சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காம  நோய் ....  Khan11

காம நோய் ....

2 posters

Go down

காம  நோய் ....  Empty காம நோய் ....

Post by Atchaya Sun 10 Jul 2011 - 6:09

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன், அது அவள் தான், அவளே தான்,
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு!

மேகங்கள் கீழிறங்கி என் மார்பில் பூமாரி பொழிவது போன்ற மகிழ்ச்சியில்
அவளைப் பார்த்தேன், அவள் பின்னேயிருந்து ஒரு சிறு குழந்தை வந்து கூப்பிட்டது மட்டும் காதில் கேட்டது, ’’பிரியம்வதனா அக்கா! என்ன செய்யுறீங்க! நேரமாகுது, வீட்ட போக வேணுமில்லே’!
அந்தக் கணமே புரிந்து கொண்டேன், அவள் பிரியம்வதனா தான்,
பேருக் கேற்றாற் போல என் மீது எப்போது பிரியம் கொள்ளுவாள் எனக் காத்திருந்தேன். காத்திருப்பும் கனிவாகும் நாளும் வந்தது.


வேப்பமரத்தடித் திட்டில் குந்தியிருந்து வேற்றுக் கதைகள் பேசி, காற்றில் கலந்து வந்த அந்த நறு மணத்தின் சொந்தகாரி மீது, என் சிந்தையினைக் கொன்று விட்ட நெஞ்சக்காரி மீது என் நினைபெல்லாம் படிய, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தேன். என் நடத்தையில் சிறிது வித்தியாசம் தெரிவதை உணர்ந்தவனாய் அருகே இருந்த நண்பன் காந்தன் கேட்டான்,

’ஏன் மச்சான் - கொஞ்ச நாளாய் ஒரு மார்க்கமா இருக்கிறாய்!
’இல்லை மச்சான், போன கிழைமை கோயிலுக்குப் போயிருந்தேன். தேங்காய் உடைக்கும் போது இப்ப ஊருக்கு அகதியாக வந்துள்ள பிரியம்வதனாவைப் பார்த்தேன். என் நினைப்பெல்லாம் அவள் மீது நிறைந்து விட்டதே மச்சான்’’ காதல் செய்து பிரியம்வதனாவை எனை விட்டுப் பிரியாதவளாய் ஆக்க வேண்டும் என ஆவல் உளதே என்றேன்!


மாநாடு முடிகையில் மனதெல்லாம் நிறைந்திருந்த காதல் எனும் புனிதத்தை ஆடையாக்கி அணிந்துள்ள காம நோய் தீர நண்பன் உதவி செய்தான். களவாக வாங்கிய கந்தப்பரின் தவறணையின் மூன்று நாள் புளித்த பழைய கள்ளும், தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து திருடப்பட்ட குறைச் சுருட்டும் அவனது மனதை நியூட்டனின் சிந்தனைகளுக்கு நிகராக மாற்றிப் போட்டு விட்டது. காந்தன் விஞ்ஞானியானான். காதல் மெய் ஞானி ஆகி விளக்கம் சொல்லத் தொடங்கினான். அவன் சொல்வதை செவிமடுப்பவனாய் நானும் அவன் அருகே மாணவனானேன்.

‘அவன் நண்பன், எனக்கு காதலெனும் போதையூற்றிய திருநகரூர் வம்பன்!
நாம்பனைத் தேடி ஓடும் காளை மாடாய் நானிருக்கையில் நல்வாக்கு தந்த இளவல்! நெஞ்செல்லாம் அவள் நினைப்பு, வற்றாத நிலாவரை நிரூற்றாய் பெருக்கெடுக்க, காதலெனும் உண்ணா நோன்பில் நானிருப்பதாய் உணவோ என்னை அடிக்கடி புறக்கணிக்கும் வேளையிலும் நண்பன் எப்போதும் உடன் இருப்பான் என்பதற்கு எடுகோளாய், ஐடியா தந்தான்.

‘நீ ஒரு கடிதம் கொடுத்துப் பாரேன்’. அவள் எங்கே படிக்கிறாள் என்பதை உணர்ந்து பாடசாலை விட்டு வரும் வேளையில் கடிதம் கொடுத்தால் சில நேரம் ஆள் மடியலாம் மச்சான்! ‘சும்மா கிடந்த இரணைமடுக் குளத்தின் கதவுகளை வலியப் போய் முட்டி உடைத்து வான் பாய விட்டு குடி மனைகளை நாசம் செய்வது போல, எனக்குள் ஓர் வில்லங்கத்தை அவன் வர வைத்தான்.

நாட் குறித்தேன், அவளை அடைய வேண்டும் எனும் ஆவல் மேலெழுந்து வர கடிதத்தில் பார்த்தவுடன் அவள் பார்வை என்னைப் பிரகாசமுள்ள மனிதனாக்க வேண்டும் என ஆவல் கொண்டேன். நண்பர்களின் உதவியோடு கை கூடும் காதல்கள் தான் காத்திரமானவை எனும் தத்துவத்தின் உண்மை தெளிந்தேன். காந்தனின் கூற்றினைச் செவியிலிருத்திக் கடிதம் வரைந்தேன்.

எல்லாக் கடிதங்களிலும் அன்புள்ள என்று தொடக்கம் எழுதி எம் தமிழக் காதல்கள் விரசம் குறைந்து விட்டன என்பதால், என் காதலில் ஒரு சேஞ்ச் வைக்க நினைத்தேன். அதன் விளைவு கடிதம் இப்படி வந்து பிறந்தது!

‘உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!

என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை. மனதினுள் நீ வந்து பிள்ளையாரின் சந்நிதியில் புகுந்த பின்னோ கொழுக்கட்டை, அவல், சுண்டல் வாங்க கோயிலுக்குப் போறேனோ தெரியாது, நீ வருவாய் எனும் நினைப்பில் நீண்ட நாளாய் பக்தி முத்திப் போய்; சித்தம் பித்துப் பிடித்து, சிக்கெடுக்க முடியாதிருக்கும் உந்தன் துவட்டாத கூந்தல் போலாகி விட்டேன்.


நீ இறுதியாக என்னை உந்தன் பார்வைகளால் பறித்தெடுத்து, விழிகளில் அமில நீர் சுரக்கத் தொடங்கிப் பல மாதங்களாகி விட்ட நிலையில் நான் உனக்காக எழுதும் அன்பு மடல்இது.

என் ஆசைகளை உணர்வுகளைத் தாங்கி வரும் என் இதயக் கீதமிது! இது தான் என் இறுதி மடலாக இருக்கலாம் என நினைக்கிறேன். நீ என்னை வெறுத்தால் இயக்கத்திற்குப் போய் நாட்டிற்காய் என் வாழ்வை அர்ப்பணிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.

அன்று நீ என்னைப் பார்வைகளால் தழுவிச் சென்ற நிலையும், உனக்கே தனித்துவமாய், உன்னை அந்தக் கோயிலில் வேறுபடுத்திக் காட்டிய வாசமும் என்னைக் கொன்று விட்டது.
என் உணர்வுகளைத் தின்று விட்டது. உப்பளக் காற்றுக் கூட என்னை வந்து வாசமுள்ள தென்றலாய் வருடுவது போன்ற உணர்வு! இது உன்னால் தான் பெண்ணே! உன் பதிலுக்காக விழி மேல் வழி வைத்து காத்திருப்பேன்! இல்லையேல் சென்ரியில் (Military bunkers) விழியில் துவக்கெடுத்து பார்த்திருப்பேன்!


என என் கடிதம் எழுதி முடித்து, அவளின் பாடசாலை தேடியறிந்து அவள் வரும் வேளைக்காய் காத்திருந்தேன். கூடை பூட்டிய லுமாலா சைக்கிளில் அவள் வந்தாள். கோடை வெய்யிலினால் நீரேதும் அருந்தாது அவள் நினைப்பில் இருந்த என் குரலையும் ஒரு செருமல் செருமி, கம்பீரக் குரலாக்கி 'எக்ஸ்கியூஸ்மீ'! என்று குரல் கொடுத்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவள்
கடிதத்தை வேண்டப் பயந்து, பெண்மைக்கேயுரிய நாணத்துடன் தரை பார்த்திருந்தாள்.

இது தான் தருணம் என்று அவளின் சைக்கிள் கூடைக்குள் என் கடிதத்தை வைத்து விட்டுப் போனேன். தொடர்ச்சியாக இரு நாட்கள் அவளின் முடிவிற்காய் பள்ளிக் கூட வாசலில் வெயிற் பண்ணிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் அவள் வரும் நேரம் பார்த்து பாடசாலை வாசலுக்குப் போனேன்.

‘ஹலோ பிரியம்வதனா! உங்கடை முடிவென்ன என்று சொல்ல முடியுமா? எனக் கேட்டேன், அவள் என் பின்னே பார்த்துச் சிரித்தாள். புரியாதவனாய்த் திரும்பிப் பார்த்தேன்.
பஷன் பிளஸ் மோட்டார் சைக்கிளில் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!

‘’அறிகிலார் எல்லோரும் என்றே என் காமம்
குறுகின் மறுகும் மருண்டு!’’

நன்றி...நாற்று....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காம  நோய் ....  Empty Re: காம நோய் ....

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 6:20

மனதின் ஆசைக்கு அலைவது தவறு என்றுணர்த்திய கதை அருமையான பகிர்வு நன்றி


காம  நோய் ....  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum