Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
உழைப்பாளியான பிச்சைக்காரர்கள்....
3 posters
Page 1 of 1
உழைப்பாளியான பிச்சைக்காரர்கள்....
கோவை: தெருவில் துரத்தி விட்டது உறவு. கையேந்தி உண்பதே வாழ் வானது. கடைசி கால மாற்றம் பிச்சைக்காரர்களையும் உழைப்பாளிகளாக மாற்றியது. ஆந்திரா, கர்நாடக, கேரள மாநில பிச்சைகாரர்கள், ஆதரவற்றோர்கள் கோவை நகரில் குவிந்தனர். கோயில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சிக்னல்களை ஆக்கிரமித்தனர்.
சில பெண்கள் ‘வாடகை குழந்தை’ மூலமும் பிச்சை எடுத்து பணம் குவித்தனர். பிச்சைக்காரர்களை பிடிக்கும் அதிரடி நடவடிக்கை கடந்த 2005ம் ஆண்டு அக் டோபர் 1ம் தேதி துவங்கியது. சிக்கிய பிச் சைகாரர்களை, ஆதரவற்றோர்களை தங்க வைக்க, கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் தங்கும் விடுதி துவக்கப்பட்டது.
விடுதியில் மெத்தை, கட்டில், மின் விசிறி, கழிவறை, குளியலறை வசதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பிச்சைகாரர்கள் 11 பேர் விடுதியில் தங்கினர். 4 நாளில், அத்தனை பேரும் தப்பினர். ஓடிய பிச்சைகாரர்களை, விரட்டி பிடித்து டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக, பிச்சைகாரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிச்சை எடுத்த 317 பேரும், கடந்த ஜனவரி 11ம் தேதி 46 பேரும், கடந்த செப்டம்பர் 6ம் தேதி 141 பேரும் சிக்கினர். குளிக்க வைத்து, முடி திருத்தி, சேவிங் செய்து புதிய துணி கொடுத்த னர். கையேந்த கூடாது, உழைத்து வாழ சொல்லி ‘பேச்சு வார்த்தை’ நடத்தினர். ஆனால் அது எடுபடவில்லை.
தெரு, தெருவாக கடுமையாக உழைக்கும் மக்களை காட்டி வியர்வை துளியின் பெருமையை விளக்கினர். தள்ளாத வயதில் மூட்டை சுமக்கும் முதியவர்களை காட்டினர். உழைக்காமல் வாழும் கேவலத்தை புரிய வைத்தனர். ‘இப்படியும் ஒரு பொழப்பா’ என காலம் கடந்த பின்னர் சிலர் திருந்தினர். இனி எப்படி வாழ்வது என யோசித்தனர். இனி கையேந்த மாட்டோம், உழைப்புக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீர் மல்க கேட்டனர்.
அப்படி, திருந்தி உழைத்தவர்கள், 504 பேரில் வெறும் 19 பேர் மட்டுமே. இதில் 6 பேர் பெண்கள். அனைவரும் 50 வயது கடந்தவர்கள். பிச்சை தான் வாழ்க்கை என அடம் பிடித்த 485 பேர் சொந்த ஊருக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர். கை நீட்டி பிச்சை எடுத்தால் சிறை என எச்சரிக்கப்பட்டதால், ‘பட்டியலிடப்பட்ட’ பிச்சைகாரர்கள் கோவை யை காலி செய்தனர். முன்னாள் பிச்சைகாரர்கள், இப்போது காய்கறி, பூ வியாபாரம், வாட்ச்மேன், மளிகை கடை வியாபாரம் என அசத்துகிறார்கள்.
விடுதியில் தங்கியுள்ள கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த சண்முகையா (76) என்பவர் வீணாக கிடக்கும் பேப் பரை ‘கவராக’ தயாரிக்கிறார். இதில் தினமும் 100 ரூபாய் கூலி கிடைக்கிறது. இவர் கூட்டுறவு சொசைட்டியில் அலுவலராக பணியாற்றியவர். மனைவி இறந்து போக, மகள் மன நிலை பாதித்து விட, ஆதரவின்றி அடைக்கலமானவர். சரளமாக ஆங்கிலம் பேச தெரிந்த இவர், ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டியாகவும் அசத்துகிறார்.
3 காப்பகம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ நகரில் இன்னும் 400க்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். சிலர் பச்சிளம் குழந்தையை தின வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கிறார்கள்.
சமீபத்தில் 7 பேர் கைக்குழந்தையுடன் சிக்கினர். கவுன்சிலிங் கொடுத்தாலும் சொகுசு வாழ் வில், அதிகமாக சம்பாதித்து பழகியவர்கள் உழைக்க மறுக்கிறார்கள். உழைக்காதவர்களை வெளியேற்றுவதில் 70 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதியில் 750 பேர் ரோட்டில் தங்கி கிடைத்த கூலி வேலை செய்வதாக ஆய்வு செய்து கண்டறிந்தோம். சிலர் ரோட்டோரம் உழைத்து வாழ்கிறார்கள். இவர்கள் வெயில் மழை யில்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக் காக பூசாரிபாளையம், செல்வபுரம், சொக்கம்புதூரில் வரும் 31ம்தேதி மூன்று காப்பகம் அமைக்கப்படும். இங்கே இலவசமாக தங்கலாம். ஆனால், கட்டாயம் உழைத்து தான் வாழவேண்டும். 3 நேரம், தலா 10 ரூபாய் செலவில் உணவு தரப்படும். ரோட்டில், தெருவில், பஸ் ஸ்டாண்டில் இனி யாரும் தங்க முடியாது, தங்க கூடாது. நகரில் மனநிலை பாதித்த 23 பேருக்கு தனி சிகிச்சை வசதியுடன், விடுதியில் தங்க வைத்திருக்கிறோம், ’’ என்றனர்.
இனி கையேந்த முடியாது....
காய்கறி விற்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாரியம்மாள் (72) கூறுகையில், மூன்று குழந்தைகளை நன்றாக வளர்த்து விட்டேன். தொழில் செய்து நன் றாக வாழ்ந்தும், என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். பஸ் ஏறி கோவை வந்தேன். பல இடங்களில் சுற்றி கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்தேன். மாநகராட்சியினர் என்னை தங்கும் விடுதியில் சேர்த்தார்கள்.
வயதானவர்கள் பலர் கூலி வேலை செய்வதை பார்த்தேன். 60 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இனி யாரிடமும் கையேந்த கூடாது என முடிவுக்கு வந்தேன். கூலி வேலைக்கு சென்றேன். இப்போது மாநகராட்சி மார்க்கெட்டில் இருந்து கூடையில் காய்கறி வாங்கி கொண்டு வீதி, வீதியாக விற்கிறேன். 50 ரூபாய், 100 ரூபாய் லாபம் கிடைக்கும். என்னை தேடி யாரும் வரவில்லை, நானும் என் சொந்தங்களை தேடி செல்லவில்லை. சாகும் வரை இங்கே இப்படியே வாழ முடிவு செய்து விட்டேன்.
Dinakaran
சில பெண்கள் ‘வாடகை குழந்தை’ மூலமும் பிச்சை எடுத்து பணம் குவித்தனர். பிச்சைக்காரர்களை பிடிக்கும் அதிரடி நடவடிக்கை கடந்த 2005ம் ஆண்டு அக் டோபர் 1ம் தேதி துவங்கியது. சிக்கிய பிச் சைகாரர்களை, ஆதரவற்றோர்களை தங்க வைக்க, கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் தங்கும் விடுதி துவக்கப்பட்டது.
விடுதியில் மெத்தை, கட்டில், மின் விசிறி, கழிவறை, குளியலறை வசதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பிச்சைகாரர்கள் 11 பேர் விடுதியில் தங்கினர். 4 நாளில், அத்தனை பேரும் தப்பினர். ஓடிய பிச்சைகாரர்களை, விரட்டி பிடித்து டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக, பிச்சைகாரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிச்சை எடுத்த 317 பேரும், கடந்த ஜனவரி 11ம் தேதி 46 பேரும், கடந்த செப்டம்பர் 6ம் தேதி 141 பேரும் சிக்கினர். குளிக்க வைத்து, முடி திருத்தி, சேவிங் செய்து புதிய துணி கொடுத்த னர். கையேந்த கூடாது, உழைத்து வாழ சொல்லி ‘பேச்சு வார்த்தை’ நடத்தினர். ஆனால் அது எடுபடவில்லை.
தெரு, தெருவாக கடுமையாக உழைக்கும் மக்களை காட்டி வியர்வை துளியின் பெருமையை விளக்கினர். தள்ளாத வயதில் மூட்டை சுமக்கும் முதியவர்களை காட்டினர். உழைக்காமல் வாழும் கேவலத்தை புரிய வைத்தனர். ‘இப்படியும் ஒரு பொழப்பா’ என காலம் கடந்த பின்னர் சிலர் திருந்தினர். இனி எப்படி வாழ்வது என யோசித்தனர். இனி கையேந்த மாட்டோம், உழைப்புக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீர் மல்க கேட்டனர்.
அப்படி, திருந்தி உழைத்தவர்கள், 504 பேரில் வெறும் 19 பேர் மட்டுமே. இதில் 6 பேர் பெண்கள். அனைவரும் 50 வயது கடந்தவர்கள். பிச்சை தான் வாழ்க்கை என அடம் பிடித்த 485 பேர் சொந்த ஊருக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர். கை நீட்டி பிச்சை எடுத்தால் சிறை என எச்சரிக்கப்பட்டதால், ‘பட்டியலிடப்பட்ட’ பிச்சைகாரர்கள் கோவை யை காலி செய்தனர். முன்னாள் பிச்சைகாரர்கள், இப்போது காய்கறி, பூ வியாபாரம், வாட்ச்மேன், மளிகை கடை வியாபாரம் என அசத்துகிறார்கள்.
விடுதியில் தங்கியுள்ள கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த சண்முகையா (76) என்பவர் வீணாக கிடக்கும் பேப் பரை ‘கவராக’ தயாரிக்கிறார். இதில் தினமும் 100 ரூபாய் கூலி கிடைக்கிறது. இவர் கூட்டுறவு சொசைட்டியில் அலுவலராக பணியாற்றியவர். மனைவி இறந்து போக, மகள் மன நிலை பாதித்து விட, ஆதரவின்றி அடைக்கலமானவர். சரளமாக ஆங்கிலம் பேச தெரிந்த இவர், ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டியாகவும் அசத்துகிறார்.
3 காப்பகம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ நகரில் இன்னும் 400க்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். சிலர் பச்சிளம் குழந்தையை தின வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கிறார்கள்.
சமீபத்தில் 7 பேர் கைக்குழந்தையுடன் சிக்கினர். கவுன்சிலிங் கொடுத்தாலும் சொகுசு வாழ் வில், அதிகமாக சம்பாதித்து பழகியவர்கள் உழைக்க மறுக்கிறார்கள். உழைக்காதவர்களை வெளியேற்றுவதில் 70 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதியில் 750 பேர் ரோட்டில் தங்கி கிடைத்த கூலி வேலை செய்வதாக ஆய்வு செய்து கண்டறிந்தோம். சிலர் ரோட்டோரம் உழைத்து வாழ்கிறார்கள். இவர்கள் வெயில் மழை யில்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக் காக பூசாரிபாளையம், செல்வபுரம், சொக்கம்புதூரில் வரும் 31ம்தேதி மூன்று காப்பகம் அமைக்கப்படும். இங்கே இலவசமாக தங்கலாம். ஆனால், கட்டாயம் உழைத்து தான் வாழவேண்டும். 3 நேரம், தலா 10 ரூபாய் செலவில் உணவு தரப்படும். ரோட்டில், தெருவில், பஸ் ஸ்டாண்டில் இனி யாரும் தங்க முடியாது, தங்க கூடாது. நகரில் மனநிலை பாதித்த 23 பேருக்கு தனி சிகிச்சை வசதியுடன், விடுதியில் தங்க வைத்திருக்கிறோம், ’’ என்றனர்.
இனி கையேந்த முடியாது....
காய்கறி விற்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாரியம்மாள் (72) கூறுகையில், மூன்று குழந்தைகளை நன்றாக வளர்த்து விட்டேன். தொழில் செய்து நன் றாக வாழ்ந்தும், என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். பஸ் ஏறி கோவை வந்தேன். பல இடங்களில் சுற்றி கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்தேன். மாநகராட்சியினர் என்னை தங்கும் விடுதியில் சேர்த்தார்கள்.
வயதானவர்கள் பலர் கூலி வேலை செய்வதை பார்த்தேன். 60 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இனி யாரிடமும் கையேந்த கூடாது என முடிவுக்கு வந்தேன். கூலி வேலைக்கு சென்றேன். இப்போது மாநகராட்சி மார்க்கெட்டில் இருந்து கூடையில் காய்கறி வாங்கி கொண்டு வீதி, வீதியாக விற்கிறேன். 50 ரூபாய், 100 ரூபாய் லாபம் கிடைக்கும். என்னை தேடி யாரும் வரவில்லை, நானும் என் சொந்தங்களை தேடி செல்லவில்லை. சாகும் வரை இங்கே இப்படியே வாழ முடிவு செய்து விட்டேன்.
Dinakaran
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உழைப்பாளியான பிச்சைக்காரர்கள்....
:];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|