சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Khan11

என் மன வானில்! விடை யறியா தேடலிது

+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 5 Mar 2014 - 20:49

First topic message reminder :

எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!


என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((


Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 16 Nov 2015 - 19:38

அப்படியா? 

தேடி.. தேடி கண்ட பொருட்கள்  ஒரு நொடி நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டாலும் ரெம்ப வலிக்கும் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:44

Nisha wrote:அப்படியா? 

தேடி.. தேடி கண்ட பொருட்கள்  ஒரு நொடி நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டாலும் ரெம்ப வலிக்கும் தானே?

மறைந்தாலும் நம் மனதில் என்றும் வாழுவார்கள் இல்லையா அதுவே ஒரு சுகம்தான் அக்கா
கண்ணில்தான் மறையலாம் ஆனால் மனதில் மறைய மாட்டார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 16 Nov 2015 - 20:49

இதுவும் கடந்து  போகும்

நிலையா இந்த உலகில் நிலைத்தவை தான் என்னே?
நிலைத்தவர்கள் யாரோ?
கலையும் நினைவில் நிலையாய், நிலைத்து நிற்கும் 
நினைவில் வலிகள் மட்டும் தானே
நிலையாய் என்றும் தொடரும்
நிலையா இவ்வுலகில் சிலையாய் நிலைத்தோரில்ல

கூறு போடும் நினைவாய் மாறும் மனித மனதில் மாறாதிருப்பதெல்லாம் 
தொடரும் வலிகள் தானோ?பாதை எல்லாம் வாதை! 
தெரிந்தே செல்லும் பேதை மனதை அடக்கியாள முடியா கோழை!
காதல் என்ற பெயரில் கந்தலாகும் அன்பு 
காட்டும் அன்பு கூட காதலென சொல்லும்
தாகம் தீர்ந்த பின்னே  தூரமாகி போகும்!

தொலைந்த நினைவை தேடி அலையும் மனது கலையும் விந்தை என்னே?
சிந்தை செயல்கள் எல்லாம் மந்தையாய் ஓரிடத்தில்
விந்தை செய்யும் நிலையை கடத்தல் என்ன கடிதோ?
கானல் நீர் தான் எல்லாம்!
பொய்யாய்ப்போகும் மெய்கள் மெய்யை துடிக்க வைக்கும் 
போதும் இந்த வேசம், இதுவும் கடந்தே போகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Tue 17 Nov 2015 - 10:51

நிலையா இந்த உலகில் நிலைத்தவை தான் என்னே?
நிலைத்தவர்கள் யாரோ? 
அருமையான ஒரு ஆரம்பமும் வரிகளும் வாவ் எதுவும் நிலையற்றதாய் இருக்கும் இந்த உலகில்  நானும் நீயும் நாமும் நிலையற்றதாய் இருக்கும் போது வலிகள் மட்டும் எப்படி நிலையாகும் அதற்கும் முற்றுப்புள்ளி உள்ளது   சில வரிகளைப் புரிநது கொள்ள முடியா விட்டாலும் புரிந்த வற்றுடன் சொல்கிறேன் அருமையாக உள்ளது
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by சே.குமார் Tue 17 Nov 2015 - 21:02

அக்கா கவிதை கலக்கல்...
இனி சாதா நிஷா இல்லை...  கவிதாயினி நிஷா என்று அழைக்கப்படுவீர்களாக...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 17 Nov 2015 - 21:09

சே.குமார் wrote:அக்கா கவிதை கலக்கல்...
இனி சாதா நிஷா இல்லை...  கவிதாயினி நிஷா என்று அழைக்கப்படுவீர்களாக...

இன்னிக்கு என்னாச்சு குமார்? எதேனும் டானிக் குடித்தீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Sun 20 Dec 2015 - 21:25

அன்பு என்பது........
பாசம் என்பது பாரமாகுமா..
நேசம் என்பதும் நெஞ்சைத்
தொட்டுச்செல்லுமா...? 

வாழ்க்கை முழுவதும் 
வாதை ஆகுமா
இன்பம் தேடினால்
என்றும் இனிமை போகுமா? 

அன்பாய் அரவணைப்பதும் .
என்னை அடிமை ஆக்குமா. 
இத்தனை வலி ,, 
இந்த அன்பில் தோன்றுமா? 

பந்தம் என்பதும்
பாசம் என்பதும் 
வந்த சொந்தத்தால் 
நிந்தை ஆகுமா? 

பேதை என் உள்ளம் 
வேதனை தனை 
சோதனையோடு 
சகிக்க வேண்டுமா? 


இல்லை...........இல்லை


அன்பு என்பது 
அன்னை அன்பை ஜெயிப்பது 
பாசம் என்பது 
தந்தை அறிவைக்கொடுப்பது

நேசம் என்பது 
நட்பில் நிழலாய் இருப்பது 
அணைப்பு என்பது
அகிலம் ஜெயிக்க செய்வது 

வாழ்க்கை முழுவதும்... ஜெயிக்கும் 
வல்லமை தருவது 
நினைக்கும் போதிலே 
இனிய நினைவைத்தருவது

பந்தம் என்பது 
உயிர் கொடுப்பது 
சொந்தம் என்பது
என்றும் நிலைத்து நிற்பது.

துன்ப நேரத்தில் பெரும் 
நிழலாய் இருப்பது 
துவளும் போதிலே 
தாங்கும் தூணாய் இருப்பது 

இத்தனை பயன்
இந்த அன்பில் இருக்க
அத்தனை அன்பும் எனக்கு
வேண்டாம் என்பேனா.... ? 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Sun 20 Dec 2015 - 21:28

பந்தம் என்பது
உயிர் கொடுப்பது
சொந்தம் என்பது
என்றும் நிலைத்து நிற்பது.

துன்ப நேரத்தில் பெரும்
நிழலாய் இருப்பது
துவளும் போதிலே
தாங்கும் தூணாய் இருப்பது

இத்தனை பயன்
இந்த அன்பில் இருக்க
அத்தனை அன்பும் எனக்கு
வேண்டாம் என்பேனா.... ?
நிச்சியமாக இல்லை
யார்தான் வேண்டாம் என்பா
சூப்பராக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Sun 20 Dec 2015 - 22:42

 என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?


பண்புள்ள மானிடாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன? 
ஒரு  நொடி நான் துவண்டால்
மறு நொடி  உன் கலக்கமென்ன?

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Sun 20 Dec 2015 - 22:43

விடை யறியா தேடலிது

சிட்டுகுருவியாய் 
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து 

சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து 
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே

தாயன்பு நானறியேன் 
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில் 
அனைத்தையுமே அளித்தவனே

எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...

யானுக்கு அடிமையென்றவனே.. 
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே

யார் என்று நீயுரைத்து 
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 9:05

Nisha wrote: என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?


பண்புள்ள மானிடாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன? 
ஒரு  நொடி நான் துவண்டால்
மறு நொடி  உன் கலக்கமென்ன?

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!

அருமையாக உள்ளது அக்கா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 9:06

Nisha wrote:விடை யறியா தேடலிது

சிட்டுகுருவியாய் 
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து 

சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து 
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே

தாயன்பு நானறியேன் 
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில் 
அனைத்தையுமே அளித்தவனே

எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...

யானுக்கு அடிமையென்றவனே.. 
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே

யார் என்று நீயுரைத்து 
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?

ஏன் ஏன் ஏன் இப்படி யார் என்று நீயுரைத்து 
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
பதில் சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Dec 2015 - 9:43

அருமையான கவிதை வாழ்த்துகள். யாரது அக்கா ?


என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 9:46

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை வாழ்த்துகள். யாரது அக்கா ?
நீங்க வேற அது வெறும் கற்பனையாக்கும் இதுதான் நிஷா அக்காவின் பதில் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Dec 2015 - 9:50

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை வாழ்த்துகள். யாரது அக்கா ?
நீங்க வேற அது வெறும் கற்பனையாக்கும் இதுதான் நிஷா அக்காவின் பதில் சிரிப்பு வருது
அக்கா வந்து சொல்லட்டும் என்ன என்று 
எப்ப இருந்து நண்பன் அக்காவின் மனதை திருடினிங்க


என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Dec 2015 - 9:54

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 4151324062 என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 4151324062 
இப்படி குதிப்பேன் இப்படி குதிப்பேன் 
இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் 
இனி கொண்டாட்டம் தான் நான் ராஜாவுக்கே ராஜா 
போட்டுத்தாக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 10:22

அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:26

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை வாழ்த்துகள். யாரது அக்கா ?
நீங்க வேற அது வெறும் கற்பனையாக்கும் இதுதான் நிஷா அக்காவின் பதில் சிரிப்பு வருது
அக்கா வந்து சொல்லட்டும் என்ன என்று 
எப்ப இருந்து நண்பன் அக்காவின் மனதை திருடினிங்க

திருடியது மட்டும் அல்ல திரும்பி கேட்டாலும் தர மாட்டாராம். யாருக்கோ வித்துட்டாராம். அவர்கிட்டயும் இல்லையாம் என சொல்லிட்டாரே! ஆனாலும் நான் சொல்ல வெண்டியதை  இப்படி தான் சொல்வேன் என சொல்லி டீ குடிச்சிட்டிருந்த நான் சேனை  திறந்து இந்த திரிக்கும் வந்து கரெக்டாக   நண்பனின் பின்னூட்டமும் பார்த்து அப்படியே புரைக்கேறிருச்சி! சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஹாஹா.....! ஆமாம் கவிதையை கவிதையா எடுக்கணும். இதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்சும்மா! ஹிஹி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:27

இரவு போட்ட கவிதை இரண்டுமே  இரு வேறுபட்டோருக்கானதுன்னு  நிஜமாக தெரியவில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 11:33

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை வாழ்த்துகள். யாரது அக்கா ?
நீங்க வேற அது வெறும் கற்பனையாக்கும் இதுதான் நிஷா அக்காவின் பதில் சிரிப்பு வருது
அக்கா வந்து சொல்லட்டும் என்ன என்று 
எப்ப இருந்து நண்பன் அக்காவின் மனதை திருடினிங்க

திருடியது மட்டும் அல்ல திரும்பி கேட்டாலும் தர மாட்டாராம். யாருக்கோ வித்துட்டாராம். அவர்கிட்டயும் இல்லையாம் என சொல்லிட்டாரே! ஆனாலும் நான் சொல்ல வெண்டியதை  இப்படி தான் சொல்வேன் என சொல்லி டீ குடிச்சிட்டிருந்த நான் சேனை  திறந்து இந்த திரிக்கும் வந்து கரெக்டாக   நண்பனின் பின்னூட்டமும் பார்த்து அப்படியே புரைக்கேறிருச்சி! சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஹாஹா.....! ஆமாம் கவிதையை கவிதையா எடுக்கணும். இதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்சும்மா! ஹிஹி
ஹா ஹா நாங்க சொன்னோம்ல சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Dec 2015 - 2:02

நண்பன் wrote:
Nisha wrote: என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?


பண்புள்ள மானிடாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன? 
ஒரு  நொடி நான் துவண்டால்
மறு நொடி  உன் கலக்கமென்ன?

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!

அருமையாக உள்ளது அக்கா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

சுருக்கென முடித்து விட்டீர்களே! இக்கவிதை உங்களுக்கானதும் உங்களை மனதில் வைத்தும் பதிந்தேன் என தெரியாதோ?சொன்னால் தான் புரியுமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Dec 2015 - 19:38

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 2rf9dnp

கூரிய பார்வையோடு, வெயிலில் உருகி 
வயிற்றுப்பசிக்காய் இளமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து விடியலை தேடுமிவன் 
கண்ணில் தெரிவதெல்லாம்...நாளைய எதிர்காலம்...!
 
திக்கெட்டும் திசையெங்கும்  யாரையும் காணலையே!
நாலு கூறு பழம் விற்றால்  நாலு உயிர்ப்பசி அடங்கும் 
நாவல் பழம் விற்றிடுமோ வயிற்றுப்பசி தீர்ந்திடுமோ?
நாவரள நிற்கின்றான் நாளைய தலைவனாம் இவன்!

கல்வி கற்கும் வயதினிலே கடமையிவன் தலைமேலே
காத்திடுவான் இவனென்னும் நம்பிக்கையில் தாயங்கே!
இவன் சொல்லும் கதை கேட்டால் கண்ணீர் கூட இரத்தமாகும்!
இவன் தலையின் சுமை நாமறிந்தால் நம சுமையெல்லாம் பஞ்சாய்ப்போகும்!
 
தகப்பனில்லா பிள்ளையவன் சுமைதாங்கி யாகி விட்டான்
அரை வயிறும் கால் வயிறும் ஒன்றையொன்று தின்றிடுமே!
பசி என்ற சொல் தவிர இவன் உணர்ந்ததென்றுமில்லை
கருணைக்கிங்கே இடமில்லை. காலம் செய்யும் கோலம் இது!  
 
குட்டிப்பையன் சுட்டியாய்  துள்ளிவிளையாடும் வயதில் 
அமைதியாய் அடங்கியிங்கே உழைத்துப்பிழைக்கின்றான்
கால் போன போக்கில் வாழும் காளையரே கதை கேளீர்
காலமிவன் வாழ்வில் இட்ட சோகம் தனை  பாரீர். 

கருமை நிறக்கண்ணனாயிருந்து  காண்போரை கலங்க வைக்கும்  
கடமை கண்ணனிவன் காலமதை எதிர்த்து  நின்று 
கல்வியிலும் இவன் சிறந்து... கடமைகளை முடிப்பான் 
விளையும் பயிரிவனாம், விதியை வென்றிடுவான்.

பரிதாபம் காட்ட வேண்டாம். பரிவாய் நல் வார்த்தை வேண்டாம் 
பசிதாகம் தீர்த்துவிட்டால் பண்பாய் அவன் பிழைத்திடுவான். 
விடியல் அவன் வாழ்வில் உண்டு, விடைகள் நம் கரத்திலுண்டு!
கருணை கொண்ட உள்ளங்களே... கரங்களை நீர் நீட்டுங்களேன்!


ஹாசிமின் கவிதை கண்டும் நண்பன் அவர்களின் படம் கண்டு பிறந்த வரிகள்!
http://www.chenaitamilulaa.net/t50792-topic#475787


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 7:11

கவிதை வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 25 Dec 2015 - 15:42

சே.குமார் wrote:கவிதை வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.

 நன்றிப்பா! ஆல்ப்ஸ் தென்றலிலும் போட்டாச்சு

http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_25.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 16:02

Nisha wrote:
சே.குமார் wrote:கவிதை வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.

 நன்றிப்பா! ஆல்ப்ஸ் தென்றலிலும் போட்டாச்சு

http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_25.html
பார்க்கிறேன் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 9 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum