Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அரக்கத்தனமாக
3 posters
Page 1 of 1
அரக்கத்தனமாக
தான் என்ற எண்ணம் இந்த உலகு அனைத்தையும் தன்னுடைய உடமையாக ஆக்கிக்கொள்ள முயலும் வரை மனிதனின் வாழ்க்கை அசுரமாக (அரக்கத்தனமாக ) இருக்கிறது.
தான் என்பதையும், தனது என்பதையும் முழுமை என்ற உலக உணர்வு பூர்ணமானப் பார்வையில் ஆஹுதி செய்யும் பொழுது , உலகம் ஏற்கனவே அனைவருக்கும் சொந்தமாக இருப்பதை மட்டும் உணர்வதில்லை
மனிதன், தான் மனிதனிலும் மிகவும் உயர்ந்து தேவ நிலையை எய்திய அமைதி அவன் மூச்சில் இழையோடுகிறது.
மனிதனின் அறிவு கணக்குப் போடுகிறது. அடையப் போகும் நிலை,
இப்பொழுது இருக்கும் நிலையை விட போதிய அளவு சுகமும் லாபமும் உடையதாக இருக்குமா?
அதற்காக இதை விடத் துணியலாமா?
லாப நஷ்டக் கணக்கில் உலகின் உயர்வுப் பாதைகள் கட்டப்படவில்லை என்கின்றன ஹிந்து மத சாத்திரங்கள்.
லாப நஷ்டக் கணக்கு பார்த்து, விடலாமா என்று யோசிக்க முடியாது.
தான் என்பதையும், தனது என்பதையும் துணிந்து விட்டபின்னர்தான் புதிய கணக்குகள் திறந்துகொள்கின்றன. விட்டது அல்பம்; பெற்றது மஹத் என்று அப்பொழுதுதான் புரியத் தொடங்குகிறது.
இந்தத் தெளிவு, தான் தனது என்ற இரண்டும் உள்ள பொழுது ஏற்பட்டால் இதையும் கூறு போட்டு விற்கத்தான் ஆறடி நிலத்து ஜமீந்தாரின் லாபக் கணக்கு ( ஆறடி நிலத்து ஜமீன்தார் - நாம் தான் ) புத்தி வேலைசெய்யும். பெரும் மஹத்தை மண்ணுருண்டையாக்கும் வித்தை நம் அஹங்காரத்திற்கே கைவந்த கலை.
எனவேதான். மனிதன் தான் எனும் தூணைப் பிளந்த நரசிம்ஹமாய் வெளிவர வேண்டும் .
மனிதன் மனிதனாக இருப்பதே தனது பிரத்யேக முயற்சியால்தான் . இதுவே மனித வாழ்வின் இயல்பாக அமைந்திருக்கிறது. என்னும் பொழுது, மனிதர் தம்மினும் உயர்ந்த தரத்தினராய் ஆவது என்பது தன்னுடைய தொடர்ந்த சுய உணர்வில், தொடர் முயற்சி செய்வதாலே தான்.
முழு விழிப்பு நிலையே முத்தி மார்க்கத்தின் முதல் படி. அந்த விழிப்பு நிலையின் சடங்காகிவிடாத சைதன்யம் மிக்க பயிற்சிதான் தவம் என்பது.
மனிதன் பிறந்தான் என்ற காரணத்தாலேயே பெரும் கடனாளியாக இருக்கிறான். அவன் அவனாக உருப்பெற்றதற்கு உதவிய உலகக் கூறுகள் ஏராளம். அவனது சுய விழிப்பு முழுமை அடைய அடைய அவன் உணரும் கனமான கடனாக இந்தக் காரண நன்மைகள் கவனத்திற்கு வருகின்றன. இவற்றுக்கு அவன் பிரதி கொடுத்தாக வேண்டும். திருப்பியாக வேண்டிய கடன்கள் பல உண்டு. அவன் அவற்றைத் திருப்பி அளிப்பதுதான் தாநம்.
சமுதாயத்திலிருந்து பலவற்றைப் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிக்க வேண்டியவை தானம் . இயற்கையிலிருந்து பலதும் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிப்பது தாநம்.
தன் முன்னோரிடமிருந்து பலவற்றைப் பெற்றான். அவர்க்குத் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம்.
எதிர்காலத்தில் மனித குலம் இஹ பர (இம்மை, மறுமை ) வாழ்க்கைகள் இரண்டும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த மனிதன் எதிர்காலத்திற்காக அளிப்பது தானம்
சக மனிதன் கஷ்டப் படுவதைக் கண்டு இரக்கம் கொண்டு அளிப்பது என்பது அவன் இயல்பில் வருவது.
நன்கு உணர்ந்து நேர்கொடு நேர் ஆற்றப்படவில்லை என்பதுதான் வித்யாசம்.
இந்த மனித குலப் பொதுமையான மூன்று விஷயங்களிலும் வர்ணப் பாகுபாடுகளைக் கலந்தது போன்ற அவலம் வேறு எதுவும் இல்லை. (பிறப்பால் குலபாகுபாடு, செய்யும் தொழிலால் பாகுபாடு, உயிர் போன பின்னும் இவன் இறைக்கு தொண்டு செய்தவன்/செய்யாதவன் - என்கிற மூன்று விஷயங்கள் தாம்)
தான் என்பதையும், தனது என்பதையும் முழுமை என்ற உலக உணர்வு பூர்ணமானப் பார்வையில் ஆஹுதி செய்யும் பொழுது , உலகம் ஏற்கனவே அனைவருக்கும் சொந்தமாக இருப்பதை மட்டும் உணர்வதில்லை
மனிதன், தான் மனிதனிலும் மிகவும் உயர்ந்து தேவ நிலையை எய்திய அமைதி அவன் மூச்சில் இழையோடுகிறது.
மனிதனின் அறிவு கணக்குப் போடுகிறது. அடையப் போகும் நிலை,
இப்பொழுது இருக்கும் நிலையை விட போதிய அளவு சுகமும் லாபமும் உடையதாக இருக்குமா?
அதற்காக இதை விடத் துணியலாமா?
லாப நஷ்டக் கணக்கில் உலகின் உயர்வுப் பாதைகள் கட்டப்படவில்லை என்கின்றன ஹிந்து மத சாத்திரங்கள்.
லாப நஷ்டக் கணக்கு பார்த்து, விடலாமா என்று யோசிக்க முடியாது.
தான் என்பதையும், தனது என்பதையும் துணிந்து விட்டபின்னர்தான் புதிய கணக்குகள் திறந்துகொள்கின்றன. விட்டது அல்பம்; பெற்றது மஹத் என்று அப்பொழுதுதான் புரியத் தொடங்குகிறது.
இந்தத் தெளிவு, தான் தனது என்ற இரண்டும் உள்ள பொழுது ஏற்பட்டால் இதையும் கூறு போட்டு விற்கத்தான் ஆறடி நிலத்து ஜமீந்தாரின் லாபக் கணக்கு ( ஆறடி நிலத்து ஜமீன்தார் - நாம் தான் ) புத்தி வேலைசெய்யும். பெரும் மஹத்தை மண்ணுருண்டையாக்கும் வித்தை நம் அஹங்காரத்திற்கே கைவந்த கலை.
எனவேதான். மனிதன் தான் எனும் தூணைப் பிளந்த நரசிம்ஹமாய் வெளிவர வேண்டும் .
மனிதன் மனிதனாக இருப்பதே தனது பிரத்யேக முயற்சியால்தான் . இதுவே மனித வாழ்வின் இயல்பாக அமைந்திருக்கிறது. என்னும் பொழுது, மனிதர் தம்மினும் உயர்ந்த தரத்தினராய் ஆவது என்பது தன்னுடைய தொடர்ந்த சுய உணர்வில், தொடர் முயற்சி செய்வதாலே தான்.
முழு விழிப்பு நிலையே முத்தி மார்க்கத்தின் முதல் படி. அந்த விழிப்பு நிலையின் சடங்காகிவிடாத சைதன்யம் மிக்க பயிற்சிதான் தவம் என்பது.
மனிதன் பிறந்தான் என்ற காரணத்தாலேயே பெரும் கடனாளியாக இருக்கிறான். அவன் அவனாக உருப்பெற்றதற்கு உதவிய உலகக் கூறுகள் ஏராளம். அவனது சுய விழிப்பு முழுமை அடைய அடைய அவன் உணரும் கனமான கடனாக இந்தக் காரண நன்மைகள் கவனத்திற்கு வருகின்றன. இவற்றுக்கு அவன் பிரதி கொடுத்தாக வேண்டும். திருப்பியாக வேண்டிய கடன்கள் பல உண்டு. அவன் அவற்றைத் திருப்பி அளிப்பதுதான் தாநம்.
சமுதாயத்திலிருந்து பலவற்றைப் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிக்க வேண்டியவை தானம் . இயற்கையிலிருந்து பலதும் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிப்பது தாநம்.
தன் முன்னோரிடமிருந்து பலவற்றைப் பெற்றான். அவர்க்குத் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம்.
எதிர்காலத்தில் மனித குலம் இஹ பர (இம்மை, மறுமை ) வாழ்க்கைகள் இரண்டும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த மனிதன் எதிர்காலத்திற்காக அளிப்பது தானம்
சக மனிதன் கஷ்டப் படுவதைக் கண்டு இரக்கம் கொண்டு அளிப்பது என்பது அவன் இயல்பில் வருவது.
நன்கு உணர்ந்து நேர்கொடு நேர் ஆற்றப்படவில்லை என்பதுதான் வித்யாசம்.
இந்த மனித குலப் பொதுமையான மூன்று விஷயங்களிலும் வர்ணப் பாகுபாடுகளைக் கலந்தது போன்ற அவலம் வேறு எதுவும் இல்லை. (பிறப்பால் குலபாகுபாடு, செய்யும் தொழிலால் பாகுபாடு, உயிர் போன பின்னும் இவன் இறைக்கு தொண்டு செய்தவன்/செய்யாதவன் - என்கிற மூன்று விஷயங்கள் தாம்)
Re: அரக்கத்தனமாக
எதிர்காலத்தில் மனித குலம் இஹ பர (இம்மை, மறுமை ) வாழ்க்கைகள் இரண்டும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த மனிதன் எதிர்காலத்திற்காக அளிப்பது தானம்
://:-: ##*
://:-: ##*
Re: அரக்கத்தனமாக
சிந்தித்து செயல் பட வேண்டி ஒரு கட்டுரை
சிறந்த பகிர்வுக்கு நன்றி அண்ணா
சிறந்த பகிர்வுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|