்புக்கொடி உயர்த்திய மனிதர்கள்
வீதியில் முளைத்தது குடைகள்
இன்னைக்கு வேலை கெட்டுப்போச்சு
மழைக்கு ஒதுங்கி நிற்கும்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்
நனையும் சிறுவர்கள்
பயமுறுத்தும் பெரியவர்கள்
சிரித்துக் கொண்டு மழை
அந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து
மழையில் குளித்தும்
தலை துவற்றாத மரங்கள்
கிளைகளில் தேங்கிய நீர்
தொப்பலாய் நனைந்து
மேனி நனைந்த வெட்கத்தில்
தலைதாழ்த்தி நிற்கும் செடிகள்
மனிதக் கழிவையும்
அசுத்தங்களையும் துடைத்தபடி
ஓடைகளில் ஓடியது மழைநீர்
சிறை மீண்ட மேகங்கள்
மழைத்துளிகளாய் கொட்டிவிட
தெளிந்தது வானம்
Re: மழை துளிகள்
உங்களின் கவி உள்ளடக்கிய வார்த்தைகள் அனைத்தும் கவி எழுததூண்டிய படம் கவிக்கு பினைக்கப்பட்ட படம் கூறும் வரிகள் போல் எனக்கு தோன்றியது அருமையாக எழுதப்பட்ட வரிகள் அத்தனையும் வைரம் வாழ்த்துக்கள் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மழை துளிகள்
மழைத்துளி பற்றிய கவிதை மிகவும் அருமை
வாழ்த்துக்கள் செய்தாலி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் செய்தாலி வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மழை துளிகள்
மிக்க நன்றி தோழரே*ரசிகன் wrote:உங்களின் கவி உள்ளடக்கிய வார்த்தைகள் அனைத்தும் கவி எழுததூண்டிய படம் கவிக்கு பினைக்கப்பட்ட படம் கூறும் வரிகள் போல் எனக்கு தோன்றியது அருமையாக எழுதப்பட்ட வரிகள் அத்தனையும் வைரம் வாழ்த்துக்கள் தோழரே.
Re: மழை துளிகள்
நண்பன் wrote:மழைத்துளி பற்றிய கவிதை மிகவும் அருமை
வாழ்த்துக்கள் செய்தாலி வாழ்த்துக்கள்.
Re: மழை துளிகள்
செய்தாலி wrote:
பார்வை இழந்த மேகங்கள்
மழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள் :)
அனல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள் .......வாவ்
அந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து ----அருமை.... யதார்த்தம்
செய்தாலி தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மழை துளிகள்
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
பார்வை இழந்த மேகங்கள்
மழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள் :)
அனல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள் .......வாவ்
அந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து ----அருமை.... யதார்த்தம்
செய்தாலி தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தோழி
உங்களை இங்குள்ள என் உறவுகளுடன் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி
என்றும் இணைந்து இருங்கள் எங்கள் அன்புச் சேனையில்
Re: மழை துளிகள்
மிகவும் அருமையாக உள்ளது அனைத்து வரிகளும்
மழை நீர் போன்று சுத்தமாக உள்ளது வாழ்த்துக்கள்.
மழை நீர் போன்று சுத்தமாக உள்ளது வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மழை துளிகள்
மீனு wrote:மிகவும் அருமையாக உள்ளது அனைத்து வரிகளும்
மழை நீர் போன்று சுத்தமாக உள்ளது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|