சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

என் மன வானில்! விடை யறியா தேடலிது Khan11

என் மன வானில்! விடை யறியா தேடலிது

+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 5 Mar 2014 - 20:49

எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!


என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((


Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Muthumohamed Wed 5 Mar 2014 - 21:23

அருமையாக இருக்கு தொடருங்கள் அக்கா .............
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 3:56

அருமையாக இருக்கு தொடருங்கள் :/  :/ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Thu 6 Mar 2014 - 4:46

நிஷா அக்கா சொல்லவே இல்ல...கவி மிக அருமை..
யாருக்கிட்ட என்ன திறமை ....வியப்பு..

தொடருங்கள்.......வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Thu 6 Mar 2014 - 12:12

அருமை நிஷா

ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:05

பானுஷபானா wrote:அருமை நிஷா

ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

நன்றி பானு,

இது இப்போ எழுதியதில்லை 2009 ல் எழுதி மு. மன்றத்தில் பதிவிட்டதுப்பா. இங்கே ஆரம்பிக்கும் போது  இறைவனிடம் வேண்டலோடு ஆரம்பிபோம்னு போட்டேன்.

இந்த  படைப்புக்கும் அசுரர் சாரின்  நட்புக்கும் எனக்குமாய் பெரிய பிளாஸ்பேக்கே  இருக்குது பானு.
 இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் என் சொந்த கற்பனைதான் பானு. ஆனால்  இதை முகிலன்னு  ஒருத்தர்.  தன்னோடகவிதை திரியில்  தன் பெயரில் காபபி பேஸ்ட் செய்து போட்டு எனக்கும் அசுரனுக்கும் பெரிய சண்டையே ஆச்சு. நான்  காப்பி பேஸ்ட் செய்திட்டேன்னு அசுரர்  திட்டோ திட்டு. அப்புறம் அவருக்கு பொறுமையா ஒரிஜினல் பதிவின் டேட்டையும் காப்பிபேஸ்ட்டிண்டேட்டையும் காண்பித்தேனா.. அன்றிலிருந்து எதுக்கும் என்கிட்ட சண்டை போடுவதில்லை.

இப்படி என் சில  படைப்புக்கள்  காபபி பேஸ்டாகி  இணையத்தில் உலா வருகிறது என்பதால்  இந்த திரியிலிருக்கும் ஏதாகிலும் வேறெங்காகிலும் கண்டால்  என்னிடம் சண்டைக்கு வராதிங்க..

நான் இந்த  திரியில்  என் சொந்த சிந்தையின் உதிப்பதை மட்டுமே பகிர்வேன்.


Last edited by Nisha on Mon 10 Mar 2014 - 11:08; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:07

Muthumohamed wrote:அருமையாக இருக்கு தொடருங்கள் அக்கா .............

 நன்றி முத்து,
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:11

அச்சலா wrote:நிஷா அக்கா சொல்லவே இல்ல...கவி மிக அருமை..
யாருக்கிட்ட என்ன திறமை ....வியப்பு..

தொடருங்கள்.......வாழ்த்துக்கள்...

ஹாஹா

இதில் வியப்புக்கு என்ன இருக்கிறதாம்  அச்சலா, இயல்பிலேயே  தானாய் வருவதுதான்..பொறுப்புக்களும், வேலைகளும் அதிகமானதால்  சிந்திக்கும் திறன் மரத்து போனதோ என்னமோ.. இப்போ எதுவும் எழுத தோன்றுவதில்லை.  !*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:12

கே.இனியவன் wrote:அருமையாக இருக்கு தொடருங்கள் :/  :/ 

 நன்றி  இனியவன் அவர்களே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 11:15

Nisha wrote:
பானுஷபானா wrote:அருமை நிஷா

ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

நன்றி பானு,

இது இப்போ எழுதியதில்லை 2009 ல் எழுதி மு. மன்றத்தில் பதிவிட்டதுப்பா. இங்கே ஆரம்பிக்கும் போது  இறைவனிடம் வேண்டலோடு ஆரம்பிபோம்னு போட்டேன்.

இந்த  படைப்புக்கும் அசுரர் சாரின்  நட்புக்கும் எனக்குமாய் பெரிய பிளாஸ்பேக்கே  இருக்குது பானு.
 இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் என் சொந்த கற்பனைதான் பானு. ஆனால்  இதை முகிலன்னு  ஒருத்தர்.  தன்னோடகவிதை திரியில்  தன் பெயரில் காபபி பேஸ்ட் செய்து போட்டு எனக்கும் அசுரனுக்கும் பெரிய சண்டையே ஆச்சு. நான்  காப்பி பேஸ்ட் செய்திட்டேன்னு அசுரர்  திட்டோ திட்டு. அப்புறம் அவருக்கு பொறுமையா ஒரிஜினல் பதிவின் டேட்டையும் காப்பிபேஸ்ட்டிண்டேட்டையும் காண்பித்தேனா.. அன்றிலிருந்து எதுக்கும் என்கிட்ட சண்டை போடுவதில்லை.

இப்படி என் சில  படைப்புக்கள்  காபபி பேஸ்டாகி  இணையத்தில் உலா வருகிறது என்பதால்  இந்த திரியிலிருக்கும் ஏதாகிலும் வேறெங்காகிலும் கண்டால்  என்னிடம் சண்டைக்கு வராதிங்க..

நான் இந்த  திரியில்  என் சொந்த சிந்தையின் உதிப்பதை மட்டுமே பகிர்வேன்.

அருமையா இருக்கு. அப்பப்போ தோணுவதை பதியுங்க நாங்க படிக்கிறோம் ஆனா சந்தேகப்படமாட்டோம். ஏன்னா நிஷாவைப் பற்றித் தெரியும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ahmad78 Mon 10 Mar 2014 - 13:45

கவிதை அருமை  *_  *_  *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:53

:/  :/ 
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
-

 "பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம் வைத்து
புரியாமலே இருப்பான் ஒருவன்...
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 18 Mar 2014 - 2:45

rammalar wrote::/  :/ 
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
-

 "பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம் வைத்து
புரியாமலே இருப்பான் ஒருவன்...
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"

-

   :”@:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty வாழ்க்கை என்பது வரமாகட்டும்

Post by Nisha Tue 18 Mar 2014 - 3:04

தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை  உன்னை முடமாக்கிடும்!.

வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென   சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!

வேட்டை நாய் போல துரத்தும்  பயமதை
சாட்டைதனை கொண்டு  அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!

வாழ்க்கை என்பது  வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 18 Mar 2014 - 3:23

உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி  அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி

நம்பி க் கை  தந்து    
உன் மனம் திறக்க வைத்து  
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!

உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
 
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம்  நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:23

Nisha wrote:எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!


என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்


 
 
 

  


இறைவா என்று வரும் வரை என் கற்பனையில் வேறு ஒருவர் இருந்தார் இறைவா எனக்காய் நீ வர வேண்டும் என்று படித்த பிறகு எண்ணைத்தை மாற்றிக்கொண்டேன்
அவ்வளவு அழகு ஒவ்வொரு வரிகளும்
அன்பு மீனுகா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:43

Nisha wrote:தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை  உன்னை முடமாக்கிடும்!.

வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென   சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!

வேட்டை நாய் போல துரத்தும்  பயமதை
சாட்டைதனை கொண்டு  அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!

வாழ்க்கை என்பது  வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!


வாழ்க்கை என்பது வரமாகும்
உன் அருகில்தான் உள்ளது வெற்றிப்படிகள்
தடைக்கல்லையும் படிக்கல்லாய் மாற்று
வெற்றி நிச்சியம் மிக மிக அருமையான கவிதை
 *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:50

Nisha wrote:உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி  அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி

நம்பி க் கை  தந்து    
உன் மனம் திறக்க வைத்து  
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!

உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
 
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம்  நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!

வெற்றி மீனு வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்...

என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம்  நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ


 சூப்பர் சூப்பர் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 18 Mar 2014 - 10:06

மீனு wrote:
Nisha wrote:
    


இறைவா என்று வரும் வரை என் கற்பனையில் வேறு ஒருவர் இருந்தார் இறைவா எனக்காய் நீ வர வேண்டும் என்று படித்த பிறகு எண்ணைத்தை மாற்றிக்கொண்டேன்
அவ்வளவு அழகு ஒவ்வொரு வரிகளும்
அன்பு மீனுகா
 heart 

அப்படியா! என்ன  நினைச்சிங்களாம்!   :”@:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 10:07

Nisha wrote:தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை  உன்னை முடமாக்கிடும்!.

வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென   சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!

வேட்டை நாய் போல துரத்தும்  பயமதை
சாட்டைதனை கொண்டு  அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!

வாழ்க்கை என்பது  வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை மிக அருமை நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 10:17

Nisha wrote:உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி  அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி

நம்பி க் கை  தந்து    
உன் மனம் திறக்க வைத்து  
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!

உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
 
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம்  நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!

அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ahmad78 Tue 18 Mar 2014 - 13:32

அருமை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 14 Apr 2014 - 10:12

நன்றி பானு
நன்றி முஹைதீன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 14 Apr 2014 - 12:06

 இயற்கையில் இளகிடும்
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...!

இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....!

நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயே

காத்திட வா!

இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை இகமதில்
துன்பம் இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா!

இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...!

அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா!



Last edited by Nisha on Mon 14 Apr 2014 - 12:22; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ந.க.துறைவன் Mon 14 Apr 2014 - 12:18

அருமையான கவிதை நிசா பாராட்டுக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum