Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!
3 posters
Page 1 of 1
கிளைமேட் சாம்பியன்' பட்டம் வென்ற அசோகவர்ஷினி!
நாம் பொதுவாக நம்மைப் பற்றிக் கவலைப்படுவோம். ஆனால், உலகைப் பற்றிக் கவலைப்படுகிறார் அசோகவர்ஷினி.
"சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்கிறோம். அதை உணராமலே இருப்பதுதான் இன்னும் சோகம்!" என்கிற அசோகவர்ஷினி, சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.எஸ்சி., மின்னணு ஊடகவியல் மாணவி.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் செயல்பாடுகள், பணிகளுக்காக கடந்த 2010-ம் ஆண்டில் பிரிட்டீஷ் கவுன்சில் சார்பில் சர்வதேச 'கிளைமேட் சாம்பியன்களுள்' ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசோகவர்ஷினி.
கல்வித் தேனீக்களால் களைகட்டியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்...
சுற்றுச்சூழல் சாம்பியன் ஆனது எப்படி?
இளந்தலைமுறையினர் இடையே சுற்றுச்சூழலைக் காப்பது தொடர்பான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 'கிளைமேட் சாம்பியன்' பட்டம் வழங்கும் திட்டத்தை பிரிட்டீஷ் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. இது சர்வதேச அளவிலான ஒரு திட்டம். கடந்த 2009-ம் ஆண்டில் 'கிளைமேட் சாம்பியன்' ஆனவர் எனது தோழி ஹரிப்பிரியா. நான் ஊடக மாணவி என்பதால் எனக்கு வானொலி தொடர்பான பணிகளில் அனுபவமும், ஆர்வமும் உண்டு. எனவே நான் ஹரிப்பிரியாவின் சுற்றுச்சூழல் புராஜெக்டில் பள்ளி மாணவர்களுக்கு வானொலிப் பயிற்சி அளிக்கும் பணியில் உதவினேன். அப்போது 'கிளைமேட் சாம்பியன்' பற்றி அறிந்த நான், கடந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன், தொடர்ந்து நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சர்வதேச சுற்றுச்சூழல் சாம்பியனாகத் தேர்வானேன்.
நீங்கள் ஏற்கனவே சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டது உண்டா?
பள்ளியில் படிக்கும்போதே, 'புலியைக் காப்பது' போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள், முகாம்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் தற்போது மேலும் தீவிரமாகவும், பின்னணிப் பலத்தோடும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபட 'கிளைமேட் சாம்பியன்' பட்டம் உதவுகிறது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முயற்சி?
முன்பு, வானொலி மூலம் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களைப் பரப்புவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். தற்போது வானொலி ஊடகம் மட்டும் போதாது என்று எண்ணி, எழுத்து, புகைப்படம், மறுசுழற்சிப் பொருட்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறேன்.
மாணவர்களிடம் இந்த விஷயத்தில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
ரொம்பவே அதிகமாக! 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் இருந்து அவர்கள் கற்றதை விட, அவர்களிடம் இருந்து நான் அதிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சுற்றுச்சூழல் நிலை, அதைக் காக்கும் வழிகளில் மாணவ-மாணவியர் காட்டும் ஆர்வம், அவர்களின் படைப்புத் திறன், புதுமையான சிந்தனை எல்லாமே என்னை வியக்க வைக்கின்றன. சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த சில மாணவர்கள் அங்கும் தாங்கள் என்ன சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டோம் என்று எனக்கு புகைப்படங்களை மின்னஞ்சல் செய்திருந்தார்கள். இன்னொரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு மேற்கொண்ட முயற்சியால், சுற்றுச்சூழல் மாசுபடுவததைத் தவிர்க்க தீபாவளியின்போது பட்டாசே வெடிக்க மாட்டோம் என்று சுமார் 40 மாணவர்கள் முடிவெடுத்தார்கள் என்றால் நம்புவீர்களா?
நீங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறை போன்றவற்றுக்கான நிதியுதவி?
ஏற்கனவே கூறியபடி, 'பிரிட்டீஷ் கவுன்சில்' நிதியுதவி அளிக்கும். ஆனால் நான் தற்போது பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளிப்பதால் அதிகச் செலவில்லை. எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எனக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
இன்று உலகம் முன்பிருக்கும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயம் என்ன?
வசதி என்று கருதி, வகை தொகையில்லாமல் பிளாஸ்டிக் பைகள், அதுசார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோமே, அதுதான். அதிலும் வளர்ந்த மேலைநாடுகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஒட்டுமொத்த உலகத்துக்கே பாதிப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற வடஅமெரிக்க நாடுகள் வெளியேற்றிய பிளாஸ்டிக் கழிவுகளால் பசிபிக் கடலில் டெக்சாஸ் மாநில அளவுக்கு ஒரு செயற்கைக் கழிவுத் தீவே உருவாகிவிட்டது தெரியுமா? குளிர்பானம் அடைத்துவரும் சில டப்பாக்களில், 'மறுசுழற்சி செய்யக்கூடியது' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் உள்ள பல்வேறு அடுக்குகளைப் பிரித்து மறுசுழற்சி செய்ய முடியாது என்பதுதான் 'பகீர்' உண்மை.
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுக்கு எந்தளவு விழிப்புணர்வு உள்ளது?
இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே வருத்தமான நிஜம். நாம் செய்யும் நன்மையும், தீமையும் நமக்கே திரும்பிவரும் என்கிற மாதிரி, நாம் செய்யும் சுற்றுச்சூழல் மாசுபாடு நம்மையே பாதிக்கும். உதாரணத்துக்கு கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை மீன்கள் உட்கொள்கின்றன. நாம் அந்த மீன்களை சாப்பிடும்போது நமக்குள்ளும் பிளாஸ்டிக் நஞ்சு சென்றுவிடுகிறது. எங்கும் பறந்து திரியும் பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் பசுமாடுகளால், கறந்த பால் கூட நஞ்சாகிவிட்டது.
சுற்றுச்சூழலைக் காக்கும் விஷயத்தில் மாணவர்களால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?
எங்களின் முயற்சிகள், பயிற்சிகள் எல்லாம் சிறுஅளவிலான பலனைத் தரும். நான் எங்கள் வீட்டில், துணி, காகிதப் பைகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறேன். அதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்படி, எங்கள் புராஜெக்ட்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவரவர் வீடுகளில் கூறியிருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அரசு, கொள்கைரீதியாகச் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நமக்கு ஏற்கனவே போதுமான சட்டங்கள் உள்ளன. அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்தினாலே போதும்.
உங்களின் இந்தப் பயணம் எதுவரை தொடரும்?
உலகின் சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்பமயமாதல் பிரச்சினை உடனடியாகத் தீர்வு கண்டுவிட முடிகிற விஷயமா என்ன? அவையெல்லாம் இருக்கிறவரை எனது பயணம் தொடரும். எனது புராஜெக்டில் பயிற்சி பெற்ற மாணவர்களின் புகைப்படங்கள், கட்டுரைகளுடன் பத்திரிகை வெளியிட வேண்டும். கண்காட்சி நடத்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிருக்கிறது. பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை அறிந்தபிறகு, உலகின் எதிர்காலம் குறித்துப் பயமாயிருக்கிறதா?
அப்படி அவநம்பிக்கைகொள்ள மாட்டேன். நான் நம்பிக்கையான நபர். சுற்றுச்சூழல் தொடர்பாக இன்று நாம் பேச ஆரம்பித்திருப்பதே நல்ல விஷயம்தானே? நிச்சயம் மாற்றம் வரும்!
அசோகவர்ஷினி சொல்கிற மாதிரி நம்புவோம், நம்மாலானதைச் செய்வோம்!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உலக சாம்பியன் பட்டம் பெறணும்: ஐஸ்வர்யா!
» உலக சாம்பியன் பட்டம் பெறுவதே லட்சியம்: மோனிஷா
» உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம்
» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
» ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
» உலக சாம்பியன் பட்டம் பெறுவதே லட்சியம்: மோனிஷா
» உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம்
» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
» ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|