சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள். Khan11

இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள்.

Go down

இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள். Empty இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 17:41

ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும் மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள். மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்…

பால்ய விவாகம்:
பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

ஊட்டச்சத்து இல்லாமை:
கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.

பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:
பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது!

மேம்படுத்தப்படாத பிரவச இடம்:
கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:
பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள். Empty Re: இன்னும் குறையாத பிரசவக் கால மரணங்கள்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 17:43

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.

பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது!

உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum