சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ரமழானின் மகிமை Khan11

ரமழானின் மகிமை

5 posters

Go down

ரமழானின் மகிமை Empty ரமழானின் மகிமை

Post by பாயிஸ் Thu 28 Jul 2011 - 21:39

ரமழான், இஸ்லாமிய வருட கணிப்பில் ஒன்பதாவது மாதமாகும். இது அதிக சிறப்புக்கும் மகிமைக்குமுரிய மாதம். அத்தோடு இறையருள் நிறைந்த மகத்துவம் மிக்க மாதமாகவும் திகழுகிறது இந்த ரமழான்.

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் தஆலா இந்த மாதத்தில் தான் அருள் மறையான அல்-குர்ஆனை அருளத் தொடங்கினான். இதனை அவன் தன் திருமறையிலேயே சொல்லி வைத்திருக்கின்றான்.

‘ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் அல்- குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப் )பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கின்றது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

அல் குர்ஆன் 2 : 185

அதேநேரம் இந்த அருள் மறையை ரமழான் மாதத்தின் எந்த நாளில் அருளத் தொடங்கினோம் என்பதையும் அல்லாஹ் தன் அருள் மறையில் குறிப்பிட்டிருக்கிறான்.

‘நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) ‘லைலத்துல் கத்ர்’ எனும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா? கண்ணியம் மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாகும்.

அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லாக் காரியங்களுடன் இறங்குகின்றனர். (அவ்விரவு) விடியற்காலை உதயமாகும் வரையில் முற்றிலும் சாந்தியும், சமாதானமும் உடையது.’

அல் – குர்ஆன் 97 : 1 - 5

அல் – குர்ஆன் என்பது உலகிற்கான அல்லாஹ்வின் இறுதித் தூது. இது மனிதனின் ஈருலக வாழ்வுக்கும் நேர்வழி காட்டக்கூடியது. நன்மை, தீமையை பிரித்தறிவிக்கக் கூடியது. இத்தூதின் பின்னர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு இறைத் தூதும் உலகிற்கு அருளப்படமாட்டாது.

அதற்கான தேவையோ, இடமோ கிடையாது. எல்லாக் கால, இட, சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான முழுமையான வாழ்க்கை நெறியாக அவன் இத்தூதை ஆக்கி வைத்திருக்கிறான். அதனால் இதில் குறைகளையோ, தவறுகளையோ காணவே முடியாது. அதேநேரம் இதனுள் புதிதாக எதுவொன்றையும் சேர்ப்பதற்கும் அவன் இடம் வைத்ததில்லை.

இந்தப் பூரணத்துவம் மிக்க இறைத் தூதை அவன் தன் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கட்டம், கட்டமாக அருளினான். கால, இட, சூழ்நிலை பொருத்தப்பாடுகளுக்கு ஏற்ப அவன் இத்தூதை அருளி 23 வருடங்களில் முழுமைப்படுத்தினான். அத்தோடு இத்தூது நடைமுறைச் சாத்தியமான பூரணத்துவம் மிக்க வாழ்க்கை நெறி என்பதைத் தன் இறுதித் தூதர் ஊடாக அவரது தோழர்கள் மூலம் அவன் செயலுருப்படுத்தியும் காட்டியுள்ளான்.

அந்த வகையில் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஈருலக வாழ்விலும் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் பெற்றுத்தரக் கூடிய முன்மாதிரி மிக்க வாழ்க்கை நெறி இது. இதனை ஒரு தூய நேர் வழிகாட்டலாக அவன் ஆக்கி வைத்திருக்கிறான்.

அதனால் தான் அல்லாஹ் த ஆலா உலக மானிடருக்கென தம்மிடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே வாழ்க்கை நெறி இது தான் என்றும் அறிவித்திருக்கின்றான்.

இவ்வாறு சிறப்பும், மகத்துவமும் மிக்க இறைத் தூதை அல்லாஹ் த ஆலா ரமழான் மாதத்தில் உலகிற்கு அருளத் தொடங்கியதன் மூலம் அவன் இம்மாதத்தைக் கண்ணியப்படுத்தி வைத்திருக்கிறான். அதனால் தான் இம்மாதத்தை அடைபவர்களை நோன்பு நோற்குமாறு அவன் கட்டளை இட்டிருக்கிறான். இம் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் ‘இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்’ என்றும் அவன் தன் அருள் மறையில் சூரத்துல் பக்ராவின் 183வது வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.

அதேநேரம் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோக்கிறாரோ அவர் அதற்கு முன் செய்துள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்’ என்று கூறியுள்ளார்கள்.

ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘யார் ரமழானில் நன்மையை எதிர்பார்த்து, ஈமானுடன் இரவுத் தொழுகையில் ஈடுபடுகிறாரோ அவர் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆதாரம் : புஹாரி முஸ்லிம்

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன’ என்று அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) கூறியுள்ளார்கள்.

ஆதாரம் : புகாரி 1899.

இவ்வாறு சிறப்பிக்கப்பட்டிருக்கும் ரமழான் மாதத்தின் எந்த நாளில் அருள் மறையான அல்- குர்ஆன் அருளப்பட ஆரம்பமானது என்பதையும், அந்த இரவின் சிறப்பையும், அந்த இரவு விடியற்காலை வரையும் எவ்வாறு இருக்கும் என்ற விபரத்தையும் கூட அல்லாஹ் சொல்லி வைத்திருக்கின்றான்.

இவ்வாறான நிலையில் அவன் தன் அருள்மறை அருளப்பட ஆரம்பமான இரவை தம் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) ஊடாக உலகிற்கு சரியாக அறிவித்துவிட நாடுகின்றான். இது தொடர்பாக உபாதா பின் ஸாமித் (ரலி) இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

‘ஒரு முறை முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தேன்.

இவ்வேளையில் இன்னாரும், இன்னாரும் சச்சரவில் ஈடுபட்டிருந்தனர் அதனால் அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆகவே ‘லைலத்துல் கத்ர்’ இரவை ரமழான் மாதத்தின் இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்’ என்றார்கள்.

ஆதாரம் : புகாரி 2023

இதேவேளை ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப் படையான இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆதாரம் : புகாரி 2017

இதன்படி ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் வருகின்ற ஒற்றைப் படையான ஒரு நாளில் தான் அல்- குர்ஆன் அருளப்பட ஆரம்பமாகியுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

இதன் காரணத்தினால் தான் ‘ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்ளுவார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்’ என்றும் ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்.

ஆதாரம் : புகாரி 2024

அத்தோடு ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்’ என்றும் ஆயிஷா (ரலி) தெரிவித்திருக்கிறார்.

ஆதாரம் : முஸ்லிம்.

‘ரமழானின் கடைசிப் பத்து நாட்களும் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம் : புகாரி 2025

ஆகவே அல்-குர்ஆன் அருளப்பட ஆரம்பமான ‘லைலத்துல் கத்ர்’ இரவை அடைந்து கொள்ளுவதிலும், அவ்விரவில் கூடுதலான இறை வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அன்பையும், அவனிடமிருந்து அதிக நன்மைகளையும் பெற்றுக்கொள்ளுவதில் மாத்திரமல்லாமல் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் முழு ரமழான் மாதத்திலும் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளுவதையுமே நோக்காகக் கொண்டு தான் அன்னார் செயற்பட்டிருக்கிறார். இதில் ஐயமில்லை. இதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன.
இம்மாதத்தில் புரியப்படுகின்ற ஒவ்வொரு இறைவணக்கத்திற்கும், நற்காரியத்திற்கும் பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் வழங்குகின்றான். இதனையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் அன்னார் செய்தும் காட்டியுள்ளார்கள். அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இம்மாதத்தில் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே ஈருலகிலும் விமோசனத்தை பெற்றுத் தரும்.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ரமழானின் மகிமை Empty Re: ரமழானின் மகிமை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Jul 2011 - 10:55

ஜசாக்கள்ளாஹ் கைர் தொடருங்கள் நல்ல பதிவு


ரமழானின் மகிமை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரமழானின் மகிமை Empty Re: ரமழானின் மகிமை

Post by *சம்ஸ் Fri 29 Jul 2011 - 12:21

உரிய நேரத்தில் சிறந்த பதிவிற்க்கு நன்றி உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரமழானின் மகிமை Empty Re: ரமழானின் மகிமை

Post by ஜிப்ரியா Fri 29 Jul 2011 - 13:24

சிறந்த பதிவு..தெளிவான விளக்கம். பகிர்வுக்கு நன்றிகள்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரமழானின் மகிமை Empty Re: ரமழானின் மகிமை

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 13:34

ஜசாக்கள்ளாஹ் கைர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரமழானின் மகிமை Empty Re: ரமழானின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum