Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
First topic message reminder :
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஹலோ நான் யாரையும் குறித்து எழுதவில்லை.
கண்ணன் என்பது இந்துக்கள் வணங்குமொரு தெய்வத்தின் பெயராம். அதை வைத்து ஒரு கவிதை எழுதினேன்.
அதாவது தெய்வத்தினை நினைத்து விரதமிருந்து அவன அருள் வேண்டி நிற்கும் நிலையை எழுதினேன்.
நீங்கள் சும்மா கொழுத்திப்போடாதீர்கள்!
கண்ணன் என்பது இந்துக்கள் வணங்குமொரு தெய்வத்தின் பெயராம். அதை வைத்து ஒரு கவிதை எழுதினேன்.
அதாவது தெய்வத்தினை நினைத்து விரதமிருந்து அவன அருள் வேண்டி நிற்கும் நிலையை எழுதினேன்.
நீங்கள் சும்மா கொழுத்திப்போடாதீர்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஓ அந்த கண்ணன் பற்றின பாடலா சரி சரி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சுறா wrote:ஓ அந்த கண்ணன் பற்றின பாடலா சரி சரி
பின்னே நீங்கள் என்ன நினைச்சீர்கள் சார்? நான் என்ன எழுதினாலும் அதில் ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பித்தால் டாக்டர் பட்டம் தருவதாய் எவரேனும் சொன்னாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:சுறா wrote:ஓ அந்த கண்ணன் பற்றின பாடலா சரி சரி
பின்னே நீங்கள் என்ன நினைச்சீர்கள் சார்? நான் என்ன எழுதினாலும் அதில் ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பித்தால் டாக்டர் பட்டம் தருவதாய் எவரேனும் சொன்னாரோ?
அப்படி யாரும் சொல்லவில்லை. சரி ஏன் தூங்கலை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
இரவு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சாப்பாடு சமிக்கவில்லையா என தெரியவில்லை. ரெம்ப நாள் அப்புறம் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டதனாலோ என்னமோ.. தெரியல்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஓ அப்படியா? மரவள்ளி கிழங்கு சர்க்கரை மற்றும் ஏலக்காய் போட்டு சாப்பிடுங்கள். சீக்கிரம் செரிமானம் ஆயிடும்Nisha wrote:இரவு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சாப்பாடு சமிக்கவில்லையா என தெரியவில்லை. ரெம்ப நாள் அப்புறம் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டதனாலோ என்னமோ.. தெரியல்ல..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
தாயுமானவனே! தாயாய் ஆனவனே!
தரணியில் என் சேயாய் தனித்துவமானவனே!
ஒரு முகச்சுளிப்பினியே மனகவலைகள் அறிந்திடுவான்
குறும்புகள் பல செய்தே மனச்சஞ்சலம் தீர்த்திடுவான்!
கற்றதும் பெற்றதுவும் கலந்தே பேசி நிதம் கலகலப்
பூட்டிடுவான்.. செல்லமாய் சண்டை செய்தே
உரிமையை நிலைநாட்டுவான்.மௌனமாய்நானிருந்தால்
மழலையை பிரிந்த தாய் போல் பதறியே துடித்திடுவான்.
மனப்பாரம் தனை இறக்க தன் தோளை தந்திடுவான்.
சுமையால் வலித்தாலும் புன் சிரிப்பால் மறைத்திடுவான்.
அகம் கொண்ட அகமனதின் அல்லல்கள் புரிந்திடுவான்
அவனே அனைத்துமாவான்,அனைத்திலும் அவனிருப்பான்
மகனே அவனன்றோ! என் மனமே அவனன்றோ
மாசற்ற அன்பு காட்டும் எந்தன் தாயும் அவனன்றோ
சேயாய் எனை தாங்கும் தேவனும் அவனல்லவோ
தூய அன்புக்கிவன் அடங்கிடும் கண்ணனல்லோ!
.
தரணியில் என் சேயாய் தனித்துவமானவனே!
ஒரு முகச்சுளிப்பினியே மனகவலைகள் அறிந்திடுவான்
குறும்புகள் பல செய்தே மனச்சஞ்சலம் தீர்த்திடுவான்!
கற்றதும் பெற்றதுவும் கலந்தே பேசி நிதம் கலகலப்
பூட்டிடுவான்.. செல்லமாய் சண்டை செய்தே
உரிமையை நிலைநாட்டுவான்.மௌனமாய்நானிருந்தால்
மழலையை பிரிந்த தாய் போல் பதறியே துடித்திடுவான்.
மனப்பாரம் தனை இறக்க தன் தோளை தந்திடுவான்.
சுமையால் வலித்தாலும் புன் சிரிப்பால் மறைத்திடுவான்.
அகம் கொண்ட அகமனதின் அல்லல்கள் புரிந்திடுவான்
அவனே அனைத்துமாவான்,அனைத்திலும் அவனிருப்பான்
மகனே அவனன்றோ! என் மனமே அவனன்றோ
மாசற்ற அன்பு காட்டும் எந்தன் தாயும் அவனன்றோ
சேயாய் எனை தாங்கும் தேவனும் அவனல்லவோ
தூய அன்புக்கிவன் அடங்கிடும் கண்ணனல்லோ!
.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
உங்க கண்ணன் புராணம் தொடர்கிறதோ? அழகான கவிதை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:தாயுமானவனே! தாயாய் ஆனவனே!
தரணியில் என் சேயாய் தனித்துவமானவனே!
ஒரு முகச்சுளிப்பினியே மனகவலைகள் அறிந்திடுவான்
குறும்புகள் பல செய்தே மனச்சஞ்சலம் தீர்த்திடுவான்!
கற்றதும் பெற்றதுவும் கலந்தே பேசி நிதம் கலகலப்
பூட்டிடுவான்.. செல்லமாய் சண்டை செய்தே
உரிமையை நிலைநாட்டுவான்.மௌனமாய்நானிருந்தால்
மழலையை பிரிந்த தாய் போல் பதறியே துடித்திடுவான்.
மனப்பாரம் தனை இறக்க தன் தோளை தந்திடுவான்.
சுமையால் வலித்தாலும் புன் சிரிப்பால் மறைத்திடுவான்.
அகம் கொண்ட அகமனதின் அல்லல்கள் புரிந்திடுவான்
அவனே அனைத்துமாவான்,அனைத்திலும் அவனிருப்பான்
மகனே அவனன்றோ! என் மனமே அவனன்றோ
மாசற்ற அன்பு காட்டும் எந்தன் தாயும் அவனன்றோ
சேயாய் எனை தாங்கும் தேவனும் அவனல்லவோ
தூய அன்புக்கிவன் அடங்கிடும் கண்ணனல்லோ!
.
மனதை அள்ளும் கவி அருமை நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அன்பான நண்பனாக கண்ணா நீ வாழ்கசுறா wrote:உங்க கண்ணன் புராணம் தொடர்கிறதோ? அழகான கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
என் செய்வோம், ஏது செய்வோம்
என்றறியோம் என்பவரே!
நாணல் போல் ஒடிந்து விடும்
நாணமற்ற காளையரே!
உழைத்து உழைத்து சேரர்ந்தாலும்
உறுதியாய் வைரம் பாய்ந்த கரங்கள் பாரீர்!
நாடு போற்ற வாழ்ந்து நிற்கும்
உத்தமனில் விரல்கள் காணீர்!
உண்மைக்கும், உழைப்புக்கும்
உரமாய் திகழ்ந்திட்டவர்
உயிராய் இருக்கும் வரை
உழைத்தே பிழைத்திடுவர்!
கைகளின் கருமையதவர்
உள்ளத்தின் வெண்மை தனை
உரைத்திரும் உரை கல்லாம்
உணர்ந்திடுவீர் இளைஞர்களே!
ஒரு நொடி ஓய்ந்தாலும் நாளை
நமக்கில்லை என ஓய்ந்திடாது
உழைத்திட்ட கரங்களை
மிதித்திடாமல் மதித்திடுவீர்!
என்றறியோம் என்பவரே!
நாணல் போல் ஒடிந்து விடும்
நாணமற்ற காளையரே!
உழைத்து உழைத்து சேரர்ந்தாலும்
உறுதியாய் வைரம் பாய்ந்த கரங்கள் பாரீர்!
நாடு போற்ற வாழ்ந்து நிற்கும்
உத்தமனில் விரல்கள் காணீர்!
உண்மைக்கும், உழைப்புக்கும்
உரமாய் திகழ்ந்திட்டவர்
உயிராய் இருக்கும் வரை
உழைத்தே பிழைத்திடுவர்!
கைகளின் கருமையதவர்
உள்ளத்தின் வெண்மை தனை
உரைத்திரும் உரை கல்லாம்
உணர்ந்திடுவீர் இளைஞர்களே!
ஒரு நொடி ஓய்ந்தாலும் நாளை
நமக்கில்லை என ஓய்ந்திடாது
உழைத்திட்ட கரங்களை
மிதித்திடாமல் மதித்திடுவீர்!
Last edited by Nisha on Fri 19 Dec 2014 - 18:26; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
உங்களவரின்Nisha wrote:தாயுமானவனே! தாயாய் ஆனவனே!
தரணியில் என் சேயாய் தனித்துவமானவனே!
ஒரு முகச்சுளிப்பினியே மனகவலைகள் அறிந்திடுவான்
குறும்புகள் பல செய்தே மனச்சஞ்சலம் தீர்த்திடுவான்!
கற்றதும் பெற்றதுவும் கலந்தே பேசி நிதம் கலகலப்
பூட்டிடுவான்.. செல்லமாய் சண்டை செய்தே
உரிமையை நிலைநாட்டுவான்.மௌனமாய்நானிருந்தால்
மழலையை பிரிந்த தாய் போல் பதறியே துடித்திடுவான்.
மனப்பாரம் தனை இறக்க தன் தோளை தந்திடுவான்.
சுமையால் வலித்தாலும் புன் சிரிப்பால் மறைத்திடுவான்.
அகம் கொண்ட அகமனதின் அல்லல்கள் புரிந்திடுவான்
அவனே அனைத்துமாவான்,அனைத்திலும் அவனிருப்பான்
மகனே அவனன்றோ! என் மனமே அவனன்றோ
மாசற்ற அன்பு காட்டும் எந்தன் தாயும் அவனன்றோ
சேயாய் எனை தாங்கும் தேவனும் அவனல்லவோ
தூய அன்புக்கிவன் அடங்கிடும் கண்ணனல்லோ!
.
உங்களைப்பற்றிய என்னச்சுவலைகள்
உங்களருகினில் வெற்றிக்கதிர்களாய் வீசட்டுமென
உளமாற வாழ்த்துகிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே நான்கடி
எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே நான்கடி
எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அன்னை ஒரு கோவில் என்னால்
அண்ணன் ஒரு தெய்வமன்றோ?
அண்ணன்கள் தங்கைகளுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தாயுமானவர்.
அழகான கவிதை
அண்ணன் ஒரு தெய்வமன்றோ?
அண்ணன்கள் தங்கைகளுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தாயுமானவர்.
அழகான கவிதை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
வாழ்க்கை நமக்குள் வரமாகட்டும்
சோதனைகள் வரும் நேரம்
துவண்டு விடாதீர்கள்!
சாதனைகள் தொடந்து வந்தால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் சுருண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பது வரமாகாதே!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
எள்ளல் வார்த்தைகள் எரிக்க தெரியணும்
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
சோதனைகள் வரும் நேரம்
துவண்டு விடாதீர்கள்!
சாதனைகள் தொடந்து வந்தால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் சுருண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பது வரமாகாதே!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
எள்ளல் வார்த்தைகள் எரிக்க தெரியணும்
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
உண்மைதானக்கா....
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அருமை நிஷா..Nisha wrote:வாழ்க்கை நமக்குள் வரமாகட்டும்
சோதனைகள் வரும் நேரம்
துவண்டு விடாதீர்கள்!
சாதனைகள் தொடந்து வந்தால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் சுருண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பது வரமாகாதே!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
எள்ளல் வார்த்தைகள் எரிக்க தெரியணும்
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
- Code:
எள்ளல் வார்த்தைகள் எரிக்க தெரியணும்
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சே.குமார் wrote:உண்மைதானக்கா....
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.
நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ந. ந காயத்ரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
தொட்டதெல்லாம் தெவிட்டிடாத தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி வேறறியேன்
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும்
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே!
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம் நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய்
கலங்கிடுவான், துலங்கி நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான்.
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை.
நல்ல வார்த்தை தனை பேசி நம் துயரை மறக்க செய்வான்.
தெய்வம் தந்த தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!
அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே அண்ணா என்றான்.
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான்.
தமையன் கூட தயங்கி நின்றான். தங்கம் இவன் என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும்
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே
அரணாய் என்னை காத்திடுவான். இவனே எந்தன் தம்பி அல்லோ!
சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன்.
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.
கலகலப்பாய் கதைகள் பேசி கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன் நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.
நீயே தானே எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும் நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல்.
நல்லவர்கள் இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும் நம்மை விட்டு நாடு விட்டு செல்வதில்லை.
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.
சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை.
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை.
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை.
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும் நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
சேனையில் என்றும் டாப் வின்னராய் ஜொலிக்கும்
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
எங்கள் அன்பு நணபனின் 80000 பதிவுகளுக்காக
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
அறிந்தோர் அறியாதோர் எவரா
யிருந்தாலும் அரணாம் என் நட்பென்று
உணரசெய்திடவே நண்பன் எனும்
நாமம் தரித்தவனே நீ வாழி!
குறுகிய நாட்களிலே குணத்தால்மனம்
ஜெயித்து பாலய நட்பு முதல் பருவ நட்பு
வரை பதமாய் அன்பு காட்டிஎன் உயிர்
நண்பன் இவனென போற்றபடுபவனே நீ வாழி !
உனையறியா பொழுதினிலே
உனை வாழ்த்த என்னுள்ளே
மழை போல் சொரிந்திட்ட
வார்த்தையெனும் வாழ்த்துப்பா!
உனையறிந்த பொழுதினியே
வாழ்த்திடத்தான் வார்த்தையன்றி
ஓடியொழிந்த மாயமென்ன
நானறியேன் அன்புறவே!
சோதரனாய் உருமாறி உணர்வுக்குள்
உயிர் கொடுத்து உலகத்து
அன்பையெல்லாம அள்ளிதந்து
என்னுள் விஸ்வரூபமானவனே !
கணம் கூட சிணுங்காது, அழைக்கும்
பொழுதிலெல்லாம் தயங்காது
வாழ்க்கையெனும் சோலையிலே
விருட்சமானவனே !
இல்லார்க்கு இல்லையென்றாது
அல்லலுறும் மாந்தர் துயர்
கண்டு மனம் இரங்குமிவன்
மனிதரில் மாணிககமே !
அக்கரையில் மனம் கவரும் நாயகனாய்
சுட்டித்தனம் செய்திட்டதை குட்டி
குழந்தை போலே சுட்டும் எங்கள்
செல்ல அப்புக்குட்டியும் இவனே !
வெட்டிக்கதை பேசி வீணாய் போகாது
பாங்காய் நயம்படவுரைத்து நல்வார்த்தை
தனை கூறி நல்ல நண்பன் நானேயென
நட்பாய் கரம் தருவான் !
கள்ளமில்லை கபடமில்ல வன்மமில்லை
சூழ்ச்சியில்லை, வந்த வழி மறவாத
வாய்மைதனை உதறாத, வார்த்தை யென்றும்
மாறாத அன்புச்செம்மலும் இவனே !
கரும்பாய் இனிக்குமிவன் பேச்சில்
குறும்பு மிளிர்ந்தாலும் அத்தனையும்
அக்கறையாய் அகம் நிறையசெய்யும்
விந்தை தனை என்னவென்பேன்!
முன்னொரு பொழுதினிலே
இவன் யாரோ நான் யாரோ
இற்றைய நிகழ்வினிலே
இவன் வேறோ நான் வேறோ !
உன்னில் நான் எனை கண்டேன்
என் சிந்தை உனைக்கொண்டேன்
கன்றாய் எனை தொடர்ந்திட்டாலும்
குன்றாய் என்னுள் உயர்ந்து நின்றாய !
உனைபோல் உடன் பிறபொன்றை
உடன் பிறப்பாய் அடைந்திட்டவர்
செய்த வரம் தனை நான் உணர்ந்தே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
இன்னும் இன்னும் வேண்டுமக்கா என்று
சொல்லி வேண்டியே யென் எணண
மெல்லாம் கொள்ளை கொண்டு சிந்தை தனை
மயக்கிவிட்ட சின்னக்கண்ணன் இவன் அல்லவோ
இத்தனை நாள் எங்கிருந்தாய்!
ஏன் ஓடி ஒழிந்திருந்தாய்..!
மறைந்திருந்த அன்புணர்ந்த நொடி முதலாய்
என் கண்ணில் கண்ணீராய் சொரிகின்றதே !
உனை வாழ்ந்த நான் நினைத்தால்
கண்ணீர் போல் வார்த்தைகளும்
என்னுள்ளத்தில் மழை போல்
சோவெனத்தான் பொழிகின்றதே !
எத்தனைபேர் எம் வாழ்வில்
இடை நடுவே வந்திட்டாலும்
வந்த வழி சென்றிடுவர்
சொந்தமில்லை உணர்த்திடுவர்!
இணையாத இணையத்தின் இதமாய்
பலர் தொடர்ந்தாலும் என் தம்பி
இவனென்று நாடறிய எவரையுமே
நான் எங்கும் சொன்னதில்லை !
இவனன்றி இன்னொருவரில்லை!
இவன் போலே யாருமில்லை!இவனுக்கு
நிகரிவனே மனமார்ந்து செப்புகின்றேன் !
இவனே என் தம்பி என்று !
அக்காவென அழைத்து தினம்
அகம் நிறையச்செய்து மனம்
தனை வென்று விட்டான்
இவன் என் தம்பியல்லோ !
அக்காவென அழைக்கும் நொடியில்
இவன் உதிரம் என்னில் இல்லாமல்
போனதேனென ஏங்க வைப்பதை
என்ன சொல்லி புரிய வைப்பேன்!
இன்னொரு பிறப்பிருந்தால என்
உடன்பிறந்து உன் அன்பை அணுவணுவாய்
நான் ருசிக்க அருள் வேண்டும்
வரம் கேட்டேன் இறைவனிடம் !
உந்தன் சொந்தம் எந்தன் உயிர்
உள்ளவரை எனக்கு வேண்டும்
இறைவனிடம் யாசிக்கின்றேன்
வரம் தருவானா என் இறைவன் !
வேறேதும் எனக்கு வேண்டாம்
இந்த அன்பும் அக்கறையும்
நலமாவெனும் நல் மொழி்யையுமே
நாள்தோறும் நாடுகின்றேன் !
மனம் கோணா மாந்தனிவன்
சினம் தனை வென்றிட்டிட்ட
பதிவுகளோ எண்பதினாயிராமாய்
தனமிருந்தாலும் கனமில்லா !
குணக்குன்று இவனன்றோ
மன்னிப்பின் சிகரமிவன்
பொறுமைதனை இறைவனிடம்
கைமாறாய் வாங்கிட்டவன் !
உனை ஈன்ற தாய் வயிறும்
உன் கரம் நடத்திய தந்தை கரமும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
சான்றோன் நீ என்பதை அறிவாரோ?
நானறியேன் என்றாலும்
நானுணர்ந்து வாழ்த்துகின்றேன்..
நல்லவனே நீ வாழி!
நலலுறவே உன் பணி வாழி !
சேனைத்தமிழ் உலாகொடுத்த
சொக்கத்தங்கம் நீதானப்பா!
ஆல் போலே செழித்தோங்கி
நாணல்போலோ படர்ந்திடுவாய் !
எத்தனை தான் வாழ்த்திட்டாலும்
எந்தன் மன உணர்வினிலே
பொங்கி நிற்கும் மகிழ்வுடனே
நலமாக நீவாழ மனமாற வாழ்த்துகின்றேன் !
நீவீர் வாழ்க! உன் குலம் வாழ்க! உன்னில்
உதித்த குருத்துக்களும் குணத்திலே
குன்றாகி புகழோடும் பொருளோடும்
தரணியிலே தழைத்தென்றும் வாழ்க !
எமக்கெல்லாம் எட்டாக்கனியாம்
எண்பதினாயிரம் எண்ணச்சிதறலகளை
எம்மில் விதைத்தவனை எண்ணம்
போல வண்ணத்தினால் வாழ்த்துகின்றோம் !
சேனையின் சிகரமிவன் சேவையென்றும்
குன்றாது நன்றே என்றும் தொடர்ந்திடத்தான்
நயமாக வேண்டி நாமும் நல் வார்த்தை
தனை கூறி வாழ்த்திடலாம் வாருங்களேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அன்னை அன்பில் நிறைந்த அன்பின் சிகரமிவன்
இதமாய் தருமிவனின் இனியசொல் கேட்டு
இதயம் இயங்கிடுமே,, நிதமும் மயங்கிடுமே!
இவனுக்கு நிகர் இவனேயன்றி இகத்தில் யாருமிலர்!
என்னகத்தை வென்றிட்டவன், என்னகத்தில் நிறைந்திட்டவன்!
என்னலத்தில் இவன் காட்டும் அனைத்தும் அன்பில் தானே!
என்னாளும் பிறர் நலனில் தன்னலத்தை ஜெயித்து நிற்கும்
கண்ணான கண் இவனாம் சேனையின் கண்ணே தான் இவனாம்!
தக்கார், தகவிலார் எவராயிருந்தாலும் நட்பாய் இவனிருப்பான்
செருக்காய் எவரிங்கே தவறாய் நடந்தாலும்
தப்பாய் எவரையுமே தட்டிக்கழிக்க மாட்டான்!
தப்பை உணர்த்திடவே தாழ்ந்து சென்றிடுவான்.
இன்னுமின்னுவனுக்கு இனபமாய் பாடிடலாம்
உள்ளத்தில் இருப்பதையே ஊர் போற்ற கொட்டிடலாம்
என்ன தான் வரம் வேண்டும் என்று சொல் என கேட்டால்
தப்பாமல் செப்பிடலாம்... தயங்காமல் வேண்டிடலாம்
இவன் போல அன்னை வேண்டும். இவன் போல தம்பி வேண்டும்.
இவன் போல அண்ணன் வேண்டும். உடன் பிறப்பாய் இவன் வேண்டும்
உள்ளத்தில் கலக்கங்கள் இருளாய் நிறைந்திட்டாலும் உயிர்ப்பாய்
உடனிருப்பாய் உவகை தந்திடுவான்..
சேனையெனும் சோலையிலே வேராய் இவனிருக்க
சாலையில் செல்வோரெல்லாம் சோலையை எட்டிப்பார்க்க
காலை, மாலையென தினம் தோறும் நீருற்றி காத்திடும்
இவனிட்டவை 85000 பதிவுகளும் அன்பை ஜெயித்த்வையாம்...!
படங்கள், பதிவுகள், பட்டவைகள், தொட்டவைகள் என்றே
தேடி த்தேடி பட்டாம் பூச்சி போல பறந்தே பதிந்திட்டான்!
பணிவை தனதாக்கி பலரை கவர்ந்தும் விட்டவனை வாழ்த்திடலாம்
மனமார வாழ்த்து கூறி பட்டமும் தான் கொடுத்திடலாம்!
http://www.chenaitamilulaa.net/t48344-85-000நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அடடடடா மொத்த வாழ்த்தும் எனக்கேதான் கிடைத்ததா? ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு விதமாக ஒன்றோடொன்று சேராமால் தனித்தனியாக வாவ் வாவ் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு வரைப் பற்றி இத்தனை வரிகளும் எழுத முடியுமென்றால் அது உங்களால் மட்டும்தான் முடியும். இப்படி நான் எங்கும் பார்த்ததும் இல்லை அறிந்ததுமில்லை. மிக மிக அருமையாக உள்ளது. எனக்கே ஆசை வந்து விட்டது. அனைத்து வாழ்த்தையும் ஒரே இடத்தில் களஞ்சியப்படுத்த
நேரம் கிடைக்கும் போது செய்து விட வேண்டும்.
என் அன்பு அக்காவிற்கு என்றும் என் அன்பும் மகிழ்வும்
நேரம் கிடைக்கும் போது செய்து விட வேண்டும்.
என் அன்பு அக்காவிற்கு என்றும் என் அன்பும் மகிழ்வும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சேசே! இது உங்களுக்கு இல்லை வேறே ஒருவருக்கு எழுதியது.
நான் எழுதியதை ஒரே திரியில் கொண்டு வரவென தேடிகிட்டிருக்கேன்.
மீதி கவிதைகளை தேடிக்கொடுங்கப்பூ!
நான் எழுதியதை ஒரே திரியில் கொண்டு வரவென தேடிகிட்டிருக்கேன்.
மீதி கவிதைகளை தேடிக்கொடுங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் ஒரு வேடிக்கை
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வெள்ளை வானில் கடத்தல்
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|