சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம். Khan11

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்.

Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம். Empty 2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 21:10

* வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ஷேக் ஹசீனா தலைமை யிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது.

* கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீ பத்தில் கையெழுத்தானது.

* தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. 105 டன் எடையும், 80 அடி உயரமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 9 ஆயிரத்து 600 கி.மீ. தொலை விலுள்ள இலக்கைத் தாக்க வல்லது

* இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந்தன. அந்நாட்டில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன.

* சனிக்கிரகத்தைச் சுற்றிலும் வளையங்கள் இருக்கின்றன. அதேபோல சந்திரன்களில் ஒன்றான ரியாவுக்கும் அதைச் சுற்றிலும் வளையங்கள் உள்ளன. இதை நாசாவின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ரியா சனிக்கிரகத்தின் 2-—வது பெரிய சந்திரன் ஆகும்.

* உலகின் மிகச்சிறந்த நகரம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் என நடத்தப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சிறந்த நகரங்களை கண்டறிய மோனோகிள் என்ற பத்திரிகை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

* வடகொரியா போதிய முன்அறிவிப்பு ஏதும் இன்றி நீண்ட தொலைவு பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. “டாபோடாங்-2′ என்ற அந்த ஏவுகணை 7,000 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்ல வல்லது.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த இந்தியா உட்பட 20 பெரிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடை பெற்றது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை மற்றும் நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

* ஜப்பான் இயற்கை சீற்றங்களையும், போக்கு வரத்து நெரிசல்களையும் கண்காணிப்பதற் காக 100 மினி சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாட்டிலைட்டுகள் ஒவ்வொன்றும் 20 அங்குலம்தான் இருக்கும்.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பூக் களின் நறுமணம் குறைந்து வருவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காற்று மாசுபடுவதனாலேயே பூக்களின் நறுமணம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

* குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக 4 பெண்கள் வெற்றி பெற் றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த 3-வது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம். Empty Re: 2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 21:18

* ரஷ்யாவில் உள்ள யெக்டரின்பர்க் நகரில் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். இந்த அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

* இத்தாலியில் உள்ள அக்யூலா நகரில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர் கள் பங்கேற்ற ஜி-5 உச்சி மாநாடு நடந்தது. இதில் சர்வதேச அளவில் நிதி நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜி-5 மாநாட் டில் முடிவு செய்யப்பட்டது.

* தைவான் நாட்டை “மொராக்கட்’ என்னும் கடும் சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 270 கிலோமீட்டர் வீசிய புயல் காற்று மற்றும் அதைத் தொடர்ந்து கொட்டிய பேய் மழையினால் தைவான் நாடே பேரழிவை சந்தித்தது. வெள்ளத்திலும், நிலச் சரிவிலும் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* ரஷ்யா எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானிலேயே தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 13 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை கண்டத்துக்குள் 7000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை தாக்க வல்லதும், நடுவானிலேயே எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்க வல்லதுமாகும்.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிகப்பெரிய ஏரி அமைக்கப் பட்டு வருகிறது. இது 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படுகிறது. இதில் மூன்று ஏரிகள் இருக்கும். ஒவ்வொன்றின் கொள்ளளவும் தலா ஆறு கோடி கேலன் ஆகும்.

* இலங்கையில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திசைநாயகத்துக்கு அமெரிக்கா வில் செயல்படும் 2 பன்னாட்டு அமைப்பு கள் விருது வழங்குவதாக அறிவித்துள்ளன.

* பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை கில்ஜித் பல்திஸ்தான் என்ற பெயரில் புதிய மாகாணமாக அறிவித் துள்ளது பாகிஸ்தான். இதன்படி கில்ஜித் பல்திஸ்தான் என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியான உள்நாட்டு சுயாட்சி அதிகாரம் வழங்கப் படும்.



* இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, லண்டன் நகரில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்வை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் கள் கூட்டு அறிக்கை வெளியிட்டனர். இதில் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்வ தாக இருநாட்டு தலைவர்களும் அறி வித்தனர்.

* நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற் பட்டது. இதனால் பிரதமர் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

* மாலத்தீவில் கடலுக்கடியில் அமைச் சரவைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர வைக்கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப் படுவது உலகிலேயே இதுவே முதல்முறை யாகும். புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில் இக் கூட்டம் கடலுக்கடியில் நடத்தப்பட்டது.

* நானோ தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவதுறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். முடிவில் மரணமே ஏற்படாமல் தடுக்கமுடியுமென பிரிட்டன் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

* யுனெஸ்கோவின் உலக மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டது. உலக அளவில் 2000 மொழிகள் அபாய கட்டத்தில் இருப்ப தாகவும், இந்தியாவில் மட்டும் 196 மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக தெரி வித்துள்ளது.

* டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில் 15-வது பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 192 நாடு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப் பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை கண்டித்து கோபன்ஹேகன் மாநாட்டில் இருந்து மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென்ஜியா போவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர். இத னால் மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

* மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், தட்டு, குவளை, செருப்பு ஆகிய பொருட்கள் அமெரிக்காவில் உள்ள ஜேம்ஸ் ஓடிஸ் என்பவரிடம் இருந்தது. அவற்றை நியூ யார்க்கில் உள்ள ஆன்டிகுவாரம் ஆக் சனர்ஸ் நிறுவனம் ஏலம் விட்டது. ஏலத்தில் இந்திய தொழிலதிபர் சார்பில் கலந்து கொண்ட டோனி பேடி ரூ.9.3 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

* இலங்கை அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐ.நா பாதுகாப்புச் சபை, இதுவரை இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யவில்லை.



2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum