Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
குரான் ஷரீஃப் - உடைய முதல் வார்த்தையே "இக்ரா" என்பதாகவே உள்ளது
2 posters
Page 1 of 1
குரான் ஷரீஃப் - உடைய முதல் வார்த்தையே "இக்ரா" என்பதாகவே உள்ளது
மனித குலத்துக்கு அருளப்பட்ட
குரான் ஷரீஃப் - உடைய முதல் வார்த்தையே "இக்ரா" (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read)
என்பதாகவே உள்ளது.
'கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' -
'கல்வியே செல்வத்துட்
செல்வம்' -
என்பதெல்லாம் தமிழர்களின் நம்பிக்கைகளில் வருவதாகும்.
கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்கிற பேதம் பார்ப்பதில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே
விதிக்கப்பட்டிருக்கிறது.
"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக்
கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது.
எங்கள் ஊர் ஹஜ்ரத் சொன்னார்கள்: 'சீன்' ங்குற வார்த்தைய தான் 'சீனா'
ன்னு சொல்லி இருக்கிறாஹ. 'சீன்' ங்குற வார்த்தைக்கு- சிங்கத்திட நெத்தி -
ன்னு இன்னொரு
அர்த்தம் இருக்கு; அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா
இருக்கும்..' என்று.
அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் - அது சிங்கத்தின் நெற்றியில்
இருந்தாலும் சரி'. (இந்த அர்த்தத்தில் பார்த்தால்
சீனா காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும் தானே!)
குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில்
வருகிறதாம்.
இந்த கல்வி, மார்க்க (இஸ்லாமிய) கல்வியை மட்டுமே தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும்
உண்டு. உண்மை அதுவல்ல - என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது!
ஆம்! முஸ்லீம்கள் மீது (இஸ்லாத்துக்கு எதிரான) காஃபிர்கள்
(எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) போர் தொடுக்கிறார்கள். முஸ்லீம்கள் மீது
நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் தோற்று, கைதிகளாகி- அநாதரவான நிலையில்- நிற்கிறார்கள்
காஃபிர்கள்.
இந்த கட்டத்தில் - இந்த நவீன காலத்தில், நம் அறிவுக்குதெரிந்து ஈழப்
போரில் சிறைப்பிடிக்கப்பட்ட நமது தமிழ் உறவுகள் மீது ஏவப்பட்ட
அடக்குமுறைகளை கண்கூடாக
பார்த்தும் நமது கைகளையும் கால்களையும் வெறுமனே வைத்துக்கொண்டு ஒன்றும்
செய்ய முடியாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது.
ஆனால், போரில் வெற்றிப்பெற்ற, பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'முஸ்லீம்களுக்கு கல்வி
கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று.
இங்கே கவனிக்க வேண்டியது ..... கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள்;
சற்று முன்னர் தங்களோடு போர்களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக்
கொண்டவர்கள்.
வழக்கமாக, சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தாம் , 'நான் அவனுக்கு (தோல்வி
அடைந்தவருக்கு) சரியான அல்லது தக்கப்பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று
பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால், அன்று .... 'பத்ரு' போரில் தோல்வி
அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி
கொடுத்தார்கள்.
முஸ்லீம்கள், தாம் பெற்ற வெற்றியை PARTY வைத்து கொண்டாடவில்லை. மாறாக,
தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவர்களாக பாடம் கற்றுக்
கொண்டிருந்தார்கள். உண்மையில், இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.
'படிக்க வரக்கூடாது; உங்களுக்கு கல்வி கிடையாது' - என்று கல்வி மறுக்கப்பட்ட
மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால் இதனை சிறந்த பாடமாக புரிந்து
கொள்ள முடியும்.
தவிர, இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் - முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய
ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள்? உலக கல்வியை தானே கற்றுக்
கொடுத்திருப்பார்கள்.
பள்ளிவாசலானது, அன்று முதல் - முஸ்லீம்கள் தொழுத நேரம் போக மற்றைய நேரங்களில் பகுதிநிலை
பள்ளிகூடமாகவும் மாறித்தான் போனது. அதாவது 'ஜாமிஆ' வாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற
வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தானே!
வேறு வார்த்தையில் சொல்வதானால், பள்ளிவாசல் பகுதி நேர
வகுப்புகள் (PART TIME CLASS) நடக்கும் இடமாக மாறியது. அந்த வகையில்
பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு PART TIME கல்வி முறையை
அறிமுகம் செய்தது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நாம் அறுதியிட்டு சொல்லலாம்.
குரான் ஷரீஃப் - உடைய முதல் வார்த்தையே "இக்ரா" (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read)
என்பதாகவே உள்ளது.
'கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' -
'கல்வியே செல்வத்துட்
செல்வம்' -
என்பதெல்லாம் தமிழர்களின் நம்பிக்கைகளில் வருவதாகும்.
கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்கிற பேதம் பார்ப்பதில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே
விதிக்கப்பட்டிருக்கிறது.
"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக்
கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது.
எங்கள் ஊர் ஹஜ்ரத் சொன்னார்கள்: 'சீன்' ங்குற வார்த்தைய தான் 'சீனா'
ன்னு சொல்லி இருக்கிறாஹ. 'சீன்' ங்குற வார்த்தைக்கு- சிங்கத்திட நெத்தி -
ன்னு இன்னொரு
அர்த்தம் இருக்கு; அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா
இருக்கும்..' என்று.
அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் - அது சிங்கத்தின் நெற்றியில்
இருந்தாலும் சரி'. (இந்த அர்த்தத்தில் பார்த்தால்
சீனா காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும் தானே!)
குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில்
வருகிறதாம்.
இந்த கல்வி, மார்க்க (இஸ்லாமிய) கல்வியை மட்டுமே தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும்
உண்டு. உண்மை அதுவல்ல - என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது!
ஆம்! முஸ்லீம்கள் மீது (இஸ்லாத்துக்கு எதிரான) காஃபிர்கள்
(எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) போர் தொடுக்கிறார்கள். முஸ்லீம்கள் மீது
நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் தோற்று, கைதிகளாகி- அநாதரவான நிலையில்- நிற்கிறார்கள்
காஃபிர்கள்.
இந்த கட்டத்தில் - இந்த நவீன காலத்தில், நம் அறிவுக்குதெரிந்து ஈழப்
போரில் சிறைப்பிடிக்கப்பட்ட நமது தமிழ் உறவுகள் மீது ஏவப்பட்ட
அடக்குமுறைகளை கண்கூடாக
பார்த்தும் நமது கைகளையும் கால்களையும் வெறுமனே வைத்துக்கொண்டு ஒன்றும்
செய்ய முடியாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது.
ஆனால், போரில் வெற்றிப்பெற்ற, பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'முஸ்லீம்களுக்கு கல்வி
கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று.
இங்கே கவனிக்க வேண்டியது ..... கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள்;
சற்று முன்னர் தங்களோடு போர்களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக்
கொண்டவர்கள்.
வழக்கமாக, சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தாம் , 'நான் அவனுக்கு (தோல்வி
அடைந்தவருக்கு) சரியான அல்லது தக்கப்பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று
பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால், அன்று .... 'பத்ரு' போரில் தோல்வி
அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி
கொடுத்தார்கள்.
முஸ்லீம்கள், தாம் பெற்ற வெற்றியை PARTY வைத்து கொண்டாடவில்லை. மாறாக,
தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவர்களாக பாடம் கற்றுக்
கொண்டிருந்தார்கள். உண்மையில், இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.
'படிக்க வரக்கூடாது; உங்களுக்கு கல்வி கிடையாது' - என்று கல்வி மறுக்கப்பட்ட
மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால் இதனை சிறந்த பாடமாக புரிந்து
கொள்ள முடியும்.
தவிர, இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் - முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய
ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள்? உலக கல்வியை தானே கற்றுக்
கொடுத்திருப்பார்கள்.
பள்ளிவாசலானது, அன்று முதல் - முஸ்லீம்கள் தொழுத நேரம் போக மற்றைய நேரங்களில் பகுதிநிலை
பள்ளிகூடமாகவும் மாறித்தான் போனது. அதாவது 'ஜாமிஆ' வாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற
வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தானே!
வேறு வார்த்தையில் சொல்வதானால், பள்ளிவாசல் பகுதி நேர
வகுப்புகள் (PART TIME CLASS) நடக்கும் இடமாக மாறியது. அந்த வகையில்
பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு PART TIME கல்வி முறையை
அறிமுகம் செய்தது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நாம் அறுதியிட்டு சொல்லலாம்.
இன்றைக்கு முதியோர் கல்வி, Adult Learning, Continuous Learning, Life Long Learning என்ற கல்வி முறைகளுக்கெல்லாம் எம்பெருமானார் நபி (ஸல்) அன்றே
வகுத்து தந்த திட்டம் தான் முன்னோடி என்பதை யாராலும் மறுக்க முடியாத நிதர்சன உண்மை.
இதெல்லாம் ஒரு புறமிருக்க, எங்களூர் பள்ளிகூட வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஒருவர்
உறங்கி கொண்டிருந்தார். (முழிச்சிக்கிட்டிருந்தா தானே நியூஸ்
என்கிறீர்களா?)
ஆசிரியர், அருகில் அமர்ந்திருந்தவரிடம் - தூங்குபவரை எழுப்பிவிட சொன்னார்.
அவரும் எழுப்ப, திடுக்கிட்டு எழுந்த அவர், 'சாரி சார்,
அசந்துட்டேன்..' என்றார்.
'என்னா அசந்துட்டேன்! ... நான் என்ன சண்டை காட்சியா நடத்தி
காட்டுனேன்..' என்று ஆசிரியர் சொல்லி விட்டு 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்க,
அவர் 'காமராஜ்' என்றார்
'என்னங்க! காமராஜ் தான், தமிழ் நாட்டுலே, கல்வி கண்ணை தொறந்தாரும்பாங்க -
நீங்க என்னன்னா ... கண்ணை மூடிட்டிங்களே.." என்றார் ஆசிரியர், புன்முறுவலுடன்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Similar topics
» குரான் படிக்கிறார் டோனி பிளேர் !
» குரான் ஓத தெரியாதவர்களுக்கு சிறந்த ஆன் லைன் மென் பொருள்
» மாமறை குரான் வழங்கிய நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு
» 8 காலகள் உடைய பூனை...???
» கட்டிகள் பழுத்து உடைய
» குரான் ஓத தெரியாதவர்களுக்கு சிறந்த ஆன் லைன் மென் பொருள்
» மாமறை குரான் வழங்கிய நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு
» 8 காலகள் உடைய பூனை...???
» கட்டிகள் பழுத்து உடைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|