Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நான்....
Page 1 of 1
நான்....
மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான். சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
கடந்த வாரம், இதமான பாடல்களைக் கேட்டவாறு உறக்கங் செல்கிறேன். உறங்கியதும் திடீரென கனவு வருகிறது. எங்கள் வீட்டு முற்றத்தில் என் அப்பா, இரண்டு தங்கைகள், நான், தம்பி என எல்லோரும் கூடி நிற்கிறோம். அப்பா பேசத் தொடங்குகிறார்.
‘பிள்ளைகளே! எனக்கும் வயசு போகிறது. இனி உங்களின் எதிர் காலத்தை நீங்களே தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர்க்காலக் கனவுகள் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்?
‘முதலாவது தங்கை பதிலுக்கு ‘’அப்பா நான் யூனிவர்சிற்றி முடித்து எக்கவுண்டன்(Accountant) ஆக வரப் போகிறேன்; அது வரைக்கும் வீட்டிலை இருந்த படியே கம்பஸிற்கும்(பல்கலைக் கழகத்திற்கும்) போய், ரியூசனும் கொடுக்கப் போறேன்’’ என்று கூறி முடித்தாள்.
இரண்டாவது தங்கை: அப்பா ‘நான் ஏலெவல் முடிய ஐரி(Information Technology) படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினாள்.
அடுத்தது என் முறை: ’’என் கைவசம் டெலிகொம் நிறுவனத்தில் வேலை இருந்தாலும் நான் சாமியாராகலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினேன்.
அப்பா எதுவும் பேசவில்லை. அடுத்தது தம்பி பதில் கூறும் முறையாக இருந்தும் அவனும் எதுவும் பேசவில்லை. யாருமே எதுவும் பேசாதிருக்கும் போது, வெறும் நிசப்தம் மட்டுமே அவ் விடத்தில் நிலவியது. அப்பா மௌனத்தைக் கலைத்தார்.
‘டோய் நிரூபா! நீ தெருப் பொறுக்கியாகி சாமியாராகப் போறியோ. இது அப்பா.
பதிலுக்கு நான், ஏனப்பா, சாமியாராகிறதில என்ன தப்பு. நாட்டிலை எத்தினை சாமியார் இருக்கீனம். சாமியாரைப் பற்றி தப்பா சொன்னீங்க. சங்கை அறுத்திடுவேன் என்று மிரட்டுகிறேன்.
அப்பா கோபம் கொண்டவராய், விழிகள் சிவக்க, டோய் யாரைப் பார்த்து, எதிர்த்துப் பேசுறாய். வீட்டை விட்டு வெளியேறு என்று விரட்டுகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆச்சிரமத்தை மலைகள் நிறைந்த, ஆறுகள் தவழ்ந்து குளிர்ச்சி பரப்பும் ஜம்புகா ஹிம்புகா தேசத்தில் உருவாக்குகிறேன்.
’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.
எனது அடியார்களை, சீடர்களை எனக்காக தேடும் நோக்கோடு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறேன்.
‘ஜம்புகா ஹிம்புகா பிரதேசத்தில்
இதோ வந்து விட்டார் உங்கள்
பாண பத்திர பன்னிச் சாமியார்-
பாவங்களை மன்னிப்பார் இந்தச் சாமியார்
உங்களுக்குப் பிடித்துள்ள
சன்னி, ஏழரை, எட்டரை
தோசங்கள், குறை பாடுகள் அனைத்தும் நீங்க வேண்டுமா?
இன்றே வருக என்னிடம்!
பெண்களுக்கான குறைபாடுகள்,
கணவன் மனைவி பிரச்சினைகள்,
காதலன் காதலி அந்தரங்க விடயங்கள்
அனைத்தையும் நொடிப் பொழுதில் நீக்கித் தருவேன்!
நீங்கள் விரும்பியவரை விரும்பிய இடத்திற்கு அழைக்க வேண்டுமா?
உங்களுக்குப் பிடிக்காதவரை உலகை விட்டு அனுப்ப வேண்டுமா?
அனைத்திற்கும் இன்றே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பாணபத்திர பன்னிச் சாமியார்!
தொடர்புகளுக்கு:
சங்கிசா, பங்கிசா ஆச்சிரமம்
முங்கால் வீதி
ஜம்புகா ஹிம்புகா
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 07772229994
பத்திரிகையில் விளம்பரம் போட்ட பின்னர் என் புகழ் உலகெல்லாம் பரவத் தொடங்கிறது. எனக்குத் தொண்டு செய்யச் சீடர்கள் வருகிறார்கள். என்னைச் சூழ அமைச்சர்கள், மந்திரிகள் படங்கள் தொங்குகின்றன. அனைவருமே எனக்கு அடிமைகளாக அல்லது அடியார்களாக நான் சொல்வதைக் கேட்கத் தயாராகுகிறார்கள்.
பிரபல மின் டீவி என்னைப் பேட்டி காண வருகிறது. போதையில், அபிசேகம், சைவ தீர்த்தம் எனும் பெயரில் நான் மெண்டிஸ் சாராயத்தை அடித்து விட்டு உளறுகையில் அவற்றினை அருள் வாக்கு என கலர் டிஸ்பிளே போட்டு தொலைக் காட்சி ஒளிபரப்புகிறது.
என் தத்துவங்கள் ‘சொன்னவர் யார்’’ என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் வருகிறது.
நான் சொன்ன தத்துவங்கள்.
’கண்ணைத் திற காட்சி தெரியும்!
’அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடஞ்சல்!
‘ஆலயம் போவது அரட்டைக்கு அழகு!
‘கல்லைக் கண்டால் நீ நாயைக் காண மாட்டாய்
காசைக் கண்டால் நீ கடவுளைத் தேட மாட்டாய்!
பணம் இல்லையேல் நீ பக்தனாகுவாய்
பணமிருந்தால் நீ சாராய பார் நண்பனாகுவாய்!
என்னுடைய தத்துவங்களையும், அருள் வாக்குகளையும் கேட்டு பக்தர்கள், அடியவர்கள், சீடர்கள் பெருகத் தொடங்குகிறார்கள். பணம் மலை மலையாகக் குவியத் தொடங்குகிறது. வைப்பிலிட மத்திய வங்கியில் இடம் போதாத காரணத்தால், சுவிஸ் வங்கியில் என் சீடர்களின் உதவியுடன் பணத்தினை வைப்புச் செய்கிறேன். திடீரென வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்கிறது. கனவு கலைகிறது. அடச் சீ....கறுமம். இது கனவாகி விட்டதே என்று நொந்து கொள்கிறேன்.
பின்னர் சிந்தித்துப் பார்த்தேன். சாமியாராகுவதில் என்ன தப்பு? ஆன்மீகப் பணி செய்வது அகிலத்திற்கு நல்லது தானே! நிஜத்திலை சாமியாராகினால் எப்படியிருக்கும் எனும் நினைப்பில் நினைவுகளைத் திருப்பினேன்.
நம்ம ஊருக் கோவில்களிலை ஐய்யர் வரவில்லை என்றால் அவரது மகன்மார் தமிழில் பூஜை செய்வதில்லையா? அது போல என்னாலும் தமிழில் பூசை செய்ய முடியும் தானே. இதோ கைவசம் இருக்கிறதே மந்திரம், கவலை எதற்கு!
பூஜை பண்ணும் போது மந்திரம் ஓத வேண்டும்.
ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
பூஜை நடந்து முடிந்ததும், தேவாரம் பாட வேண்டும்.
வேட்டி போட்ட பொடியன் - நீ வெறுங் கதைகள் பேசி
நாட்டினையும் கெடுக்கும் நல்ல தமிழ் அறிஞன்’
உனைப் பாட்டில் வைத்துச் சொன்னால் தமிழுக்கே கேடு- நீ
பாவையிடம் தோற்றால் பாவமெல்லாம் தீரும்!
இப்படியும் இப்போதைய இளைஞர்கள் போன்று பாடலாம் தானே.
அடுத்ததாக என்ன செய்ய வேண்டும். பூஜை முடிய திருநீறு, சந்தனம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கென்றால் திருநீற்றைக் கையில் கொடுத்து விட்டு, பெண்களுக்கு மட்டும் விபூதியை நெற்றியில் பூசி, சந்தனத்தையும் வைத்து விட வேண்டும்.
பெண்களுக்கு திருநீறு, சந்தனம் வைக்கிற சாட்டிலை காலோடை காலைத் தெரியாமல் உரச வேண்டும். (இது எங்கள் ஊர் ஒரு சில ஐயர் மார் செய்யும் லீலை)
அட இது நமக்கு கை வந்த கலை தானே. இதுவும் நம்மாலை முடியும்,
அடுத்து; நதிர்தனா......திரணனா............தனனனா.......தா என்று பாட்டுப் போட்டு விட்டு, நடிகையொருத்தியை அழைத்து வந்து கை, கால் பிடிக்க வைத்து, ஒயில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வீட்டிற்கு ஆட்டோ வரும்
என்பது நிச்சயம் ஆதலால் அப் பணியை என் சீடர்களிடமே கொடுத்து விடுகிறேன்.
இறுதியாக இன்னொரு விடயமும் very important ஒன்று இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வாறீங்களா?
சுவாமிஜி, எனக்குத் தீராத வயிற்று வலி என்று அழுதழுது என்னிடம் வரும் பக்தைகளிற்கு பொக்குளில் தேசிக்காயை வைத்து மந்திரம் சொல்லி தேய்த்து, போலிஸிடம் அக்கப்பட வேண்டும். அதற்கும் ஐயாம் றெடி.
இப்படியான திறமைகள் இருந்தால் தான் சாமியாராக முடியும். இத்தகைய சாமியார்களைத் தானே நாங்கள் தினமும் கண்டு மகிழ்கிறோம். அப்ப இதே வழியைப் பின்பற்றினால் நானும் ஓர் சாமியார் தானே!
மகா ஜனங்களே! சாமியாராக நான் றெடி!
என் சீடர்களாக நீங்கள் றெடியா!
********************************************************************************
பாணபத்திர பன்னிச் சாமியும், நம்ம கோண புத்திர கொடிகா சாமியும் நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியினைப் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள்.
பாண: ஏய் கோணா சாமி, அங்கை பார்த்தியா, அம்புட்டுத் தொலைவிலை உள்ள மலையிலை என் ஞானக் கண்ணுக்கு ஒரு எறும்புக் கூட்டம் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது தெரிகிறது. உன் ஞானக் கண்ணில் ஏதாவது தெரிகிறதா கோணா சுவாமி.
கோணா: நீங்க வேற, அந்த மலையுச்சியிலை வரிசையாப் போற எறும்புக் கூட்டம் இருக்கே, அதுங்க எவ்வளோ வடிவா தேங்காய்ப் பூவை வாயிலை கவ்விக் கொண்டு, ஊர்ந்து போகுது பார்தீங்களா.
இப்போ சொல்லுங்க...யாரோட ஞானக் கண் பவர் புல் !
நன்றி...நாற்று...
ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான். சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
கடந்த வாரம், இதமான பாடல்களைக் கேட்டவாறு உறக்கங் செல்கிறேன். உறங்கியதும் திடீரென கனவு வருகிறது. எங்கள் வீட்டு முற்றத்தில் என் அப்பா, இரண்டு தங்கைகள், நான், தம்பி என எல்லோரும் கூடி நிற்கிறோம். அப்பா பேசத் தொடங்குகிறார்.
‘பிள்ளைகளே! எனக்கும் வயசு போகிறது. இனி உங்களின் எதிர் காலத்தை நீங்களே தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர்க்காலக் கனவுகள் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்?
‘முதலாவது தங்கை பதிலுக்கு ‘’அப்பா நான் யூனிவர்சிற்றி முடித்து எக்கவுண்டன்(Accountant) ஆக வரப் போகிறேன்; அது வரைக்கும் வீட்டிலை இருந்த படியே கம்பஸிற்கும்(பல்கலைக் கழகத்திற்கும்) போய், ரியூசனும் கொடுக்கப் போறேன்’’ என்று கூறி முடித்தாள்.
இரண்டாவது தங்கை: அப்பா ‘நான் ஏலெவல் முடிய ஐரி(Information Technology) படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினாள்.
அடுத்தது என் முறை: ’’என் கைவசம் டெலிகொம் நிறுவனத்தில் வேலை இருந்தாலும் நான் சாமியாராகலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினேன்.
அப்பா எதுவும் பேசவில்லை. அடுத்தது தம்பி பதில் கூறும் முறையாக இருந்தும் அவனும் எதுவும் பேசவில்லை. யாருமே எதுவும் பேசாதிருக்கும் போது, வெறும் நிசப்தம் மட்டுமே அவ் விடத்தில் நிலவியது. அப்பா மௌனத்தைக் கலைத்தார்.
‘டோய் நிரூபா! நீ தெருப் பொறுக்கியாகி சாமியாராகப் போறியோ. இது அப்பா.
பதிலுக்கு நான், ஏனப்பா, சாமியாராகிறதில என்ன தப்பு. நாட்டிலை எத்தினை சாமியார் இருக்கீனம். சாமியாரைப் பற்றி தப்பா சொன்னீங்க. சங்கை அறுத்திடுவேன் என்று மிரட்டுகிறேன்.
அப்பா கோபம் கொண்டவராய், விழிகள் சிவக்க, டோய் யாரைப் பார்த்து, எதிர்த்துப் பேசுறாய். வீட்டை விட்டு வெளியேறு என்று விரட்டுகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆச்சிரமத்தை மலைகள் நிறைந்த, ஆறுகள் தவழ்ந்து குளிர்ச்சி பரப்பும் ஜம்புகா ஹிம்புகா தேசத்தில் உருவாக்குகிறேன்.
’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.
எனது அடியார்களை, சீடர்களை எனக்காக தேடும் நோக்கோடு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறேன்.
‘ஜம்புகா ஹிம்புகா பிரதேசத்தில்
இதோ வந்து விட்டார் உங்கள்
பாண பத்திர பன்னிச் சாமியார்-
பாவங்களை மன்னிப்பார் இந்தச் சாமியார்
உங்களுக்குப் பிடித்துள்ள
சன்னி, ஏழரை, எட்டரை
தோசங்கள், குறை பாடுகள் அனைத்தும் நீங்க வேண்டுமா?
இன்றே வருக என்னிடம்!
பெண்களுக்கான குறைபாடுகள்,
கணவன் மனைவி பிரச்சினைகள்,
காதலன் காதலி அந்தரங்க விடயங்கள்
அனைத்தையும் நொடிப் பொழுதில் நீக்கித் தருவேன்!
நீங்கள் விரும்பியவரை விரும்பிய இடத்திற்கு அழைக்க வேண்டுமா?
உங்களுக்குப் பிடிக்காதவரை உலகை விட்டு அனுப்ப வேண்டுமா?
அனைத்திற்கும் இன்றே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பாணபத்திர பன்னிச் சாமியார்!
தொடர்புகளுக்கு:
சங்கிசா, பங்கிசா ஆச்சிரமம்
முங்கால் வீதி
ஜம்புகா ஹிம்புகா
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 07772229994
பத்திரிகையில் விளம்பரம் போட்ட பின்னர் என் புகழ் உலகெல்லாம் பரவத் தொடங்கிறது. எனக்குத் தொண்டு செய்யச் சீடர்கள் வருகிறார்கள். என்னைச் சூழ அமைச்சர்கள், மந்திரிகள் படங்கள் தொங்குகின்றன. அனைவருமே எனக்கு அடிமைகளாக அல்லது அடியார்களாக நான் சொல்வதைக் கேட்கத் தயாராகுகிறார்கள்.
பிரபல மின் டீவி என்னைப் பேட்டி காண வருகிறது. போதையில், அபிசேகம், சைவ தீர்த்தம் எனும் பெயரில் நான் மெண்டிஸ் சாராயத்தை அடித்து விட்டு உளறுகையில் அவற்றினை அருள் வாக்கு என கலர் டிஸ்பிளே போட்டு தொலைக் காட்சி ஒளிபரப்புகிறது.
என் தத்துவங்கள் ‘சொன்னவர் யார்’’ என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் வருகிறது.
நான் சொன்ன தத்துவங்கள்.
’கண்ணைத் திற காட்சி தெரியும்!
’அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடஞ்சல்!
‘ஆலயம் போவது அரட்டைக்கு அழகு!
‘கல்லைக் கண்டால் நீ நாயைக் காண மாட்டாய்
காசைக் கண்டால் நீ கடவுளைத் தேட மாட்டாய்!
பணம் இல்லையேல் நீ பக்தனாகுவாய்
பணமிருந்தால் நீ சாராய பார் நண்பனாகுவாய்!
என்னுடைய தத்துவங்களையும், அருள் வாக்குகளையும் கேட்டு பக்தர்கள், அடியவர்கள், சீடர்கள் பெருகத் தொடங்குகிறார்கள். பணம் மலை மலையாகக் குவியத் தொடங்குகிறது. வைப்பிலிட மத்திய வங்கியில் இடம் போதாத காரணத்தால், சுவிஸ் வங்கியில் என் சீடர்களின் உதவியுடன் பணத்தினை வைப்புச் செய்கிறேன். திடீரென வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்கிறது. கனவு கலைகிறது. அடச் சீ....கறுமம். இது கனவாகி விட்டதே என்று நொந்து கொள்கிறேன்.
பின்னர் சிந்தித்துப் பார்த்தேன். சாமியாராகுவதில் என்ன தப்பு? ஆன்மீகப் பணி செய்வது அகிலத்திற்கு நல்லது தானே! நிஜத்திலை சாமியாராகினால் எப்படியிருக்கும் எனும் நினைப்பில் நினைவுகளைத் திருப்பினேன்.
நம்ம ஊருக் கோவில்களிலை ஐய்யர் வரவில்லை என்றால் அவரது மகன்மார் தமிழில் பூஜை செய்வதில்லையா? அது போல என்னாலும் தமிழில் பூசை செய்ய முடியும் தானே. இதோ கைவசம் இருக்கிறதே மந்திரம், கவலை எதற்கு!
பூஜை பண்ணும் போது மந்திரம் ஓத வேண்டும்.
ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
பூஜை நடந்து முடிந்ததும், தேவாரம் பாட வேண்டும்.
வேட்டி போட்ட பொடியன் - நீ வெறுங் கதைகள் பேசி
நாட்டினையும் கெடுக்கும் நல்ல தமிழ் அறிஞன்’
உனைப் பாட்டில் வைத்துச் சொன்னால் தமிழுக்கே கேடு- நீ
பாவையிடம் தோற்றால் பாவமெல்லாம் தீரும்!
இப்படியும் இப்போதைய இளைஞர்கள் போன்று பாடலாம் தானே.
அடுத்ததாக என்ன செய்ய வேண்டும். பூஜை முடிய திருநீறு, சந்தனம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கென்றால் திருநீற்றைக் கையில் கொடுத்து விட்டு, பெண்களுக்கு மட்டும் விபூதியை நெற்றியில் பூசி, சந்தனத்தையும் வைத்து விட வேண்டும்.
பெண்களுக்கு திருநீறு, சந்தனம் வைக்கிற சாட்டிலை காலோடை காலைத் தெரியாமல் உரச வேண்டும். (இது எங்கள் ஊர் ஒரு சில ஐயர் மார் செய்யும் லீலை)
அட இது நமக்கு கை வந்த கலை தானே. இதுவும் நம்மாலை முடியும்,
அடுத்து; நதிர்தனா......திரணனா............தனனனா.......தா என்று பாட்டுப் போட்டு விட்டு, நடிகையொருத்தியை அழைத்து வந்து கை, கால் பிடிக்க வைத்து, ஒயில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வீட்டிற்கு ஆட்டோ வரும்
என்பது நிச்சயம் ஆதலால் அப் பணியை என் சீடர்களிடமே கொடுத்து விடுகிறேன்.
இறுதியாக இன்னொரு விடயமும் very important ஒன்று இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வாறீங்களா?
சுவாமிஜி, எனக்குத் தீராத வயிற்று வலி என்று அழுதழுது என்னிடம் வரும் பக்தைகளிற்கு பொக்குளில் தேசிக்காயை வைத்து மந்திரம் சொல்லி தேய்த்து, போலிஸிடம் அக்கப்பட வேண்டும். அதற்கும் ஐயாம் றெடி.
இப்படியான திறமைகள் இருந்தால் தான் சாமியாராக முடியும். இத்தகைய சாமியார்களைத் தானே நாங்கள் தினமும் கண்டு மகிழ்கிறோம். அப்ப இதே வழியைப் பின்பற்றினால் நானும் ஓர் சாமியார் தானே!
மகா ஜனங்களே! சாமியாராக நான் றெடி!
என் சீடர்களாக நீங்கள் றெடியா!
********************************************************************************
பாணபத்திர பன்னிச் சாமியும், நம்ம கோண புத்திர கொடிகா சாமியும் நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியினைப் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள்.
பாண: ஏய் கோணா சாமி, அங்கை பார்த்தியா, அம்புட்டுத் தொலைவிலை உள்ள மலையிலை என் ஞானக் கண்ணுக்கு ஒரு எறும்புக் கூட்டம் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது தெரிகிறது. உன் ஞானக் கண்ணில் ஏதாவது தெரிகிறதா கோணா சுவாமி.
கோணா: நீங்க வேற, அந்த மலையுச்சியிலை வரிசையாப் போற எறும்புக் கூட்டம் இருக்கே, அதுங்க எவ்வளோ வடிவா தேங்காய்ப் பூவை வாயிலை கவ்விக் கொண்டு, ஊர்ந்து போகுது பார்தீங்களா.
இப்போ சொல்லுங்க...யாரோட ஞானக் கண் பவர் புல் !
நன்றி...நாற்று...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|